ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-45
ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-45 குருதேவர் கூறினார், எந்த சாதனையிலும் வெற்றி பெற எனக்கு மூன்று நாட்களுக்கு மேல் ஆனதில்லை. ஒரு சாதனையில் ஈடுபட்டு கொழுந்து விட்டெரியும் ஏக்கத்துடன் அந்த சாதனையில் வெற்றி பெற வேண்டி அன்னையிடம் பிராத்தித்தால் மூன்று நாட்களுக்குள் இலக்கை எட்டி விடுவேன், பொது துணையின்றி மிக்குறுகிய காலத்தில் வீர நிலை சாதனைகளில் குருதேவர் வெற்றி கண்டதிலிருந்து வீர நிலை சாதனைகளுக்குப் பெண்துணையோ , மற்றும் பஞ்ச மகாரங்களோ இன்றியமையாதவை அல்ல என்பது தெளிவாகிறது. சபல புத்தியால் சுயக்கட்டுப்பாட்டை இழந்த சாதகர்கள் மட்டுமே பெண் துணையுடன் சாதனை புரிகிறார்கள். தொடர்ந்து விடாமுயற்சியுடன் சாதனைபுரிந்தால் அவர்களும் திவ்ய நிலையை அடைய முடியும், என்று தந்திரங்கள் கூறுகின்றன. தந்திர சாஸ்திரங்களின் கருணைத் திறத்தையே இந்தச்சலுகை எடுத்துக்காட்டுகிறது. புலனின்பப்பொருட்கள் மனிதனைக் கவர்ந்திழுத்து மீண்டும் மீண்டும் அவனைப் பிறவிச் சுழலில் பிணைக்கின்றன.இறைக்காட்சியோ ஆத்ம ஞானமோ அடைய இயலாதவாறு அவனைத்தடுத்தும் விடுகின்றன. மனக்கட்டுப்ப...