Posts

Showing posts from March, 2020

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்-5

Image
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்-5 -வகுப்பு-5 நாள்-21-12-2019 - ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார் - நத்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா:। ந சைவ ந பவிஷ்யாம: ஸர்வே வயமத: பரம்॥ 2.12 ॥ நானோ, நீயோ, இம்மன்னர்களோ இல்லாமலிருந்த ஒரு காலம் என்று எதுவும் இல்லை. நாம் எக்காலத்திலும் இருக்கிறோம். எதிர்காலத்திலும் நாமெல்லோரும் இல்லாமலிருக்கவும் போவதில்லை. தேஹிநோ அஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா। ததா தேஹாந்தரப்ராப்திர்தீரஸ்தத்ர ந முஹ்யதி॥ 2.13 ॥ எப்படி உடலில் குடியிருப்பவனுக்கு, இந்த உடலில் குழந்தைப்பருவம், இளமைப்பருவம், முதுமைப்பருவம்  ஏற்படுகிறதோ அதேபோல்தான்  வேறு உடலை எடுப்பதும் அமைகிறது. தீரன் இதைகுறித்து குழப்பமடைவதில்லை வாழ்க்கையில் மிகப்பெரிய பயம் மரணபயம். ஒருவேளை நாம் இறந்துவிட்டால் என்ன செய்வது? நமது குடும்பத்தில் உள்ள யாராவது இறந்துவிட்டால் என்ன செய்வது? இந்த பயம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது. இதற்கு காரணம் அறியாமை. முதல் அணுவிலிருந்து படிப்படியாக பரிணமித்து நாம் மனித உடலை அடைந்திருக்கிறோம். இந்த லட்சக்கணக்கான பிறவிகளில் மரணபயம் நம்மை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. அவ்...

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்-4

Image
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்-4 - வகுப்பு-4 நாள்-20-12-2019 - ஸ்ரீகிருஷ்ணர் கூறினார் -  எனதருமை அர்ஜுனனே! உன்னிடம் இதுபோன்ற மனச்சோர்வு எங்கிருந்து வந்தன? வாழ்வின் முன்னேற்ற நோக்கங்களை அறிந்த மனிதனுக்கு இவை தகுதியற்றவை. இவை மேலுலகங்களுக்கு ஒருவனைக் கொண்டு செல்வதில்லை. அவமானத்தையே கொடுக்கின்றன. பார்த்தா, இது போன்ற இழிவான தளர்ச்சிக்கு இடம் கொடாதே. இது உனக்கேற்றதல்ல. இதுபோல் சிறுமையான இதயபலவீனத்தை விட்டுவிட்டு, எதிரிகளை தவிக்கச் செய்பவனே, எழுவாயாக. - கடமை போர் செய்யும்படி தூண்டுகிறது. பாசம் போர்செய்ய மறுக்கிறது - துரியோதனது படையில் நியாயம் தெரிந்த பலர் இருக்கிறார்கள். தாங்கள் அநியாயத்தின் பக்கம் நிற்கிறோம் என்பது அவர்களுக்கு தெரியும். இருந்தாலும் அவர்கள் போர்செய்ய வந்திருக்கிறார்கள். பீஷ்மர்,துரோணர்,கிருபர் போன்றவர்கள் இந்த போரைவிட்டுவிட்டு பிச்சையெடுத்து வாழும் வாழ்க்கைக்கு சென்றிருக்கலாம்.அவ்வாறு செய்திருந்தால் போர் நிகழாமல் போயிருக்கும்.சமாதானம் ஏற்பட்டிருக்கும். அநியாயத்தின் பக்கம் நல்லவர்களும் நிற்கிறார்கள் என்பதுதான் வேதனையான விஷயம். - நமது வாழ்க்கையிலும் இப்படிப்பட்...

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்-3

Image
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்-3 - வகுப்பு-3 நாள்-19-12-2019 - இந்த பூமியில் அசுரர்கள் மனிதர்களாக பிறந்தார்கள். அவர்களை தடுக்க தேவர்களின் குழந்தைகள் பிறந்தார்கள். நல்லவர்கள் எப்போதும் தர்மத்தின் பாதையில் செல்வார்கள். தீயவர்கள் அதர்மத்தின் பாதையில் செல்வார்கள். நல்லவர்கள் பொதுவாக எல்லா இடங்களில் துன்புறுத்தப்படுகிறார்கள். தீயவர்கள் நல்லவர்களின் சொத்துக்களை பிடுங்கிக்கொள்கிறார்கள் ஒரு நாட்டை மொத்தமாக எடுத்து பார்த்தால், சிலவருடங்கள் நாட்டில் அதர்மங்கள் அதிகரித்து காணப்படும். ஆட்சியாளர்களே அதர்மத்தை கண்டுகொள்ளாமலும்,அதை ஆதரிப்பது போல காணப்படுவார்கள். தர்மவான்கள் துன்பப்படுவார்கள்,அதர்மவான்கள் இன்பமடைவார்கள். இது ஒரு உச்சநிலையை அடையும்போது, அங்கே மிகப்பெரிய மாற்றம் நிகழும் அப்போது மகான் ஒருவர் அங்கே பிறக்கிறார். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுகிறார்.அப்போது ஒட்டுமொத்தமாக, அதர்மத்திலிருந்து தர்மத்தை நோக்கி நாடு பயணப்படும். அதர்மம் புரிந்தவர்கள் வேதனையடைவார்கள். தர்மவழியில் செல்பவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். சில வருடங்களுக்கு பின் மீண்டும் தர்மம்குன்றி அதர்மம் தலை தூக்க ஆரம்ப...

ஸ்ரீமத்பகவத்கீதை வாழ்க்கைக்கான பாடங்கள்-2

Image
ஸ்ரீமத்பகவத்கீதை வாழ்க்கைக்கான பாடங்கள்-2 - வகுப்பு-2 நாள்-18-12-2019 - இந்த உலகத்தில் நல்லவர்களும் இருக்கிறார்கள் தீயவர்களும் இருக்கிறார்கள். நாம் தனியாக அமர்ந்து நமது மனத்தை ஆராய்ந்து பார்த்தால் பாதி நல்ல சிந்தனைகளும்,பாதி கெட்ட சிந்தனைகளும் நிறைந்திருப்பதை பார்க்கலாம் நமது குடும்பங்களைப் பார்த்தால் சிலர் நல்லவர்களாக இருப்பார்கள்,சிலர் கெட்டவர்களாக இருப்பார்கள் இந்த நல்லது,கெட்டது என்பது இந்த உலகம் முழுவதும் எங்கும் பரந்து கலந்துள்ளது நல்லதை மட்டும் தனியாக பிரிக்க முடியாது.கெட்டதை மட்டும் தனியாக பிரிக்க முடியாது. ஒரு நாணயத்திற்கு இரு பக்கம் இருப்பதுபோல.ஒவ்வொரு செயலிலும்கூட நல்லது,கெட்டது இரண்டும் கலந்துள்ளது. - இரண்டு அணுவிஞ்ஞானிகளை எடுத்துக்கொண்டால், ஒருவர் அறிவை பயன்படுத்தி அணு உலைகளை அமைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்வார்.  இன்னொருவர் அணு குண்டுகளை செய்து உலகத்தைஅழிக்க முயற்சி செய்வார். - முற்காலத்தில் தேவர்கள்,அசுரர்கள் என்று இரண்டுவிதமானவர்கள் இருந்தார்கள். ஒரு அரசன் இந்த உலகத்தில் தானதர்மங்கள் செய்து நல்லவனாக வாழ்ந்தால் பின்பு தேவனாகிறான் அதேபோல ஒரு அரசன்  நல்லவர்களை...

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

Image
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள் - வகுப்பு-1 நாள்-17-12-2019 - இந்துமதத்தின் புனித சாஸ்திரம் என்ன என்று யாராவது கேட்டால் நாம் உடனே எதை சொல்ல வேண்டும்? வேதம். வேதம்தான் இந்துக்களின் புனித சாஸ்திரம் - அப்படியானால் பகவத்கீதை? இதைப்பற்றி விரிவாக தெரிந்துகொள்வோம் - வேதம் என்றால் என்ன? - வேதம் என்றால் எக்காலத்திலும் இருக்கக்கூடிய அறிவுத்தொகுதி. தொடக்கமும் முடியும் அற்ற வேதங்களின் மூலமே உலகம் முழுவதும் படைக்கப்பட்டிருக்கிறது. - இந்த உலகத்தில் என்னென்ன உள்ளதோ அவை அனைத்தும் எண்ணங்களின் வெளிப்பாடே. எண்ணமோ சொற்களின் மூலம் தான் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள முடியும். - தோன்றா நிலையில் இருந்த எண்ணம் எந்த சொற்களின் மூலம் வெளிப்பட்டதோ, அந்த சொற்களின் தொகுதியே வேதங்கள். - இதிலிருந்து நமக்குத் தெரிவது என்னவென்றால்,புறவுலகிலுள்ள ஒவ்வொரு பொருளும் வேதங்களைச் சார்ந்தே இருக்கிறது. ஏனெனில் ஒரு பொருளைப் பற்றிய எண்ணம் அதைக்குறிக்கும் சொல் இல்லாமல் இருக்க முடியாது.(சொல்லுக்குப் பின்னால் எண்ணம் உள்ளது) எண்ணம்,அதிலிருந்து சொல்,அதிலிருந்து புறப்பொருள் உருவாகிறது. - இந்த சொல் என்பது என்ன? வேதங்களே. வேதத்த...