Posts

Showing posts from June, 2018

யாரும் முற்றிலும் நல்லவனும் அல்ல முற்றிலும் கெட்டவனும் அல்ல.தொடர்ந்த பயணத்தின் ஒரு பகுதியில் நாம் நிற்கிறோம்.

Image
யாரும் முற்றிலும் நல்லவனும் அல்ல முற்றிலும் கெட்டவனும் அல்ல.தொடர்ந்த பயணத்தின் ஒரு பகுதியில் நாம் நிற்கிறோம். - சிலர் தங்களை நல்லவர்கள் என்று நினைத்துக்கொள்கிறார்கள்.சிலர் கெட்டவர்கள் என்று நினைத்துக்கொள்கிறார்கள்.ஆனால் உண்மையில் யாரும் நல்லவர்களும் அல்ல கெட்டவர்களும் அல்ல என்கிறது தத்துவம். - மஹத் அதாவது பிரபஞ்ச மனத்துடன் நமது எல்லோருடைய மனங்களும் இணைக்கப்பட்டுள்ளது.இந்த பிரபஞ்சமனத்தில் கோடிக்கணக்கான ஆண்டுகளுடைய நினைவுகள்,கோடிக்கணக்கான உயிர்களுடைய வாழ்க்கை முறைகள் பதியப்பட்டிருக்கின்றன சர்வர்.ஹார்ட் டிஸ்க் போன்றது.இதில் ஒரு பகுதி நமது மூளையோடு இணைக்கப்பட்டுள்ளது.நாம் முன்னேற முன்னேற மஹத்தை பற்றிய புரிதல் விரிவாகிக்கொண்டே செல்கிறது. - சர்வரில் எல்லாமே இருக்கும்.எதை தேடுகிறோமே அதை தெரிந்துகொள்ளலாம்.அதைப்போல மஹத்தில் எல்லாமே உள்ளது.எதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமோ அதை தெரிந்துகொள்ளலாம்.இப்போது முக்கிய விஷயத்திற்கு வருவோம் - இந்த மஹத்-தான் நம்முடைய உண்மையான மூளை.தற்போது நம்மிடம் உள்ள மூளை அந்த மஹத்தின் ஒரு பகுதிதான்.சர்வரில் இணைக்கப்பட்டுள்ள எல்லா க...

இந்துக்கள் என்ற பொதுப் பெயரில் அனைவரும் ஒன்றுசேர்ந்துவிடக்கூடாது என்பதில் கிறிஸ்தவர்களும்,முஸ்லீம்களும் கவனமாக இருக்கிறார்கள்

Image
இந்துக்கள் என்ற பொதுப் பெயரில் அனைவரும் ஒன்றுசேர்ந்துவிடக்கூடாது என்பதில் கிறிஸ்தவர்களும்,முஸ்லீம்களும் கவனமாக இருக்கிறார்கள் - சாதியின் பெயரால் இந்துக்களை பிரிக்கிறார்கள்.மொழியின் பெயரால் இந்துக்களை பிரிக்கிறார்கள்.இனத்தின் பெயரால் இந்துக்களை பிரிக்கிறார்கள். - இதற்காக தமிழர் நலன் என்ற பெயரில் போலி அமைப்புகளை உருவாக்குகிறார்கள்.நடுநிலை என்ற போர்வையில் டி.வி,நாளிதழ்களை நடத்துகிறார்கள்.சாதி சங்கங்களை ஊக்குவிக்கிறார்கள்.இனச் சண்டைகளை தூண்டிவிடுகிறார்கள்.வளர்ச்சித்திட்டங்களை தடு க்கிறார்கள்.இந்தியா வல்லரசாகிவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார்கள். - சுருக்கமாக சொன்னால் இந்துமதம் அழியவேண்டும்.இந்துக்கள் பலம் பெறக்கூடாது.இந்தியா பல துண்டுகளாக சிதறவேண்டும்.இதுதான் அவர்கள் நோக்கம் - இதை அறியாத அப்பாவி இந்துக்கள் அவர்களின் மாயவலையில் சிக்கிக்கிடக்கிறார்கள். - என்றாவது ஒருநாள் உண்மை வெளிவரும் அப்போது அவர்களுக்கு(சமூகவிரோதிகளுக்கு) இநதியாவில் இடம் இருக்காது - சுவாமி வித்யானந்தர்

சுவாமி விவேகானந்தர் எழுதிய உருக்கமான கடிதம்

Image
சுவாமி விவேகானந்தர் எழுதிய உருக்கமான கடிதம் - சமுதாயத்தை, உலகத்தை மின்சக்தி பெற்றெழச் செய்ய வேண்டும்.முதலில் குணநலன் அமையட்டும்.புரிகிறதா? இருபதாயிரம் துறவிகள் நமக்குத்தேவை-ஆண்களும்,பெண்களும் வேண்டும்.புரிகிறதா? - இல்லற சீடர்கள் வேண்டாம்.தியாகிகளே வேண்டும்.நல்ல கல்வி கற்ற இளைஞர்கள் வேண்டும்.மூடர்கள் வேண்டாம்.நாம் ஒரு கிளர்ச்சி செய்ய வேண்டும்.வெட்டியாக இருக்காதீர்கள்.கச்சையை கட்டிக்கொண்டு தயாராகுங்கள்.எல்லா இடத்திலும் இயக்கங்களை ஆரம்பித்துக்கொண்டே செல்லுங்கள்,சீடர்களை உருவாக்கிக்கொண்டே செல்லுங்கள்.ஆணோ,பெண்ணோ யார் வந்தாலும் அவர்களை துறவியாக்கிவிடுங்கள் - ஒரு மாபெரும் ஆன்மீக அலை வந்துகொண்டிருக்கிறது.இதில் பாவிகள் மகான்கள் ஆக மாறுவார்கள்.மூடர்கள் பெரிய பண்டிதர்களுக்கும் குருவாக ஆக்கப்படுவார்கள்.ஸ்ரீராமகிருஷ்ணரின் அருளால் இவைகள் எல்லாம் நடைபெறும்.எழுந்திருங்கள்,விழித்திருங்கள்.லட்சியத்தை அடையும்வரை நில்லாதீர்கள். - தொடர்ந்து விரிந்துகொண்டிருப்பதுதான் வாழ்க்கை.குறுவது சாவு.உயிர்களிடம் கருணைகொண்டு வேலை செய்பவனே ஸ்ரீராமகிருஷ்ணரின் மகன்.மற்றவர்கள் அற்பர்கள்.நமக்கு அனுகூலமான இந்த வேள...

ஆரியர்கள் இந்தியாவிற்கு வெளியே இருந்து வரவில்லை என்பதை நிரூபிக்கும் இந்திய இலக்கியம்(சரஸ்வதி-நதி)

Image
ஆரியர்கள் இந்தியாவிற்கு வெளியே இருந்து வரவில்லை என்பதை நிரூபிக்கும் இந்திய இலக்கியம்(சரஸ்வதி-நதி) - வேத காலத்தில் ஒரு பிரம்மாண்டமான நதி ஓடியது; அதன் பெயர் சரஸ்வதி; உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதம் இதன் புகழ் பாடுகிறது. ஆனால் மஹா பாரத காலத்திலேயே (கி.மு.3100) இது வற்றிச் சுருங்கி விட்டது. இப்பொழுதும் மனிதர்கள் நம்புவது என்னவென்றால் இந்த நதி அந்தர்வாஹினியாக த்ரிவேணி சங்கமத்தில் (அலஹாபாத், உத்திரப் பிரதேசம்) கலக்கிறது என்பதாகும்.ஆனால் இது வெறும் நம்பிக்கைதான் - சரஸ்வதி நதி பற்றி பாபா அணுசக்தி ஆராய்ச்சி (B A R C) நிலையம் கொடுத்த தகவல்கள் இந்திய வரலா ற்றையே மாற்றிவிட்டது. நாம் இது வரை சிந்துவெளி நாகரீகம் என்று அழைத்தது எல்லாம் தவறு அது, வேத கால சரஸ்வதி நதி நாகரீகம் என்று விஞ்ஞான ஆராய்ச்சி நிரூபித்துவிட்டது! - ரிக் வேதம் 50 க்கும் மேலான இடங்களில் சரஸ்வதி நதியைக் குறிப்பிடுகிறது. - ரிக்வேதத்தில் நதி ஸ்துதி என்று ஆறுகளை போற்றித் துதிக்கும் அற்புதமான பாடல் ஒன்று உண்டு! இதில் கங்கா, யமுனா, சரஸ்வதி, சுதோத்ரி (சட்லெஜ்) ஆகியன போற்றப்படுகின்றன. ஆரிய-திராவிட வா...

ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவடிகளில் அமர்வதன் மூலமே இந்தியா முன்னேற முடியும்

Image
ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவடிகளில் அமர்வதன் மூலமே இந்தியா முன்னேற முடியும்.அவரது வாழ்க்கையையும் உபதேசத்தையும் எங்கும் பரப்ப வேண்டும்.இதை யார் செய்வார்?  - ஸ்ரீராமகிருஷ்ணரின் கொடியை கையிலெந்தி உலகின்நற்கதிக்காக அணிவகுத்து செல்ல இருப்பது யார்? பெயர்,புகழ்,செல்வம்,போகம் மட்டுமின்றி இந்த உலகம்,மறுஉலகம் இவற்றின் சுகபோகங்களை துறந்து, சமுதாய சீரழிவு என்ற வெள்ளப்பெருக்கை தடுத்து நிறுத்த வருபவர் யார்? - இந்த பணிக்காக ஸ்ரீராமகிருஷ்ணர் யாரை தேர்ந்தெடுக்கிறாரோ அவன் பெருமை பெறுகிறான்.இருளில் அழுந்திக்கிடக்கின்ற கோடிக்கணக்கானோரிடம் இறைவனின் ஒளியைச் சேர்ப்பதாகிய அவனது லட்சியம் உலகத்திலேயே உயர்ந்தது. - -சுவாமி விவேகானந்தர்.புத்தகம்9பக்கம்417 - சுவாமி விவேகானந்தர் தமிழர்களுக்கு எழுதிய கடிதம்

இறைவன் இனிமைக் கடல்.இந்தக்கடலில் நீ மூழ்குவாயா மாட்டாயா சொல்.

Image
இறைவன் இனிமைக் கடல்.இந்தக்கடலில் நீ மூழ்குவாயா மாட்டாயா சொல்.இது சச்சிதானந்த கடல்.இதில் மூழ்கினால் மரணம் இல்லை. இது அமுதக்கடல் - -ஸ்ரீராமகிருஷ்ணர் விவேகானந்தரிடம் சொன்னது. -

அமெரிக்காவில் சுவாமி விவேகானந்தர் சந்தித்த சோதனைகள்

Image
அமெரிக்காவில் சுவாமி விவேகானந்தர் சந்தித்த சோதனைகள் -- சுவாமி விவோகானந்தர் அமெரிக்க செல்வதற்கு முன்பு வரை.அமெரிக்காவில் இந்துக்கள் பற்றியும் இந்துமதம் பற்றியும் மிகக்கேவலமாக பேசப்பட்டுக்கொண்டிருந்தது.இந்துக்கள் காட்டுமிராண்டிகள்,அழித்து ஒழிக்கப்பட வேண்டியவர்கள்,இந்துமதம் பண்பாடற்ற காட்டுவாசிகளின் மதம் என்றே போதிக்கப்ட்டது.அது மட்டுமல்ல அமெரிக்க குழந்தைகளின் பாடத்திலும் இது சேர்க்கப்பட்டிருந்தது. சுவாமிஜியிடம் பலமுறை இது பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது. -- கிறிஸ்தவ மதபோதகர்களால் இந்துக்கள் மிகவும் மோசமாக சித்தரிக்கப்படுவதைக் கண்டு சுவாமி விவேகானந்தர் மிகவும் வேதனையடைந்தார். தங்கள் மதப்பிரச்சார வேலைகளுக்கு அமெரிக்காவில் பணம் திரட்ட எப்படியெல்லாம் இந்தியாவைக் குறித்தும், இந்துக்கள் குறித்தும் மிக மோசமான சித்தரிப்புக்களை கிறிஸ்தவ மதபோதகர்கள் பரப்பினார்கள் என்பதை நேரடியாகக் கண்டறிந்த விவேகானந்தர் மனம் வெதும்பிக் கூறினார்: -- கிறிஸ்துவின் சிஷ்யர்களான இவர்களுக்கு இந்துக்கள் என்ன செய்துவிட்டார்கள்? ஒவ்வொரு கிறிஸ்தவக் குழந்தைக்கும் இந்துக்களை கொடியவர்கள் தீயவர்கள் உலகிலுள்ள பயங்கரமான பி...

என்னைவிட ஆற்றல்மிக்க வீரபுருஷர் ஒருவர் இந்தியாவில் எப்போதாவது தோன்றுவார்-சுவாமி விவேகானந்தர்

Image
என்னைவிட ஆற்றல்மிக்க வீரபுருஷர் ஒருவர் இந்தியாவில் எப்போதாவது தோன்றுவார்.அவர் இந்த பணிகளை(பாதியில் நிற்கும் பணிகள்) முடித்துவைப்பார்-சுவாமி விவேகானந்தர் - சுவாமி விவேகானந்தர் எழுதிய கடிதம்.. - 20-6-1894 சிகாகோ - அன்புள்ள திவான்ஜி சாகிப் - உங்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும்..இந்தியாவிலுள்ள சிலர் (பிரம்மசமாஜம்,தியோசப்பிக்கல் சொசைட்டி)அமெரிக்கா முழுவதும் என்னை குறைகூறி பிரச்சாரம் செய்கிறார்கள். நான் அமெரிக்கா போய்தான் முதன்முதலாகக் காவி உடை உடுத்தேன் என்றும். நான் வெறும் ஏமாற்றுபேர்வழி என்றும் கூறுகிறார்கள்.இதை கேள்விப்பட்டு அமெரிக்கர்கள் எனக்கு பணம் தர தயங்குகிறார்கள்.இத்துடன் இங்குள்ள பாதிரிகள் எப்போதும் எனக்கு எதிராக எதையாவது(குற்றத்திற்கு காரணம்) தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.என்னை குறை கூறி இங்குள்ள பத்திரிக்கைகளில் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். - நான் இங்கு(அமெரிக்கா) வந்துள்ளதன் முக்கிய காரணம்,இந்திர்களுக்க சேவை செய்ய நிதி திரட்டுவதற்கே... பொது மக்களுக்குளுக்கு கல்வியூட்டி அவர்களை உயர்த்தவேண்டும்.வயலில்.தொழிற்சாலையில் எங்கே மக்கள் வேலை செய்தாலும்,கல்வி அவர்களின் இருப்பிடத்திற்கு ச...

சுவாமி விவேகானந்தரின் முதல் சீடர்

Image
சுவாமி விவேகானந்தரின் முதல் சீடர் - பிருந்தாவத்திலிருந்து ஹரித்துவார் நோக்கி புறப்பட்டார் சுவாமிஜி.இடையில் உள்ள ஹத்ராஸ் ரயில் நிலையத்தில் பசியும் களைப்பும் மேலிட அமர்ந்திருந்தார் (அந்த காலத்தில் ரயில் நிலையங்களில் ரயில் அதிகநேரம் நிற்கும்) அங்கே ரயில் நிலைய துணை அதிகாரியாக இருந்தவர் சரத் சந்திர குப்தர்.பழகுவதற்கு இனியவர். - சரத் சுவாமிஜியை கண்டார்.அவரை பார்த்ததும் இனம்புரியாத சக்தி ஒன்று தம்மை அவரிடம் கவர்வதாக உணர்ந்தார்.நேராக அவரிடம் சென்று சுவாமிஜி பசியாக இருக்கிறீர்களா? வாருங்கள்.என் வீட்டிற்கு வாருங்கள் என்று அழைத்தார் - நான் உன் வீட்டிற்கு வந்தால் எனக்கு என்ன தருவாய் என்று சுவாமிஜி கேட்டார். என் இதயத்தை பிழிந்து இன்சுவையான பண்டம் தயாரித்து தருவேன் என்று துவங்கும் ஒரு பாரசீக பாடலை பாடினார் சரத்.இந்த பதிலால் மிகவும் மகிழ்ந்த சுவாமிஜி அவரது வீட்டிற்கு சென்று உணவருந்தினார். - சில நாட்கள் அவருடன் தங்கும்படி சரத் கேட்டுக்கொண்டார்.சுவாமிஜியும் அதற்கு சம்மதித்தார்.சுவாமிஜி புறப்படும்போது.என்னை உங்கள் சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று வேண்டினார் சரத்.சுவாமிஜி அதற்கு சம்மதிக்கவில்லை....

தனது கடைசிநாளை தானே முடிவு செய்தார் சுவாமி விவேகானந்தர்

Image
தனது கடைசிநாளை தானே முடிவு செய்தார் சுவாமி விவேகானந்தர்.“சகோதரர்களே என் வேலை முடிந்துவிட்டது,இனி இவைகளை நீங்களே கவனித்துக்கொள்ளுங்கள்.எனக்கு விடைகொடுங்கள்” - 1902-ம் ஆண்டு. சுவாமிஜி தனது துறவிசீடர்கள் அனைவரையும் ஒருமுறை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். எதற்காக ஆசைப்படுகிறார் என்பதை யாரும் அறியவில்லை.இந்தியாவில் பல்வேறு இடங்களில் மற்றும் வெளிநாடுகளில் வசித்து வந்த அனைவருக்கும் கடிதம் எழுதப்பட்டது. சிலர் வந்தனர்,பலர் வேலை காரணமாக வரவில்லை. இது தங்களுக்கான கடைசிவாய்ப்பு என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. - நாட்கள் ஆக ஆக மெல்ல மெல்ல மடத்தின் வேலைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார். சீடர்களுக்கு பயிற்சியளிப்பது போன்ற பணிகள் கூட குறைந்துபோனது. மெல்ல மெல்ல அவர் தியானத்தில் மூழ்க ஆரம்பித்தார். அவருடன் இருந்த சகோதர துறவிகள் இதை கவனிக்க தவறவில்லை. - ”என் வேலை முடிந்துவிட்டது,இனி இவைகளை நீங்களே கவனித்துக்கொள்ளுங்கள் என்று சகோதரதுறவிகளிடம் கூறினார்” - ”மரணம் என் முன்னால் நிற்கிறது, நான் வேண்டிய அளவு வேலை செய்துவிட்டேன். நான் கொடுத்துள்ளதை முதலில் உலகம் புரிந்துகொள்ளட்டும், அதை புரிந்துக...