Saturday 30 June 2018

யாரும் முற்றிலும் நல்லவனும் அல்ல முற்றிலும் கெட்டவனும் அல்ல.தொடர்ந்த பயணத்தின் ஒரு பகுதியில் நாம் நிற்கிறோம்.


யாரும் முற்றிலும் நல்லவனும் அல்ல முற்றிலும் கெட்டவனும் அல்ல.தொடர்ந்த பயணத்தின் ஒரு பகுதியில் நாம் நிற்கிறோம்.
-
சிலர் தங்களை நல்லவர்கள் என்று நினைத்துக்கொள்கிறார்கள்.சிலர் கெட்டவர்கள் என்று நினைத்துக்கொள்கிறார்கள்.ஆனால் உண்மையில் யாரும் நல்லவர்களும் அல்ல கெட்டவர்களும் அல்ல என்கிறது தத்துவம்.
-
மஹத் அதாவது பிரபஞ்ச மனத்துடன் நமது எல்லோருடைய மனங்களும் இணைக்கப்பட்டுள்ளது.இந்த பிரபஞ்சமனத்தில் கோடிக்கணக்கான ஆண்டுகளுடைய நினைவுகள்,கோடிக்கணக்கான உயிர்களுடைய வாழ்க்கை முறைகள் பதியப்பட்டிருக்கின்றன சர்வர்.ஹார்ட் டிஸ்க் போன்றது.இதில் ஒரு பகுதி நமது மூளையோடு இணைக்கப்பட்டுள்ளது.நாம் முன்னேற முன்னேற மஹத்தை பற்றிய புரிதல் விரிவாகிக்கொண்டே செல்கிறது.
-
சர்வரில் எல்லாமே இருக்கும்.எதை தேடுகிறோமே அதை தெரிந்துகொள்ளலாம்.அதைப்போல மஹத்தில் எல்லாமே உள்ளது.எதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமோ அதை தெரிந்துகொள்ளலாம்.இப்போது முக்கிய விஷயத்திற்கு வருவோம்
-
இந்த மஹத்-தான் நம்முடைய உண்மையான மூளை.தற்போது நம்மிடம் உள்ள மூளை அந்த மஹத்தின் ஒரு பகுதிதான்.சர்வரில் இணைக்கப்பட்டுள்ள எல்லா கம்பியூட்டருக்கும் ஒரு ஹார்ட் டிஸ்க் இருக்கும்.அது சர்வரில் உள்ள தகவலைப்பெற்றுவர உதவுகிறது.அதேபோலதான் நமது சிறிய மூளையும் சிறிய ஹார்ட் டிஸ்க்.ஆனால் மஹத்தான் நமது உண்மையான மூளை.அதில் உலகத்தில் உள்ள அனைத்து கெட்ட விஷயங்களும் பதிவாகியிருக்கின்றன.அதேபோல உலகத்தில் உள்ள எல்லா நல்ல விஷயங்களும் பதிவாகியுள்ளன.
-
நான் முற்றிலும் நல்லவன் என்று ஒருவன் சொல்வது உண்மையல்ல.அவன் உண்மையை அறியாதவன்.அவனது ஆள்மனத்தில் அனைத்து தீய எண்ணங்களும் வெளிப்படாமல் ஒளிந்துகொண்டுள்ளது.அவைகளை பற்றி இவனுக்கு தெரியாததால் அவன் தன்னை நல்லவன் என நினைக்கிறான்.உரிய சந்தர்பமும்,சூழ்நிலையும் அமையும்போது அவைகள் உள்ளிருந்து வெளியே கிளம்பும்.தீயவன் ஒருவனின் தொடர்பு ஏற்பட்டால் எப்படிப்பட்ட நல்லவனாக இருந்தாலும் அவனுக்குள்ளே உறங்கிக்கொண்டிருந்த தீயஇயல்புகள் அவனை அறியாமலேயே வெளிவரும்.அதனால்தான் நற்புண்புகளை நிலைபெறச்செய்ய நல்ல சூழ்நிலைகளில் வாழவேண்டும் என்று சொல்கிறார்கள்
-
மஹத்தை பற்றிய புரிதலை தெரிந்துகொள்ள வேண்டும். மஹத்தில் உள்ள நினைவுகளை முழுவதும் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை.ஆனால் அதைப்பற்றிய பொதுவான புரிதல் இருக்க வேண்டும்.
-
இந்த மஹத் மூன்று பகுதிகளாக பிரிந்து செயல்படுகிறது.
-
1.தனாக நிகழும் நிகழ்வுகள் அல்லது இயற்கை என்று சொல்கிறோமே அது.உதாரணமாக உடலின் உள்ளே நடக்கும் நிகழ்வுகளை நாம் அறிவதில்லை.ஆனால் அவைகள் மூளையின் கட்டளைப்படிதான் செயல்படுகிறன்றன.அந்த மூளைக்கு நாம் கட்டளையிடவில்லை.மூளை நமது கட்டுப்பாட்டில்தான் உள்ளது.ஆனால் நம்மிடம் உத்தரவு வாங்காமல் தானாகவே அது உள்உறுப்புகளுக்கு கட்டளைகளை பிறப்பிக்கிறது .இந்த உலகத்தில் பெரும்பாலும் தானாக நிகழ்வதாகவே இருக்கிறது.ஆனால் இவைகள் அனைத்திற்கும் பின்னால் மூளையின் செயல்பாடுகள் உள்ளன.அவைகள் மஹத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
-
2.பகுத்தறிவு.-அல்லது தெரிந்து செய்யும் செயல்கள்.கை,கால்கள்,கண்கள்,காதுகள் போன்ற உறுப்புகள் நமது கட்டுப்பாட்டில் உள்ளன.எதை செய்ய வேண்டும்.எதை கேட்கவேண்டும் எல்லாம் நமது முடிவைப்பொறுத்து உள்ளது.நாம் மூளைக்கு கட்டளையிடுகிறோம்.அதன்படி மூளை உடல் உறுப்புகளை இயக்குகிறது.இந்த பகுத்தறிவு இயற்கையைவிட பெரியது.அந்த இயற்கையை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது
-
3. உணர்வு கடந்த நிலை-சிலர் தங்கள் உடலைவிட்டு உயிரை வெளியே கொண்டு வருகிறார்கள்.அப்போதும் அவர்கள் செயல்புரிகிறார்கள்.அதற்கும் ஒரு மூளைவேண்டும்.ஆனால் உடல் சவம்போல கிடக்கிறது.அப்படியானால் அந்த மூளை எங்கே உள்ளது? உடலைவிட்டு வெளியே வரும் உயிருக்கும் ஒரு உடல் உள்ளது.அது சூட்சும உடல்.அந்த உடலில் சூட்சுமமாக மூளை உள்ளது.அது பிரபஞ்சத்தில் உள்ள ரகசியங்களை அறியக்கூடியது.வானுலக ரகசிங்களை அந்த மூளை தெரிந்துகொள்கிறது.
-
இவ்வாறு மஹத் என்ற பிரபஞ்ச மனத்துடன் நாம் எல்லோரும் தொடர்பில் இருப்பதால்,நாம் தற்போது என்ன நிலையில் இருக்கிறோமோ அது முடிவான நிலை அல்ல.மேலும் மேலும் முன்னேறி செல்லாம்
-
சுவாமி வித்யானந்தர்(1-7-2018)
-

இந்துக்கள் என்ற பொதுப் பெயரில் அனைவரும் ஒன்றுசேர்ந்துவிடக்கூடாது என்பதில் கிறிஸ்தவர்களும்,முஸ்லீம்களும் கவனமாக இருக்கிறார்கள்


இந்துக்கள் என்ற பொதுப் பெயரில் அனைவரும் ஒன்றுசேர்ந்துவிடக்கூடாது என்பதில் கிறிஸ்தவர்களும்,முஸ்லீம்களும் கவனமாக இருக்கிறார்கள்
-
சாதியின் பெயரால் இந்துக்களை பிரிக்கிறார்கள்.மொழியின் பெயரால் இந்துக்களை பிரிக்கிறார்கள்.இனத்தின் பெயரால் இந்துக்களை பிரிக்கிறார்கள்.
-
இதற்காக தமிழர் நலன் என்ற பெயரில் போலி அமைப்புகளை உருவாக்குகிறார்கள்.நடுநிலை என்ற போர்வையில் டி.வி,நாளிதழ்களை நடத்துகிறார்கள்.சாதி சங்கங்களை ஊக்குவிக்கிறார்கள்.இனச் சண்டைகளை தூண்டிவிடுகிறார்கள்.வளர்ச்சித்திட்டங்களை தடுக்கிறார்கள்.இந்தியா வல்லரசாகிவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார்கள்.
-
சுருக்கமாக சொன்னால் இந்துமதம் அழியவேண்டும்.இந்துக்கள் பலம் பெறக்கூடாது.இந்தியா பல துண்டுகளாக சிதறவேண்டும்.இதுதான் அவர்கள் நோக்கம்
-
இதை அறியாத அப்பாவி இந்துக்கள் அவர்களின் மாயவலையில் சிக்கிக்கிடக்கிறார்கள்.
-
என்றாவது ஒருநாள் உண்மை வெளிவரும் அப்போது அவர்களுக்கு(சமூகவிரோதிகளுக்கு) இநதியாவில் இடம் இருக்காது
-
சுவாமி வித்யானந்தர்

சுவாமி விவேகானந்தர் எழுதிய உருக்கமான கடிதம்


சுவாமி விவேகானந்தர் எழுதிய உருக்கமான கடிதம்
-
சமுதாயத்தை, உலகத்தை மின்சக்தி பெற்றெழச் செய்ய வேண்டும்.முதலில் குணநலன் அமையட்டும்.புரிகிறதா? இருபதாயிரம் துறவிகள் நமக்குத்தேவை-ஆண்களும்,பெண்களும் வேண்டும்.புரிகிறதா?
-
இல்லற சீடர்கள் வேண்டாம்.தியாகிகளே வேண்டும்.நல்ல கல்வி கற்ற இளைஞர்கள் வேண்டும்.மூடர்கள் வேண்டாம்.நாம் ஒரு கிளர்ச்சி செய்ய வேண்டும்.வெட்டியாக இருக்காதீர்கள்.கச்சையை கட்டிக்கொண்டு தயாராகுங்கள்.எல்லா இடத்திலும் இயக்கங்களை ஆரம்பித்துக்கொண்டே செல்லுங்கள்,சீடர்களை உருவாக்கிக்கொண்டே செல்லுங்கள்.ஆணோ,பெண்ணோ யார் வந்தாலும் அவர்களை துறவியாக்கிவிடுங்கள்
-
ஒரு மாபெரும் ஆன்மீக அலை வந்துகொண்டிருக்கிறது.இதில் பாவிகள் மகான்கள் ஆக மாறுவார்கள்.மூடர்கள் பெரிய பண்டிதர்களுக்கும் குருவாக ஆக்கப்படுவார்கள்.ஸ்ரீராமகிருஷ்ணரின் அருளால் இவைகள் எல்லாம் நடைபெறும்.எழுந்திருங்கள்,விழித்திருங்கள்.லட்சியத்தை அடையும்வரை நில்லாதீர்கள்.
-
தொடர்ந்து விரிந்துகொண்டிருப்பதுதான் வாழ்க்கை.குறுவது சாவு.உயிர்களிடம் கருணைகொண்டு வேலை செய்பவனே ஸ்ரீராமகிருஷ்ணரின் மகன்.மற்றவர்கள் அற்பர்கள்.நமக்கு அனுகூலமான இந்த வேளையில் கிராமம்கிராமமாக செல்லுங்கள்,வீடுவீடாக செல்லுங்கள்,அவரது உபதேசத்தை பரப்புங்கள்.யாரால் இதை செய்ய முடியவில்லையோ அவர்கள் இங்கிருந்து மறைந்துபோகட்டும்
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் மகன் தன்னலத்தை நாடமாட்டான்.அவன் உயிரைக்கொடுத்தாவது பிறருக்கு நன்மை செய்ய விரும்புவான்.சோம்பல் வாழ்க்கை வாழ்ந்து தனது சுகத்திற்காக மற்ற அனைவரையும் பலியிட தயங்காதவர்கள் நம்மவர்கள் அல்ல.காலம் மிஞ்சிப்போவதற்குள் அவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் மடத்திலிருந்து வெளியேறிவிடட்டும்.ஸ்ரீராமகிருஷ்ணரின் போதனையை நாற்புரமும் பரப்புங்கள்.இதுவே சாதனை.இதுவே பஜனை.இதவே மோட்சம்
-
முன்னேறிச்செல்லுங்கள்.முன்னேறிச்செல்லுங்கள்.பேரலை புரண்டுவருகிறது.எழுந்திருங்கள்.விழித்திருங்கள்.அவர் நமக்குப் பின்னால் உள்ளார்.இதற்குமேல் என்னால் எழுத முடியவில்லை.இதைமட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.இந்தக் கடிதத்தை யார்யார் படிக்கிறார்களோ,அவர்களிடமெல்லாம் எனது சக்தி வரும்.நம்பிக்கை வையுங்கள்.முன்னேறிச்செல்லுங்கள்.
-
ஹரே,ஹரே! யாரோ என் கையைப்பிடித்து இவ்வாறெல்லாம் எழுதச் செய்கிறார்கள்.ஹரே,ஹரே! எல்லோரும் இழுத்துச் செல்லப்படுவார்கள்.அவருக்கு அல்ல,அவருடைய குழந்தைகளுக்கு யார்யார் சேவை செய்ய ஆயத்தமாக உள்ளார்களோ,ஏழைகளாக,துன்பப்படுபவர்களாக,பாவிகளாக,உள்ளவர்களுக்கு யார்யார் சேவை செய்ய ஆயத்தமாக உள்ளார்களோ அவர்களிடம் அவர் உறைவார்.அவர்களின் நாக்கில் கலைமகள் உறைவாள்.அவர்களின் நெஞ்சில் மகாசக்தியான மகாமாயை வாசம் செய்வாள்.
-
உங்கள்-விவேகானந்தா(நரேந்திரா)
-
சுவாமி விவேகானந்தர் மடத்தில் உள்ள துறவிகளுக்கு எழுதிய கடிதம்(புத்தகம்9பக்கம்437)
-
சுவாமி வித்யானந்தர்

Friday 29 June 2018

ஆரியர்கள் இந்தியாவிற்கு வெளியே இருந்து வரவில்லை என்பதை நிரூபிக்கும் இந்திய இலக்கியம்(சரஸ்வதி-நதி)


ஆரியர்கள் இந்தியாவிற்கு வெளியே இருந்து வரவில்லை என்பதை நிரூபிக்கும் இந்திய இலக்கியம்(சரஸ்வதி-நதி)
-
வேத காலத்தில் ஒரு பிரம்மாண்டமான நதி ஓடியது; அதன் பெயர் சரஸ்வதி; உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதம் இதன் புகழ் பாடுகிறது. ஆனால் மஹா பாரத காலத்திலேயே (கி.மு.3100) இது வற்றிச் சுருங்கி விட்டது. இப்பொழுதும் மனிதர்கள் நம்புவது என்னவென்றால் இந்த நதி அந்தர்வாஹினியாக த்ரிவேணி சங்கமத்தில் (அலஹாபாத், உத்திரப் பிரதேசம்) கலக்கிறது என்பதாகும்.ஆனால் இது வெறும் நம்பிக்கைதான்
-
சரஸ்வதி நதி பற்றி பாபா அணுசக்தி ஆராய்ச்சி (B A R C) நிலையம் கொடுத்த தகவல்கள் இந்திய வரலா ற்றையே மாற்றிவிட்டது. நாம் இது வரை சிந்துவெளி நாகரீகம் என்று அழைத்தது எல்லாம் தவறு அது, வேத கால சரஸ்வதி நதி நாகரீகம் என்று விஞ்ஞான ஆராய்ச்சி நிரூபித்துவிட்டது!
-
ரிக் வேதம் 50 க்கும் மேலான இடங்களில் சரஸ்வதி நதியைக் குறிப்பிடுகிறது.
-
ரிக்வேதத்தில் நதி ஸ்துதி என்று ஆறுகளை போற்றித் துதிக்கும் அற்புதமான பாடல் ஒன்று உண்டு! இதில் கங்கா, யமுனா, சரஸ்வதி, சுதோத்ரி (சட்லெஜ்) ஆகியன போற்றப்படுகின்றன. ஆரிய-திராவிட வாதம் பேசும் அறிவிலிகளுக்கு செமை அடி கொடுக்கும் பாடல் இது! ஏனெனில் இந்திய நதிகளைக் கிழக்கிலிருந்து மேற்காக வருணிக்கின்றன இந்த நதி ஸ்துதி. ஆக வேத காலத்திலேயே கிழக்கில்- கங்கைச் சமவெளியில் – பெரிய நாகரீகம் நிலவியது. மேலும் ரிக் வேதத்தில் அதிகப் பாடல்களில் பாடப்படும் இந்திரனின் திசை கிழக்கு! ஆகவே இந்துக்கள் மண்ணின் மைந்தர்கள்! வந்தேறு குடியேறிகள் அல்ல!
-
ஆகவே இந்துக்கள் சரஸ்வதி நதி பாயும் இடம் மட்டும் அல்லாமல் கங்கை நதி ஓடிக்கொண்டிருந்த இடங்களிலும் வாழ்ந்துள்ளார்கள்.
-
இப்பேற்பட்ட சரஸ்வதி பாலைவனத்தில் மறைவது பற்றி மஹாபாரதமும் ஐதரேய, சதபத பிராமணங்களும் பேசுகின்றன.
-
(இந்தியாவின் முதல் அணுகுண்டு 1974லும் இரண்டாவது அணுகுண்டு 1998லும் வெடிக்கப்பட்டன)

1998 மே 11ல் பொக்ரானில் நாம் அணுகுண்டு வெடித்துச் சோதித்து உலகையே வியப்பில் ஆழ்த்திய போது, அந்த அணுகுண்டு வெடிப்பினால் நிலத்தடி நீருக்கு என்ன நேர்ந்தது என்பதை ஆராய்வதில் பாபா அணுசக்தி ஆராய்ச்சி நிலையம் ஈடுபட்டது. அபோது அது குடி நீருக்குப் பயன்படுத்தக்கூடியது என்பதும் கீழேயுள்ள தண்ணீர் 8000 முதல் 14000 ஆண்டுப் பழமையானது என்றும் தெரியவந்தது.
-
இது தவிர மத்திய நிலத்தடி நீர் கமிஷன் 24 கிணறுகளை வெவ்வேறு இடத்தில் தோண்டி ஆராய்ந்ததில் 23 கிணறுகளின் நீர் தூய குடிநீர் என்றும் கண்டது.
இதிலிருந்து வரலாற்று நிபுணர்கள் கண்ட முடிவு:
-
கி.மு.6500 முதல் கி.மு3100க்கு இடைப்பட்ட காலம் ஹரப்பா நாகரீகம் .அதற்கும் முந்தைய நாகரீகம் அதாவது 10,000ஆண்டுகளுக்கு முந்தைய நாகரீகம் சரஸ்வதி நதிதீர நாகரீகம் . அப்போதுதான் ரிக்வேதப் பாடல்கள் எழுந்தன. பின்னர் அந்த நாகரீகம் படிப்படியாக அழிந்து பின்னர் சிந்துவெளி/ஹரப்பன் நாகரீகம் தோன்றியது.
-
ராஜஸ்தானிலுள்ள ஜைசால்மர் மாவட்ட விண்கல புகைப்படங்களை ஆராய்ந்தபோது சரஸ்வதி நதியின் மறைந்த தடயங்களில் சில பகுதிகள் தென்பட்டன. இது பற்றி பாபா அணுசக்தி விஞ்ஞானிகள் CURRENT SCIENCE கரண்ட் சயன்ஸ் என்ற சஞ்சிகையில் எழுதினர். 1995ல் டாக்டர் எஸ்.எம் ராவ், டாக்டர் கே.எம்.குல்கர்னி ஆகியோர் ஐசடோப் பிரிவைச் (ISOTOPE DIVISION) சேர்ந்தவர்கள் . அவர்கள் நிலத்தடி நீரின் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன் ஐசடோப்புகளை ஆராய்ந்தனர். ரிக்வேதத்தில் சரஸ்வதி நதி பற்றிச் சொல்லப்பட்ட விஷயங்கள் உண்மை என்று அவர்கள் ஆய்வு முடிவுகள் காட்டின. இப்போது கங்கா நகர் மாவட்டத்திலுள்ள கக்கர் நதியின் வறண்ட நிலப்படுகைகள், பாகிஸ்தானிலுள்ள ஹக்ரா, நரா நதிகள் ஆகியன சரஸ்வதியின் ஒரு சில பகுதிகள். இன்னும் நிலத்தடியில் சரஸ்வதியின் நீர் உள்ளது கோடைகாலத்திலும் இந்த நீர், பயிர்கள் வளர உதவுகின்றன. ஜைசாலமர் பகுதியில் மிகக்குறைந்த அளவு மழை பெய்தாலும் நிலத்துக்கு 50-60 மீட்டர் ஆழத்தில் தண்ணீர் கிடைக்கிறது. இவை எல்லாம் சரஸ்வதி நதியின் மிச்ச சொச்சங்களே என்றும் கண்டனர்.
நிலத்தடி நீர் சில ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதை ரேடியோ கார்பன் தேதிகள் நிர்ணயிக்கின்றன.
-
இந்தியாவிலிருந்து பாரசீக நாட்டுக்கு (ஈரான்) குடியேறிய ஜொராஸ்டரும் சரஸ்வதியைப் போற்றுகிறார்.

மனு தர்ம சாஸ்திரமும் இந்த நதியைப் புகழ்கிறது

சரஸ்வதிக்கும் த்ருஷத்வதிக்கும் இடைப்பட்ட பூமியே கடவுளால் உண்டாக்கப்பட்டது. இதுவே பிராமணர்கள் வாழுமிடம் (மனு 2-17-8)
ஆனால் வேத காலம் முடிவதற்கு முன்னரே சரஸ்வதி மறையத் துவங்கியதை பஞ்சவம்ச பிராமணம் தெளிவாகக் குறிப்பிடுகிறது
-
ராஜஸ்தானிலும் பாகிஸ்தானிலும் ஓடிய சரஸ்வதி பூகம்பத்தின் காரணமாக அழிந்துபோனது.பெரும் பகுதி பாலைவனங்களாக மாறிவிட்டன.
-
சரஸ்வதி பற்றி வேதத்தின் குறிப்பு லிங்க் இணைக்கப்பட்டுள்ளது.
-
https://ta.wikipedia.org/s/1jne
-
-
சுவாமி வித்யானந்தர்

Thursday 28 June 2018

ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவடிகளில் அமர்வதன் மூலமே இந்தியா முன்னேற முடியும்


ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவடிகளில் அமர்வதன் மூலமே இந்தியா முன்னேற முடியும்.அவரது வாழ்க்கையையும் உபதேசத்தையும் எங்கும் பரப்ப வேண்டும்.இதை யார் செய்வார்? 
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் கொடியை கையிலெந்தி உலகின்நற்கதிக்காக அணிவகுத்து செல்ல இருப்பது யார்? பெயர்,புகழ்,செல்வம்,போகம் மட்டுமின்றி இந்த உலகம்,மறுஉலகம் இவற்றின் சுகபோகங்களை துறந்து, சமுதாய சீரழிவு என்ற வெள்ளப்பெருக்கை தடுத்து நிறுத்த வருபவர் யார்?
-
இந்த பணிக்காக ஸ்ரீராமகிருஷ்ணர் யாரை தேர்ந்தெடுக்கிறாரோ அவன் பெருமை பெறுகிறான்.இருளில்அழுந்திக்கிடக்கின்ற கோடிக்கணக்கானோரிடம் இறைவனின் ஒளியைச் சேர்ப்பதாகிய அவனது லட்சியம் உலகத்திலேயே உயர்ந்தது.
-
-சுவாமி விவேகானந்தர்.புத்தகம்9பக்கம்417
-
சுவாமி விவேகானந்தர் தமிழர்களுக்கு எழுதிய கடிதம்

Tuesday 26 June 2018

இறைவன் இனிமைக் கடல்.இந்தக்கடலில் நீ மூழ்குவாயா மாட்டாயா சொல்.


இறைவன் இனிமைக் கடல்.இந்தக்கடலில் நீ மூழ்குவாயா மாட்டாயா சொல்.இது சச்சிதானந்த கடல்.இதில் மூழ்கினால் மரணம் இல்லை. இது அமுதக்கடல்
-
-ஸ்ரீராமகிருஷ்ணர் விவேகானந்தரிடம் சொன்னது.

-

அமெரிக்காவில் சுவாமி விவேகானந்தர் சந்தித்த சோதனைகள்


அமெரிக்காவில் சுவாமி விவேகானந்தர் சந்தித்த சோதனைகள்
--
சுவாமி விவோகானந்தர் அமெரிக்க செல்வதற்கு முன்பு வரை.அமெரிக்காவில் இந்துக்கள் பற்றியும் இந்துமதம் பற்றியும் மிகக்கேவலமாக பேசப்பட்டுக்கொண்டிருந்தது.இந்துக்கள் காட்டுமிராண்டிகள்,அழித்து ஒழிக்கப்பட வேண்டியவர்கள்,இந்துமதம் பண்பாடற்ற காட்டுவாசிகளின் மதம் என்றே போதிக்கப்ட்டது.அது மட்டுமல்ல அமெரிக்க குழந்தைகளின் பாடத்திலும் இது சேர்க்கப்பட்டிருந்தது. சுவாமிஜியிடம் பலமுறை இது பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது.
--
கிறிஸ்தவ மதபோதகர்களால் இந்துக்கள் மிகவும் மோசமாக சித்தரிக்கப்படுவதைக் கண்டு சுவாமி விவேகானந்தர் மிகவும் வேதனையடைந்தார். தங்கள் மதப்பிரச்சார வேலைகளுக்கு அமெரிக்காவில் பணம் திரட்ட எப்படியெல்லாம் இந்தியாவைக் குறித்தும், இந்துக்கள் குறித்தும் மிக மோசமான சித்தரிப்புக்களை கிறிஸ்தவ மதபோதகர்கள் பரப்பினார்கள் என்பதை நேரடியாகக் கண்டறிந்த விவேகானந்தர் மனம் வெதும்பிக் கூறினார்:
--
கிறிஸ்துவின் சிஷ்யர்களான இவர்களுக்கு இந்துக்கள் என்ன செய்துவிட்டார்கள்? ஒவ்வொரு கிறிஸ்தவக் குழந்தைக்கும் இந்துக்களை கொடியவர்கள் தீயவர்கள் உலகிலுள்ள பயங்கரமான பிசாசுகள் என்று அழைக்க கற்றுக் கொடுக்கிறார்களே. ஏன்? கிறிஸ்தவரல்லாத அனைவரையும், குறிப்பாக இந்துக்களை வெறுப்பதற்குக் கற்றுக் கொடுக்கிறார்கள். அமெரிக்காவில் ஞாயிற்றுக் கிழமை பாடத் திட்டங்களில் இப்படிக் கற்பிப்பது ஓர் அம்சமாகும். சத்தியத்துக்காக இல்லாமல் போனாலும் தமது சொந்தக் குழந்தைகளின் நீதி நெறி உணர்ச்சி பாழாகாமல் இருப்பதற்காகவாவது கிறிஸ்தவப் பாதிரிகள் இது போன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது

அப்படிக் கற்பிக்கப்பட்ட குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது ஈவிரக்கமற்ற கொடிய மனம் படைத்த ஆண்களாகவோ, பெண்களாவோ ஆனால் அதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? …. பாரத தேசம் முழுவதும் எழுந்து நின்று இந்து மகாசமுத்திரத்துக்கு அடியில் உள்ள எல்லா மண்ணையும் வாரியெடுத்து மேற்கத்திய நாடுகளின் மீது வீசினாலும் கூட நீங்கள் இன்று எங்கள் மீது வீசுகிற சேற்றின் அளவில் தினையளவு கூட பதிலுக்குப் பதில் செய்வதாக ஆகாது … இது போன்ற ஆக்கிரமிப்பான பொய்ப் பிரச்சாரங்களையெல்லாம் கிறிஸ்து ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்.
-
அமெரிக்காவில்சொ ற்பொழிவாற்றிகொண்டிருந்த காலத்தில்,பிப்ரவரி 1894 ல் அமெரிக்க பத்திரிக்கை ஒன்றில் சுவாமி விவேகானந்தர் இந்தியாவில் கிறிஸ்தவ மிஷனரிகளின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை தெரிவித்தார்.
இந்தியர்களை வெள்ளையர்கள் கடுமையாக துன்புறுத்திக்கொண்டிருக்கிறார்கள் .உண்ண உணவின்றி பட்டினியால் பல லட்சம் மக்கள் சாகிறார்கள்,அதை கேட்ட திராணியில்லாத இவர்கள் அப்பாவி ஏழைகளை மதம்மாற்ற அனைத்து முயற்சிகளையும் செய்கிறார்கள் .இந்தியார்களுக்கு தற்போது கிறிஸ்தவ மதம் தேவையில்லை என்று பேசினார்.
இது அமெரிக்க மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.கிறிஸ்தவ பாதிரிகள் சுவாமிஜியை பழிவாங்க நினைத்தார்கள் .அமெரிக்க மக்கள் மத்தியில் சுவாமிஜியை குறித்து பொய்யான பல தகவல்களை பரப்பினார்கள்.அவரை பற்றி பொய்யான தகவல்களை பத்திரிக்கைகளில் வெளியிட்டார்கள் .பல சூழ்ச்சிகளை கையாண்டார்கள்
இந்த வதந்திகள் காரணமாக பல பிரச்சனைகளை சுவாமிஜி சந்திக்க நேர்ந்தது. சுவாமிஜி யாரையெல்லாம் பார்ப்பாரோ அவர்களிடம் இவரைபற்றி தவறாக சொல்லி சுவாமிஜியை முழுவதும் தனிமைப்படுத்த முயற்சித்தார்கள்.ஆனால் சுவாமிஜி கலங்கவில்லை,நிலைகுலையவில்லை எப்போதும் போல இறைவனை சார்ந்து வாழ்ந்தார்.
-
சுவாமிஜி ஒரு மகான் என்றால் அவர் அற்புதங்களை நிகழ்த்தட்டும்,சித்து வேலைகளை காண்பித்து, அவர் மகான் என்பதை தெரியப்படுத்தட்டும் என்று பத்திரிக்கைகளில் சிலர் எழுதினார்கள்.
சுவாமிஜி அதற்கு பதிலளித்தார்.
எனது மதத்தை நிரூபிப்பதற்கு சித்து வேலைகள் எதுவும் என்னால் செய்ய இயலாது.முதலாவது சித்து வேலைகளும் அற்புதங்களும் நிகழ்த்திக்கொண்டு திரிபவன் அல்ல நான்.இரண்டாவதாக,எந்த இந்து மதத்தின் சார்பாக நான் வந்துள்ளேனோ,அந்த உண்மையான இந்து மதம் சித்துவேலைகளையும் அற்புத நிகழ்ச்சிகளையும் சார்ந்து இருக்கவில்லை.ஐம்புலன்களுக்கு எட்டாத சில நிகழ்ச்சிகளை பலர் நிகழ்த்திக்காட்டியிருக்கிறார்கள்,ஆனால் அவையும் சில நியதிகளுக்கு ஏற்பவே நிடைபெறும்.அவற்றிற்கும் இந்து மதத்திற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை.பணத்திற்காக வித்தை காட்டுபவர்கள் இவ்வாறு சித்துவேலைகளை காட்டட்டும்.சத்தியத்தை அறிய விரும்புபவர்களுக்கு இதனால் பயன் இல்லை.
-
சுவாமிஜியின் நண்பரும் ஸ்ரீராமகிருஷ்ணரின் பக்தருமாக மஜும்தார் என்பவரை வைத்து சுவாமிஜியை பழிவாங்க புதிதாக திட்டம் தீட்டினார்கள். மஜும்தார் தலைமையில் கல்கத்தாவில் இயங்கிவந்த இந்திய பத்திரிக்கையில் சுவாமிஜியை பற்றி பல கற்பனை கதைகளை எழுதினார்கள் .சுவாமிஜி வெளிநாடுகளில் பல தவறான பழக்கங்களில் ஈடுபட்டிருப்பதாகவும்,பெண்களுடன் தவறான பழக்கத்தின் இருப்பதாகவும்,அவர் இந்து மதத்தை போதிக்கவில்லை,வேறு எதையோ புதிதாக உருவாக்கி அதை போதிப்பதாகவும், வெளிநாட்டினர் உண்ணும் உணவை சாப்பிடுவதாகவும், எந்த விதமான ஆச்சாரங்களையும் கடைபிடிக்கவில்லை என்பதையும் எழுதினார்கள்.
சுவாமிஜியின் பிறந்த ஊராக கல்கத்தாவில் இப்படிப்பட்ட தகவல் பரவியதும் சுவாமிஜி மிகவும் கலக்கம் அடைந்தார்.தன் தாய் இந்த தகவல்களை கேட்டால் மிகவும் மனம் வருந்துவார் என்று வேதனை அடைந்தார்.
இவர்களுடன் இந்தியாவில் இருந்து பிழைப்புதேடி அமெரிக்கா வந்தது கிறிஸ்தவராக மதம் மாறிய ரமாபாய் என்ற பெண்ணும் சுவாமிஜியை பற்றி பல வதந்திகளை பரப்பி வந்தார்
-
தங்கள் இயக்கத்தில் சேர மறுத்ததால் தியோசபிக்கல் சொசைட்டியினரும் சுவாமிஜியை எதிர்த்தார்கள்.
இவர்களின் சூழி்ச்சியால் சுவாமிஜிக்கு பல இன்னல்கள் வந்தாலும் பொறுமையாக அவற்றை தாங்கிக்கொண்டார் பதிலுக்கு யார்மீதும் கோபம் கொள்ளவில்லை
சுவாமிஜி கிறிஸ்தவராக மதம்மாற வேண்டும் என்றும் இல்லாவிட்டால் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அச்சுறுத்தினார்கள்.
-
ஆனால் சுவாமிஜி அசைந்துகொடுக்கவில்லை. அடுத்த கட்டமாக விலைமாதுக்களை சுவாமிஜியிடம் அனுப்பி அவரை வீழ்த்த திட்டம் தீட்டினார்கள் .ஆனால் அவர்கள் சூழ்ச்சி தோல்வியடைந்தது.
அமெரிக்காவில் உள்ள டெ்டராய்ட் நகருக்கு விருந்திற்காக ஒருவர் சுவாமிஜியை அழைத்தார். (பெரும்பாலும் சுவாமிஜி விருந்தினர்கள் கொடுத்த உணவையே உண்டு வந்தார்.தமக்காக அவர் சமையல்காரர்களை நியமிக்கவில்லை.)அங்கு கொடுக்கப்பட்ட காப்பியை குடிப்பதற்காக சுவாமிஜி வாயருகே கொண்டு சென்றார். எப்போதும் உடன் நின்று காக்கும் ஸ்ரீராமகிருஷ்ணர் அப்போது தோன்றினார். ”அந்த காப்பியில் விஷம் கலந்துள்ளார்கள் அதை குடிக்காதே என்றார்“ சுவாமிஜி சுதாரித்துக்கொண்டார். பாதிரிகளின் திட்டம் தோல்வியடைந்தது.
-
ஆரம்பத்தில் சுவாமிஜி இந்த எதிர்ப்புகளை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அமைதிகாத்தார்.ஆனால் விஷம்வைத்து கொலைசெய்யும் அளவுக்கு சென்றபின் அவரால் பொறுமையாக இருக்க முடியவில்லை. சென்னையில் இருந்த அளசிங்கருக்கு இது குறித்து கடிதம் எழுதினார். ராநாதபுரம் மன்னரை சென்றுபார்த்து வெளிநாட்டில் தனது பணிகுறித்து மகிழ்சியடைவதாக தெரிவித்து ஒரு கூட்டம் கூட்ட ஏற்பாடு செய் அந்த கூட்டம் பற்றிய விபரங்கள் பத்திரிக்கைகளில் வரும்படி செய் என்றார்.
ஆனால் உடனடியாக எந்த நிகழ்வுகளும் இந்தியாவில் நடக்கவில்லை. சென்னை இளைஞர்களின் கடும்முயற்சிக்கு பின் சிறிதுசிறிதாக கும்பகோணம்,பெங்களுர் போன்ற இடங்களில் சுவாமிஜியை புகழ்ந்து கூட்டங்கள் நடந்தன. இவைகள் அமெரிக்க பத்திரிக்கைகளிலும் வெளிவர ஆரம்பித்தன.
அமெரிக்காவில் சுவாமிஜியை எதிர்த்த பாதிரிகளும் மற்ற வெறியர்களும் வாயடைத்துபோனார்கள்.கடைசியில் அவர்கள் சூழ்ச்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.
இறைவனின் அருளை எண்ணி நான் ஒரு குழந்தை போல அழுகிறேன்.இறைவன் தன் அடியவரை ஒருபோதும் கைவிடுவதில்லை என்று தன் மகிழ்ச்சியை சுவாமிஜி வெளியிட்டார்
----
விவேகானந்தர் விஜயம்
-
சுவாமி வித்யானந்தர்

Monday 25 June 2018

என்னைவிட ஆற்றல்மிக்க வீரபுருஷர் ஒருவர் இந்தியாவில் எப்போதாவது தோன்றுவார்-சுவாமி விவேகானந்தர்


என்னைவிட ஆற்றல்மிக்க வீரபுருஷர் ஒருவர் இந்தியாவில் எப்போதாவது தோன்றுவார்.அவர் இந்த பணிகளை(பாதியில் நிற்கும் பணிகள்) முடித்துவைப்பார்-சுவாமி விவேகானந்தர்
-
சுவாமி விவேகானந்தர் எழுதிய கடிதம்..
-
20-6-1894 சிகாகோ
-
அன்புள்ள திவான்ஜி சாகிப்
-
உங்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும்..இந்தியாவிலுள்ள சிலர் (பிரம்மசமாஜம்,தியோசப்பிக்கல் சொசைட்டி)அமெரிக்கா முழுவதும் என்னை குறைகூறி பிரச்சாரம் செய்கிறார்கள். நான் அமெரிக்கா போய்தான் முதன்முதலாகக் காவி உடை உடுத்தேன் என்றும். நான் வெறும் ஏமாற்றுபேர்வழி என்றும் கூறுகிறார்கள்.இதை கேள்விப்பட்டு அமெரிக்கர்கள் எனக்கு பணம் தர தயங்குகிறார்கள்.இத்துடன் இங்குள்ள பாதிரிகள் எப்போதும் எனக்கு எதிராக எதையாவது(குற்றத்திற்கு காரணம்) தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.என்னை குறை கூறி இங்குள்ள பத்திரிக்கைகளில் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்.
-
நான் இங்கு(அமெரிக்கா) வந்துள்ளதன் முக்கிய காரணம்,இந்திர்களுக்க சேவை செய்ய நிதி திரட்டுவதற்கே...
பொது மக்களுக்குளுக்கு கல்வியூட்டி அவர்களை உயர்த்தவேண்டும்.வயலில்.தொழிற்சாலையில் எங்கே மக்கள் வேலை செய்தாலும்,கல்வி அவர்களின் இருப்பிடத்திற்கு சென்று சேரவேண்டும்....
-
என் குருபாயிக்களை(சகோதர துறவிகள்) நீங்கள் பார்த்திருப்பீர்கள்.அவர்களைப்போல் சுயநலமற்ற,நல்லவர்களை,படித்தவர்களை இந்தியா முழுவதும் ஒன்று சேர்க்க வேண்டும்.அவர்கள் கிராமம் கிராமமாக போகட்டும்,மதத்துடன் அன்றாட நடைமுறை கல்வியையும் போதிக்கட்டும்.மதக்கல்வி வீடுவீடாக போதிக்கப்படவேண்டும்.இதைப்போலவே துறவி பெண்களையும் ஒருங்கிணைத்து அவர்களையும் அனுப்ப வேண்டும்.
-
இந்தகையை தியாகத்திற்கு,துறவிகளை தூண்டுவது எது தெரியுமா? மதத்தின்மீது அவர்களுக்குள்ள ஆர்வம்.ஒவ்வொரு புதிய அலைக்கும் ஒரு புதிய மையம் தேவை.புதிய மையத்தின் மூலமே பழைய மதத்தை புத்துயிர்பெறச்செய்ய முடியும்.உங்கள் பழைய கொள்கைகளையும் கோட்பாடுகளையும் ஒழித்துக்கட்டுங்கள் அவற்றால் பலனில்லை.ஒரு நற்பண்பு,ஒரு வாழ்க்கை,ஒரு யைம்,ஒரு தெய்வமனிதர்தான் வழிகாட்ட வேண்டும்.அவரை மையமாகக்கொண்டே மற்ற எல்லா அம்சங்களுக் ஒன்றுசேர வேண்டும்.அவை ஒரு பேரலையாக சமுதாயத்தின்மீது மோதவேண்டும்.அனைத்தையும் அந்த அலை அடித்து செல்லும், எல்லா அசுத்தங்களும் கழுவப்பட்டுவிடும்.
-
புராதன இந்து மதத்தை சீர்திருத்தியமைக்க இந்து மதத்தால்தான் முடியும்.போலித்தனமான சீர்திருத்தங்களால் முடியாது.அதேவேளையில் அவர்கள் கீழை மற்றும் மேலை பண்பாடுகளை ஒருங்கிணைக்க வல்லவர்களாக இருக்க வேண்டும்.
-
இத்தகைய பேரியக்கம் முளைவிட்டுள்ளது.பொங்கிவர இருக்கின்ற பேரலைகளின் மெல்லிய ஓசைகள் கேட்கவில்லையா?அந்த மையம் வழிகாட்டி செல்கின்ற அந்த தெய்வ மனிதர் இந்தியாவில் தோன்றினார்.அவரே ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்.அவரைச்சுற்றி இந்த கூட்டம் மெதுவாக ஒன்றுசேர்ந்து வருகிறது.அவர்கள் இந்தப் பணியை செய்து முடிப்பார்கள்.
-
திவான்ஜி,இதற்கு இயக்கம் வேண்டும்.பணம் வேண்டும் அதை சம்பாதிக்கவே அமெரிக்கா வந்தேன்.இந்தியாவில் யார் பணம் தருவார்கள்?நான் கடல் கடந்து அமெரிக்கா வருவதற்கு ஏழைகளிடமிருந்தே பணம் பெற்றேன் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.பணக்காரர்கள் செய்ய முன்வந்த பண உதவியை நான் மறுத்தேன்,ஏனென்றால் என் கருத்துக்களை அவர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை.ஓராண்டு அமெரிக்காவில் தங்கியருந்தும் என்னால் நிதி திரட்ட முடியவில்லை.
-
என் நாட்டு மக்களை நான் நேசிக்கிறேன்.மனித உதவியை நான் காலால் ஒதுக்குகிறேன்.மலைகளிலும் பள்ளங்களிலும்.பாலைவனங்களிலும் காடுகளிலும் என்னுடன் இருந்துள்ள இறைவன் என்றும் என்னுடன் இருப்பார் என்று நம்புகிறேன்.
இல்லாவிட்டால் என்னைவிட ஆற்றல்மிக்க வீரபுருஷர் ஒருவர் இந்தியாவில் எப்போதாவது தோன்றுவார்.அவர் இந்த பணிகளை(பாதியில் நிற்கும் பணிகள்) முடித்துவைப்பார்
-
நான் உங்களுக்கு எல்லாவற்றையும் கூறிவிட்டேன்.அன்பு நண்பரே நான் அடியாளம்வரை நேர்மையானவன்.என் மிகப்பெரிய குற்றம் என்நாட்டை அளவுக்குமீறி நேசிப்பதுதான்.நீங்களும் உங்களை சேர்ந்தவர்களும் எல்லா பேறுகளும் பெற்று இருப்பீர்களாக...
-
என்றும் நன்றியுடன்
விவேகானந்த
-
....சுவாமி விவேகானந்தர் எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி...புத்தகம்9பக்கம்292
-
சுவாமி வித்யானந்தர்

Sunday 17 June 2018

சுவாமி விவேகானந்தரின் முதல் சீடர்

சுவாமி விவேகானந்தரின் முதல் சீடர்
-
பிருந்தாவத்திலிருந்து ஹரித்துவார் நோக்கி புறப்பட்டார் சுவாமிஜி.இடையில் உள்ள ஹத்ராஸ் ரயில் நிலையத்தில் பசியும் களைப்பும் மேலிட அமர்ந்திருந்தார் (அந்த காலத்தில் ரயில் நிலையங்களில் ரயில் அதிகநேரம் நிற்கும்) அங்கே ரயில் நிலைய துணை அதிகாரியாக இருந்தவர் சரத் சந்திர குப்தர்.பழகுவதற்கு இனியவர்.
-
சரத் சுவாமிஜியை கண்டார்.அவரை பார்த்ததும் இனம்புரியாத சக்தி ஒன்று தம்மை அவரிடம் கவர்வதாக உணர்ந்தார்.நேராக அவரிடம் சென்று சுவாமிஜி பசியாக இருக்கிறீர்களா? வாருங்கள்.என் வீட்டிற்கு வாருங்கள் என்று அழைத்தார்
-
நான் உன் வீட்டிற்கு வந்தால் எனக்கு என்ன தருவாய் என்று சுவாமிஜி கேட்டார். என் இதயத்தை பிழிந்து இன்சுவையான பண்டம் தயாரித்து தருவேன் என்று துவங்கும் ஒரு பாரசீக பாடலை பாடினார் சரத்.இந்த பதிலால் மிகவும் மகிழ்ந்த சுவாமிஜி அவரது வீட்டிற்கு சென்று உணவருந்தினார்.
-
சில நாட்கள் அவருடன் தங்கும்படி சரத் கேட்டுக்கொண்டார்.சுவாமிஜியும் அதற்கு சம்மதித்தார்.சுவாமிஜி புறப்படும்போது.என்னை உங்கள் சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று வேண்டினார் சரத்.சுவாமிஜி அதற்கு சம்மதிக்கவில்லை.நான் பிச்சை எடுத்து வாழ்பவன்.உன்னால் அதேபோல் வாழமுடியாது என்று கூறினார்.ஆனால் சரத் பிடிவாதமாக இருந்தார்.நீங்கள்எங்கே சென்றாலும் உங்களை பின்தொடர்ந்து வருவேன் என்றார் சரத்.
-
அப்படியா! அப்படியானால் ஒரு பிச்சை பாத்திரம் எடுத்து பிச்சை எடுத்து வா! அதன்பிறகு பார்க்கலாம் என்றார் சுவாமிஜி.சரத் தயங்காமல் வீடுவீடாகசென்று பிச்சையெடுத்து வந்தார்.அதன்பிறகு சுவாமிஜியால் அவரை மறுக்க முடியவில்லை.அவரை சீடராக ஏற்றுக்கொண்டார்.
--
-
ஒருநாள் சுவாமிஜி சற்றே கவலையுடன் அமர்ந்திருந்தார்.அவரது முதல் சீடரான சரத் அவரிடம் அதற்கான காரணத்தைக் கேட்டார்.சற்றுநேரம் தன்னுள் ஆழ்ந்து அமைதியாக இருந்த சுவாமிஜி மென்மையாகக் கூறினார்.“என் மகனே! நான் ஆற்ற வேண்டிய மாபெரும் பெணி ஒன்று உள்ளது.அதை செய்வதற்குரிய திறமையோ தகுதியோ என்னிடம் இல்லை என்பதை நினைக்கும்போது என் மனம் தளர்கிறது”
-
“அது என்ன பணி?” என்று சீடர் கேட்டார்
-
“நமது தாய்நாட்டை புனரமைக்க வேண்டிய மாபெரும் பணி.ஆன்மீகம் என்பதே இல்லாமல் போய்விட்டது.பசி,பட்டினியால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகிறார்கள்.பாரதம் எப்படி விழித்தெழும்? இந்த மக்கள் உண்ணவே உணவில்லாமல் துன்பப்படுகிறார்கள்.இதில் ஆன்மீகத்தைப்பற்றி யோசிக்க முடியுமா? பாரதம் மீண்டும் விழித்தெழ வேண்டும்,தனது ஆன்மீகத்தால் உலகை வெல்ல வேண்டும்” என்று பேசினார்.
-
அவரது பேச்சில் இருந்த கம்பீரமும்,செய்து முடிக்க வேண்டும் என்ற உறுதியையும் கண்டு சரத்,தன் உயிரையும் கொடுக்க தயாராக இருப்பவன் போல உற்சாகமாக பேசினார்.“சுவாமிஜி,இதோ உங்கள் சீடன் இருக்கிறேன்.உங்கள் பணிக்காக நான் என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள்” என்றார்.
-
எனக்காக வீடு வீடாகசென்று பிச்சையெடுக்க முடியுமா? என்று கேட்டார்.சுவாமிஜி.
-
“ஆம். உங்களுக்காக நான் எதையும் செய்வேன் ”என்றார் சீடர்
-
சீடருடன் சுவாமிஜி ரிஷிகேசம் சோக்கி பயணத்தை துவக்கினார்.இதற்கு முன்பு சொகுசான வாழ்க்கை வாழ்ந்து வந்தவர் சரத். துறவு வாழ்க்கையின் சிரமங்களைச் சுலபமாக எதிர்கொள்ள இயலவில்லை. நீண்ட தூரம் நடப்பதும்,உணவு கிடைக்காமல் ,பசி தாகங்களைச் சகிப்பதும் அவருக்கு புதிய விஷயங்கள்.அவர் மிகவும் கஷ்டப்பட்டார்.சுவாமிஜி அன்பின் வடிவமாக இருந்தார். சீடரின் சுமைகளை சுவாமிஜியே சுமந்துகொண்டு நடந்தார்.ஒரு காலகட்டத்தில் சீடரையே குரு சுமந்து வந்தார்
-
அதைப்பற்றி பின்னாளில் சரத் கூறினார்...
-
இமயமலையில் ஒரமுறை நாங்கள் இருவரும் சென்றுகொண்டிருந்தபோது பசியாலும் தாகத்தாலும் நான் மயக்கமடைந்தேன்.இதற்கு மேலும் ஓரடி கூட எடுத்துவைக்க சக்தியில்லாமல் இருந்தேன்.அப்போது சுவாமிஜி என்னை சுமந்துகொண்டு நடந்தார். எனக்காக அவர் பலமுறை தன் உயிரையே பணயம் வைத்துள்ளார்...நண்பர்களே அவரைப்பற்றி நான் என்ன சொல்வேன்!--அன்பு, அன்பு, அன்பு, தன்னை நேசிப்பவர்களுக்காக தன் உயிரையும் கொடுக்க தயாராக இருக்கும் அன்பு. இதைத்தவிர அவரைப்பற்றி வேறு என்ன சொல்ல?எனது செருப்பைக்கூட அவர் சுமந்து சென்றுள்ளார்..
-
சரத் ஒருமுறை சற்று மனம்  தளர்ந்த நேரத்தில்  சுவாமிஜியிடம் கூறினார், “சுவாமிஜி. என்னை நீங்கள் கைவிட்டு விடுவீர்களா? ” அதற்கு. “முட்டாளே,உன் செருப்பைக்கூட நான் சுமந்துள்ளேன் என்பதை மறந்துவிட்டாயா?” என்றார் சுவாமிஜி..
-
சீடருடன் சுவாமிஜியின் பயணம் தொடரும்....
-
சுவாமி வித்யானந்தர்
-

Friday 15 June 2018

தனது கடைசிநாளை தானே முடிவு செய்தார் சுவாமி விவேகானந்தர்


தனது கடைசிநாளை தானே முடிவு செய்தார் சுவாமி விவேகானந்தர்.“சகோதரர்களே என் வேலை முடிந்துவிட்டது,இனி இவைகளை நீங்களே கவனித்துக்கொள்ளுங்கள்.எனக்கு விடைகொடுங்கள்”
-
1902-ம் ஆண்டு. சுவாமிஜி தனது துறவிசீடர்கள் அனைவரையும் ஒருமுறை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். எதற்காக ஆசைப்படுகிறார் என்பதை யாரும் அறியவில்லை.இந்தியாவில் பல்வேறு இடங்களில் மற்றும் வெளிநாடுகளில் வசித்து வந்த அனைவருக்கும் கடிதம் எழுதப்பட்டது.
சிலர் வந்தனர்,பலர் வேலை காரணமாக வரவில்லை. இது தங்களுக்கான கடைசிவாய்ப்பு என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
-
நாட்கள் ஆக ஆக மெல்ல மெல்ல மடத்தின் வேலைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார். சீடர்களுக்கு பயிற்சியளிப்பது போன்ற பணிகள் கூட குறைந்துபோனது. மெல்ல மெல்ல அவர் தியானத்தில் மூழ்க ஆரம்பித்தார். அவருடன் இருந்த சகோதர துறவிகள் இதை கவனிக்க தவறவில்லை.
-
”என் வேலை முடிந்துவிட்டது,இனி இவைகளை நீங்களே கவனித்துக்கொள்ளுங்கள் என்று சகோதரதுறவிகளிடம் கூறினார்”
-
”மரணம் என் முன்னால் நிற்கிறது, நான் வேண்டிய அளவு வேலை செய்துவிட்டேன். நான் கொடுத்துள்ளதை முதலில் உலகம் புரிந்துகொள்ளட்டும், அதை புரிந்துகொள்வதற்கே மிக நீண்ட காலம் ஆகும்.முடிவே இல்லாமல் விளையாடிக்கொண்டிருப்பதா? போதும் இந்த விளையாட்டு” என்று சுவாமிஜி கூறினார்.
-
தியானம் மட்டுமே அவரது முழுவேலையாகிவிட்டது. அவரது உதடுகள் எப்போதும் இறை நாமத்தை உச்சரித்தவாறு இருந்தது.
-
நான் யார் என்பதை நரேன் உணர்ந்துவிட்டால்,பிறகு நிர்விகல்ப சமாதியில் ஆழ்ந்துவிடுவான் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் முன்பு கூறியிருந்தார்.
-
சுவாமிஜி, நீங்கள் யார் என்று உணர்ந்துவிட்டீர்களா? என்று ஒருவர் கேட்டார். அதற்கு சுவாமிஜி, ஆம் என்று பதிலளித்தார். அப்போது அங்கே ஓர் ஆழ்ந்த மௌனம்
நிலவியது.
-
சுவாமிஜி நம்மையெல்லாம் விட்டுவிட்டு செல்ல போகிறார் என்பதை சிலர் உணர ஆரம்பித்தார்கள்.
அவர்களால் இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது.
-
1902 ஜுன் இறுதியில் ஒருநாள் சுவாமிஜி சுத்தானந்தரை அழைத்து ஒரு பஞ்சாங்கம் கொண்டுவரச்சொன்னார். ஏதோ ஒரு நாளை குறிப்பதற்காக பஞ்சாங்கத்தை கேட்கிறார் என்று சுத்தானந்தர் நினைத்தார்.ஆனால் தனது கடைசி நாளை குறிக்கவே அதை கேட்டார் என்பது அப்போது அவருக்கு தெரியவில்லை.
--
1902 ஜுலை 1. சுவாமிஜி பிரேமானந்தருடன் மாலை வேளையில் கங்கைக்கரையில் நடந்துகொண்டிருந்தார். திடீரென பிரேமானந்தரை அழைத்து கங்கைக்கரையில் ஓரிடத்தைச் சுட்டிக்காட்டினார். பிறகு அமைதியாக கூறினார்.“நான் உடம்பை விட்டபிறகு உடலை அந்த இடத்தில் எரியுங்கள்”! என்றார். சுவாமி பிரேமானந்தர் விவேகானந்தர்மீது ஆழ்ந்த அன்பு கொண்டவர்.அவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்வார் என்றே நம்பிக்கொண்டிருந்தார்.சுவாமி விவேகானந்தரின் ஆழ்மனத்தை அறிய தவறிவிட்டார்
-
ஜுலை 2.ஏகாதசி அன்று சுவாமிஜி விரதம் இருந்தார். ஆனால் அன்று காலையில் அங்கே சென்ற நிவேதிதைக்கு எல்லா உணவு வகைகளையும் பரிமாறி அவரைச் சாப்பிடச் செய்தார். நிவேதிதை சாப்பிட்டபோது அருகில் அமர்ந்து வேடிக்கையாக பேசினார். சாப்பிட்டு முடித்ததும் நிவேதிதாவின் கை கழுவ சுவாமிஜி நீர் வார்த்தார். கைகளை துண்டால் துடைத்தும் விட்டார்.
-
நிவேதிதா..”சுவாமிஜி, இதைல்லாம் நான்(சீடர்) அல்லவா உங்களுக்குச் செய்ய வேண்டும்‘ நீங்கள்(குரு) எனக்குச் செய்வதா?
-
சுவாமிஜி..ஏன் ஏசுநாதர் தம் சீடர்களுக்கு கால்களையே கழுவினாரே!
-
ஆனால்..அது..அவரது கடைசி நாளாயிற்றே! என்று சொல்ல வேண்டும் என நிவேதிதா நினைத்தார்..ஆனால் சொல்லவில்லை.
-
ஜுலை4, வெள்ளி. சுவாமிஜி குறித்துவைத்திருந்த தனது கடைசி நாளும் வந்தது...
-
காலையில் வழக்கம்போல 3 மணிக்கு எழுந்தார். பின்னர் தேனீர் வேளையில் சகோதர துறவிகளுடன் தங்கள் பழைய நாட்களைப்பற்றி பேசி ஆனந்தம் அடைந்தார்.
-
சுவாமிஜி காலை 8.30 மணிக்கு ராமகிருஷ்ணரின் கோவிலில் பூஜையறைக்கு சென்றார்.அங்கே தியானத்தில் ஆழ்ந்தார்.9.30 மணிக்கு பிரேமானந்தர் அங்கு வந்தார், அவரிடம் பூஜையறையின் அனைத்து ஜன்னல்கள் கதவுகளை மூடச்சொன்னார்.. அப்போது அங்கு என்ன நடந்தது என்று யாருக்கு தெரியும்? நீங்கள் எனக்கு கொடுத்த வேலைகளை முடித்துவிட்டேன் ,இனி எனக்குவிடைகொடுங்கள் என்று குருதேவரிடம் சொல்லியிருக்கலாம்.காலை 11 மணிவரை தியானத்தில் இருந்தார்.
-
கதவுகளைத்திறந்து வெளியே வந்த சுவாமிஜி மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.காளியின் மீது ஓர் அழகிய பாடலை பாடியவாறே படிக்கட்டு வழியாக கீழே இறங்கி வந்தார்.
-
அப்போது அவருக்கு முற்றிலும் இந்த உலக நினைவே இல்லை. கீழே நின்றுகொண்டிருந்த யாரையும் அவர் கவனிக்கவில்லை.
-
அதன்பிறகு சுவாமிஜி, சுத்தானந்தரிடம் நூல்நிலையத்திலிருந்து சுக்ல யஜுர்வேத சம்ஹிதையைக் கொண்டு வந்ததும் அதிலிருந்து, ஸுஷும்ண,ஸுர்ய ரச்மி..என்று தொடங்குகின்ற பகுதியை படிக்கச்சொன்னார்.
-
மதிய உணவை அனைவருடனும் நேர்ந்து உண்டார். சாப்பிடும்போது வேடிக்கை வினோதங்கள் பேசி அனைவரையும் மகிழச்செய்தார்.
அதன் பிறகு சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொண்டார்,மடத்தில் உள்ள பிரம்மச்சாரிகளை அழைத்து தொடர்ந்து மூன்று மணி நேரம் சம்ஸ்கிருத இலக்கண பாடம் நடத்தினார். அதையும் வேடிக்கை வினோதங்கள்,கதைகள் மூலம் நடத்தினார்.
-
மாலை 4 மணி,இளம் சூடான பாலும்,தண்ணீரும் சாப்பிட்டார்.பிறகு பிரேமானந்தருடன் சுமார் 1 மைல் தூரம் உள்ள பேலூர் கடைத்தெரு இருந்த திசையை நோக்கி நடந்து சென்றார்கள்
வேதக்கல்லூரி ஒன்றை நிறுவவேண்டும் என்று சுவாமிஜி கூறினார்.
வேதங்களை படிப்பதால் என்ன நன்மை என்று பிரேமானந்தர் கேட்டார்.
மூடநம்பிக்கை ஒளியும் என்று சுவாமிஜி பதிலளித்தார்
-
மாலை 5.30 மணிக்கு இருவரும் மடத்திற்கு திரும்பினார்கள்.மாலையில் கோவிலில் ஆரத்திக்காக மணியடிக்கப்பட்டது. பிரேமானந்தர் பூஜை செய்வதற்காக பூஜையறைக்குச் சென்றார்.
--
கிழக்கு வங்காளத்திலிருந்து வந்திருந்த விரஜேந்திரர் என்ற இளைஞர் அப்போது சுவாமிஜிக்கு பணிவிடைகள் செய்து வந்தார்.
-
இந்த நாட்களில் சுவாமிஜியின் உடல் ஆரளவு ஆரோக்கியமாகவே இருந்தது.வெளியில் நீண்ட தூரம் நடந்து செல்லவும், பிரம்மச்சாரிகளுக்கு பாடம் எடுக்கவும் கூடிய அளவு நல்லநிலையில் இருந்தது. எனவே சுவாமிஜி விரைவில் உடல்நலம் பெற்று, முன்புபோலவே பிரச்சார பணிகளில் ஈடுபடுவார் என்றே அனைவரும் நம்பிக்கொண்டிருந்தார்கள்
-
விரஜேந்திரரிடம் சுவாமிஜி கூறினார்,” இன்று என் உடம்பு லேசாகவும் நன்றாகவும் இருக்கிறது. நான் நன்றாக இருக்கிறேன் ”என்றார்.தமது அறையில் வடமேற்கு நோக்கி ஜெபமாலையுடன் ஜெபம் செய்ய தொடங்கினார்.அறையின் வெளியே விரஜேந்திரரை அமர்ந்திருக்குமாறு கூறினார்.
-
சுமார் 6.30 மணியளவில் சீடரை கூப்பிட்டு,உஷ்ணமாக இருக்கிறது,அதை ஜன்னல் கதவுகளை திறந்து வை என்றார். பிறகு தமது தலையில் விசிறிமூலம் சிறிது வீசுமாறு கூறினார், சிறிது நேரம் சென்ற பிறகு போதும் இனி என் கால்களை பிடித்துவிடு என்றார். அப்போது அவர் கையில் ஜெபமாலையுடன் ஜெபம் செய்துகொண்டிருந்தார்.
-
சுவாமிஜி இடது பக்கமாக லேசாக படுத்திருந்தார், சேிறிது நேரத்திற்கு பிறகு ஒரே ஒருமுறை லேசாக வலது பக்கமாக திரும்பி படுத்தார்.
-
திடீரென அவரது கைள் நடுங்கின. கனவு கண்ட குழந்தை அழுவதுபோல சுவாமிஜியிடமிருந்து ஒரு சத்தம் எழுந்தது. சிறிது நேரத்தில் ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்தார். அவரது தலை தலையணையில் சாய்ந்தது. மீண்டும் ஒருமுறை அதேபோல் ஆழ்ந்த மூச்சை இழுத்தார். பிறகு எல்லாம் நிசப்பதம். 
-
அப்போது மணி 9.00
சுவாமிஜி சமாதியில் ஆழ்ந்திருப்பதாக விரஜேந்திரர் நினைத்தார். இருப்பினும் சற்று கவலையுடன் கீழே ஓடிச்சென்று அத்வைதானந்தரை அழைத்தார். அப்போது இரவு உணவுக்காக மணி அடித்தது அனைவரும் அங்கே திரண்டனர்.
-
அத்வைதானந்தர் சுவாமிஜியின் நாடியை சோதித்தார்.அவருக்கு எதுவும் புரியவில்லை.பிரேமானந்தர் நாடித்துடிப்பை பார்த்தார். நாடித்துடிப்பு நின்றிருந்தது.
-
அவர் சமாதியில் இருப்பதாக நினைத்து எல்லோரும் ஜெய் ஸ்ரீராமகிருஷ்ணா என்று அவரது நாமத்தை உரத்த குரலில் உச்சரித்தார்கள். எந்தப்பயனும் இல்லை. உடனே ஓடிச் சென்று மருத்துவரை அழைத்துவரும் படி கூறினார்கள்.
-
பிரேமானந்தருக்கு உண்மை புரிந்துவிட்டது. அவர் ”ஓ ”என்று அழ ஆரம்பித்தார்
-
மருத்துவர் 10.30 மணிக்கு வந்தார். அவர் செயற்கை முறையில் மூச்சை மீண்டும் செயல்படுத்துவதற்கு முயற்சித்தார்.எந்த பலனும் இல்லை.
-
அப்போது நள்ளிரவு 12 மணி. சுவாமிஜி மாரடைப்பால் மரணமடைந்ததாக டாக்டர் மகேந்திர நாத் தெரிவித்தார்.
ஆனால் மருத்துவர்கள் என்ன காரணத்தை கூறினாலும்,அவர் சமாதியில் உடலைவிட்டு வெளியே வந்துவிட்டார் என்பதே உண்மை.
-
அப்போது சுவாமிஜிக்கு வயது 39வருடம் , 5மாதம் 24 நாள் ஆகியிருந்தது. அவர்40வது வயதை பார்க்கவில்லை.
-
சுவாமிஜியின் உடல் அதன் பிறகு,மலர்ச்சியாக இருந்தது. நோய் காரணமாக இறந்தவர் உடல்போல தோன்றவில்லை.அப்போது அவர் ஒரு கௌபீனம் மட்டுமே உடுத்தியிருந்தார். அவரது கண்கள் மேல் நோக்கியவாறு இருந்தது.
-
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு நூலிலிருந்து எடுக்கப்பட்டது.....
-
சுவாமி வித்யானந்தர்