சுவாமிஜிக்கு விஷம் வைத்துகொல்ல முயற்சித்த பாதிரிகள்
சுவாமிஜிக்கு விஷம் வைத்துகொல்ல முயற்சித்த பாதிரிகள் ----- அமைரிக்காவில் சொற்பொழிவாற்றிகொண்டிருந்த காலத்தில்,பிப்ரவரி 1894 ல் அமெரிக்க பத்திரிக்கை ஒன்றில் சுவாமி விவேகானந்தர் இந்தியாவில் கிறிஸ்தவ மிஷனரிகளின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை தெரிவித்தார். இந்தியர்களை வெள்ளையர்கள் கடுமையாக துன்புறுத்திக்கொண்டிருக்கிறார்கள் .உண்ண உணவின்றி பட்டினியால் பல லட்சம் மக்கள் சாகிறார்கள்,அதை கேட்ட திராணியில்லாத இவர்கள் அப்பாவி ஏழைகளை மதம்மாற்ற அனைத்து முயற்சிகளையும் செய்கிறார்கள் .இந்தியார்களுக்கு தற்போது கிறிஸ்தவ மதம் தேவையில்லை என்று பேசினார். இது அமெரிக்க மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.கிறிஸ்தவ பாதிரிகள் சுவாமிஜியை பழிவாங்க நினைத்தார்கள் .அமெரிக்க மக்கள் மத்தியில் சுவாமிஜியை குறித்து பொய்யான பல தகவல்களை பரப்பினார்கள்.அவரை பற்றி பொய்யான தகவல்களை பத்திரிக்கைகளில் வெளியிட்டார்கள் .பல சூழ்ச்சிகளை கையாண்டார்கள் இந்த வதந்திகள் காரணமாக பல பிரச்சனைகளை சுவாமிஜி சந்திக்க நேர்ந்தது. சுவாமிஜி யாரையெல்லாம் பார்ப்பாரோ அவர்களிடம் இவரைபற்றி தவறாக சொல்லி சுவாமிஜியை முழுவதும் தனிமைப்பட...