Posts

Showing posts from June, 2025

பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும்

  பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும் .. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. -திருக்குறள் .. துறந்தார்க்கும் என்றால் துறவிகளுக்கு, துவ்வாதவர் என்றால் உணவு இல்லாதவர்களுக்கு,இறந்தார் என்றால் முன்பு வீட்டில் இறந்துபோன பித்ருக்களுக்கு இல்வாழ்வான் என்பான் துணை என்றால் தினமும் சாப்பாடு வழங்க வேண்டும் என்று அர்த்தம். . பித்ருக்களுக்கு தினமும் சாப்பாடு படைக்க வேண்டும் என்பது நமது சாஸ்திரம் சொல்லும் செய்தி. திருக்குறளை பலர் மொழியெர்த்திருக்கிறார்கள். ஆனால் யாரும் பித்ருக்களுக்கு தினமும் சாப்பாடு படைக்க வேண்டும் என்பதைப்பற்றி பேசவில்லை.இதற்கு காரணம் நமது சாஸ்திரங்களைப்பற்றி அவர்கள் படிக்காததுதான் காரணம். . திருக்குறளை படிப்பதற்கு முன்பு மனுஸ்மிருதி,மகாபாரதத்தில் வரும் நீதி மொழிகள் இவைகளைப் படித்திருந்தால் திருக்குறள் இன்னும் நன்றாக புரியும். .. நாம் பல பழங்கங்களை மறந்துவிட்டோம். அதில் முக்கியமான ஒன்று தினமும் தெய்வத்திற்கும்,பித்ருக்களுக்கும் உணவு படைக்க வேண்டும் என்பது. சிலர் தெய்வத்திற்கு தினமும் உணவு படைப்பார்கள். ஆனால் பித...

ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-16

  ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-16 . முக்தி பெற வீட்டைத் துறக்க வேண்டுமா? .. ஒருவர் முக்தியடைய வேண்டுமானால் இரண்டு வழிகளில் ஏதாவது ஒன்றை முயற்சிக்க வேண்டும். ஒன்று சக்தியை இழக்கும் வழி. இன்னொன்று சக்தியை ஏற்கும் வழி. சக்தியை இழக்கும் வழியில் தன்னிடம் உள்ள எல்லா சக்தியையும் இழக்க வேண்டும். அதற்கு உலகத்தை துறந்து பிச்சை ஏற்று வாழும் வழியை தேர்ந்தெடுக்க வேண்டும். .. பழைய காலத்தில் காசியில் சென்று வாழ்ந்தால் முக்தி என்று சொல்வார்கள்.பிறகு காசியில் இறந்தாலே முக்தி என்ற சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். பழைய காலத்தில் அறுபது வயதை கடந்த ஒருவர் குடும்பப் பொறுப்பை மகனிடம் ஒப்படைத்துவிட்டு காசியில் சென்று வாழ ஆரம்பிப்பார்.காசியில் எங்கும் ஞானம் பற்றிய பேச்சுதான் நடந்துகொண்டிருக்கும்.அதை தொடர்ந்துகேட்டுக் கொண்டிருப்பார்கள். சுமார் பத்து,இருபது ஆண்டுகள் தொடர்ந்து அங்கேயே வாழ்வார்கள். காசியைவிட்டு நீங்கி வேறு எங்கேயும் செல்லமாட்டார்கள். காசியில் தங்குவதற்கு எந்த ஏற்பாடும் இருக்காது. மழையோ,வெயிலோ,குளிரோ அனைத்தும் உடலை பாதிக்கவே செய்யும்.இதனால் வரும் துன்பங்களை அனுபவிக்கும்போது பாவம் தொ...

ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-15

  ஆன்மீகமும் - விஞ்ஞானமும் - பாகம் -15 .. இந்த உலகத்தில் எந்த செயல் நிகழ்ந்தாலும் அதற்கு பிரதியாக இன்னொரு செயலும் கூடவே நிகழ்ந்துவிடுகிறது . இந்த எதிர்செயலை நிறுத்த முடியாது . நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் எந்த செயலைச்செய்தாலும் அதற்கு பிரதியாக இன்னொரு செயல் ஏற்பட்டுவிடுகிறது . நாம் நல்லது என்று நினைத்து செய்யும் செயல்கள் சிலருக்கு நல்லதாகவும் சிலருக்கு தீயதாகவும் அமைந்துவிடுகிறது . எப்படி இருந்தாலும் நம்மால் செயல்புரியாமல் இருக்க முடியாது . .. மனிதன் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் செயல்களினால் பிறருக்கு துன்பம் ஏற்படுகிறது . இதனால் பாவம் என்ற எதிர்வினை ஏற்படுகிறது . இதை நீக்குவதற்கு பிராயசித்தம் என்று பெயர் . முக்கியமாக மூன்று வழிகளில் இந்த பாவத்தை நீக்க முடியும் . 1. பாவத்திற்கான பலன் நோய் , மனத்துயரம் , வறுமை இன்னும் பல . இதை நீக்க உடல் ரீதியாக துன்பத்தை ஏற்றுக்கொள்ளுதல் ஒரு வழி . உதாரணமாக பல நாட்கள் விரதம் இருந்து நீண்ட தூரம் உள்ள கோவிலுக்கு நடந்தே செல்லுதல் , அல்லது காவட...