Posts

Showing posts from February, 2017

எதிர்கால மதம் வேதாந்தமா?

Image

வேதாந்தமும் இந்திய வாழ்க்கையில் அதைச் செயல்முறைப்படுத்தலும்

Image

செயல்முறை வேதாந்தம்

Image

லட்சியம்

Image

உண்மையான மனிதனும் தோன்றும் மனிதனும்

Image

ஆன்மா

Image

மரணமில்லாப்பெருநிலை

Image

எனது போர்முறை

Image

மறுபிறப்பு பற்றி சுவாமி விவேகானந்தர் கருத்து

Image

விவேகானந்தரை ஏன் சுவாமி என்கின்றார்கள் ?இறைவனும் மனிதரும் ஒன்றா?

Image
விவேகானந்தரை ஏன் சுவாமி என்கின்றார்கள் ?இறைவனும் மனிதரும் ஒன்றா? - சுவாமி என்றால் இறைவன் என்று அர்த்தம். நமது சொந்த இயல்பு இறைவன்தான். ஆனால் நாம் அதை அறியவில்லை. நான் இறைவன் என்ற நிலையை அடைந்தவர்களை சுவாமி என்கிறோம். கணவனை மனைவி சுவாமி என்று அழைப்பதுண்டு. சபரிமலைக்கு செல்பவர்களும் சுவாமி தான்,கோவிலில் குடியிருப்பவரும் சுவாமி தான். நான் இறைவன் என்ற அந்த நிலையை அடையாதவர்கள் கூட சுவாமி தான். அந்த வகையில் பார்த்தால் இந்த உலகத்தில் உள்ள அனைவரும் சுவ ாமி தான். அதனால் தான் சுவாமி விவேகானந்தர் அனைவரையும் பார்த்து, நீங்கள் அனைவரும் தெய்வங்கள் என்று கூறுகிறார். நாம் சுவாமி என்று கூறும்போது உடலை குறிப்பதாக நினைத்துவிடக்கூடாது.நமது சொந்த இயல்பு உடல் இல்லை. உடல் என்பது நமது சட்டை போன்றது. நமது சொந்த இயல்பு உருவமற்றது. வேதங்களில் இறைவனுக்கு உருவம் இல்லை என்று மீண்டும்,மீண்டும் சொல்லப்படுகிறது. நமக்கும் உருவம் இல்லை. அப்படியானால் இந்த உடல் எங்கிருந்து வந்தது? இதை தெரிந்துகொள்ள வேண்டுமானால் வேதாந்த தத்துவத்தை உரிய குருவிடம் , சிஷ்யனாக சேர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும். 

இந்துமதம் ஜாதிகளை ஆதரிக்கிறதே! பகவத்கீதையில் கூட ஜாதிகளை ஆதரித்து கிருஷ்ணர் பேசியிருக்கிறாரே

Image
கேள்வி...இந்துமதம் ஜாதிகளை ஆதரிக்கிறதே! பகவத்கீதையில் கூட ஜாதிகளை ஆதரித்து கிருஷ்ணர் பேசியிருக்கிறாரே, மற்றும் சூத்திரர்களை தாழ்வானவர்கள் என்ற கருத்தும் இந்துமதத்தில் உள்ளதே, இதை மறுத்து கூறமுடியுமா? - சுவாமி வித்யானந்தர்.... - இந்துமதத்திற்கும் ஜாதிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை முதலில் தெரியப்படுத்திக்கொள்கிறேன். ஜாதிகள் என்பது என்ன? ஜாதிகள் என்பது பிரிவு. ஒவ்வொரு தொழிலை செய்பவர்கள் தங்களை ஒரு பிரிவாக கருதிக்கொண்டார்கள். உதாரணமாக மீன்பிடி தொழில் செய்பவர்கள் ஒரு பிரிவாகவும், நெசவு வேலை செய்பவர்கள் ஒரு பிரிவாகவும், சிற்பவேலை செய்பவர்கள் ஒரு பிரிவு.இவ்வாறு ,அவர்கள் செய்யும் வேலையை வைத்து தனித்தனி பிரிவுகளாக பிரிந்துகொண்டார்கள். இது யாரும் உருவாக்கவில்லை. தானாக ஏற்பட்ட ஒன்று. இந்த பிரிவுகளில் யார் உயர்ந்தவர்கள் யார் தாழ்ந்தவர்கள் என்று வேறுபாடு எழுவது இயல்பானது . அறிவு அதிகம் உள்ளவன், சிறந்த குணம் கொண்டவன் யாரோ அவன் உயர்ந்த பிரிவாக கருத்ப்பட்டான். அந்த காலத்தில் ஆட்சிசெய்பவர்கள் மக்களிடமிருந்து வரிபணத்தை பெற்றுவந்தார்கள். அனைவரிடமும் ஒரு போல் வரியை பெறமுடியாது.ஆகவே இந்த பிர...

இந்த உலகில் உள்ள அனைவரையும் இந்துக்களாக மாற்றுவதே நமது லட்சியம்

Image
இந்த உலகில் உள்ள அனைவரையும் இந்துக்களாக மாற்றுவதே நமது லட்சியம்  - நான் ஏற்கனவே வெளியிட்டிருந்த ஒரு பதிவில் இந்த உலகில் உள்ள அனைவரையும் இந்துக்களாக மாற்றுவதே நமது லட்சியம் என்று குறிப்பிட்டிருந்தேன். இதை படித்த பின் சிலர், இது மதவெறியர்கள் பேசும் கருத்து போல் அல்லவா இருக்கிறது என்று தங்கள் கருத்தை வெளிப்படுத்தினார்கள். - நான் குறிப்பிட்ட வார்த்தைகளை படிக்கும் போது எனக்கும் அவ்வாறு தான் தோன்றுகிறது. எனவே இங்கே அதற்கான விளக்கம் தேவைப்படுகிறது... - ஒரு காலத்தில் இன்றைய விஞ்ஞானத்தை பெரும்பாலான மதவாதிகளும், மதத்தை நம்பும் பாமர மக்களும் ஏற்றுக்கொள ்ளவில்லை. விஞ்ஞானிகளை இறைவனுக்கு எதிரான துரோகிகள் என்று கூறி எரித்துகொன்றார்கள். - படிப்படியாக விஞ்ஞானம் ,மதத்தின் கருத்துக்களை சுக்கல்சுக்கலாக்கி, தூக்கி எறிந்துவிட்டு, மக்களின் மனத்தில் நீங்காத இடத்தை பெற்றுவிட்டது. இன்று மதங்களை ஏற்றுக்கொள்ளாத மனிதர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஆனால் எல்லோரும் விஞ்ஞானத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். அப்படியானால் எல்லோரையும் விஞ்ஞான ஆதரவாளர்கள் என்று கூறலாமா. கண்டிப்பாக கூறலாம். - இன்று நம்முன் உள்ள சவால் எ...

மற்ற மதங்களைவிட இந்துமதம் சிறந்தது என்று ஏன் சொல்கிறார்கள்?

Image
கேள்வி....மற்ற மதங்களைவிட இந்துமதம் சிறந்தது என்று ஏன் சொல்கிறார்கள்? - சுவாமி வித்யானந்தர்..... - 1.நமது மதம் தத்துவங்களை ஆதாரமாக கொண்டது. எந்த மகானையோ மனிதர்களையோ ஆதாரமாக கொள்ளவில்லை .பிற மதங்கள் அந்த மதத்தை தோற்றுவித்த மனிதர்களை ஆதாரமாக கொண்டது - 2.நமது மதத்தின் முடிவுகள் இன்றைய விஞ்ஞானிகளின் இன்றைய கண்டுபிடிப்புகளுக்கு ஒத்து இருக்கிறது.  - உதாரணமாக 1.சூன்யத்திலிருந்து எந்தபொருளையும் படைக்க முடியாது, சூன்யத்திலிருந்து பிரபஞ்சத்தை படைக்க முடியாது.2. அனைத்தும் வட்டம்போல உள்ளது. முட்டையிலிருந்து குஞ்சு, குஞ்சுவிலிருந்து முட்டை இதே போல் சுழற்சி. பிரபஞ்சமும் தோற்றம்,ஒடுக்கம், தோற்றம் ஒடுக்கம் என்று தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது 3. ஒரு சக்தி தான் இன்னொரு சக்தியாக மாறுகிறதே தவிர சூன்யத்திலிருந்து புதிதாக சக்தியை உருவாக்க முடியாது. 4. ஒரு உயிர்தான் இன்னொரு உயிராக பரிணமிக்கிறது. ஓர் அறிவு,ஈர் அறிவு என்று அறிவு படிப்படியாக விரிந்து உயர்நிலையாக மனிதனாக பரிணமிக்கிறது. 5. இந்த உலகில் எப்போதும் இரண்டு சக்திகள் உள்ளன கவர்தல்சக்தி மற்றும் விலக்கும் சக்தி 6. இந்த உலகிற்கு எது தேவையோ அதை...

வீட்டில் வளர்க்கும் பசுவையும். காளையையும் ஏன் கொல்லக்கூடாது?

Image
கேள்வி...வீட்டில் வளர்க்கும் பசுவையும். காளையையும் ஏன் கொல்லக்கூடாது? இதற்கும் இந்து மதத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா? - சுவாமி வித்யானந்தர்... -- ஒரு கற்பனை கதை மூலம் இதை விளக்க முயல்கிறேன். - மூன்று பேர் காட்டில் சென்று, காட்டிலே இயற்கையாக வாழ்ந்துவரும் பசுவையும்,காளைகளையும் பிடிக்க சென்றார்கள். அவர்கள் நினைத்த படி அவைகளை பிடித்தார்கள்.  - அதில் ஒரு பசு கேட்டது. என்னை என் பிடித்தாய்? காட்டிலே சுதந்திரமாக உலவிவந்தேன். சிங்கம், புலி இவைகளால் உயிர் போய்விடுமோ என்று மட்டுமே அவ்வப்போது பயப்படுவேன் என்றது. அதற்கு பசுவை பிடித்தவன் சொன்னான், உனது உயிரை நான் காப்பாற்றுகிறேன்.உன் வாழ்நாள் முழுவதும் உனக்கு உயிர் பயம் ஏற்படாதவாறு பாதுகாப்பேன், உனக்கு தேவையான உணவளிப்பேன்.அதற்கு பதிலாக நீ எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும். எனக்கும் எனது குடும்பத்திற்கும் தேவையான பால் தரவேண்டும் என்றால்.  - அந்த பசுவும் நல்லது, நீ எனக்கு ஒரு உதவி செய்கிறாய்,அதே போல் நானும் உனக்கு உதவி செய்கிறேன். ஆனால் இந்த விதியை மீறி, நான் பால் கொடுக்க முடியாத நிலை வரும்போது என்னை இறைச்சிக்காக கொன்றாலோ, வேறு யாருக்காவத...

நமக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தை நீக்குவதற்காக உடலை வருத்தி நேர்த்திக்கடன் செலுத்துவது சரியா?

Image
கேள்வி.....நமக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தை நீக்குவதற்காக உடலை வருத்தி நேர்த்திக்கடன் செலுத்துவது சரியா? - சுவாமி வித்யானந்தர்... - நமக்கு ஏற்பட்டுள்ள தீராத துன்பத்திற்கு நாம் தான் காரணம். கடவுள் காரணமல்ல. ஏற்கனவே நாம் செய்ய செயல்களின் பலனை தான் இப்போது அனுபவிக்கிறோம். இதை நிவர்த்தி செய்வது பரிகாரம்.  - பிறருக்கு தெரிந்தோ, தெரியாமலோ செய்த தீமைகள் தான் , இப்போது நமது துன்பத்திற்கு காரணம் .அது இந்த பிறவியில் செய்யாவிட்டாலும், முற்பிறவிகளில் செய்திருக்கலாம். அதேபோல் நாம் சார்ந்துள்ள குடும்பத்தில் யாராவது முன்பு பிறருக்கு துன்பம் விளைவித்திருந்தால், அதனாலும் தற்போது துன்பம் ஏற்படுகிறது. - இதை நிவர்த்தி செய்வதற்கு, நமது உடலை வருத்துவது எதிர்மறையான வழி, இதைவிட நேர்மறையான வழி ஒன்று உள்ளது. இந்த உடலை பயன்படுத்தி, ஏழைகளுக்கு உணவு கொடுக்கலாம், கல்வி கற்றுகொடுக்கலாம், அல்லது ஆன்மீக ஞானத்தை கொடுக்கலாம். இவ்வாறு இந்த உடல் பிறரது சேவைக்கு பயன்படுமானால் அதுவே சிறந்த பரிகாரம். - இறைவனுக்கு சேவை செய்ய விரும்புபவன் இறைவனது பிள்ளைகளான மக்களுக்கு முதலில் சேவை செய்ய வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் க...

சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா? இந்துமதத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது?

Image
கேள்வி... சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா? இந்துமதத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது? - சுவாமி வித்யானந்தர்... - இந்துமதம் என்பது இந்தியாவில் தோன்றிய பல மதங்களை உள்ளடக்கிய ஒரு பொது பெயர்.  - சைவம் என்பது தனிமதம்.ஒரு மனிதன் முக்தியடைய தேவையான அத்தனை கருத்துக்களும் அதில் இருக்கின்றன. அதே போல வைணவம் என்பதும் தனி மதம்.அதிலும் ஒருவன் முக்தியடைய தேவையான அனைத்து கருத்துக்களும் உள்ளன. அதேபோல் சாக்தம் எனப்படும் தேவி வழிபாடு பற்றிய மதமும் தனிமதமாகும். அதிலும் முக்தியடைவதற்கு தேவையான அனைத்து கருத்துக்களும் உள்ளன. - சைவமதத்தை பொறுத்தவரை சிவன் தான் முழுமுதற் கடவுள். வைணவத்தை பொறுத்தவரை விஷ்ணுவும். சாக்தத்தை பொறுத்தவரை காளியும் முழுமுதற் கடவுள். - ஒவ்வொரு மதத்திலும் பிற மதங்களை இகழ்ந்து பேசி மட்டம் தட்டும் கருத்துக்கள் உள்ளன. சைவமதத்தினர்,திருமாலை ,சிவனின் கீழ் உள்ளவராக கருதுகிறார்கள். அதே போல் வைணவத்தில் விஷ்ணுவுக்கு கீழ் சிவன் இருப்பதாக கருதுகிறார்கள். சாக்த மதத்தில் சிவனும்,விஷ்ணுவும் , தேவிக்கு கீழ் உள்ளவர்கள். - தற்காலத்தில், பாமர மக்கள் இந்த மூன்று வழிபாட்டுமுறைகளையும்,தனித்தனியாக ஏற்றுக்க...

குல தெய்வம் என்பது என்ன? இந்துமதத்திற்கும் குல தெய்வத்திற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா?

Image
கேள்வி...குல தெய்வம் என்பது என்ன? இந்துமதத்திற்கும் குல தெய்வத்திற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? - சுவாமி வித்யானந்தர்.... - இந்துமதத்தின் நோக்கம் என்ன? முக்தி. இயற்கையின் பிடியிலிருந்து விடுதலை பெறுவது. - ஒரு மனிதனை முக்தியை நோக்கி இட்டு செல்லும் கருத்துக்களை இந்துமதம் ஆதரிக்கிறது. மனிதனை மீண்டும் மீண்டும் கட்டுண்டவனாக மாற்றும் கருத்துக்களை ஆதரிப்பதில்லை. இது அடிப்படை. - ஒருவீட்டில் திருமணம் ஆகாத யாரவது இறந்தால் அவர்கள் குல தெய்வமாக பூஜிக்கப்படுகிறார்கள். உதாரணமாக வீட்டில் ஒரு பெண் இறந்துவிட்டால், அந்த பெண்ணிற்கு வீட்டிற்குள்ளோ அல்லது வீட்டை ஒட்டியோ ஒரு அறையை ஒதுக்குவார்கள். அங்கே அந்த பெண்ணின் உடைமைகளை வைத்து பாதுகாப்பார்கள். வருடம் ஒருமுறையோ அல்லது பலமுறையோ, அந்த பெண்ணிற்கு விருப்பமானவற்றை படைப்பார்கள். - ஒரு மனிதன் இறந்த பிறகு முக்தியடையாவிட்டால்,மறுபிறவி எடுக்கிறான் என்பது இந்துமதத்தின் அடிப்படை கருத்து. - இறந்த பிறகு உயிர் உடலைவிட்டு பிரிந்து சில நாட்கள் வீட்டிலேயே தங்கியிருக்கும். வீட்டில் உள்ளவர்கள் தன்னை குறித்து அழுவதை அது கவனிக்கும். அங்கிருந்து அடுத்து எங்கே செல்வது என்ற...

மனித பிறப்பின் நோக்கம் என்ன?

Image
கேள்வி..மனித பிறப்பின் நோக்கம் என்ன? - சுவாமி வித்யானந்தர்.... - ஒவ்வொரு உயிரும் இயற்கையின் கட்டுகளிலிருந்து விடுபடவே விரும்புகிறது.கடலில் வாழும் மீன் தன்னைவிட பெரிய மீன் துரத்துவதை அறிந்து அதிலிருந்து தப்பிக்க நினைக்கிறது. வானத்தில் உள்ள பற்வையை பார்க்கிறது. அது சுதந்திரமாக இருப்பதாக நினைக்கிறது. எனவே அது படிப்படியாக பரிணமித்து பறவையாகிறது.  - பறவை தன்னைவிட பெரிய பறவை துரத்துவதை கண்டு வேதனையடைகிறது. அது மிருகங்களை காண்கிறது. அது சுதந்திரமாக இருப்பதாக நினைக்கிறது. பரிணாம வளர்ச்சியில் மிருகங்களாக மாறுகிறது. மிருகங்களும் மனிதனை காண்கிறது.மனிதன் சுதந்திரமாக இருப்பதாக நினைக்கிறது,பரிணமித்து மனிதனாகிறது. இதுவரை நாம் பார்த்தது நவீன விஞ்ஞானத்தில் பரிணாமவாதம். - மனிதன் தன்னைவிட சுதந்திரமாக இருப்பவர்யாராவது இருக்கிறார்களா என்று தேடுகிறான். இயற்கையின் பிடியில் சிக்கி பிணி,மூப்பு,இறப்பு இவைகள் இல்லாத யாராவது இருக்கிறார்களா என கேள்வி கேட்கிறான். இறைவனுக்கு பிணி,மூப்பு,இறப்பு இல்லை என்று பதில் வருகிறது. - ஆகவே இறைவனாகவே மாற வேண்டும் என்று முயற்சிக்கிறான். கடைசியில் அவனது முயற்சி வெற்றி பெறு...

சில சமுதாயத்தில் ஒரே கடவுள் கொள்கை உள்ளது, சில சமுதாயத்தில் பல கடவுள் கொள்கை உள்ளது

Image
கேள்வி....சில சமுதாயத்தில் ஒரே கடவுள் கொள்கை உள்ளது, சில சமுதாயத்தில் பல கடவுள் கொள்கை உள்ளது. இதில் எது சரி? எது தவறு? - சுவாமி வித்யானந்தர்... - கேள்வி சிறியதாக இருந்தாலும் இதற்கான பதில் பெரியதாக இருக்கலாம். இந்த கேள்வியை சரியாக புரிந்துகொள்ள வேண்டுமானால், நாம் நமது மூதாதயரின் வாழ்க்கையையும்,வழிபாடுகளையும் ஆராய வேண்டும். நீங்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்நோக்கி செல்ல வேண்டும். - பண்டைய மனிதன் விலங்குகளை வேட்டையாடி அவைகளை உண்டும். இயற்கையாக கிடைக்கும் பழங்களை,கிழங்குகளை உண்டும் வாழ்ந்தான். அப்படி வாழ்ந்த மனிதன் கூட தன்னை காக்க உயர்ந்த தெய்வம் இருப்பதாக எண்ணினான். தனக்கு கிடைக்கும் இறைச்சியையும் அந்த தெய்வத்திற்கு படைத்த பிறகே உண்டான்.அதே போல் வேட்டையாடும் போது அந்த தெய்வம், விலங்குகளை பிடித்து தரவேண்டும் என்று வேண்டிக்கொண்டான். இவர்கள் ஒரு குழுவாக வேட்டையாடுவதும். பின்பு அவைகளை பங்கிட்டு சாப்பிடுவதும் வழக்கம். இந்த குழுவுக்கு ஒரு காவல் தெய்வம் இருக்கும். அவ்வப்போது இந்த காவல் தெய்வத்திற்கு விழா எடுப்பார்கள்.சிறந்த மாமிசத்தை படைத்து மகிழ்வார்கள். - இதேபோல் பல காட்டுவாசி குழுக்கள் ...

இறைவனுக்கு இரு மனைவிகள் இது என்ன கோட்பாடு?

Image
கேள்வி....இறைவனுக்கு இரு மனைவிகள் இது என்ன கோட்பாடு? - சுவாமி வித்யானந்தர்.... - பழைய காலங்களில் சமுதாயத்தில் அடிக்கடி போர் நிகழ்வது உண்டு. இந்த போர்களில் பல ஆண்கள் கொல்லப்பட்டுவிடுவார்கள். 1000 பெண்கள் இருக்கும் இடத்தில் 500 ஆண்களே இருப்பார்கள். இதை சரி செய்ய ஆண்கள் இரு பெண்களை திருமணம்புரிய அனுமதித்தார்கள். தற்போது போர்கள் இல்லை.ஆண்களும் பெண்களும் கிட்டத்தட்ட சமஅளவில் இருப்பதால் ஒருவன் ஒருத்தியை திருமணம் செய்து கொள்கிறான். நேபாளம் போன்ற சில நாடுகளில் 100ஆண்டுகளுக்கு முன் 1000 ஆண்களுக்கு 500 பெண்கள் என்ற அளவில் பெண்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.இதை சரி செய்ய ஒரு பெண் இரண்டு ஆண்களை திருமணம் செய்து வாழ அனுமதிக்கப்பட்டார்கள்.இவ்வாறு செய்யாவிட்டால் பெண்கள் கிடைக்காத ஆண்கள், பெண்களை கடத்திகொண்டு செல்வது அதிகரிக்கும். சமுதாயம் சிக்கலின்றி வாழ்வதற்கு ஏற்ப சமுதாய சட்டங்கள் அமைக்கப்படுகின்றன. - மக்கள் எப்படியோ அதேபோல் அவர்கள் வழிபடும் கடவுளும். சிலர் இரண்டு மனைவிகளோடு வாழும் கடவுளை வழிபட விரும்புகிறான். சிலர் ஒரு மனைவியோடு வாழும் இறைவனை வழிபடுகிறான். ஒருவன் தவக்கோலத்தில் இருக்கும் இறைவனை ...