ஆன்மா,இயற்கை,இறைவன் சொற்பொழிவின் முக்கிய கருத்துக்கள்
சுவாமி விவேகானந்தரின்- ஆன்மா,இயற்கை,இறைவன் சொற்பொழிவின் முக்கிய கருத்துக்கள் ‡ வேதாந்த தத்துவத்தின்படி மனிதன் மூன்று பொருட்களால் ஆனவன் தூலவடிவமான உடல் அடுத்து சூட்சும உடல்,கடைசியில் ஆன்மா ‡ சூட்சும உடல் பல யுகங்களானாலும் அழியாமல் இருக்கும்.இவை எந்த தடைகளையும் கடந்துவிடும்.ஆனால் தூலஉடலைப்போல அதுவும் ஜடம்தான் ‡ நான்‡உணர்வு,புத்தி,சித்தம்,பொறிகள்,புலன்கள்,உடல் எல்லாமே ஆன்மாவின் கட்டளைக்கு அடங்கி நடக்கின்றன.இவற்றையயல்லாம் தோன்றுவித்ததும் ஆன்மாதான் ‡ பிரபஞ்சத்தை முழுவதுமாக எடுத்துக்கொண்டால் அது எந்த அமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கிறதோ,அதே அமைப்பில்தான் அதன் ஒவ்வொரு பகுதியும் அமைக்கப்பட்டிருக்கிறது ‡ பிரபஞ்சத்தில் ஒரு சிறுபகுதியில் என்ன இருக்கிறதோ அதுவே பிரபஞ்சம் முழுவதும் இருக்கும் என்பதை நாம் காணலாம் ‡ ஒரு கண்ணாடித்துண்டை உடைத்துபொடியாக்கியால் அது மூலக்கூறுகளாக மாறுமேதவிர சூன்யமாகிவிடாது.இந்த உலகிலுள்ள எல்லா பொருட்களும் அதேபோல்தான் ‡ எந்த பொருட்களையும் சூன்யமாக மாற்றமுடியாது.கண்களால் காணமுடியாத நுட்பநிலையை அவை அடையலாம்.ஆனாலும் அவை நுட்பமாக இருக்கவே செய்கிறது ‡ சூன்ய...