ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-35

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
பாகம்-35

ஹலதாரியிடம் குருதேவர் கொண்ட தொடர்பில் ஓர் இனிமையான மறைபொருள் இருந்தது. ஹலதாரி குருதேவரின் சித்தப்பாவின் மகன் என்பதை முன்னரே குறிப்பிட்டிருந்தோம். அவர் குருதேவருக்கு மூத்தவர். ஏறக்குறைய 1858-ஆம் ஆண்டில் அவர் தட்சிணேசுவரத்திற்கு வந்திருக்கக்கூடும். ராதாகோவிந்தர் ஆலய அர்ச்சகராக நியமிக்கப்பட்ட அவர் அந்தப் பொறுப்பை 1865- ஆம் ஆண்டு வரை வகித்தார். ஆகவே அவர் குருதேவரின் இரண்டாவது நான் காண்டு சாதனைக்காலத்தில் அதிகமாகவும், தட்சிணேசுவரத்தில் தங்கியிருக்க  வேண்டும். குருதேவரிடம் நெருங்கிப் பழகுகின்ற பேறு பெற்றிருந்தாலும் குருதேவரைப்பற்றி எந்தவித முடிவான கருத்தும் அவருக்கு ஏற்படவில்லை.
சாஸ்திரங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தவர் ஹலதாரி.ஆகவே குருதேவர் பரவச நிலையில் இருக்கும் போது அணிந்திருக்கின்றஉடை , பூணூல் முதலியவற்றைக் களைந்து எறிந்து விடுவது ஹலதாரிக்குப் பிடிக்கவில்லை.
தன் சகோதரன் ஒரு பைத்தியம் அல்லது சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கையற்றவன் என்று நினைத்தார்.
ஹிருதயர் கூறினார்.சிலவேளைகளில் அவர் என்னிடம் ”ஹிருதய்! அவன் தனது ஆடை,பூணூல் முதலியவற்றைக் களைந்துவிடுகிறான். இது மிகவும் மோசம். முந்தைய பிறவிகளில் செய்த நற்கருமங்களின் காரணமாகவே அந்தணப் பிறவி வாய்க்கிறது. அதனைச் சாதாரணமாக எண்ணி” அந்த அபிமானத்தை விட்டுவிடநினைக்கிறானாம்.
அப்படியென்ன உயர்ந்த நிலை அவனுக்கு வந்துவிட்டது.?எதன் காரணமாக இப்படிச்செய்யத் துணிந்து விட்டான். ஹிருதய்! உன் வார்த்தைகளில் அவனுக்கு நம்பிக்கை இருக்கிறது. அவன் இவ்வாறு செய்யாமல் பார்த்துக்கொள்வது உன் கடமை. இத்தகைய செயல்களைச் செய்யாமல் தடுப்பதற்காக அவனைக் கட்டிப்போட நேருமானால் அதைக்கூடச் செய்ய த் தயங்காதே“ என்று கூறுவார்.
அதே சமயம் கண்களிலிருந்து நீர் தாரைதாரையாகப் பெருகி வழிய குருதேவர் பூஜை செய்வது, மனமகிழ்ச்சி பொங்கி ப் பெருக அவர் இறைவனின் திருப்பெயரையும் புகழையும் பாடுவது, தீவிர மன ஏக்கத்துடன் இறைக்காட்சி பெறத்துடிப்பது ஆகியவை ஹலதாரியை பெருவியப்பில்  ஆழ்த்தாமலும் இருக்கவில்லை.
இவை கட்டாயமாக இறையருளினால் தான் ஏற்பட்டிருக்கவேண்டும். சாதாரண மனிதர்களிடம் இத்தகைய நிலைகள் ஒருபோதும் காணப்படுவது இல்லையே என்றும் எண்ணுவார்.
 சிலநேரங்களில் அவர் ஹிருதயரிடம் ஹிருதய்! அவனிடம் ஏதோவோர் அசாதாரணமான சக்தியிருப்பதை நீ உணர்ந்திருக்கவேண்டும். இல்லையென்றால் அவனுக்கு இவ்வளவு மனப்பூர்வமாக சேவை செய்ய முடியாது, என்றும் கூறுவதுண்டு.
பலவகை ஐயங்களால் குழம்பிய ஹலதாரியின்  மனம் குருதேவரின் உண்மை நிலையை அறிந்து கொள்ள இயலாமல் தடுமாறியது.

குருதேவர் கூறினார்,
நான்கோயிலில் ஸ்ரீஜை செய்வதைப்பார்த்து வியப்புடன் எத்தனையோ தடவை, ராமகிருஷ்ணா, இப்போது நான் உன்னை அறிந்து கொண்டேன், என்று சொல்வார்.
அதற்கு நான் கேலியாக அண்ணா. ஜாக்கிரதை!
மீண்டும் குழம்பிவிடாதீர்கள், என்று பதில் சொல்வேன்.
அவரும் விடாமல், நீ இனிமேலும் என் கண்களில் மண்ணைத்தூவ முடியாது, உன்னிடம் நிச்சயமாக தெய்வீக சக்தி உள்ளது. இந்ததடவை நான் அதனை முற்றிலுமாக அறிந்து கொண்டேன். என்பார்.
நல்லது, இந்த உறுதி எத்தனை நாள் பார்க்கலாம், என்பேன் நான், ஆனால் அவர் கோயிலில் பூஜையை முடித்துக்கொண்டு ஒரு சிட்டிகை பொடியை மூக்கில் இழுத்துக்கொண்டு பாகவதம் கீதை அத்யாத்ம ராமாயணம் போன்ற ஏதாவதொரு நுஸலைப்பற்றி விவரிக்கத் தொடங்குவாரோ இல்லையோ, ஆவணம் தலைக்கேறிவிடும்.முற்றிலும் வேறுபட்ட மனிதராக மாறிவிடுவார் அவர்
 .ஒரு நாள்  நான் அவரிடம் சென்று அண்ணா சாஸ்திரங்களில் நீங்கள் படித்த எல்லா நிலைகளையும் நான் உணர்ந்திருக்கிறேன். இவை அனைத்தையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது, என்று சொன்னேன்.
உடனே அவர், அடேய் நீ ஒரு முழுமுட்டாள்.நீயாவது இவற்றைப்புரிந்து கொள்வதாவது! என்று கூறிவிட்டார்.
நான் உண்மையில் சொல்கிறேன் .இதோ இதனுள்( தம் உடலைக்காட்டி) இருப்பவர் அனைத்தையும் எனக்கு விளக்கி க்  கூறுகிறார். என்னுள் தெய்வீக சக்தி இருப்பதாகச் சற்றுமுன் கூறினீர்களே, அந்த சக்தி தான் எனக்கு எல்லாவற்றையும் புரிய வைக்கிறது. என்றேன்.
இதைக்கேட்டது தான் தாமதம் , கொதித்தெழுந்துவிட்டார்.விலகிப்போ முட்டாளே! கலியுகத்தில் கல்கி அவதாரத்தைத் தவிரவேறு அவதாரம்  உண்டு என்று  எந்த சாஸ்திரம் சொல்கிறது? உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. அதனால் தான் நீ இவ்வாறு நினைக்கிறாய்? என்று ஓங்கிய குரலில் கத்தினார்.
நான் சிரித்துக்கொண்டே இனிமேல், குழப்பமே வராது என்று சற்று முன்பு கூறினீர்களே! என்று கேட்டேன். அதனை யார் செவி கொடுத்துக்கேட்பது?
இது போல் ஒரு முறையல்ல. இருமுறையல்ல, பலமுறை நிகழ்ந்ததுண்டு.
ஒரு நாள் நான் பரவச நிலையில் மரக்கிளை ஒன்றில் ஆடையேதுமின்றி ஒரு சிறுவனைப்போல் அமர்ந்து சிறுநீர் கழித்துக் கொண்டிருந்ததை ஹலதாரி கண்டார்.
 சந்தேகத்திற்கு இடமின்றி என்னை ஒரு பிரம்மதைத்யன் பிடித்துக் கொண்டதாக அன்றிலிருந்து ஹலதாரி முடிவு செய்து கொண்டார்.
ஹலதாரியின் மகன் காலமான செய்தியை முன்பே குறிப்பிட்டுள்ளோம். அந்த நிகழ்ச்சிக்குப் பின் ஹலதாரி காளியைத்தமோ குண தேவி என்று முடிவு செய்து கொண்டார்.
ஒரு நாள்  அவர் குருதேவரிடம் தமோ குண தேவியை வழிபடுவதன்  மூலம் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுமா? அத்தகைய தேவியை நீ ஏன் வழிபடுகிறாய், என்று கேட்டுவிட்டார். இதற்கு குருதேவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை.
ஆனால் இஷ்டதெய்வத்தை அவமதித்ததைக்கேட்டதால் புண்பட்ட மனத்துடன் காளி கோயிலுக்குச் சென்று அன்னை காளியிடம் கண்ணீருடன் அம்மா, சாஸ்திரங்களில் ஆழ்ந்த அறிவு பெற்றவர் ஹலதாரி, நீ தமோ குண வடிவினள், என்று    சொல்கிறாரே! உண்மையிலேயே நீ தமோ குண வடிவினள் தானா? என்று கேட்டார்.
அன்னை குருதேவருக்கு உண்மையை அறிவித்து அருளினாள். உடனே அவர் மட்டற்ற மகிழ்ச்சியுடன்  ஹலதாரியிடம் ஓடிச்சென்று, ஆனந்த மேலீட்டால் ஒரே தாவலில் அவரது தோளின் மீது எறி அமர்ந்து கொண்டு அன்னையையா தமோ குண வடிவினள் என்கிறீர்?
 அன்னையா தமோ  குண வடிவினள்.? அவளே அனைத்தும். முக்குணங்களில் திருவுருவம் அவளே! தூய சத்வ குண வடிவினளம் அவளே! என்று திரும்பத் திரும்ப உணர்ச்சி்ப் பெருக்குடன் கூறினார். பரவச நிலையிலிருந்த குருதேவரின் சொற்களாலும் ஸ்பரிசத்தாலும் ஹலதாரியின் அகக்கண் அப்போதைக்குத் திறந்தது போல் தோன்றியது!
ஹலதாரி  அப்போது பூஜை செய்து கொண்டிருந்தார்.குருதேவர் கூறியதை அப்படியே ஏற்றுக்கொண்டது மட்டுமன்றி குருதேவரிடம் அன்னையின் வெளிப்பாட்டையும் கண்டார்.
சந்தனத்தையும் மலரையும் எடுத்து அவரது தாமரைத் திருவடிகளில் அர்ப்பணித்து வணங்கினார்.
சிறிது நேரம் கழித்து ஹிருதயர் அங்கே வந்து ஹலதாரியிடம், மாமா, அவரை ஏதோ பேய் பிடித்திருப்பதாக எல்லாம் கூறினீர்களே! இப்போது ஏன் வணங்குகிறீர்கள்? என்று கேட்டார். ஏனென்று எனக்கே தெரியவில்லை. காளி கோயிலிலிருந்து வந்த அவன் என்னை ஏதோ செய்து விட்டான் எல்லாமே எனக்கு மறந்துவிட்டது போல் தோன்றுகிறது. இறைவனின் சக்தி அவனிடம் மிளிர்வதை நான் கண்டேன்.
காளி கோளிலில் நான் ராமகிருஷ்ணனிடம் சொல்லும் போதெல்லாம் இத்தகைய உணர்வை என்னிடம் அவன் தோற்றுவிக்கிறான் .ஆகா! என்ன அற்புதம் இது! என்னால் எதையுமே புரிந்து கொள்ள முடியவில்லையே! என்று ஹிலதாரி பதிலளித்தார்.
இவ்வாறு ஹலதாரி குருதேவரிடம் தெய்வீக சக்தியைப் பன்முறை உணர்ந்தாலும், பொடிபோட்டுக் கொண்டு சாஸ்திர விளக்கம் சொல்ல அமர்ந்து விட்டால் எல்லாம் பறந்து விடும். கல்விச் செருக்கால் மதிமயங்கி மறுபடியும் தன் பழைய நிலைக்கே சென்றுவிடுவார்.
பெண்ணாசை, பொன்னாசை விடுபடும் வரை புறச்சடங்குகள் சாஸ்திர அறிவு ஆகியவற்றால் எந்த பயனும்  இல்லை. பரம்பொருளை உணர்வதும் இயலாது ஹலதாரியின் நடத்தையிலிருந்து இந்தக் கருத்துக்கள்  தெளிவாகின்றன.

தொடரும்..

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?