Posts

Showing posts from May, 2020

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள் 54

வகுப்பு-54   நாள்-11-3-2020 - ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள் - ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார் - ஊர்த்வமூலமத:ஷாகமஷ்வத்தம் ப்ராஹுரவ்யயம்। சந்தாம்ஸி யஸ்ய பர்ணாநி யஸ்தம் வேத ஸ வேதவித்॥ 15.1 ॥   15.1 மேலே வேருள்ளதும் கீழே கிளைகள் உள்ளதும் ஆகிய ஆலமரத்தை அழிவற்றது என்று சொல்கிறார்கள். வேதங்கள் அதனுடைய இலைகள். அதை யார் அறிகிறானோ அவன் வேதத்தை அறிபவன் ஆகிறான் - ஆலமரத்தின் வேர்கள் பூமிக்குள் இருக்கும்.கிளைகள்,இலைகள்,பழங்கள் மேலே இருக்கின்றன. ஆனால் மனிதனைப்பொறுத்தவரை எது வேர்? தலைதான் வேர் எது பழம்? ஆண்,பெண் பிறப்புறுப்புகள்   பிரபஞ்சத்தை ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால் தூலம்,சூட்சுமம்,காரணம் என்று மூன்று படிகள் இருக்கின்றன. தூலம் என்பது கண்களால் காணக்கூடிய காட்சிகள் சூட்சுமம் என்பது மரணத்திற்குபிறகு காணக்கூடிய காட்சிகள் காரணம் என்பது பிரஞ்சம் தோன்றுவதற்கு காரணமாக இருப்பவை - தலைகீழாக வளர்ந்துள்ள மேலே வேர்களையும். இடையில் மரத்தின் கிளைகளையும்,முடிவில் இலைகளையும் கொண்ட ஒரு மிகப்பெரிய மரத்தை கற்பனை செய்து பார்க்க வேண்டும். இந்த பிரபஞ்சம் தோ...

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

வகுப்பு-53   நாள்-10-3-2020 - ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள் - ஒவ்வொரு மனிதனும் எல்லா நேரங்களிலும் ஒரேபோல இருப்பதில்லை. குணங்கள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கின்றன. சில நேரங்களில் நல்ல சிந்தனை ஏற்படுகிறது,சில நேரங்களில்   தீயசிந்தனை வருகிறது,சில நேரங்களில் ஆன்மீக சிந்தனைகள் ஏற்படுகின்றன. இவைகளுக்கெல்லாம் யார் காரணம்? சில மனிதர்கள் நல்லவர்களாக இருந்து தீயவர்களாக மாறிவிடுகிறார்கள் சிலர் தீயவர்களாக இருந்து நல்லவர்களாக மாறுகிறார்கள். - இந்த குணங்கள் எங்கிருந்து தோன்றுகின்றன? - ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார் - 14.5   ஸத்வம், ரஜஸ்,தமஸ் என்று பிரகிருதியிலிருந்து உண்டான குணங்கள் தேகத்தில் ஆத்மாவை பந்தப்படுத்துகின்றன - சத்வம்,ரஜஸ்,தமஸ் என்ற மூன்று குணங்கள் பிரகிருதியிலிருந்து வெளிப்படுகிறது.பிரகிருதி என்பது இயற்கை,இந்த பிரபஞ்சம் - இந்த மூன்றும் பிரபஞ்சம் முழுவதும் பல்வேறு விதங்களில் வெளிப்படுகிறது கிரகங்களுக்கிடையில்   ஈர்ப்புவிசை attractive force(தமஸ்) விலக்கு விசை repulsive force (ரஜஸ்) சமன்படுத்துதல் Neutral force (சத்வம்) சிறிய ...

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள் 52

வகுப்பு-52   நாள்-9-3-2020 - ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள் - நமது இந்துமதத்தில் இறைவனைப்பற்றிய மூன்று முக்கிய தத்துவங்கள் இருக்கின்றன. - 1.அத்வைதம் 2.விசிஷ்டாத்வைதம் 3.துவைதம் உபநிடதங்களில் இவைகள் தனித்தனியாக விவாதிக்கப்படவில்லை.பிற்காலத்தில் வந்தவர்கள் தனித்தனியாக பிரித்து விவாதித்திருக்கிறார். இந்த தத்துவங்களை படித்து புரிந்துகொள்வதால் மனத்தில் உள்ள சந்தேகங்கள் அகல்கின்றன. சந்தேகங்கள் அகன்றால் இறைக்காட்சி கிடைக்கிறது. ஞானமார்க்கத்தில் செல்லும் ஒருவர் இவைகளைப்பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் இருக்கிறது.   அர்ஜுனன் போர் செய்ய விரும்பவில்லை.அனைத்தையும் விட்டுவிட்டு சந்நியாசியாக செல்லப்போவதாக கூறுகிறான். கடமையைச் செய்யாமல் அதைவிட்டு விலகுவது பெரும் பாவம் என்றும். அதை எப்படி பற்றில்லாமல் செய்ய வேண்டும் என்றும் உபதேசித்தார்.அத்துடன் சந்நியாசிகள் பின்பற்றும் ஞான மார்க்கத்தைப்பற்றியும் விவரித்துக்கொண்டிருக்கிறார் - பிரம்மம்-பிரகிருதி என்று இரண்டு தத்துவங்கள் உள்ளன. தத்துவம் என்றால் தத்+துவம்=அது நீயே என்று அர்த்தம். அதாவது பிரம்மமும்...

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள் 51

வகுப்பு-51   நாள்-6-3-2020 - ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள் - ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார் - 13.1 குந்தியின் மைந்தா, இந்த உடல் க்ஷேத்ரம்   என்று அழைக்கப்படுகிறது. யார் இந்த உடலை அறிகிறானோ அவன் க்ஷேத்ரக்ஞன் என்று   சொல்லப்படுகிறான் - 13.2 அர்ஜுனா எல்லா க்ஷேத்ரங்களிலும் (பிரபஞ்சத்திலுள்ள எல்லா உடல்களிலும்) என்னை க்ஷேத்ரக்ஞன்(எல்லா உடலையும் அறிந்தவன்) என்று அறிந்துகொள். க்ஷேத்ரம், க்ஷேத்ரக்ஞன் பற்றிய அறிவே ஞானம் என்பது என்னுடைய கொள்கை - உடலுக்கு க்ஷேத்ரம் என்று பெயர். இந்த உடலைப்பற்றிய அறிவு யாரிடம் இருக்கிறதோ அவன் க்ஷேத்ரக்ஞன் அதேபோல பிரபஞ்சத்தில் கணக்கற்ற உடல்கள் இருக்கின்றன. இந்த ஒட்டுமொத்த உடல்களையும் அறிந்தவன் யார்? இறைவன். எல்லா உடல்களையும், இறைவனையும் பற்றி அறிவதுதான் ஞானம் - 13.3 அந்த க்ஷேத்ரம் யாது, எத்தன்மைகளை உடையது என்றும், என்னனென்ன விரிவுகளை உடையதென்றும், எதிலிருந்து எது உண்டானதென்றும் அந்த க்ஷேத்ரக்ஞன் யார் என்றும், என்ன மகிமையுடையவன் என்றும் அதை சுருக்கமாக சொல்கிறேன் கேள் - 13.5,6 மஹாபூதங்கள், அகங்காரம்,புத்தி,...

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள் 51

வகுப்பு-50   நாள்-5-3-2020 - ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள் - இறைவனிடம் பக்தி செய்வது எப்படி?   ஸ்ரீகிருஷ்ணர்   நான்கு பாதைகள் கூறுகிறார் - 1.ஞானத்தை பயன்படுத்தி மனத்தை இறைவனிடம் வை. இறைவனைத்தவிர மற்றவற்றை தவிரத்துவிடு(ஞானம்) 2.எப்போதும் இறைவனைக்குறித்து சித்துத்துக்கொண்டே இரு(தியானம்) 3.இறைவனுக்காக வேலை செய்.(கர்மம்) 4.இறைவனிடம் சரணடைந்து வாழ்.(தியாகம்)   மய்யேவ மந ஆதத்ஸ்வ மயி புத்திம் நிவேஷய। நிவஸிஷ்யஸி மய்யேவ அத ஊர்த்வம் ந ஸம்ஷய:॥ 12.8 ॥   12.8 என்னிடத்தே மனதை நிறுத்தி வை. என்னிடத்து புத்தியை செலுத்து. பின்பு என்னிடத்தே வசிப்பாய் என்பதில் சந்தேகமில்லை - அதசித்தம் ஸமாதாதும் ந ஷக்நோஷி மயி ஸ்திரம்। அப்யாஸயோகேந ததோ மாமிச்சாப்தும் தநம்ஜய॥ 12.9 ॥   12.9 தனஞ்ஜயா, இனி சித்தத்தை என்னிடத்தில் உறுதியாக நிலைநிறுத்துவதற்கு இயலாவிட்டால், அப்பொழுது அப்பியாச யோகத்தால் (மனதை இறைவனிடம் வைப்பதற்கு தினமும் ஒழுங்குமுறையுடன் பயிற்சி செய்வது) என்னை அடைய விருப்பம்கொள் - அப்யாஸே அப்யஸமர்தோ அஸி மத்கர்மபரமோ பவ। மதர்தமபி கர்ம...