Posts

Showing posts from October, 2016

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -44

Image
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -44 -- ஒருமுறை அமெரிக்காவில் ஹாலிஸ்டர் என்ற சிறுவனுடன் புல்வெளி ஒன்றின் வழியாக நடந்துகொண்டிருந்தார். அங்கே கோல்ஃப் மைதானம் இருந்தது. விவேகானந்தர் கோல்ஃப் பற்றி அறியாதவர். எனவே மைதானத்தில் ஒரு கொடி பறந்ததைக் கண்டதும் ஹாலிஸ்டரிடம் அதுபற்றி கேட்டார். கோல்ஃப் விளையாட்டைப்பற்றி விரிவாக விளக்கினான் ஹாலிஸ்டர். பிறகு, ‘ஆரம்பத்தில் விளையாடுபவர்கள் அந்தக் கொடிக்குக் கீழ ே உள்ள குழியில் பந்தைப் போடுவதற்கு 4,7 அல்லது 9 அவகாசங்கள் தரப்படுகின்றன’ என்று கூறினான். உடனே விவேகானந்தர், ‘நான் ஒரே தடவையில் குழியில் பந்தைப் போடுகிறேன். வேண்டுமானால் பந்தயம் கட்டலாம்’ என்றார். விவேகானந்தர் இதுவரை கோல்ஃப் விளையாடாதவர், எனவே அவரால் அது சாத்தியம் இல்லை என்று கருதினான் ஹாலிஸ்டர். எனவே, ‘பந்தயத்திற்கு நான் தயார். நீங்கள் ஒரே அடியில் பந்தைக் குழிக்குள் போட்டால் நான் உங்களுக்கு 50 சென்ட் தருகிறேன்’ என்றான். ‘போடாவிட்டால் நான் ஒரு டாலர் தருகிறேன்’ என்றார் விவேகானந்தர். அப்போது அங்கே வந்த லெக்கட் என்பவரும் பந்தயத்தில் கலந்துகொண்டார். ‘விவேகானந்தர் பந்தைப் போட்டுவிட்டால் நான் 10...

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -43

Image
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -43 -- மஜூம்தார் என்பவர் சுவாமி விவேகானந்தரின் பால்ய நண்பர். அவர் அமெரிக்காவில் இருந்தபோது அவருடன் சுவாமி விவேகானந்தர் சில காலம் தங்கினார். திடீரென மஜூம்தார் கிறிஸ்தவத்தின் மீது அதிக நாட்டம் காண்பித்தார். ஏசுநாதர் மீதுள்ள காதல் அல்ல அதற்குக் காரணம். கிறிஸ்தவர்களிடையே இந்து மதத்தைப் பற்றி ஏளனம் செய்தால் அதுவும் இந்துவாக இருந்துகொண்டு ஏராளமான பணம் கிடைக்கும் என் பதால்தான். இவ்வாறு நடப்பது இக்காலத்தின் நிலைமை மட்டுமல்ல, அன்றும் இதே அவலம் இருந்திருக்கிறது. அமெரிக்காவில், இந்து மதத்தின் ஏற்றமிகு சிந்தனைகளை சுவாமிஜி மேடை மேடையாக முழங்கிக் கொண்டிருந்தபோது மஜூம்தார் அதற்கு நேர் எதிராகச் சோடை போய்க் கொண்டிருந்தார். முடிவில், அவர் சுவாமிஜியைப் பற்றி மிக மோசமான வதந்திகளைப் பரப்ப ஆரம்பித்தார். அவற்றுள் “சுவாமிஜி ஆடம்பர பிரியர்; பெண்களுடன் உல்லாசமாகச் சுற்றுபவர்’ என்பவையெல்லாம் சில. இதனால் சுவாமிஜியின் சீடர்கள் வருத்தப்பட்டார்கள். முடிவில் அந்த வதந்திகளைப் பரப்புவது யார் என்பதைக் கண்டறிந்தார்கள். உடனே அவர்கள், “”சுவாமிஜி, உங்கள் மீது வதந்திகளைப் பரப்பும் மஜூ...

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -43

Image
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -43 -- சுவாமிஜி ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டிருந்தார். அவரைக் காண அமெரிக்காவிலிருந்து இரண்டு கிறிஸ்தவர்கள் வந்திருந்தார்கள். அவர்களது நோக்கம் தூய்மையானதல்ல. சுவாமி விவேகானந்தர் இந்தியாவில் இந்து மதத்திற்குப் புது ஊக்கத்தையும் வீரியத்தையும் வழங்கியுள்ளார். இந்தப் போக்கு இப்படியே நீடித்தால் இந்தியாவில் கிறிஸ்தவ மதம் தலையெடுக்க முடியாது. அதனால் அதைத் தடுத்து நிறுத் த அந்த மூவரும் அமெரிக்காவிலிருந்து கிறிஸ்தவ மிஷனரிகளால் அனுப்பப்பட்டிருந்தனர். சுவாமி விவேகானந்தர் ஏசுநாதர் மீது பக்தி கொண்டவர். அவர் ஏசுநாதரின் மகிமைகளைப் பற்றிக் கூறினால் அது இந்துக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்; அது கிறிஸ்தவத்திற்குப் பெரிதும் துணை செய்யும் என்று அவர்கள் நம்பினார்கள். அதனால் ஏதோ ஒரு வகையில் விவேகானந்தரை “வளைத்துப் போட்டுவிட்டால்’ தங்கள் காரியம் சுலபமாகும் என்று சுவாமிஜிக்காகக் காத்திருந்தார்கள். சிறிது நேரத்தில் சுவாமிஜி தமது தியான நிலையிலிருந்து விடுபட்டுக் கண்களை லேசாகத் திறந்தார். அப்போதிருந்த அந்தச் சூழல் மிக அருமையானது. சுவாமிஜியின் தியான நிலையினால் தெய்வ ச...

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -42

Image
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -42 -- அமெரிக்காவில் லெக்சர் பீரோ என்ற அமைப்புடன் சுவாமிஜி ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தார்,அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு இந்தியாவில் வசிக்கும் ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்று எண்ணியிருந்தார்.ஒரு சொற்பொழிவுக்கு,2700 ரூபாய்வரை லெக்சர் பீரோ அமைப்புக்கு கிடைத்தது.ஆனால் அவர்கள் பொய் கணக்கு காட்டி சுவாமிக்கு வெறும் 200 ரூபாய் மட்டுமே கொடுத்து வந்தார்கள்.ஆரம்பத்தி ல் சுவாமிஜிக்கு இது பற்றி எதுவும் தெரியவில்லை.பல மாதங்களுக்கு பிறகே தான் ஏமாற்றப்பட்டதை புரிந்துகொண்டார்.பிறகு அந்த அமைப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொண்டார். ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்த அவருக்கு போதிய அளவு பணம் கிடைக்கவில்லை.பிறகு பணத்திற்காக சொற்பொழிவாற்றுவதை நிறுத்திக்கொண்டார்.இலசமாக வகுப்பு சொற்பொழிவுகள் எடுக்க ஆரம்பித்தார். -- அமெரிக்காவில் சுவாமிஜி இருந்தபோது அவரை நேசித்த மக்கள் எந்த அளவுக்கு இருந்தார்களோ அதேபோல் அவரை வெறுத்து ஒதுக்கியவர்களும் பலர் இருந்தார்கள்,பெரும்பாலும் கிறிஸ்தவ பாதிரிகள்,அவர்களை சார்ந்த மக்கள்,தியோசபிக்கல் சொசைட்டி,பிரம்மசமாஜம்,ரமா...

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -41

Image
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -41 -- அமெரிக்காவில் நிறவெறி தலைவிரித்தாடியது.கருப்பின மக்களை வெள்ளையர்கள் அடிமைகளாக நடத்தினார்கள்.அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டன.பொது இடத்தில் அங்கீகாரம் மறுக்கப்ட்டது.ஹோட்டல்களில் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்டார்கள்.பல இடங்களில் சுவாமிஜியை அமெரிக்கர்கள் அவமதித்தார்கள்.சுவாமிஜிக்க ு விடுதிகள் புக்செய்திருப்பார்கள்,ஆனால ் சுவாமிஜி விடுதிக்கு செல்லும்போது அவ ர் கறுப்பர் இனம் என கருதி விடுதியினுள் அவரை அனுமதிக்கமாட்டார்கள். ஒரு நாள் லண்டனில் ஒரு தெருவழியாக சுவாமிஜி நடந்துசென்று கொண்டிருந்தார்.அந்த வழியாக ஒரு நிலக்கரி வண்டி வந்தது.சுவாமிஜியை கண்ட அந்த வண்டி ஊழியன் ஒரு பெரிய நிலக்கரி கட்டியை எடுத்து சுவாமிஜியை நோக்கி வீசினான்,நல்லவேளையாக சுவாமிஜியின் மேல் அது படவில்லை. தம்மை கருப்பர் இனத்தினர் என்று பலர் அவமதிக்கும் போது.தன்னை கருப்பர் இனத்தை சார்ந்தவன் அல்ல,தான் ஒரு இந்தியர் என்று சுவாமிஜி கூறிக்கொள்ளவில்லை.பின்னாளி ல் ஒரு முறை சீடர் இது பற்றி கேட்டபோது,ஒருவனை தாழ்த்தி,என்னை உயர்த்தி பேசுவதா?என்று கேட்டார். சுவாமிஜி பல இடங்களில் சொற்பொழிவாற்றி...

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -40

Image
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -40 -- சுவாமி விவோகானந்தர் அமெரிக்க செல்வதற்கு முன்பு வரை.அமெரிக்காவில் இந்துக்கள் பற்றியும் இந்துமதம் பற்றியும் மிகக்கேவலமாக பேசப்பட்டுக்கொண்டிருந்தது. இந்துக்கள் காட்டுமிராண்டிகள்,அழித்து ஒழிக்கப்பட வேண்டியவர்கள்,இந்துமதம் பண்பாடற்ற காட்டுவாசிகளின் மதம் என்றே போதிக்கப்ட்டது.அது மட்டுமல்ல அமெரிக்க குழந்தைகளின் பாடத்திலும் இது சேர்க்கப்பட்டிருந்தது. சுவாமிஜியிட ம் பலமுறை இது பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது. -- கிறிஸ்தவ மதபோதகர்களால் இந்துக்கள் மிகவும் மோசமாக சித்தரிக்கப்படுவதைக் கண்டு சுவாமி விவேகானந்தர் மிகவும் வேதனையடைந்தார். தங்கள் மதப்பிரச்சார வேலைகளுக்கு அமெரிக்காவில் பணம் திரட்ட எப்படியெல்லாம் இந்தியாவைக் குறித்தும், இந்துக்கள் குறித்தும் மிக மோசமான சித்தரிப்புக்களை கிறிஸ்தவ மதபோதகர்கள் பரப்பினார்கள் என்பதை நேரடியாகக் கண்டறிந்த விவேகானந்தர் மனம் வெதும்பிக் கூறினார்: -- கிறிஸ்துவின் சிஷ்யர்களான இவர்களுக்கு இந்துக்கள் என்ன செய்துவிட்டார்கள்? ஒவ்வொரு கிறிஸ்தவக் குழந்தைக்கும் இந்துக்களை கொடியவர்கள் தீயவர்கள் உலகிலுள்ள பயங்கரமான பிசாசுகள் என்று அ...

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -39

Image
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -39 -- சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் ஓர் ஊரில் தங்கியிருந்தார். அங்கு ஒரு நீரோடையும் பாலமும் இருந்தன. ஒரு நாள் சுவாமி விவேகானந்தர், நீரோடைக் கரையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அங்கு இளைஞர்கள் சிலர், முட்டையோடுகளைத் துப்பாக்கியால் குறிவைத்து சுடுவதற்குப் பயிற்சி செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள், முட்டையோடுகளை ஒரு நூலில் கட்டி, நீரோடையில் மிதக்க விட்டிருந் தார்கள். அந்த நூல், நீரோடைக் கரையிலிருந்த சிறிய ஒரு கல்லில் கட்டப்பட்டிருந்தது. நீரோடை நீரின் அசைவுக்கு ஏற்ப, நூலில் கட்டப்பட்டிருந்த முட்டையோடுகள் இலேசாக அசைந்துகொண்டிருந்தன. இளைஞர்கள் பாலத்தில் நின்று, ஓடை நீரில் அசைந்துகொண்டிருக்கும் முட்டையோடுகளைச் சுடுவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் துப்பாக்கியால் முட்டையோடுகளைச் சுட்டார்கள். ஆனால் அவர்கள் வைத்த குறி தவறித்தவறிப் போயிற்று. ஒரு முட்டையோட்டைக்கூட அவர்களால் சுட முடியவில்லை. இளைஞர்களின் இந்தச் செயலை விவேகானந்தர் பார்த்தார். இவர்களால் இந்த முட்டையோடுகளைச் சுடமுடியவில்லையே! என்று நினைத்தார். அதனால் அவர் முகத்தில் புன்னகை தவழ...

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -38

Image
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -38 -- ஒரு முறை அமெரிக்காவில் சுவாமி விவேகானந்தர், இறைவனை அனுபூதியில் உணர்ந்த நிலை என்பது பற்றிச் சொற்பொழிவு செய்தார். அந்தச் சொற்பொழிவில் அவர், இறைவனைப் பற்றிய உயர்ந்த அனுபவத்தை நேரடியாகப் பெற்ற ஒருவர், எந்தச் சூழ்நிலையிலும் கலங்குவதில்லை - பதற்றப்படுவதில்லை என்று குறிப்பிட்டார். இந்தச் சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் இளைஞர்கள் சிலரும் இருந்தார்கள்.  இவர்கள் உயர்கல்வி கற்றவர்கள். ஆனால் இந்த இளைஞர்கள் மனம் போனபடி வாழ்ந்தனர். அவர்கள், விவேகானந்தர் கூறியதை நாம் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்! என்று முடிவு செய்தார்கள். எனவே அவர்கள் விவேகானந்தரை, ஒரு சொற்பொழிவுக்காக அழைத்தனர். அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க விவேகானந்தர், சொற்பொழிவு செய்ய வேண்டிய இடத்திற்குச் சென்றார். ஆரம்பத்திலிருந்தே அந்த இளைஞர்கள், விவேகானந்தரைச் சோதிப்பது போலவே நடந்துகொண்டார்கள். ஒரு மரத்தொட்டியைக் கவிழ்த்துப் போட்டு, இதுதான் சொற்பொழிவு மேடை - இதில் நின்றுதான் நீங்கள் பேச வேண்டும் என்று கூறினார்கள். விவேகானந்தர் எந்த மறுப்பும் கூறாமல் அவர்கள் கூறியதை ஏற்றுக்கொண்டார...

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -37

Image
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -37 -- தான் சம்பாதித்து வைத்திருந்த அத்தனை பணத்தையும் ஒன்று சேர்த்து, கச்சா எண்ணெய் சுத்திகரித்து விற்கும் வியாபாரத்தில் இறங்கினார் ராக்ஃபெல்லர். நீராவியில் ஓடிய ரயில் மட்டுமே அப்போது பெரிய போக்குவரத்துச் சக்தியாக விளங்கியது என்பதால், பெட்ரோலின் மகத்துவம் எவருக்கும் புரியவில்லை. ஏற்கனவே இந்தத் தொழில் இருந்தவர்களைவிட பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்றவற்றைக் குறைந்த  விலைக்கு விற்பனை செய்ய வேண்டும்; அதே நேரம், அதிக பணம் சம்பாதிப்பதிலும் வெற்றி பெற வேண்டும் என விரும்பினார் ராக்ஃபெல்லர். உற்பத்தி இடத்திலிருந்து விற்பனை இடங்களுக்கு அனுப்புவதற்கான ரயில் கட்டணம் மிக அதிகமாக இருந்தது. ரயில்வே நிர்வாகத்திடம் பேசி, தினமும் குறிப்பிட்ட பேரல்கள் அனுப்புவதாகவம், அதற்காக கட்டணச் சலுகை தரவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் வைக்க நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. போக்குவரத்துச் செலவு கணிசமாகக் குறையவே விலையை குறைத்து விற்பனை செய்தார். வியாபாரம் சூடுபிடித்ததும் போட்டியில் இருந்த சில கம்பெனிகளை அதிகவிலை கொடுத்து வாங்கினார். விற்பனைக்கு மறுத்தவர்களைக் கூட்டாளியாக்கிக் கொண்டார...

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -36

Image
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -36 -- பிரபல பகுத்தறிவுவாதியும் சொற்பொழிவாளருமான இங்கர்சாலை சுவாமிஜி சிகாகோவில் சந்தித்தார்.அவரும் சுவாமிஜியால் கவரப்பெற்றார்.இருவரும் ஒளிவுமறைவு இல்லாமல் தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். - ஒருமுறை சுவாமிஜியிடம் இங்சர்சால் கூறினார்,”சுவாமிஜி புதிய கருத்துக்களையும்க் கூறும்போதும்,அமெரிக்க சமுதாயத்தின் பழக்கவழக்கங்களையும்,மக்களை யும் விமர்சிக்கும் போதும் சற ்று கவனமாக இருங்கள்.நீங்கள் ஒருமத போதகராக 50 வருடங்களுக்கு முன் அமெரிக்காவிற்கு வந்திருந்தால் இவர்கள் உங்களை தூக்கில்போட்டிருப்பார்கள் அல்லது உயிரோடு எரித்திருப்பார்கள்,சில வருடங்களுக்கு முன்பு இங்கு வந்திருந்தால் கல்லெறிந்துகொன்றிருப்பார்க ள்,அத்தகைய குறுகிய மனப்பான்மை பெற்றவர்களாக மக்கள் இருந்தார்கள்.நல்லவேளையாக தற்போது அப்படிப்பட்டவர்கள் மிகக்குறைவாகவே உள்ளார்கள். - இங்கர்சால் மதங்களை நம்பாதவர்,கடவுளை ஏற்றுக்கொள்ளாதவர்.ஆனால் சுவாமிஜி நேர் எதிரான கருத்துடையவர்.மதங்களை ஏற்றுக்கொண்டார்,கடவுளை ஏற்றுக்கொண்டார். ஒருநாள் இங்கர்சால் சுவாமிஜியிடம்,உலகை அனுபவிக்கவேண்டும்,உலகத்தில ிருந்து எவ்வளவு...

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -35

Image
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -35 -- காலையில்,கால்போன போக்கில் நடந்தார் உதவிக்காக வீதிகளில் உள்ள கதவை தட்டினார்,கதவை திறந்தவர்கள் கூட வெறுப்புடன் கதவை சாத்தினர்.அப்போது சாலையோரம் சென்று அமர்ந்தார். சுவாமிஜி அமர்ந்திருந்த வீட்டில் எதிரிலிருந்து ஒரு பெண்மணி சுவாமிஜியை நோக்கி வந்தார்.அவர் பெயர் மிசஸ் மேரி ஹேல். மிக மென்மையான குரலில் நீங்கள் சர்வமதமகாசபையில் கலந்துகொள்ள வந்திருக்கிறீர்களா? என் று கேட்டார். சுவாமிஜி குழந்தை உள்ளத்துடன் ஆம் என்றார். சுவாமிஜியின் நிலமையை புரிந்துகொண்ட அந்த பெண்மணி அவரை வீட்டிற்கு அழைத்துசென்று உணவு கொடுத்து,தங்க இடமும் கொடுத்தார்.அத்துடன் சர்வமத மகாசபையில் கலந்துகொள்ள உதவியும் செய்தார். ------ செப்டர்பர் 11, 1893. காலையில் சுவாமி விவேகானந்தர் உட்பட சர்வமதமகாசபை பிரதிநிதிகள் அனைவரும் கொலம்பஸ் ஹாலில் ஒரு பகுதியில் கூடினர். கொலம்பஸ் ஹாலில் நாலாயிரத்திற்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் அமர்ந்திருந்தனர். நூற்றுக்கணக்கானோர்க்கு இடம் கிடைக்காமல் கதவுகளுக்கு அருகிலும் வெளியிலும் கூடியிருந்தார்கள். -- இவ்வளவு பேர் அமர்ந்திருந்தாலும் அங்கே ஆழ்ந்த அமைதி நிலவியத...

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -34

Image
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -34 -- சிகாகோ ரயில் நிலையத்தில் வந்து இறங்கிய சுவாமி விவேகானந்தருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் முற்றிலும் புதியது.எங்கே போவதென்றே தெரியவில்லை.வேட்டி தலைப்பாகை என்ற இந்திய உடை பார்ப்போரை வேடிக்கை மனிதராக காட்டியது.சிறுவர்கள் ஏதோ வினோதமான மனிதனைப்பார்ப்பது போல பார்த்தார்கள்.அவருக்கு உதவி செய்ய யாரும் இல்லை.அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தங்கினார்.மறுநாள் சிகாகோ கண்காட்சியை க ாணச்சென்றார். தொடர்ந்து 12 நாட்கள் கலை,அறிவியல்,ராட்டினங்கள் போன்றகண்காட்சியின் பல பகுதிகளை சென்று பார்வையிட்டார். -- ஒரு நாள் ஒருவன் திடீரென்று சுவாமிஜியின் தலைப்பாகையை பிடித்து இழுத்தான்.ஏன் இழுத்தாய் என்று ஆங்கிலத்தில் கேட்டதும்,அவன் வெட்கப்பட்டு ஓடிவிட்டான்.மற்றொரு நாள் இன்னொருவன் சுவாமிஜியை பின்னாலிருந்து கீழே தள்ளிவிட்டான்.ஏன் இவ்வாறு தள்ளிவிட்டாய் என்று சுவாமிஜி கேட்டார். நீ ஏன் இவ்வாறு உடையணிந்துள்ளாய்?அதனால்தான ் தள்ளிவிட்டேன் என்றான் அவன்.அமெரிக்காவில் அழகாக உடையணிபவர்கள் தான் நாகரீகமானவர்களாக கருதப்படுவார்கள் என்பது சுவாமிஜிக்கு புரிந்தது. -- இதே போல் இன்னொரு நாள் ஆண்களும் சிறுவ...

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -33

Image
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -33 --- சென்னை அன்பர்கள் பலர் ஒன்றிணைந்து சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள்.மே31 ஆம் நாள் சுவாமிஜிக்கு இரண்டாம் வகுப்பு டிக்கெட் ஒன்றும் செலவுக்கு ரூ2685 ம்(179 பவுண்ட்) கொடுக்கப்பட்டது.சுவாமிஜி பயணத்திற்கு முழு ஆயத்தம் ஆனார் ஆனால் எதிர்பாராதவிதமாக கேத்ரி மன்னரின் அழைப்பை ஏற்று அவரை சந்தித்த பின் வெளிநாடு செல்வது என்று முடிவானது. 1893 மே 31 ல் பம்பாயிலிருந்து கப்பலில் புறப்பட்டார்.பம்பாயிலிருந் து கொழுப்பு சென்று சேர்ந்தது.கொழும்புவில் சில இடங்களை சுற்றிப்பார்த்தார். பிறகு கப்பல் மலேசியா வழியாக சிங்கப்பூர் சென்றது.சிங்கப்பூரை சுற்றிப்பார்த்தார்.அடுத்து  ஹாங்காங் அங்குள்ள சில இடங்களையும் சுவாமிஜி சுற்றிப்பார்த்தார்.பிறகு ஜப்பானில் உள்ள நாகசாகி சென்றார். - அங்கு தொழிலதிபர் டாட்டாவை சந்தித்தார்.அவரால் தொழில்துறையில் மாற்றங்கள் கொண்டுவர முடியும் என சுவாமிஜி உணர்ந்திருந்தார்.தீக்குச்ச ியை ஜப்பானிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்வதற்காக டாட்டா ஜப்பான் வந்திருந்தார்.நீங்கள் ஏன் ஜப்பானிலிருந்து தீக்குச்சியை இந்திய...

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -32

Image
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -32 --- சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் நடைபெறும் சர்வமதமகா சபைக்கு சென்று சொற்பொழிவு ஆற்ற வேண்டும் என்று சென்னையை சேர்ந்த நண்பர்களும் பலரும் விரும்பினார்கள்.ஆனால் சுவாமிஜியிடம் தயக்கம் இருந்தது. வெளிநாடு செல்ல வேண்டியது இறைவனது சித்தமா?அல்லது தனது மனஇச்சையா என்று தெரியாமல் குளம்பியநிலையில் இருந்தார்.  ஒரு நாள் இரவு.சுவாமிஜி அரை தூக்கத்தில் படுத்திருந்தார்.அவரின் முன்பு அலைபொங்கும் கடல் தெரிந்தது.கரையில் குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் நின்றிருந்தார். திடீரென நீர்மீது நடந்துசெல்ல ஆரம்பித்தார்,தன்னுடன் வருமாறு சுவாமிஜியையும் அழைத்தார்.இந்த காட்சி ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, பல நாள் தொடர்ந்தது. ... இது பற்றி சுவாமிஜி விளக்குகிறார்.. ... சிகாகோ சர்வமதமகா சபைக்கு செல்லவேண்டாம் என நான் எண்ணியிருந்தேன்.ஆனால் பல இரவுகளாக குருதேவர் தோன்றுகிறார், நீ எனக்காக அங்கே செல்ல வேண்டும்.அந்த சபை உனக்காகவே கூட்டப்படுகிறது.தயங்காதே உன் பேச்சை மக்கள் நிச்சயம் கேட்பார்கள் என்று கூறினார். .... இருந்தாலும் அன்னை சாரதாதேவியிடம் இதுபற்றி தெரிவித்து,அவர்களின் ஆலோசனை...

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -31

Image
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -31 --- 1886 ல் குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் மறைவுக்கு பிறகு சுவாமி விவேகானந்தர் இந்தியாமுழுவதும் பிச்சையேற்று வாழும் துறவியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு மக்களை சந்தித்தார்.கடைசியாக கன்னியாகுமரி வந்தடைந்தார்.இந்த நாட்களில் அவர் கற்றுக்கொண்டது என்ன? --- 1.பொதுவாக துறவிகள் தங்கள் சொந்த முக்திக்காக உலகத்தை துறந்து செல்கிறார்கள்,ஆனால் பிறருக்கு முக்தியை தருவதற ்காக உன்னுடைய முக்தியை தியாகம் செய்ய வேண்டும் என்பதே குருதேவர் இட்ட கட்டளை.2.நான்கரை ஆண்டுகளாக இந்தியா முழுவதும் சுற்றி வந்தார்,மன்னர்களின் அரண்மனையில் வாழ்ந்தார்,ஏழைகளின் குடிசையில் வாழ்ந்தார்,காடுகளிலும் குகைகளிலும் வாழ்ந்தார்,படித்த பண்டிதர்களுடன் பழகினார்.கடிப்பறிவில்லாத ஏழைகளிடம் பழகினார்.அனைத்து மக்களின் இதயத்துடிப்பை அறிந்துகொண்டார்.3.பல்வேறு சாஸ்திரங்களை கற்றார்,அறிவியியல்,இலக்கிய ம்,கலை என்று பல துறைகளில் அறிவை கற்றார்,கற்பித்தார்,விவாதம ் செய்தார்,பல கருத்துக்களை ஏற்றுக்கொண்டார்.4.மக்களின் ஏற்றத்தாழ்வு,ஜாதி கொடுமை,பெண்களுக்கு எதிரான அடக்குமுறை,ஜமீன்தார்களின் அடக்கு முறை என்று பல...