ஸ்ரீமத்பகவத்கீதை -அத்தியாயம்-2
ஸ்ரீமத்பகவத்கீதை -அத்தியாயம்-2 - ஸஞ்சயன் சொன்னது - 2.1 இரக்கத்தால் நெகிழ்ந்து, கண்ணீர் நிறைந்ததால் பார்வை மறைந்து, சோகத்தில் மூழ்கியிருந்த அர்ஜுனனிடம் ஸ்ரீகிருஷ்ணர் இவ்வாறு சொல்லத் தொடங்கினார் - ஸ்ரீகிருஷ்ணர் சொன்னது - 2.2.அர்ஜுனா, நெருக்கடியான இந்த நேரத்தில்,ஆரியனுக்கு இருக்காத,சுவர்க்கத்திற்கு தடையான,புகழை தடுக்கின்ற, இந்த மனச்சோர்வு எப்படி உன்னிடத்தில் வந்தது? - 2.3.பார்த்தா, அலியின் இயல்பை அடையாதே. இது உனக்கு பொருந்தாது. எதிரியை வாட்டுபவனே, இழிவான இந்த மனத்தளர்ச்சியை விட்டுவிட்டு எழுந்திரு. - 2.4. அர்ஜுனன் சொன்னது. - எதிரிகளை வென்றவரே,மது என்ற அரக்கனை கொன்றவரே,நான் போற்றக்கூடிய பீஷ்மரையும், துரோணரையும் யுத்தத்தில் எப்படி எதிர்த்து போரிடுவேன்? - 2.5.மேன்மை பொருந்திய ஆச்சார்யர்களை கொல்வதைவிட இவ்வுலகில் பிச்சைஏற்று உண்பது நிச்சயமாக நல்லது. ஆனால் பெரியவர்களை கொன்றால் ரத்தம்கலந்த பொருளையும் போகத்தையும் இவ்வுலகில் அனுபவிப்பவனாவேன் - 2.6.எது மேலானது என்று எனக்கு புரியவில்லை. நாம் ஜயிப்போமா அல்லது இவர்கள் நம்மை ஜயிப்பார்களா. யாரை கொன்றபின் நாம் உயிர்வாழ விரும்பமாட்டோமோ அந்த உறவினர்கள...