Posts

Showing posts with the label இந்துமதம்-வகுப்பு

இந்துமதம்-வகுப்பு-23

Image
இந்துமதம்-வகுப்பு-23 நாள்-14-6-2020 --- சதி (உடன்கட்டை ஏறுதல்) ---- இந்துமதத்தை தற்காலத்தில் கேலி செய்பவர்களில் பலர் உடன்கட்டை ஏறும் பழக்கத்தைப்பற்றி பேசுகிறார்கள். தற்காலத்தில் அவைகள் சட்டப்படி நிறுத்ப்பட்டுள்ள. இந்துக்களிடையே ஒரு காலத்தில் இந்த பழக்கம் பரவலாக காணப்பட்டுள்ளது. இது ஏன் ஏற்பட்டது பின்பு ஏன் நீக்கப்பட்டது என்பதை நாம் தெரிந்துவைத்துக்கொள்வது நல்லது. - சதி என்னும் சொல்லின் பொருள் நல்ல மனைவி. தக்ஷனின் மகளான சதி தேவி(பார்வதி) தனது தந்தையின் யாகத்தில் தன் கணவனுக்கு(சிவன்) ஏற்பட்ட அவமானம் தாளாது அக்னிக்கு தன்னை இறையாக்கிக்கொண்டாள். இதன் தாக்கமாகவே சதி எனும் பெயருடன் உடன்கட்டை ஏறும் வழமை கைக்கொள்ளப்பட்டது. சதிபதி (பார்வதியின் கணவன் சிவன்) -- வாரிசு இல்லாமல் அரசன் இறந்துவிட்டாலோ,போரின் போது அரசன் இறந்துவிட்டாலோ மனைவி அரசனுடன் சேர்ந்து இறந்துபோவாள். அப்படி இறக்காவிட்டால் அடுத்து வரும் அரசன் இவளை அந்தப்புறத்தில் அமர்த்திவிடுவான்.இவளது கற்பு களங்கமடைந்துவிடும் அரசருடன் அரசியர் சிதையேறவேண்டுமென்று எந்த நெறிநூலும் வகுத்துரைக்கவில்லை. அது போரில் இறந்த அரசர்களின் மனைவியரின் வழக்கம் மட...

இந்துமதம்-வகுப்பு-22

Image
இந்துமதம்-வகுப்பு-22 நாள்-13-6-2020 - இந்துத் திருமணங்கள் --- இந்து திருமண உறவுகள் மிகவும் அர்த்தம் வாய்ந்தவை.காமத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் திருமணங்கள் கீழ்தரமானவையாக கருதப்படுகின்றன. வீட்டிற்கு வரும் மணமகளை மகாலெட்சுமியாகவே பார்க்கிறார்கள். மனைவி இல்லாத வீட்டை வீடாக கருதுவதில்லை. குடும்பத்தை வழிடத்துவது பெண்ணின் முக்கிய கடமையாகும்.அவளே குடும்பத்தின் ஆணிவேராக இருக்கிறாள்.குடும்பத்தின் கௌரவம் என்பது பெண்ணின் நடத்தையை சார்ந்து இருக்கிறது. சில இடங்களில்ஆணின் நடத்தை சரியாக இருக்காது.அப்படி இருந்தால்கூட குடும்பம் அழிவதில்லை.ஆனால் பெண்ணில் நடத்தை சரியில்லாவிட்டால் மொத்த குடும்பமும் அழிந்துபோகிறது. திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான புதிய உறவு மட்டுமல்ல,குடும்பத்திலுள்ள அனைவருக்கும் புதிய உறவுகள் இதனால் உண்டாகின்றன.எனவே மணப்பெண் நல்ல குடும்பத்தை சார்ந்தவாளாக இருக்கவேண்டியது அவசியமாகிறது. - திருமணத்திற்கு பெற்றோரின் சம்மதம் மிகவும் அவசியம்.பெற்றோர்கள் குடும்பத்திலுள்ள மற்றவர்களின் ஆலோசனைகளைப்பெற்று திருமணத்தை முடிவுசெய்வார்கள்.ஒரு ஆணும்பெண்ணும் காதலிக்கிறார்கள் என்பதற்காக ...

இந்துமதம்-வகுப்பு-21

Image
இந்துமதம்-வகுப்பு-21 நாள்-12-6-2020 .. சம்ஸ்காரம்-பதினாறு சடங்குகள் .. சம்ஸ்காரம் என்ற சொல்லுக்கு பல பொருள் உண்டு. அவற்றில், “நினைவுச் சுவடு”, “சுத்திகரிப்பு”, “ஏதோ ஒரு நன்மை செய்வது” என பல பொருள்கள் உள்ளன .. முற்பிறவியில் சேர்த்துவைக்கப்பட்டடுள்ள நினைவுகளுக்கு சம்ஸ்காரம் என்று பெயர் உண்டு .. வாழ்வியலில் சம்ஸ்காரம் என்பதற்கான அர்த்தம் இவ்வாறாக உள்ளது. அதாவது ஒரு மனிதன் ஒரு பருவத்திலிருந்து இன்னொரு பருவத்திற்கு செல்லும்போது செய்யப்படும் சடங்குகள்,சம்பிரதாயங்கள் அல்லது நடைமுறைகள் .. சம்ஸ்காரத்தின் நோக்கம் பழைய வாசனைகளை,நினைவுகளை சுத்தம் செய்து தூய்மைப்படுத்துவது உடல், உள்ளம், புத்தி முதலானவற்றை சுத்திகரித்து புனிதமாக்கும் நோக்கம் கொண்ட பழக்க வழக்கங்களே சம்ஸ்காரங்கள். . ஒரு மனிதனை ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்திற்கு அழைத்து செல்ல செய்யப்படும் புனிதச் சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்களின் தொடரே சம்ஸ்காரங்கள். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்துக்கும் உரிய குறிப்பிட்ட ஒரு சம்ஸ்காரம் அல்லது ஒருசில சம்ஸ்காரங்கள் உண்டு. .. சாதி, சமய நம்பிக்கை, சமூக நிலை எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு இந்துவும் ...

இந்துமதம்-வகுப்பு-20

Image
இந்துமதம்-வகுப்பு-20 நாள்-11-6-2020 .. சந்நியாச ஆஸ்ரமம் .. முற்காலத்தில் இந்தியாவில் நிலவிய பிரம்மச்சர்யம்,கிருஹஸ்தம்,வனப்பிரஸ்தம்,சந்நியாசம் என்ற நான்கு படிகள் இருந்ததை பார்த்தோம். படிப்படியாக ஒவ்வொரு நிலையையும் கடந்து சந்நியாச நிலையில் வீடு பேற்றை அடையாமல் சிலர் இறந்துவிடுவதுண்டு. அப்படி இறப்பவர்கள் மீண்டும் பிறக்கும்போது சிறுவயதிலேயே பூரணஞானத்துடன் பிறக்கிறார்கள். எனவே அடுத்த பிறவியலும் அவர்கள் படிப்படியாக பிரம்மச்சர்யம்,கிருஹஸ்தம் என்று முன்னேறத்தேவையில்லை. முற்பிறவியில் எங்கே நிறுத்தினார்களோ அங்கிருந்து தொடங்கலாம். சிறுவயதிலிலேயே சிலரிடம் சந்நியாசத்திற்கான எண்ணங்கள் எழும்புகின்றன. முக்தி அடைவதற்காக வீட்டை துறந்து காடுகளுக்கு சென்றுவிடுகிறார்கள். இவ்வாறு காட்டை அடையும் இளம்துறவிகள் ஏற்கனவே அங்கு வசிக்கும் பிற துறவிகளுடன் சேர்ந்து ஆன்மீக பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள். இப்படி இளம் வயதில் துறவு வாழ்க்கைக்கு வருபவர்கள் ஒன்று சேர்ந்திருக்கும் இடம் மடம் என்று அழைக்கப்பட்டது. ஆதிகாலத்திலேயே இப்படிப்பட்ட இளம் துறவிகள் பலர் இருந்திருக்கிறார்கள் இதற்கு உதாரணமாக சுகர் என்பவரைக்கூறலாம். .. சில...