Posts

Showing posts from June, 2020

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-42

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-42 🌸 ஓவிய நுணுக்கம் ........................................   அந்தக் காலத்தில் பிரெஞ்சு ஓவியக் கலையில் மிகவும் புகழ் பெற்றிருந்த ஓவியர் ஒருவர், சுவாமிஜியின் வேதாந்தக் கருத்துக்களில் ஆர்வம் கொண்டிருந்தார். அவர் தாம் வரைந்த ஓவியங்கள் இடம் பெற்ற நாடகத்திற்கு சுவாமிஜியைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார். சுவாமிஜிக்கு பிரெஞ்சு மொழி தெரியும்.ஆதலால் அவர் நாடகத்தைக் கூர்ந்து கவனித்தார். நாடகத்தின் நடுவில் திரையில் தெரிந்த ஓர் ஓவியத்தில் ஒரு தவறு இருப்பதை சுவாமிஜி கண்டார். அது ஒரு தொழில் நுட்பத் தவறு. அந்தத் தவறு சரி செய்யப் பட்டிருந்தால், நாடகம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் என்று சுவாமிஜி கருதினார்.   நாடகம் முடிந்தது. சிறப்பு விருந்தினராகியசுவாமிஜியிடம் நாடகம் பற்றிய கருத்தை அறிய அந்த ஓவியரும் அரங்கின் நிர்வாகியும் வந்தார்கள்.   அப்போது சுவாமிஜி தாம் நாடகத்தை மிகவும் ரசித்ததை அவர்களிடம் தெரிவித்தார். அதோடு, அவர் தாம் கண்ட தொழில் நுட்ப த் தவறையும் அவர்களுக்குச் சுட்டிக் காட்டினார். அதைக்கேட்டதும், பிரெஞ்சு...

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-41

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-41 🌸 சான்பிரான்சிஸ் கோவில் .................................   கேம்ப் இர்விங்கில் இரண்டு வாரங்கள் தங்கிவிட்டு அங்கிருந்து மீண்டும் சான் பிரான்சிஸ் கோவிற்கு வந்தார் சுவாமிஜி. இங்கே ஹேன்ஸ்ப்ரோ விடை பெற்றுக் கொண்டார். சுவாமிஜிடாக்டர் லோகன் என்பவரின்   வீட்டில் தங்கினார். மிக நல்லவரும் சுவாமிஜியிடம் அளவற்ற பக்தி கொண்டவருமான லோகன் அவருக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தார். ஆனால் அவரது மனைவி, சகோதரி மற்றும் குடும்பத்தினர் யாரும் சுவாமிஜியிடம் ஈடுபாடு காட்டவோ அவரது சொற்பொழிவுகளைக்கேட்கவோ செய்யவில்லை. அவர் அங்கே தங்குவதையே   அவர்கள் விரும்பவில்லை எனலாம். அத்தகைய சூழ்நிலையிலும் சுவாமிஜி அங்கே தங்கியது லோகனின் பக்தி ஒன்றிற்காகவே. சுவாமிஜி எங்கள் வீட்டிலிருந்து சென்ற பிறகு வீடு வீடாகவே இல்லை.ஏ தோ எல்லா தெய்வங்களும் எங்களைக் கைவிட்டுவிட்டன போல் இருந்தது. எனக்கு அவர் ஏசுநாதரே என்று பின்னாளில் எழுதினார் லோகன்.   சுவாமிஜி அங்கிருந்த போது சான் பிரான்சிஸ்கோ வேதாந்த சங்கத்தின் கூட்டம் ஒன்று   நடைபெற்றது. அதில் அவர் க...

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-40

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-40 🌸 அற்புதமான அமைதி நிலை! ..........................   இங்கிருந்து தான் சுவாமிஜி அந்த   அற்புதமான, படிக்கின்ற யாரையும் சிறிது நேரமாவது அவரது உணர்வுகளில்திளைக்கச்செய்கின்ற கடிதத்தை மெக்லவுடிற்கு   எழுதினார்.இதோ சில பகுதிகள். வேலை செய்வது எப்போதுமே கஷ்டமானது தான். ஜோ, எனது வேலைகள் என்றென்றைக்குமாக நின்று போகட்டும் என்றும், என் முழு ஜீவனும் தேவியிடம் லயித்திருக்கட்டும் என்றும் பிரார்த்தனை செய், தேவியின் வேலைகள், தேவியே அறிவாள்.   நான் நலமாக இருக்கிறேன். மனத்தளவில் மிகவும் நலமாக இருக்கிறேன். உடலின் ஓய்வைவிட மனத்தின் ஓய்வை அதிகமாகவே உணர்கிறேன். போர்கள் நடந்தன. சில தோல்வி அடைந்தன. சில    வெற்றி பெற்றன. நான் என் பொருட்களை மூட்டைக் கட்டிக்கொண்டு. மாபெரும் விடு விப்பவனுக்காகக் காத்திருக்கிறேன். ”சிவபெருமானே , ஓ சிவபெருமானே, என் படகை மறுகரைக்குக் கூட்டிச்செல்.   கடைசியாகப் பார்க்கும்போது ஜோ, நான் வெறும் சிறுவன், தட்சிணேசுவர ஆலமரத்தின் அடியில்   ஸ்ரீராமகிருஷ்ணரின் அற்புத மொழிகளை ஆச்சரியமான பரவ...