Posts

Showing posts from May, 2025

ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-10

ஆன்மீகமும் - விஞ்ஞானமும் - பாகம் -10 .. இந்த உலகத்தில் ஏன் துன்பம் இருக்கிறது? .. இந்த உலகமே துன்பத்தால்தான் சூழப்பட்டுள்ளது என்றே நமது முன்னோர்களும் கூறியுள்ளார்கள். நமக்கு கிடைக்கும் உணவே பிற உயிர்களைக் கொன்றோ அல்லது அவைகளை அழித்தோதான் கிடைக்கிறது. ஒரு உயிர் வாழவேண்டுமானால் இன்னோர் உயிர் அழிய வேண்டியிருக்கிறது. இது ஏன்? கடவுள் ஏன் இப்படிப்பட்ட துன்பம் நிறைந்த உலகைப் படைக்க வேண்டும்? .. நாம் சிறுமதி கொண்டவர்கள். நமக்கு முன்னால் உள்ள சிறிய உலகை மட்டுமே நம்மால் அறிய முடியும். பரந்து விரிந்த பிரபஞ்சத்தைப்பற்றி நம்மால் அறிய முடிவதில்லை. ஒரு சிறிய புழுவுக்கு மிகச்சிறிய இடத்தைப்பற்றிய புரிதல் மட்டுமே உள்ளது. அதேபோல பரந்து விரிந்த இந்த பிரபஞ்சத்தில் நாம் அறிந்தது மிகக்குறைவே. .. இந்த பரந்த பிரபஞ்சத்தில் எங்கும் எதிலும் சமநிலையே நிலவுகிறது. அதை நாம் பார்க்கும் சமகண்ணோட்டத்தில் பார்த்தால்தான் புரிந்துகொள்ள முடியும். ஒரு இடத்தில் மேடு இருந்தால் அதன் பக்கத்தில் பள்ளம் இருக்கும். வெளிச்சம் எங்கே முடிகிறதோ அங்கே இருள் இருக்கும். இன்பம் எங்கே முடிகிறதோ அங்கே துன்பம் இருக்கும். நாம் ஒன்றை மட்டுமே வி...

ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-9

Image
  ஆன்மீகமும் - விஞ்ஞானமும் - பாகம் -9 . மரணத்தை வெல்லுமா மனித இனம் ? .. டிஎன்ஏ (DNA) என்பது மரபணுத் தகவல்களைக் கொண்ட ஒரு மூலக்கூறு . டிஎன்ஏ மூலம் புதிய உயிரினங்கள் உருவாகும் செயல்முறைக்கு பல வழிகள் உள்ளன . டிஎன்ஏ பிரதியெடுப்பு , இனப்பெருக்கம் , மரபணு மாற்று மற்றும் இனப்பெருக்கம் போன்ற செயல்முறைகள் இதில் அடங்கும் . . அழகான ஒரு மனிதரின் டிஎன்ஏ (DNA) வை பிரதி எடுத்தால் அவரைப்போல பல உடல்களை உருவாக்க முடியும் . இதை நமது யோகிகள் காயகல்பம் என்று அழைத்தார்கள் .( உடல்களை பல பிரதி எடுத்தல் ) . ஓர் டிஎன்ஏ (DNA) வை இன்னொரு டிஎன்ஏ (DNA) வுடன் இணைத்தால் புதிய உடல்களை மாறுபட்ட உடல்களை உருவாக்க முடியும் . அதாவது சிங்கத்தின் (DNA) வை புலியின் (DNA) வுடன் இணைத்தால் புதியவகை உயிரினம் உருவாகும் . . இறக்கும் தருவாயில் உள்ள ஒரு மனிதனின் உயிரை ( சூட்சுமஉடலை ) இவ்வாறு உருவாக்கப்பட்ட டிஎன்ஏ (DNA) பிரதியெடுக்கப்பட்ட உடலுக்குள் செலுத்த முடியுமா ? இதுான் கேள்வி . முடியும் என்று நமது முற்காலத்து யோகிகள் கூறியுள்ளார்கள் . இதைத்தான்...

நமது சாஸ்திரத்தில் இரண்டுவகையான துறவிகளைப்பற்றி கூறப்பட்டுள்ளது.

  நமது சாஸ்திரத்தில் இரண்டுவகையான துறவிகளைப்பற்றி கூறப்பட்டுள்ளது . ( மகாபாரதத்தில் இவ்வாறு உள்ளது) .. 1. முனிவன் 2. பிக்ஷு ( சந்நியாசி ) .. முனிவன் உலகத்திலிருந்து முற்றிலும் விடுபட்டு சென்றுவிடக்கூடாது . அதேநேரத்தில் முற்றிலும் உலக வாழ்வில் ஈடுபடவும் கூடாது . அவனுக்கு சில கடமைகள் உள்ளன . சீடர்களுக்கு பயிற்சி கொடுப்பது , அரசனுக்கு அறிவுரைகள் சொல்வது , உலக நன்மைக்காக யாகங்கள் செய்வது போன்றவை முக்கியமானவை .. முனிவன் மனைவியோடு வாழலாம் , அல்லது மனைவி இல்லாமலும் வாழலாம் அவன் தன்னிடம் உள்ளதை பிறருக்கு தானம் செய்ய வேண்டும் . முனிவன் தான் வசிக்கும் இடத்தை ஒரு கானகம்போல் மாற்றிக்கொள்ள வேண்டும் . சுற்றிலும் அழகிய பூஞ்சோலைகள் , வளர்ப்பு மிருகங்கள் , சீடர்களுக்கு பயிற்சிகொடுக்க தேயைான வசதிகள் அனைத்தும் அங்கே இருக்க வேண்டும் . இவை எல்லாம் இருந்தாலும் அவன் பற்றற்றவனாக இருக்க வேண்டும் . பெரும்பாலான நேரத்தை மௌனத்தில் கழிக்க வேண்டும் . . குறைந்த அளவு ஆடையை உடுத்திக்கொண்டு , மிக எளிமையாக வாழவேண்ட...