Posts

Showing posts from December, 2016

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-37

Image
இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-37 (சுவாமி விவேகானந்தர்) - ஒவ்வோர் ஆன்மாவும் முக்தியடைந்தே தீரும் என்பது துவைதிகளின் மற்றொரு வினோதமான கோட்பாடு. யாரும் இதற்கு விலக்கல்ல.  - சாதகமற்ற சூழ்நிலைகள் வழியாக, பல்வேறு இன்பதுன்பங்கள் வழியாகச் சென்று, கடைசியில் ஒவ்வொருவரும் வெளிவரத்தான் வேண்டும். எதிலிருந்து வெளிவர வேண்டும்? பிரபஞ்சத்தை விட்டு எல்லா ஆன்மாக்களும் வெளியேற வேண்டும் என்பது இந்து மதத்திலுள்ள எல்லா பிரிவுகளுக்கும் பொதுவான ஒரு கருத்து. - நாம் பார்க்கின்ற உணர்கின்ற இந்தப் பிரபஞ்சமோ, அல்லது கற்பனை செய்துகொள்ளும் ஒரு பிரபஞ்சமோ, உண்மையான சரியான பிரபஞ்சமாக இருக்க முடியாது. ஏனென்றால் இரண்டிலுமே நன்மையும் தீமையும் கலந்துதான் இருக்கின்றன.  - துவைதிகளின் கருத்துப்படி, இந்தப் பிரபஞ்சத்திற்கு அப்பால், நன்மையும் இன்பமும் மட்டுமே நிறைந்த ஓர் உலகம் இருக்கிறது. அந்த உலகை அடைந்துவிட்டால் பிறவி, மறுபிறவி, வாழ்வு, சாவு எதற்குமே அவசியமில்லை. இந்தக் கருத்து அவர்கள் மிகவும் விரும்புகின்ற ஒன்றாகும். அங்கே வியாதிகளோ மரணமோ இல்லை. அங்கே நிரந்தரமான இன்பம் இருக்கும். அந்த உலகை அடைபவர்கள் எப்ப...

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-36

Image
இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-36 (சுவாமி விவேகானந்தர்) - ஒரே மனதாகக் குற்றத்தை மனிதனின் மீதே சுமத்தினார்கள் அது அவர்களுக்குச் சுலபமாகவும் இருந்தது. - ஏன்? ஏனென்றால் நான் சற்றுமுன் சொன்னது போல், சூன்யத்திலிருந்து ஆன்மாக்கள் படைக்கப்பட்டதாக இந்துக்கள் நம்பவில்லை. - நம்முடைய எதிர் காலத்தை நாமே உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதை இந்த வாழ்க்கையில் பார்க்கிறோம். நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும், மறு நாளுக்கான ஏற்பாடுகளைச் செய்யவே முயன்று கொண்டிருக்கிறோம். - இன்று, நாளைய விதியை நிர்ணயிக்கிறோம். நாளை, நாளைக்கு அடுத்த நாளின் விதியை நிர்ணயிப்போம். இவ்வாறே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. - இந்த வாதத்தை இறந்த காலத்திற்குப் பொருத்திப் பார்ப்பது, நியாயமானதே. - நாம் நமது செயல்களாலேயே நம் எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்கிறோம் என்றால், அதே விதியை இறந்தகாலத்திற்கும் ஏன் பொருத்திப் பார்க்கக்கூடாது? (இப்போது கடினமாக உழைத்தால் எதிர்காலத்தில் நன்றாக இருக்கலாம் என்பது போல, இப்போது நாம் மோசமாக இருப்பதற்கு காரணம் என்ன?, இதற்கு முன் கடினமாக உழைக்கவில்லை என்பது புரிகிறது. அது முற்பிறவியாக கூட ...

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-35

Image
இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-35 (சுவாமி விவேகானந்தர்) - ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளிலுள்ள எல்லா மதங்களுமே துவைத மதங்கள் தாம். அப்படித்தான் இருக்கவும் முடியும். நுட்பமானவற்றைச் சாதாரண மனிதனால் சிந்திக்க முடியாது. தன் அறிவுக்கு எட்டியவற்றைப் பிடித்துக் கொள்ளத்தான் அவன் விரும்புகிறான். - அதாவது உயர்ந்த ஆன்மீக லட்சியங்களையும் தன்னுடைய நிலைக்குக் கொண்டு வருவதன் மூலம்தான் அவனால் புரிந்துகொள்ள முடியும். உலகம் முழுவதுமுள்ள சாதாரண மக்களின் மதம் இது தான். - தங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட, தங்களை அடக்கியாளும் வல்லமை படைத்த சக்கரவர்த்தி போன்ற ஒரு கடவுளே அவர்களுக்கு வேண்டும். - அவரைப் பூமியிலுள்ள சக்கரவர்த்திகளை எல்லாம்விடத் தூயவர் ஆக்குகிறார்கள். எல்லா நற்பண்புகளையும் உடையவராக அவரைக் காண்கிறார்கள், தீய பண்புகளை அவரிடமிருந்து விலக்குகிறார்கள். - ஆனால் நன்மையும் தீமையும் தனித்தனியாக இருப்பது சாத்தியமல்ல என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். - (நன்மை இருக்கும் இடத்தில் தீமையும் இருக்கும். நல்லகடவுள் என்று ஒருவர் இருக்க முடியாது.அவரிடம் நன்மை தீமை இரண்டும் இருக்கும். உலகில் நடக்கும்...

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-34

Image
இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-34 (சுவாமி விவேகானந்தர்) - வேதாந்தம் மூன்று படிகளை உடையது  - 1.துவைதம்,2.விசிஷ்டாத்வைதம்,3.அத்வைதம் துவைதம் எனப்படுகின்ற வேதாந்தப் பிரிவைப் பற்றித் தான் நான் முதலில் உங்களிடம் பேசப் போகிறேன். - பிரபஞ்சத்தைப் படைத்து அதை ஆள்பவரான கடவுள், இயற்கையிலிருந்தும் மனித ஆன்மாவிலிருந்தும் என்றென்றைக்குமாக வேறுபட்டவர் என்று துவைதிகள் நம்புகிறார்கள். - கடவுள் என்றென்றும் இருப்பவர், இயற்கையும் என்றென்றும் இருப்பது, ஆன்மாக்களும் அப்படியே. - இயற்கையும் ஆன்மாக்களும் தங்களை வெளிப்படுத்துகின்றன. மாற்றமடைகின்றன. ஆனால் கடவுள் மாறுவதில்லை; எப்போதும் ஒருபோலவே இருக்கிறார். - கடவுள் சகுணமானவர்(சகலகுணங்களும் உள்ளவர்); ஆனால் உடல் உள்ளவர் என்பதல்ல.(மனிதனைப்போல உடல் உள்ளவரல்ல) - அவருக்கு மனிதக் குணங்களெல்லாம் உள்ளன. அவர் கருணைமயமானவர், நியாயமானவர், சக்தி வாய்ந்தவர், சர்வ வல்லமை படைத்தவர், அவரை நாம் அணுக முடியும், பிரார்த்தனை செய்ய முடியும், அவரிடம் அன்பு செலுத்த முடியும், பிரதியாக அவரும் நம்மீது அன்பு செலுத்துகிறார் என்பனவெல்லாம் துவைதிகளின் கடவுள் பற்றிய கர...

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-33

Image
இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-33 (சுவாமி விவேகானந்தர்) - வேதாந்தத்தில் நாம் மூன்று முக்கியமான வேறுபட்ட கோட்பாடுகளைக் காண்கிறோம்.  - ஒரு விஷயத்தை அவர்கள் எல்லோருமே கடவுளை நம்புகிறார்கள். மேலும், வேதங்கள் இறைவனால் வெளியிடப்பட்டவை என்றும் நம்புகிறார்கள். ஆனால் இது கிறிஸ்தவர்களோ முஸ்லீம்களோ தங்கள் நூல்களைப் பற்றி நம்புவதுபோல் அல்லாமல், சற்று மாறுபட்ட, தனிப்பட்ட கருத்தாக இருக்கிறது. - வேதங்கள் கடவுளைப் பற்றிய அறிவை வெளிப்படுத்துபவை. கடவுள் நிரந்தரமானவர், ஆதலால் அவரைப் பற்றிய அறிவும் அவரிடம் நிரந்தரமாக உள்ளது. எனவே வேதங்களும் நிரந்தரமானவை என்பது வேதாந்திகளின் கருத்து. - வேதாந்திகளிடம் மற்றொரு பொதுவான நம்பிக்கை இருக்கிறது. படைப்பு சுழற்சியாக நடைபெறுகிறது என்பதே அது. - படைப்பு முழுவதுமே தோன்றி மறைகிறது. அது தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, சிறிதுசிறிதாகத் தூலத் தன்மை பெற்று(கண்களால் காணும் நிலை), கணக்கிட முடியாத காலத்திற்குப் பிறகு, சிறிதுசிறிதாக நுட்பத்தன்மை அடைந்து(கண்களால் காண முடியாத நிலை), கடைசியில் மறைந்து ஒடுங்கிவிடுகிறது. - அந்த ஒடுங்கிய நிலையிலேயே சிலகாலம் இருக்கிறது. ப...

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-32

Image
இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-32 (சுவாமி விவேகானந்தர்) - மிகப் பழங்காலத்திலிருந்தே இந்தியச் சிந்தனையில் பல பிரிவுகள் இருந்திருக்கின்றன. இன்ன பிரிவினர் இன்ன கோட்பாட்டை நம்ப வேண்டும் என்றெல்லாம் வகுத்துத் தருவதற்கான அத்தாட்சி பெற்ற எந்தச் சங்கமோ அமைப்போ இல்லாததால், மக்கள் தங்களுக்குப் பிடித்த மதப் பிரிவைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கும், தங்களுக்கென்று சொந்தமாக ஒரு தத்துவத்தையும் மதப்பிரிவையும் ஏற்படுத்திக் கொள்வதற்கும் சுதந்திரம் இருந்தது.  - எனவே மிகப் பழங்காலத்திலிருந்தே இந்தியா மதப் பிரிவுகளால் நிறைந்திருப்பதைக் காண்கிறோம். இப்போதுகூட எத்தனை நூறு மதப் பிரிவுகள் இந்தியாவில் இருக்கின்றன என்பதோ, ஆண்டுதோறும் எத்தனை புதிய பிரிவுகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன என்பதோ எனக்குத் தெரியாது. இந்தியாவின் மதப் பேரூற்று வற்றாமல் இருப்பதாகவே தோன்றுகிறது. - இந்தப் பல பிரிவுகளையும் இரண்டு தலைப்புகளின் கீழே கொண்டு வந்துவிடலாம். ஒன்று வைதீகம், மற்றொன்று அவைதீகம், அதாவது வைதீகம் அல்லாதது. - இந்துமத சாஸ்திரங்களான வேதங்கள் நிலையான அருள் வெளிப்பாடுகள் என்று நம்பும் பிரிவுகள் வைதீகமானவை. வேதங்...

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-31

Image
இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-31 (சுவாமி விவேகானந்தர்) - கொள்கைவெறி ---- வெறியர்களில் பலவகையினர் இருக்கிறார்கள்.பிறருடைய பெட்டியையோ,பணத்தையோ திருடுவது ஒரு திருடிக்கு தவறாக தோன்றாது,ஆனால் அவளுக்கு சிகரெட் பிடிக்காது.ஆகவே சிகரெட் பிடிப்பவர்களை கடுமையாக வெறுக்கிறாள்.பிறரை ஏமாற்றுவதையே தொழிலாகக்கொண்ட ஒருவன் இருக்கிறான்,ஆனால் அவனுக்கு குடிகாரர்களை கண்டால் பிடிக்காது.சாராயம் குடிப்பவன் நல்லவனே அல்ல என்று அவன் பேசுவான்.தான் செய்கின்ற ஏமாற்று வேலைகளை பற்றி அவர்கள் எண்ணுவதில்லை -- கொள்கை வெறியர்களுக்கு நூற்றுக்கு தொண்ணுறுபேருக்கு கல்லீரல் நோயோ அல்லது ஜீரணகோளாறு நோயோ,வேறு வகை நோயோ இருக்க வேண்டும்.எந்த வகை வெறியானாலும் சரி,வெறியின் அடிப்படையில் தோன்றுகின்ற சீர்திருத்தங்களை விலக்குவதே அறிவுடைமை.இதை நான் அனுபவத்தில் கண்ட உண்மை. -- உலகம் மெதுவாக சென்று கொண்டிருக்கிறது. அவசரப்படாதீர்கள். நன்றாக தூங்குங்கள்,நரம்புகளை நல்ல நிலையில் வைத்துக்கொள்ளுங்கள்,தகுந்த உணவை உட்கொள்ளுங்கள்,உலகிடம் அனுதாபம் கொள்ளுங்கள்.வெறியர்கள் வெறுப்பையே வளர்க்கிறார்கள்.வெறியர்களின் கூட்டத்திலிருந்து வெளியேறிய பி...

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-30

Image
இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-30 (சுவாமி விவேகானந்தர்) -  பக்தன் பன்றி இறைச்சியை உண்டு வாழலாமா? ----- பசு எங்கேயும் இறைச்சி சாப்பிடுவதில்லை,ஆடும் மாமிசம் சாப்பிடுவதில்லை,அதனால் அவைகள் யோகியாகிவிடுமா?அல்லது அகிம்சைவாதிகளாகிவிடுமா? -- அதேபோல் இலை தளை காய்கறிகளை உண்டு வாழ்கின்ற மனிதன் மிருகங்களைவிட எந்த விதத்திலும் உயர்ந்தவனாகிவிட மாட்டான். மற்றவர்களை ஏமாற்றி,பணத்திற்காக எதையும் செய்ய துணிகின்ற ஒருவன் புல்லை மட்டுமே உண்டு வாழ்ந்தாலும் அவன் கொடிய மிருகத்தைவிட கேவலமானவன். -- மனத்தாலும் கூட யார் மற்றவர்களுக்கு தீங்கு செய்வதில்லையோ,பகைவனின் வளர்ச்சியை கண்டும் யார் மகிழ்கிறாறோ அவனே பக்தன்.அவன் அன்றாடம் பன்றி இறைச்சியை தின்று வாழ்ந்தாலும் அவனே அனைவருக்கும் குரு. --- எனவே அகத்தூய்மை தான் முக்கியம்,உண்மையான ஆன்மீக சாரத்தை மறந்து,புறப்பழக்கங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு,எந்திரகதியில்,உணர்ச்சியில் செத்து,இரக்கமற்று வாழும் மனிதனின் நிலையும்,அவன் வாழும் நாடும் அய்யோ பாவம்!. உங்கள் புறபழக்கங்களால் அகவாழ்வில் ஒரு மாற்றம் ஏற்படாவிட்டால் அவற்றை இரக்கமின்றி அழித்துவிடுங்கள். - ---சுவாமி...

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-29

Image
இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-29 (சுவாமி விவேகானந்தர்) -  இந்து சமயம் - உலகம் தழுவிய சமயம் ---- உலகம் தழுவிய சமயம் என்ற ஒன்று உருவாக வேண்டுமானால் அது இடத்திலும் காலத்தாலும் எல்லைப்படுத்த படாததாக இருக்க வேண்டும். அந்த சமயம் யாரைப் பற்றிப் பிரச்சாரம் செய்கிறதோ அந்தக் கடவுளைப் போன்று எல்லையற்றதாக இருக்க வேண்டும். ---- 🌿  சூரியன் தன் ஒளிக்கிரணங்களை எல்லோர் மீதும் சமமாகப் வீசுவதுபோல் அது கிருஷ்ண பக்தர்கள், கிறிஸ்து பக்தர்கள், ஞானிகள், பாவிகள், எல்லோரையும் சமமாகப் பார்க்க வேண்டும் ,அது பிராமண சமயமாகவோ பௌத்த சமயமாகவே கிறிஸ்தவ சமயமாகவோ முகமதிய சமயமாகவோ இருக்காமல் இவற்றின் ஒட்டுமொத்தமாக இருப்பதுடன், இன்னும் வளர்ச்சியடைய எல்லையற்ற இடம் உள்ளதாக இருக்க வேண்டும். ---- 🌿  அந்த சமயத்தில் பிற சமயத்தினரைத் துன்புறுத்தலும் சகிப்புத்தன்மையற்று நடந்துகொள்ளுதலும் இருக்காது. - அது ஆண் பெண் எல்லாரிடமும் தெய்வத்தன்மையை ஏற்றுக்கொள்ளும். மனித இனம் தன் உண்மையான தெய்வீகத் தன்மையை உணர்வதற்கு உதவி செய்வதே அதன் நோக்கமாக இருக்கும் . அதன் முழு ஆற்றலும் அதற்கே பயன்படும். --- 🌿  அத்தக...

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-28

Image
இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-28 (சுவாமி விவேகானந்தர்) - உலகத்தை துறந்து செல்வது எப்படி? ---- 🌿  உலகத்தைத் துறப்பது என்பதை, அதனுடைய பழைய வளர்ச்சியுறாத பொருளில் புரிந்துகொண்டால், அது இப்படித்தான் இருக்கும்: வேலை செய்யக் கூடாது; சோம்பேறிகளாக இருக்க வேண்டும்; எதையும் சிந்திக்காமல், எதையும் செய்யாமல், பிடித்துவைத்த களிமண் போல் இருக்க வேண்டும்; விதியின்மீது பாரத்தைப் போட்டுவிட வேண்டும். ஒவ்வொரு சூழ்நிலையிலும் அதன் கைதியாக இருக்க வேண்டும்; இயற்கையின் விதிகளால் இடத்திற்கு இடம் பந்தாடப்பட வேண்டும். இதுதான் பொருள். --- 🌿  உலகத்தைத் துறப்பது என்பதற்கு அது பொருளல்ல. நாம் வேலை செய்ய வேண்டும். பொய்யான ஆசைகளால் அலைக்கழிக்கப்படுகின்ற சாதாரண மனித குலத்திற்கு செயல் என்பதுபற்றி என்ன தெரியும்? உணர்ச்சிகளாலும் புலன்களாலும் ஆட்டி வைக்கப்படுகின்ற மனிதனுக்குச் செயல் என்பதுபற்றி என்ன தெரியும்? சொந்த ஆசைகளால் தூண்டப்படாதன்தான், சுயநலம் துளியும் இல்லாதவன் தான் செயல்புரிய முடியும். தனக்கென்று சுய நோக்கம் எதுவும் இல்லாதவன் தான் வேலை செய்ய முடியும். லாபம் கருதாதவன்தான் வேலை செய்ய முடியும்...

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-27

Image
இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-27 (சுவாமி விவேகானந்தர்) - இந்துக்களின் உருவ வழிபாடு  ----- 🌿  நான் சிறுவனாயிருந்த போது, கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர், ஒரு கூட்டத்தில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நிகழ்ச்சி என் நினைவிற்கு வருகிறது. பலசுவையான செய்திகளைச் சொல்லிக்கொண்டே வந்த அவர் இடையில் நான் உங்கள் விக்கிரகத்தை என் கைத்தடியால் ஓங்கி அடித்தால் அது என்னை என்ன செய்து விடும்? என்று கேட்டார்.  அதனைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுள் ஒருவர் சற்றும் தாமதியாமல் உங்கள் ஆண்டவரை நான் ஏசினால் அவர் என்னை என்ன செய்வார்? என்று கேட்டார்,' இறந்தாலும் நீ தண்டிக்கப்படுவாய் என்று பதிலளித்தார் பாதிரி. ' அப்படியே எங்கள் விக்கிரமும் நீர் இறந்ததும் உம்மைத் தண்டிக்கும்' என்று திரும்பிச் சொன்னார் அந்த இந்து! ---- 🌿  மூடநம்பிக்கை மனிதனின் பெரும் பகையாகும். ஆனால் சமயவெறி அதைவிட மோசமானது. கிறிஸ்தவன் ஏன் சர்ச்சிற்குப் போகிறான் ? சிலுவை ஏன் புனிதமானது ? பிராத்தனை செய்யும்போது முகம் ஏன் வானை நோக்க வேண்டும் ? கத்தோலிக்க சர்ச்சுகளில் ஏன் அத்தனை உருவங்கள் இருக்கின்றன? பிராட்டஸ்டன்டினர் பிரார்த்...

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-25

Image
இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-25 (சுவாமி விவேகானந்தர்) - கடவுளை மனத்தால் அறிய முடியுமா? ----- 🌿  நாம் சாதாரணமாக அறிவு என்று சொல்வதற்கு என்ன பொருள்? -- 🌿  அறிவு என்பது, நம் மனத்தின் எல்லைக்கு உட்பட்டது, நாம் அறிவது. -- 🌿  அறிவு மனத்தைக் கடந்ததாக இருக்கும்போது அதை அறிவு என்று சொல்ல முடியாது. மனத்தின் எல்லையை கடந்து இருப்பதை மனத்தால் அறிய முடியாது -- 🌿  பரம்பொருள், மனத்தின் எல்லைக்குள் வந்து விட்டால் அது பரம்பொருளாக இருக்க முடியாது, எல்லைக்கு உட்பட்டதாக ஆகிவிடும். -- 🌿  மனத்தால் அறியக்கூடியது,மனத்தினால் கட்டுப்பட்டது எதுவுமே எல்லைக்கு உட்பட்டதாக ஆகிவிடுகிறது. --- 🌿  மனத்தின் எல்லையை கடந்து இருக்கும் பரம்பொருளை மனத்தால் எப்படி அறிய முடியும்? --- 🌿  ஆகவே பரம்பொருளை அறிவது என்று சொல்வதே முரணானது. அதனால்தான் இந்தக் கேள்விக்கு ஒரு போதும் பதிலே கிடைக்கவில்லை. -- 🌿  கடவுளை அறிய முடியுமானால் அவர் கடவுள் அல்ல; அவரும் நம்மைப்போல் எல்லைக்கு உட்பட்டவராக ஆகிவிடுகிறார். அவரை அறிந்து கொள்ள முடியாது. அவர் அறிந்து கொள்ள முடியாதவராகவே என்றும் இர...