Posts

Showing posts from August, 2018

வேதம் பயில்வோம்-பாகம்-10-ரிக்வேதம்

வேதம் பயில்வோம்-பாகம்-10-ரிக்வேதம் - ஐதரேய உபநிஷதம் - உலகிலேயே மிகப்பழைய நூல் இந்த சிந்தனைக் கருவூலம்தான். இது எப்போது தோன்றியது என்பது ஒருவருக்கும் தெரியாது. இக்கால ஆராய்ச்சியாளர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். இது எட்டாயிரம் அல்லது ஒன்பதாயிரம் வருடங்களுக்கு முன்பு தோன்றியதாக இருக்கலாம்... ஆனால் அன்று போலவே இன்றும் அவை புதுமை மாறாமல் இருக்கின்றன; ஏன், முன்னைவிட புதுப் பொலிவுடன் திகழ்வதாகவே கூறலாம். - வேதங்கள் யாராலும் எழுதப்பட்டவை அல்ல. என்றென்றும் நின்று நிலவுகின்ற உண்மைகளின் தொகுப்பே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது, மனித இனம் முழுவதும் அதை மறந்து விட்டாலும் இருக்கும். அவ்வாறுதான் ஆன்மீக உலகின் விதிகளும்... அவை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னரும் இருந்தன, நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும் என்று எழுதுகிறார் சுவாமி விவேகானந்தர். ரிஷிகள் அந்த விதிகளை வெளிப்படுத்தினார்கள், அவ்வளவுதான். - அவ்வாறு ரிஷிகள் வெளிப்படுத்திய அந்த உண்மைகள் பின்னாளில் வியாச முனிவரால் நான்காகத் தொகுக்கப்பட்டன. அவை ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள். ஒவ்வொரு வேதமும் மூன்ற...

வேதம் பயில்வோம்-பாகம்-9-யஜுர்வேதம்

வேதம் பயில்வோம்-பாகம்-9-யஜுர்வேதம் - ஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்) - மந்திரம்-17 - வாயுரனிலமம்ருதமதேதம் பஸ்மாந்தக்ம் சரீரம் ஓம் (3) க்ரதோ ஸ்மர க்ருதக்ம் ஸ்மர க்ரதோ ஸ்மர க்ருதம் ஸ்மர (17) - பொருள் - 17. இந்த உடம்பு சாம்பலாகிவிடும். உடம்பிலிருந்து வெளியேறுகின்ற பிராணன் எங்கும் நிறைந்த அழிவற்ற பிராணனுடன் கலந்துவிடும். ஓம். மனமே! செய்தவற்றை நினைத்துப் பார், மனமே செய்த வற்றை நினைத்துப் பார். - ஒரு லட்சியத்தை எடுத்துக்கொண்டு முன்னேறும் போது, சிலவேளைகளில் நாம் லட்சியத்தை 1. ஓர் எழுத்தை உச்சரிப்பதற்கான நேரம் ஒரு மாத்திரை. ஓம் என்பதை 3. மாத்திரை காலம் நீட்டி ஓத வேண்டும். - மறந்துவிடுவதுண்டு; அதுபோலவே சிலவேளைகளில் லட்சிய நாட்டம் நீர்த்துப்போவதும் உண்டு. எனவே தினமும் அதனை நினைவூட்டிக் கொள்வது நல்லது. இது சுய தூண்டுதல் எனப்படுகிறது. இத்தகைய மந்திரங்கள் நமது வேதங்களிலும் உபநிஷதங்களிலும் ஏராளம் உள்ளன. அத்தகையதொரு மந்திரத்தை முனிவர் இங்கே நமக்குத் தருகிறார். உபநிஷதங்களைப் படிக்கும் போது மட்டுமல்லாமல் இவற்றைப் பொருளுணர்ந்து அவ்வப்போது ஓதுவது நாம் நமது லட்சியத்தில் உறுதியாக இர...

வேதம் பயில்வோம்-பாகம்-8-யஜுர்வேதம்

வேதம் பயில்வோம்-பாகம்-8-யஜுர்வேதம் - ஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்) - ஒளிக்கு அப்பால் உள்ளது என்ன? - மந்திரம்-15 - ஹிரண்மயேன பாத்ரேண ஸத்யஸ்யாபிஹிதம் முகம் தத் த்வம் பூஷன்னபாவ்ருணு ஸத்யதர்மாய த்ருஷ்ட்டயே (15) - பொருள் - 15. உண்மையின் முகம் பொன்மயமான திரையால் மறைக்கப்பட்டுள்ளது. சூரியதேவா! சத்திய நிஷ்டை உடைய நான் அந்த உண்மையைக் காண்பதற்காக மறைப்பை விலக்குவாய்! - இருளிலிருந்து என்னை ஒளிக்கு அழைத்துச் செல்வாயாக (1. தமஸோ மா ஜ்யோதிர் கமய அப்யாரோஹ மந்திரம், பிருஹதாரண்யக உபநிஷதம், 1.3.28.)என்பதுபோன்ற பிரார்த்தனைகளை நாம் அறிவோம். இது இறைவனை நாடிச் செல்பவனின் ஆரம்ப பிரார்த்தனை. அவன் அறியாமை இருளில் இருக்கிறான். எனவே அந்த இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல்லுமாறு அவன் இறைவனைப் பிரார்த்திக்கிறான். பிரார்த்தனை, ஜபம், தியானம் போன்ற பல்வேறு சாதனைகளின்மூலம் அந்த ஒளியைக் காண்கிறான். அந்த ஒளியின் மென்மையையும் வசீகரத்தையும் உணர்த்தவே பொன்மயமான திரை என்று இந்த மந்திரம் குறிப்பிடுகிறது. அந்த மென்மையிலும் வசீகரத்திலும் அவன் தன்னை இழந்து அங்கேயே நிற்கிறான். - ஆனால் உண்மை என்பது இர...

வேதம் பயில்வோம்-பாகம்-7-யஜுர்வேதம்

வேதம் பயில்வோம்-பாகம்-7-யஜுர்வேதம் - ஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்) -- உருவ வழிபாடும் அருவ வழிபாடும்: - இறைவனை உருவம் உடையவராக வழிபடலாம், உருவ மற்றவராகவும் வழிபடலாம். இரண்டையும் இணைத்துச் செய்தால்தான் மிகவுயர்ந்த பலன் கிடைக்கிறது என்ற உண்மையை எடுத்துக்காட்டுகின்றன இந்த மந்திரங்கள். - மந்திரம்-12 - அந்தம் தம: ப்ரவிசந்தி யேஸஸம்பூதிமுபாஸதே ததோ பூய இவ தே தமோ ய உ ஸம்பூத்யாக்ம் ரதா: (12) - பொருள் -- 12. யார் அருவக்கடவுளை வழிபடுகிறார்களோ அவர்கள் காரிருளில் மூழ்குகின்றனர். யார் உருவக் கடவுளில் ஈடுபடுகிறார்களோ அவர்கள் அதைவிடக் கொடிய இருளில் உழல்வதைப்போல் துன்புறு கின்றனர். - அந்திரம்-13 - அன்ய தேவாஹு: ஸம்பவாதன்யதாஹுரஸம்பவாத் இதி சுச்ரும தீராணாம் யே நஸ்தத் விசசக்ஷிரே (13) - 13. உருவ வழிபாட்டால் கிடைப்பது ஒரு பலன், அருவ வழிபாட்டால் கிடைப்பது வேறு பலன் என்கிறார்கள்- எங்களுக்கு அதனை விளக்கிய மகான்கள் இவ்வாறு கூறினார்கள். - மந்திரம்-14 - ஸம்பூதிம் ச வினாசம் ச யஸ்தத் வே தோபயக்ம் ஸஹ வினாசேன ம்ருத்யும் தீர்த்வா ஸம்பூத்யாஸம்ருதமச்னுதே (14) - பொருள் - 14. அருவ ...

வேதம் பயில்வோம்-பாகம்-6-யஜுர்வேதம்

வேதம் பயில்வோம்-பாகம்-6-யஜுர்வேதம் - ஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்) - மந்திரம்-9 - அந்தம் தம: ப்ரவிசந்தி யேஸவித்யாமுபாஸதே ததோ பூய இவ தே தமோ ய உ வித்யாயாக்ம் ரதா: (9) - பொருள் - 9. யார் உயர்நோக்கமின்றிச் செயல்களில் ஈடுபடு கிறார்களோ அவர்கள் காரிருளில் மூழ்குகின்றனர். யார் தகுதி பெறுமுன்னர் தியானத்தில் ஈடுபடு கிறார்களோ அவர்கள் அதைவிடக் கொடிய இருளில் உழல்வதைப்போல் துன்புறுகின்றனர். - மந்திரம்-10 - அன்யதேவாஹுர் வித்யயா அனயதாஹுரவித்யயா இதி சுச்ரும தீராணாம் யே நஸ்தத் விசசக்ஷிரே (10) - பொருள் - 10. தியானத்தால் கிடைப்பது ஒரு பலன், செயல் களால் கிடைப்பது வேறு பலன் என்கிறார்கள்- எங்களுக்கு அதனை விளக்கிய மகான்கள் இவ்வாறு கூறினார்கள். - மந்திரம்-11 - வித்யாம் சாவித்யாம் ச யஸ்தத் வேதோபயக்ம் ஸஹ அவித்யயா ம்ருத்யும் தீர்த்வா வித்யயாஸம்ருதமச்ஷதே (11) - பொருள் - 11. தியானம், செயல்கள் இரண்டையும் சேர்த்து யார் அறிகிறானோ அவன் செயல்களால் மரணத்தைக் கடந்து தியானத்தால் இறவாநிலையை அடைகிறான். - இந்த மந்திரங்கள் என்ன சொல்கின்றன? - செயல்களும் தியானமும்: 9-11 - செயல்...

வேதம் பயில்வோம்-பாகம்-5-யஜுர்வேதம்

Image
வேதம் பயில்வோம்-பாகம்-5-யஜுர்வேதம் - ஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்) - மந்திரம்-8 - ஸ பர்யகாச்சுக்ரமகாயமவ்ரணம் அஸ்னாவிரக்ம் சுத்தமபாபவித்தம் கவிர்மனீஷீ பரீபூ: ஸ்வயம்பூர் யாதாதத்யதோ ர்த்தான் வ்யததாச் சாச்வதீப்ய: ஸமாப்ய: (8) - பொருள் - 8. (ஆன்ம அனுபூதி பெற்றவன்) அனைத்தின் உட்பொருளையும் காண்கிறான். அவன் மனத்தை வசப்படுத்தியவன்; அனைத்து அறிவையும் உள்ளடக்கியவன்; யாரையும் சாராதவன். அனைத்துப் பொருட்களின் உண்மை இயல்பை அவன் என்றென்றைக்குமாக அறிந்திருக்கிறான். அவன் ஒளிமயமான, உடம்பற்ற, முழுமையான, தசைகள் இல்லாத, தூய, பாவமற்ற இறைவனை அடைகிறான். - கவி: என்றால் க்ராந்த தர்சி; அப்பால் காண்பவன் என்று பொருள். காணும் தோற்றத்துடன் மற்றவர்கள் நின்றுவிடுகிறார்கள். ஆனால் ஆன்ம அனுபூதி பெற்றவன், ஒவ்வொரு தோற்றத்திற்கும் பின்னால் ததும்புகின்ற இறையுணர்வைக் காண்கிறான். - மனீஷி என்றால் மனத்தை வசப்படுத்துவதற்கான புத்தியைப் பெற்றவன். (1. மனஸ ஈசித்ரீ புத்திர்மனீஷா தத்வான் மனீஷீ -ஸ்ரீவேதாந்த தேசிகர்)மனத்தை மனத்தால் வசப்படுத்த முடியாது, அதைவிட ஆற்றல்மிக்க ஒன்று வேண்டும். அதுவே புத்தி. உள்ளுணர்வு ...

வேதம் பயில்வோம்-பாகம்-4-யஜுர்வேதம்

Image
வேதம் பயில்வோம்-பாகம்-4-யஜுர்வேதம் - ஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்) -- மந்திரம்-3 - அஸுர்யா நாம தே லோகா அந்தேன தமஸாவ்ருதா: தாக்ம் ஸ்தே ப்ரேத்யாபிகச்சந்தி யே கே சாத்மஹனோ ஜனா: (3) - பொருள் - 3. அசுரர்களின் உலகங்கள் காரிருளினால் மூடப்பட்டுள்ளன. ஆன்மாவை அழிப்பவர்கள் மரணத்திற்குப் பிறகு அந்த உலகங்களை அடைகிறார்கள். - ஆசை வசப்பட்டு, உடம்புடனும் மனத்துடனும் நம்மைப் பிணைத்துக்கொண்டு, உலகின் சுகபோகங்களை நாடி புற வளர்ச்சியில் கவனம் செலுத்துந்தோறும் நாம் மேன்மேலும் பிறவிகளுக்கு உள்ளாகிறோம். மாறாக, ஆன்மாவுடன் நம்மை ஒன்றுபடுத்திக்கொண்டு அக வளர்ச்சியில் நாட்டம் செலுத்துந்தோறும் இறைநிலையை அடைந்து மரணத்தை வெல்கிறோம். அதாவது பிறவியற்றவர்கள் ஆகிறோம். - இவ்வாறின்றி ஆன்மாவை நினைக்காமல் உடம்பே எல்லாம் என்று வாழ்பவர்களை இது மந்திரம் ஆன்மாவை அழிப்பவர்கள் என்று குறிப்பிடுகிறது. ஆன்மாவை அழிக்க முடியாது; அழிப்பதற்கு நிகரான குற்றத்தைச் செய்பவர்கள் என்பது பொருள். அத்தகையவர்கள் மரணத்திற்குப் பிறகு இருண்ட உலகங்களை அடைகிறார்கள். அதாவது தொடர்ந்து பிறவிக்கு உள்ளாகி, துன்பத்தில் உழல்கிறார்கள். இந்...

வேதம் பயில்வோம்-பாகம்-3-யஜுர்வேதம்

Image
வேதம் பயில்வோம்-பாகம்-3-யஜுர்வேதம் - ஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்) -- நாம் யார், எங்கிருந்து வந்தோம், எங்கே போய்க் கொண்டிருக்கிறோம், எங்கே போக வேண்டும் என்ற எதுவும் தெரியாத நிலையில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அவ்வளவு ஏன், அடுத்த கணம் என்ன நடக்கப் போகிறது என்பதுகூட நமக்குத் தெரியாது. அதனால்தான் உபநிஷத ரிஷி, இறைவா! அறியாமை இருளிலிருந்து என்னை அறிவின் ஒளிக்கு அழைத்துச் செல்வாய் (1. தமஸோ மா ஜ்யோதிர் கமய-அப்யாரோஹ மந்திரம், பிருஹதாரண்யக உபநிஷதம், 1.3.28.)என்று பிரார்த்தனை செய்கிறார். - அத்தகைய பிரார்த்தனைகளின் பலனாக, ஜபம் தவம் போன்ற ஆன்மீக சாதனைகளின் பலனாக இறைவனின் அருட்கிரணம் நம்மில் பட்டு நமது உணர்வின் ஒளியைத் தூண்டுகிறது. நமக்கு ஒளியின் காட்சி, ஒளிமயமான இறைவனின் காட்சி கிடைக்கிறது; அறியாமை இருள் விலகுகிறது; எல்லாம் நமக்குப் புரிகிறது. - ஆனால் ஒளியின் காட்சியுடன் நமது பயணம் நின்று விடவில்லை. அறுதி உண்மை என்பது அனைத்தையும் கடந்தது; இருள்- ஒளி, துன்பம்-இன்பம், தீமை- நன்மை போன்ற அனைத்து இருமைகளுக்கும் அப்பாற்பட்டது. அந்த இடத்தை அடையும்போதுதான் நமது பயணம் லட்சியத்தை அடைகி...

அன்னை சாரதாதேவியின் உபதேசங்கள்-பாகம்-5

Image
அன்னை சாரதாதேவியின் உபதேசங்கள்-பாகம்-5 - உங்கள் உடம்பு என்பது வேறென்ன மகளே, அதுவும் என் உடம்பே அல்லவா! உங்கள் உடம்பு நல்ல நிலையில் இல்லாவிட்டால் நானும் கஷ்டப்படத்தானே வேண்டும் - சாதனை வாழ்வில் பெரும்பாலான தடைகள் அகத்திலிருந்தே வருகின்றன.புறத்தடைகள் குறைவே.ஆனால் தடைகள் எவையானாலும் ஜபம் செய்யச்செய்ய.தியானமும் தாரணையும் பழகப்பழக அவை ஒவ்வொன்றாக விலகிவிடும் - கடமைகளை செய்துகொண்டே போ. மனத்தின் அழுக்குகள் அப்படியே இருக்கின்றனவா,போய்விட்டனவா என்றெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டிருக்காதே.தென்னை மட்டை பழுத்தால் தானாக வீழ்ந்துவிடும் - உங்கள் அனைவரின் வாய்மூலமாகவும் நான் சாப்பிடத்தானே செய்கிறேன்.நீங்கள் சாப்பிட்டாலே நான் சாப்பிட்டதுபோல்தான். - அவதாரபுருஷரை எல்லோராலும் அறிந்துகொள்ள முடியுமா என்ன? ஏதோ ஓரிருவரால் மட்டுமே முடியும்.மனித குலத்தின் நன்மைக்காக அவர்கள் எவ்வளவு பாடுபடுகின்றனர்.எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கின்றனர் - குருதேவரின் தொண்டையிலிருந்து ரத்தம் கொட்டியது.அப்போதும் அவர் பேசுவதை நிறுத்தவில்லை.அவர்களுக்கு எப்படி நன்மை உண்டாகும் என்பதுபற்றியே சிந்தித்தார் - உலகில் வாழ வேண்டுமானா...

அன்னை சாரதாதேவின் அன்புமொழிகள்-பாகம்-1

Image
அன்னை சாரதாதேவின் அன்புமொழிகள்-பாகம்-1 - ஒரு கணம்கூட வேலை செய்யாமல் இருப்பது நல்லதல்ல.பற்றில்லாமல் வேலை செய்யச்செய்ய கர்மத்தளை உடைபடுகிறது.பிறகு பற்றற்றநிலை ஏற்படுகிறது. - ஏதோ காரணத்திற்காக நளினி கோபத்துடன் வந்து அமர்ந்தாள்.அன்னை அதை கண்டித்தார்.பெண்களுக்கு இவ்வளவு கோபம் கூடாது.பொறுமை வேண்டும்.சிறுவயதில் பெற்றோர்,இளமையில் கணவன் இவர்களின் பாதுகாப்பு பெண்களுக்கு கட்டாயம் தேவை - மந்திரம் தந்திரம் எல்லாம் ஒன்றுமில்லை மகளே! பக்தியே எல்லாம். குருதேவரே எல்லாம்.குருவும் அவரே,இஷ்டதெய்வமும் அவரே.அவரே எல்லாம் - வாழ்க்கையில் அடிபட்டு அதன்பிறகு பலர் இறைவா என்பார்கள்.ஆனால் சிறுவயதில் மனம் புத்தம்புது மலராக இருக்கும்போதே அதை பகவானிடம் சமர்ப்பிப்பவனே பாக்கியவான் -- கணவனும் மனைவியும் ஒற்றுமையாக இருந்தால்தான் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படும் -- ஒருவர் தனது புண்ணிய பாங்களைக் குறித்துப் பேசினால் கேட்பவர்களும்கூட அவற்றில் ஏதோ கொஞ்சமாவது பங்கை ஏற்றே தீரவேண்டும். ஒருவன் உன்னிடம் தன் பாவத்தை சொல்வதாக வைத்துக்கொள்வோம்,பின்பு எப்போது அவனை நினைக்க நேர்ந்தாலும் அவனது பாவமும் சேர்ந்தே நினைவில் வரும்.அது உன் மனத்தில...

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-2

Image
அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-2 - மகளே,இந்த உலகில் கணவனாகட்டும்,மகனாகட்டும்,உடம்பாகட்டும்,எதுவும் உண்மையல்ல.இந்த மாயைகளின் பந்தத்தை வெட்ட முடியாவிட்டால் சம்சாரக்கடலை கடக்க முடியாது. - இந்த உடம்புதான் நாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோமே அதுதான் பெரிய மாயை.கடைசியில் இந்த மாயையும் வெட்டி எறிந்துவிட வேண்டும்.மகளே இந்த உடம்பு என்பது என்ன? கடைசியில் ஒருபிடி சாம்பல்தான்.இதற்குபோய் இவ்வளவு கர்வம் எதற்கு? - கஸ்தூரி மான் தன்னிடமிருந்து வரும் மணத்தை வெளியிலிருந்து வருவதாக நினைத்து தேடுகிறது.அதுபோல இறைவன் மனித உடம்பில்தான் இருக்கிறார்.அவரை அறியாமல் எங்கெங்கோ அலைகிறான். -- உனக்கு யார் இல்லாமல்போனாலும் ஒரு அம்மா இருக்கிறாள் என்பதை நினைவில் வைத்துக்கொள்.குருதேவரை நினைப்பவர்களை கடைசிநாளில் அவர் காட்சிதந்து தன்னுடன் அழைத்துசெல்வார்.இதை அவரே என்னிடம் சொல்லியிருக்கிறார் -- எனக்கு தெரிந்தவரை குருதேவர் கவலையாக இருந்து நான் பார்த்ததே இல்லை.எவ்வளவு அற்புதமான விசயங்களை என்னிடம் பேசுவார். -- தெய்வீக விசயங்களைத்தவிர குருதேவர் வேறு எதையும் பேசுவதில்லை.ஒருநாள் என்னிடம்,மனித உடம்பு நிலையற்றது.இதோ இர...

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-3

Image
அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-3 ----- குதேவரின் பிள்ளைகள் வாழ்கின்ற இடத்திற்கு(தன்னிடம்) வந்திருக்கிறாய்.இங்கே உனக்கு மன அமைதி கிடைக்கவில்லை என்றால் வேறு எங்கிருந்து கிடைக்கும்? என்ன அற்ப வாழ்க்கை வாழ்கிறாய்? -- உன் மனத்தில் பாவம் உள்ளது.அதனால்தான் மனஅமைதி கிடைக்கவில்லை.எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருந்ததால் மூளை சூடாகிவிட்டது.அதனால்தான் தீய எண்ணங்கள் உன்மனத்தில் எழுகின்றன - குருதேவரின் லீலையை பார்த்தாயா அம்மா!எப்படிப்பட்ட உறவினருடன் நான் வாழவேண்டியிருக்கிறது.ஒருத்திக்கு ஏற்கனவே பைத்தியம்.இன்னொருத்தி பைத்தியநிலையை நெருங்கிக்கொண்டிருக்கிறாள்.இன்னொருத்திக்கு உருப்படியான புத்தி சிறிதுகூட இல்லை. - மகளே! இந்த மானிடப் பிறவியைப் பெறுவது பெரிய பாக்கியம்.சாதனைகளில் ஆழ்ந்து ஈடுபடு.பாடுபட வேண்டும்.பாடுபடாமல் ஏதாவது நடக்குமா? - பால்போல் நிலவு காய்கின்ற இரவுகளில் நிலவொளியில் அமர்ந்து கூப்பிய கரங்களுடன் சந்திரனைப் பார்த்து, உனது ஒளிபோல் என் உள்ளத்தையும் களங்கமற்றதாக ஆக்குவாய் என்று பிரார்த்திப்பேன் - சாதனைகள் செய்யச்செய்ய,என்னுள் இருபப்வர் யாரோ அவரே உன்னுள்ளும் இருக்கிறார்,ஒரு மீனவனி...

அன்னை சாரதாதேவியின் அன்பு மொழிகள்-பாகம்-4

Image
அன்னை சாரதாதேவியின் அன்பு மொழிகள்-பாகம்-4 - காவி உடை தரித்திருந்த ஒருவரைப்பார்த்து அனை்னை கூறினார்--இப்படி செய்யாதீர்கள்.முதலில் உண்மைப்பொருளின் அனுபூதி பெறுங்கள்.பின்பு காவி உடை அணிந்து மக்களிடம் செல்லலாம் .உங்கள் கால்களில் தலைவைத்து மக்கள் வணங்குவார்கள்.அதை ஏற்றுக்கொள்ளும் ஆற்றல் இல்லாவிட்டால் வீழ்ச்சி ஏற்படும் - பணம் இருப்பவன் கொடுப்பதன்மூலம் சேவை செய்யட்டும்.அது இல்லாதவன் ஜபதபங்களின் மூலம் சேவை செய்யட்டும், அதுவும் முடியாவிட்டால் இறைவனை சரணடை என்பார் குருதேவர். - என்னைக் காக்க ஒரு தாயோ தந்தையோ யாரோ ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணம் மனத்தில் இருந்தாலே போதும். - மனத்தை நிலைநிறுத்தி ஒருமுறை இறைவனின் நாமம் சொல்லி அவரை அழைப்பது லட்சம்முறை ஜபம் செய்வதற்குச் சமம்.மனம் ஈடுபடாமல் நாள்முழுவதும் ஜபம் செய்து என்ன பயன்? - பிள்ளைகள் பிறப்பதே ஒரு பாவம்தான்.உலகமே ஒரு மாயாஜாலம்,ஆனால் இது மாயாஜாலம் என்பது மனிதனுக்குப் புரியவில்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயம் என்பார் குருதேவர் - உலகியல் வாழ்க்கையில் ஏதாவது சுகம் இருக்கிறதா? இப்போது இருக்கிறது,மறு கணம் இல்லை.இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டுவிட்டவ...

ஸ்ரீமத் பகவத்கீதை-அத்தியாயம்-7

Image
ஸ்ரீமத் பகவத்கீதை - அத்தியாயம்-7 - ஸ்ரீகிருஷ்ணர் சொன்னது - 7.1 பார்த்தா , என்னிடம் மனதைவைத்து என்னை அடைக்கலம் புகுந்தவனாக , யோகம் பயின்று என்னை முற்றிலும் அறிவது எப்படி என்பதை சொல்கிறேன் கேள் - 7.2 நான் உனக்கு விஞ்ஞானத்துடன் கூடிய இந்த ஞானத்தை முழுவதும் சொல்கிறேன். இதை அறிந்த பிறகு , இங்கு மேலும் அறியவேண்டியது வேறு ஒன்றும் இருக்காது - 7.3 ஆயிரக்கணக்கான மனிதர்களுள் யாரோ ஒருவர் முக்தியடைவதற்காக முயற்சிக்கிறான். முயற்சிக்கின்ற நல்லவர்களில் யாரோ ஒருவன் என்னை உள்ளபடி அறிகிறான் - 7.4 நிலம் , நீர் , அக்னி , காற்று , வானம்(இவை பஞ்சபூதங்கள்) , மனம் , புத்தி , அகங்காரம் என்று என்னுடைய பிரகிருதி எட்டுவிதமாக பின்னப்பட்டிருக்கிறது (மூலப்பொருள் கூட்டுப்பொருள் என்று இரண்டு உள்ளன. வானம் , அக்னி மூலப்பொருள். நீர் , நிலம் , காற்று இந்த மூன்றும் மற்றவைகளுடன் கலந்து கூட்டுப்பொருளாக உள்ளன) - 7.5 ஆனால் இது (மேலே சொன்ன எட்டும் ) கீழானது. இதிலிருந்து வேறானதும் உயிர்களின் ஜீவனான என்னுடைய மேலான பிரகிருதியை(சாங்கிய தத்துவத்தை படிக்கவும்) அறிவாயாக. தோள்வலிமையுடையோய் , இந்த பிரபஞ்சம்...