Posts

Showing posts from January, 2021

📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-11

 📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-11 அத்தியாயம் -2 ........... 41.  பிராம்மண பிரம்மசாரி மான் தோலால் ஆன மேலாடையையும், க்ஷத்ரிய பிரம்மசாரி குரு மிருகத்தின்ஆன தோலால் ஆன மேலாடையையும், வைசிய பிரம்மசாரி ஆட்டுத்தோலால் ஆன மேலாடையையும்  அணிய வேண்டும்.  பிராம்மணன்  நார்மடித் துணியை அரையாடையாக அணிய வேண்டும்.  க்ஷத்ரியன் பட்டுத் துணியை அரையாடையாக அணிய வேண்டும்.  வைசியன் சணல் ஆடையை அரையாடையாக அணிய வேண்டும். (மிகப்பழைய காலத்திலேயே பட்டுத்துணி வழக்கத்தில் இருந்துள்ளது.குளிரிலிருந்து தங்களை காத்துக்கொள்வதற்காகவே மிருகத்தின் தோலாடையை பயன்படுத்துகிறார்கள்) ................. 42.  பிராம்மண பிரம்மசாரி, முஞ்சி புல்லால் திரிக்கப் பட்டு, வழுவழுவென்று சமானமான மூன்று இழைகள் கொண்ட அரைஞாணை அணிய வேண்டும்.  அவ்வாறே க்ஷத்ரிய பிரம்மசாரி மூர்வா புல்லினால் திரிக்கப் பட்ட மூன்று இழைகளோடு கூடிய அரை ஞானை அணிய வேண்டும். வைசிய பிரம்மசாரி சணலால் திரிக்கப் பட்ட மூன்று இழைகளோடு கூடிய அரை ஞானை அணிய வேண்டும். (இந்த அரைஞாணில்தான் கோவணம் கட்டிக்கொள்வார்கள்) .......

📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-10

 📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-10 அத்தியாயம் -2 ........... 31.  பிராம்மண குழந்தைக்கு வைக்கும் பெயர் சுபம் தரும் வண்ணம் இருக்க வேண்டும். க்ஷத்திரியக் குழந்தைக்குப் பலம் தரும் வாசகமாக இருக்க வேண்டும். வைசியக் குழந்தைக்கு செல்வம் தரும் வாசகமாக இருக்க வேண்டும். சூத்திரர்களுக்கு   ஏவலன் என்பதை அறியும் வகையில் பெயர் வைக்க வேண்டும். .................... 32.  பிராம்மணனுடைய பெயர் சர்மாஎன்ற பதம் கூடியதாக இருக்க வேண்டும். ராஜாவுக்கு  ரக்ஷணம் சேர்ந்ததாக இருக்க வேண்டும். வைசியனுக்கு செல்வத்தோடு  கூடியதாக  இருக்க வேண்டும். சூத்திரனுக்கு தாசன் என்ற பதம் கூடியதாக இருக்க வேண்டும். ( பிராம்மணனுக்கு நாராயணசர்மா, சிவ சர்மா என்று தெய்வப் பெயர்களாக அமைய வேண்டும். பிராம்மணன் வீட்டில்  எப்போதும் வேத சப்தமும், ஹோமப்புகையும் இருக்கும். அங்கே குழந்தைகளையோ  பெரியவர்களையோ  கூப்பிடும்  குரல் கூட புண்ணியத்தைத் தருவதாக அமைய வேண்டும். (க்ஷத்திரியனுக்கு  வர்மா என்ற பதம் சேர்க்கப் பட வேண்டும் பெயரிலேயே கம்பீரமும் இவன் காக்கப் ப...

📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-9

 📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-9 அத்தியாயம் -2 ......................... 21.  இமயமலைக்கும் விந்திய  மலைக்கும் இடையில் , சரஸ்வதி நதிபாயும் தேசத்துக்கும், பிரயாகைக்கும் இடைப்பட்ட  தேசத்துக்கு  ” மத்திய தேசம்” என்று பெயர். .................. 22.  கிழக்குக் கடலுக்கும், மேற்குக் கடலுக்கும் இடையிலுள்ள  பிரதேசத்துக்கு ” ஆர்யாவர்த்தம்” என்று பெயர். (தென்னிந்தியா) .......................... 23.  கறுப்புக்கோடுகள் கொண்ட மான் பிறந்து தன்னிச்சையாக சஞ்சரிக்கின்ற பிரதேசமே யக்ஞங்கள் செய்வதற்கு உகந்த இடமாகும். மற்றைய இடங்கள் மிலேச்ச தேசம் எனப்படும். மிலேச்ச தேசம் யக்ஞம் செய்வதற்கு அருகதையற்ற இடமாகும். .......... 24.  பிராம்மணர், க்ஷத்ரியர், வைசியர் என்னும் இருபிறப்பாளர்களாகிய மூவர்ணத்தாரும் முயற்சி செய்து, யக்ஞபூமிகளான இந்த தேசங்களை அடைய வேண்டும். சூத்திரர்கள் தங்கள் ஜீவனமான தொழில் நிமித்தமாக எந்தத் தேசத்திலும் வசிக்கலாம். ................ 25.  இதுவரை இந்த தர்ம சாஸ்திரத்தின் தோற்றம் முழுவதுமாகக் கூறப்பட்டது. இவ்வுலகம் தோன்றிய...

📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-8

 📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-8 அத்தியாயம் -2 ......................... 11.  பிரமாணங்களான ஸ்ருதிகளையும், ஸ்ம்ருதிகளையும் எந்த பிராமணனோ, க்ஷத்ரியனோ, வைசியனோ அவமதித்து தூஷிக்கின்றானோ, அப்படிப்பட்ட நாஸ்திகளை நல்லவர்கள் புறக்கணிக்க  வேண்டும். (நாஸ்திகள் என்பவன் முற்றிலும் வேதத்தை ஏற்காதவன்.அப்படிப்பட்ட முதல் மூன்று ஜாதியைச்சேர்ந்த நாஸ்திகர்களையும் ஜாதியைவிட்டு விலக்கிவிடுதல்,சமுதாயத்தைவிட்டு விலக்கிவைத்தல் போன்ற பழக்கங்கள் முற்காலத்தில் இருந்துள்ளன) ................... 12.  வேதம், ஸ்ம்ருதி, நல்ல ஆசாரம், சுய ஆனந்தம் இந்த நான்கும் தர்மத்தின்  சொரூபம் என்று கூறுவார்கள் பெரியோர். ................... 13.  அர்த்தம், காமம் இவைகளில் விருப்பம் இல்லாதவனுக்கே தர்ம ஞானம் விதிக்கப் பட்டுள்ளது. தர்மத்தை அறிய விரும்புபவனுக்கு முக்கியமான பிரமாணம் வேதமே ஆகும். .............. 14.  எங்கே தர்ம சாஸ்திரங்களுக்குள் ஒன்றுக் கொன்று வேறுபாடு காணப்படுகின்றதோ, அங்கே இரண்டு விதமாக தர்மங்கள் கூறப்பட்டிருக்கும். வித்வான்கள் இவ்விரண்டு தர்மங்களையும் கடைப்பிட...

📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-7

 📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-7 அத்தியாயம் -2 ......................... 1.  வேதம் முழுவதையும் நன்கு அறிந்தவர்களாகவும், விருப்பு வெறுப்பு அற்றவர்களாகவும் சாதுக்களாகவும் உள்ள மஹான்கள்  எப்போதும் அனுஷ்டிக்கின்ற தர்மம் எதுவோ அதை எடுத்தியம்புகிறேன், கேளுங்கள். ......................... 2.  விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக காரியங்களைச் செய்தல் என்பது  போற்றுதலுக்குரிய விஷயமன்று.  எனினும்  இவ்வுலகில் பலனை எதிர் நோக்காமல் காரியம் செய்வது என்பது  அரிதான விஷயம்.  வேதங்களை நன்கு படித்தல், வேதங்களில் கூறப் பட்டுள்ள தர்மங்களில் ஆழ்ந்து ஈடுபாடு  கொண்டிருத்தல் என்பதும் பலனைக் கொடுக்கக் கூடியதேயாகும். . (வேதங்களின் முக்கியமாக இரண்டு பிரிவுகள் உள்ளன.1. பலன்களைத்தரக்கூடிய செயல்களைக்குறித்த யாகங்கள்,பிரார்த்தனைகள் போன்றவை. 2. பலன்களைத் துறந்து முக்தியடைவதுபற்றிய போதனைகள்.) ....................... 3.  இவை இவை எனக்குத்தேவை என்று கோருவதற்கு ” சங்கல்பம்” என்று பெயர். சங்கல்பத்துக்கு மூல காரணமாக இருப்பது ஆசை. ஆசையாலேயே சங்...

மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-6

 மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-6 ... 101.  பிராம்மணன் தன்னுடைய  செல்வத்தையே தான் அனுபவிக்கிறான். தன்னுடைய ஆடைகளையே தான் உடுத்துகின்றான். தன்னுடைய செல்வத்தையே பிறர்க்கு அளிக்கின்றான். (இந்த உலகமே பிராமணனுக்கு சொந்தமானது என்பதை இதற்கு முந்தைய ஸ்லோகத்தில் பார்த்தோம்.பிராமணன் என்பவன் யார் என்பதற்கான விளக்கத்தையும் பார்த்தோம்) ............... 102.  ஞானியான ஸ்வாயம்புவ மநு, பிராம்மணனுடையனவும், மற்றவர்களுடையனவுமான தர்மங்களை தெரிவிப்பதற்காக இந்த தர்ம சாஸ்திரத்தை வழங்கினார். ........ 103.  இந்த மனு தர்ம சாஸ்திரத்தை படிப்பதனால் அடையும் பலன்களை அறிந்து பிராம்மணன் இந்த  தர்ம சாஸ்திரத்தை நன்கு முயற்சியோடு படிக்க வேண்டும். சிஷ்யர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். ..... 104.  இந்த சாஸ்திரத்தை மிக்க நியமத்தோடு படிக்கும் பிராம்மணனுக்கு மனத்தாலும்  வாக்காலும் உடலாலும் ஏற்படும் எந்த பாபமும் அண்டாது. அதாவது இதைப் படித்து அறிந்த பிறகு பாபமே  செய்ய மாட்டான். ........................ 105.  இந்த சாஸ்திரத்தை படித்து ஓதுபவன் தன்னுடைய முன்ன...

மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-5

 மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-5 ... 81.  கிருத யுகத்தில் தர்மம் நான்கு பாதங்கள் கொண்டதாக இருக்கும்.  எங்கும் சத்யமே நிறைந்திருக்கும். ( தர்ம தேவதையை ஒரு பசுவாக உருவகப் படுத்தினால்,அதற்கு நான்கு பாதங்கள் இருக்குமல்லவா? இவ்வாறு இந்த ஸ்லோகத்தின்  பொருளைப் பார்க்க வேண்டும். ஒரு பசு நான்கு  கால்களுடன்  இருக்கும் போது அது நலமாக இருப்பதாகக் கொள்ளலாம். ஒவ்வொரு காலாக ஒடிந்தால் நடக்க முடியாமல் நிலை தடுமாறி வீழ்ந்து விடுமல்லவா?  நான்கு யுகங்களில் முதல் யுகம் கிருதயுகம். இந்த யுகத்தில் மனிதர்கள் அனைவரும் தத்தமக்குரிய தர்மங்களை பூரணமாகக் கடைப் பிடிப்பவர்களாக இருப்பார்கள். தர்ம தேவதை திருப்தியோடு  இருக்கும்.  அடுத்த யுகமான திரோத யுகத்தில் மனிதர்களுக்கு கொஞ்சம் தர்மத்திலுள்ள பற்று குறையும். அந்த யுகத்தில் பசு ரூபமான தர்ம தேவதை தன் ஒரு காலை இழந்து மூன்று  கால்களுடன்  சிரமப்படும்.  அதாவது தர்மம் உலகில்  முழுமையாக இல்லாது அங்கங்கே குறைந்து காணப்படும்.  அடுத்தது துவாபர யுகம். இந்த யுகத்தில் தர்மம் மேலும் குறை...

மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-4

மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-4 …. 61.  மஹாத்மாக்களும், தேஜஸ்மிக்கவர்களுமான, ஸ்வாயம்புவ மனுவின் வம்சத்தவர்களான ஆறுபேர். சிருஷ்டித் தொழிலில் ஈடுபட்டு தத்தம் பிரஜைகளை உருவாக்கினார்கள். ................. 62. ஸ்வரோசிஷன், உத்தமன், தாமசன், ரைவதன், சாட்சுசன், மஹா தேஜஸ் கொண்ட வைவஸ்வதன் இவர்களே அந்த ஆறு பேர்கள். ............... 63.  மிக்க சக்தி படைத்தவர்களான, ஸ்வாயம்புவ மனு முதலான இந்த ஏழு பேரும் தங்கள் தங்கள் அந்தரங்களில்( காலங்களில்) உயிர்களைப் படைத்து, காத்து ஆட்சி நடத்தினர். ............... 64.  இமை கொட்டும் நேரம் பதினெட்டு கொண்டது ஒரு காஷ்டை எனப்படும். முப்பது காஷ்டைகள் கொண்டது ஒரு கலை எனப்படும்.  முப்பது கலைகள் கொண்டது ஒரு முகூர்த்தம்.  முப்பது முகூர்த்தங்கள் கொண்டது ஒரு இரவும் பகலும் ஆகும். ................ 65.  சூரியன் இரவு பகல்களை தேவர்களுக்கென்றும் மானிடர்களுக்கென்றும் ஏற்படுத்தினார். இரவு என்பது உறக்கத்துக்காகவும், பகல் காரியமாற்றுவதற்காகவும் ஏற்படுத்தப் பட்டன. ................... 66.  மானிடர்களுடைய ஒரு மாதம் என்பது பித்ருக...

மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-3

 மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-3 …. 41.  மஹரிஷிகள் தவம் புரிந்து என் ஆணைப்படி இங்கே தென்படுகின்ற தாவரங்கள், மிருகங்கள், மனிதர்கள் ரூபமான உலக முழுதையும், அதனதன் வினைப்படி படைத்தனர். ................ 42.  இனி எந்தெந்த பூதங்களுக்கு அதாவது எந்தெந்த  உயிரினங்களுக்கு எந்தெந்த கர்மாக்கள் சொல்லப் படுகின்றனவோ அந்தந்த பூதங்களுடைய கர்மாக்களையும் ஜன்மாவினுடைய கிரம யோகத்தையும் உங்களுக்கு  உரைக்கிறேன். .......................... 43.  பசுக்கள், மான்கள், கொடிய மிருகங்கள், ராட்சதர்கள், பிசாசர்கள், மனிதர்கள்,  முதலானோர் கர்ப்பத்தினின்று பிறந்தவர்கள். .................... 44.  பறவைகள், சர்ப்பங்கள். மீன்கள், ஆமைகள் போன்றவை முட்டையினின்று  தோன்றுவன். இவற்றில்  சில  நீரில் வாழ்வன. சில நிலத்தில் வாழ்வன. ................ 45.  காட்டு ஈக்கள், கொசுக்கள், பேன்கள், ஈக்கள், மூட்டைப் பூச்சிகள், மேலும் இவற்றைப்போன்று எவையெல்லாம் வெப்பத்தினால் ( புழுக்கத் திலிருந்து) பிறக்கின்றனவோ , அவை யனைத்தும் ஸ்வேதஜங்கள் எனப்படும். .................

மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்(முழுவதும்)-பாகம்-2

 மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்(முழுவதும்)-பாகம்-2 …. 21.  பிரம்மா தன்னால் படைக்கப் பட்ட அனைத்துக்கும் வேதத்திலுள்ளபடி பெயர்களைச் சூட்டினார். அவைகளுக்கான வெவ்வேறு விதமான காரியங்களையும் வேதங்கள் கூறியபடியே ஏற்படுத்தினார். ................ 22.   பிரம்மா, கர்மாத்மாக்களான தேவர்களையும், பிராணிகளையும், சாத்யர்களையும், யக்ஞங்களையும் படைத்தார். ................. 23.  யக்ஞங்கள் வேதங்களைக் கொண்டே நிறைவேற்றக் கூடியவை  என்பதால், யக்ஞங்களுக்காக வேண்டி, ருக், யஜுர், சாமம் என்னும் வேதங்களை , அக்நி, வாயு, சூரியர்களிடமிருந்து கிரகித்தார். ........... 24.  பிரம்மா, காலத்தையும், மாதங்கள், ருதுக்கள், வருடங்கள் முதலான கால அளவுகளையும், நட்சத்திரங்களையும், கிரகங்களையும் , நதிகளையும், கடல்களையும், மலைகளையும், படைத்தார். ............... 25.  அவ்வாறே சமவெளியையும், மேடு பள்ளங்களையும், தவம், வாக்கு, சிரத்தை, காமம், கோபம் முதலானவற்றையும் படைத்தார். ..................... 26.  செய்யத்தக்கது இது. தகாதது இது என்னும் அறிவைப் பெறுவதற்காக தர்மங்களையும் அதர்மங்களையும் வே...

மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்(முழுவதும்)-பாகம்-1

மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்(முழுவதும்)-பாகம்-1 ….  அத்தியாயம் -1 ..............  1.ஏகாக்ர  சித்தத்தோடு  அமர்ந்திருந்த மனுவை அணுகிய மஹரிஷிகள் அவரை முறைப்படி வணங்கி இவ்வாறாகச் சொன்னார்கள். …..  மகரிஷிகள் சிலருக்கு, தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்ற உத்வேகம் ஏற்பட்டது. தர்மம், அர்த்தம், காமம், மோட்சங்களைப் பற்றிய ஞானம் முழுமையாக கைவரப் பெற்றவரான மனுபகவானை அணுகினால், தங்கள் சந்தேகங்கள் தீரும் என்ற தீர்மானத்தோடு அவர்கள் மனுவின்  இருப்பிடம் வந்தார்கள். அங்கேயே சில நாட்கள் தங்கியிருந்தார்கள்.  ஒரு சமயம் மனு நிச்சலனமாக, சாந்தமாக  ஓரிடத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்தார்கள். இதுவே தக்க தருணம் என்று அவரை அணுகினார்கள்.  கோபதாபங்கள் முதலான உணர்ச்சிகளில் ஆழாமலும், பரபரப்பான காரியங்களில், ஈடுபட்டிராமலும், ஏதோ ஒரு காரியத்தில் முனைப்பாக ஈடுபட்டிராமலும், இருக்கும் போது தான் ஒருவர்  தெளிவாக ஞானத்தோடு, சிந்தையோடு இருப்பார். மஹான்களுக்கு கோப தாபங்கள் முதலானவை இரா. ஆனால் தீர்க்கமான சிந்தனையில் தீவிரமாக ஆழ்ந்திருக்க...