📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-11
📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-11 அத்தியாயம் -2 ........... 41. பிராம்மண பிரம்மசாரி மான் தோலால் ஆன மேலாடையையும், க்ஷத்ரிய பிரம்மசாரி குரு மிருகத்தின்ஆன தோலால் ஆன மேலாடையையும், வைசிய பிரம்மசாரி ஆட்டுத்தோலால் ஆன மேலாடையையும் அணிய வேண்டும். பிராம்மணன் நார்மடித் துணியை அரையாடையாக அணிய வேண்டும். க்ஷத்ரியன் பட்டுத் துணியை அரையாடையாக அணிய வேண்டும். வைசியன் சணல் ஆடையை அரையாடையாக அணிய வேண்டும். (மிகப்பழைய காலத்திலேயே பட்டுத்துணி வழக்கத்தில் இருந்துள்ளது.குளிரிலிருந்து தங்களை காத்துக்கொள்வதற்காகவே மிருகத்தின் தோலாடையை பயன்படுத்துகிறார்கள்) ................. 42. பிராம்மண பிரம்மசாரி, முஞ்சி புல்லால் திரிக்கப் பட்டு, வழுவழுவென்று சமானமான மூன்று இழைகள் கொண்ட அரைஞாணை அணிய வேண்டும். அவ்வாறே க்ஷத்ரிய பிரம்மசாரி மூர்வா புல்லினால் திரிக்கப் பட்ட மூன்று இழைகளோடு கூடிய அரை ஞானை அணிய வேண்டும். வைசிய பிரம்மசாரி சணலால் திரிக்கப் பட்ட மூன்று இழைகளோடு கூடிய அரை ஞானை அணிய வேண்டும். (இந்த அரைஞாணில்தான் கோவணம் கட்டிக்கொள்வார்கள்) .......