Friday 21 September 2018

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-10


அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-10
-
மகனே கவலைப்படாதே.உலகின் உறவுகள் நிலையற்றவை.இன்று அவையே எல்லாம்போல் தோன்றும்.நாளை மறைந்துவிடும். உனது உண்மையான உறவு இறைவனுடன்,குருதேவருடன்.
-
இறைவனின் திருநாமம் புலன்களின் வலிமையைவிட ஆற்றல்மிக்கத.முறையாக ஜபதியானம் செய்துவந்தால் எல்லாம் சரியாகிவிடும்.உன்னை வழிநடத்துபவர் குருதேவர்.அவரை எப்போதும் நினை.தவறுகளை எண்ணி கவலைப்பட்டுக்கொண்டிருக்கதே
-
உனது பயிற்சி.பேச்சு,செயல் அனைத்திலும் நேர்மையாக இரு.நீ எவ்வளவு பேறுபெற்றவன் என்பதை அப்போது உணர்வாய்
-
நேர்மை,உண்மை,அன்பு ஆகியவற்றையே கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.வெறும் வாய்ஜாலங்கள் அவரைத் தொடுவதில்லை
-
உண்மையான ஆர்வத்துடன் முயற்சி செய்தால்,மற்ற எல்லா எண்ணங்களையும் விலக்கி,உன் இதய ஆழங்களிலிருந்து அவரிடம் பிரார்த்தனை செய்தால் அவர் கேட்பார்.அவரது அருளால் அந்த பிரார்த்தனைகள் நிறைவேறும்
-
ஆபத்து காலத்தில்  உயிர்போய்விடுமோ என்ற நிலை வரும்போது உங்களிடம் எப்படிப்பட்ட மனநிலை தோன்றவேண்டும் தெரியுமா?பரிபூரணமாக பொறுப்பை இறைவனிடம் ஒபப்டைத்துவிட்டு,சிறு குழந்தையைப்போல் அவரிடம் முற்றிலும் சரணடைந்து வாழவேண்டும்.ஆபத்தைப்பற்றி அறியாத குழந்தை தாயின் மடியில் கவலையற்று இருப்பதுபோல இருக்க வேண்டும்
-
பக்தர்களின் இதயங்களில் தாம் நூறு வருட காலம் நுண்ணுடலில் வாழப்போவதாக அவர் கூறினார்.தமக்கு வெளிநாட்டு பக்தர்கள் பலர் வருவார்கள் என்றும் அவர் சொன்னார்
-
ஈசுவரகோடிகள் எல்லா ஆசைகளும் நிறைவேறப்பெற்றவர்கள்.எனவே அவர்களால் இறைவனிடம் பக்திக்காக பக்தி செலுத்த முடியும்.ஆசை இருந்தால் பக்திக்காக பக்தி என்பது சாத்தியம் இல்லை
-
மகனே, ஒரு லட்சிய வாழ்க்கைக்கு எவ்வளவு செய்ய வேண்டுமோ அதைவிட அதிகமாகவே நான் உழைத்துவிட்டேன்.
-
மகனே, நீங்களெல்லாம் தெய்வங்களே. கடவுளுக்காக எல்லாவற்றையும் துறக்க யாரால் முடியும்? கடவுளிடம் சரணடைந்துவிட்டால் விதியின் தலைவிதியே மாறிவிடுகிறது.தான் எழுதியதை விதி தன் கையாலேயே அழிக்க நேர்கிறது.
-
இறையனுபூதி பெற்றவனுக்கு என்ன இரண்டு கொம்புகளா முளைக்கின்றன? இல்லை. அவனுக்கு உண்மை- உண்மையற்றது பற்றிய விவேகம் வருகிறது,விழிப்பணர்வு ஏற்படுகிறது.அவன் பிறப்பு-இறப்பை கடந்து செல்கிறான்
-
நரேன் ஒருமுறை என்னிடம்,அம்மா,குருவின் தாமரைத் திருவடிகள் உண்மையல்ல, என்று காட்டும் ஞானம் ஞானமல்ல,அது அஞ்ஞானம்.குரு இல்லாவிட்டால் ஞானம் எதை ஆதாரமாகக் கொள்ளும்? என்று சொன்னான்.பக்தி இல்லாத வறட்டு தத்துவங்களை விட்டுவிடு.
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் கருத்துக்களை தினமும் பெற வாட்சப் குழு 9003767303
-
-

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-9


அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-9
-
வினைப்பயனை அனுபவித்தேயாக வேண்டும்.ஆனால் கால் துண்டாகப் போகவேண்டும் என்று ஒருவனுக்கு விதி இருப்பதாக வைத்துக்கொள்வோம்,பகவானின் நாமத்தை ஜெபிப்பதால் காலில் ஒரு முள் தைப்பதோடு அவன் தப்பித்துவிட நேரலாம்
-
நீ செய்வதை செய்துகொண்டிரு.வேறென்ன செய்ய முடியும்?ஆனால் குருதேவர் உன்னுடன் இருக்கிறார்,நானும் இருக்கிறேன் என்பதை நினைவில் வைத்துக்கொள்
-
மகளே! உன்னிடம் நான் என்ன சொல்வேன்? எனக்கோ எதுவும் தெரியாது. நீ குருதேவரின் படம் ஒன்றை அருகில் வைத்துக்கொள்.அவர் உண்மை.அவர் உன் அருகில் இருக்கிறார் என்பதை நினைவில்கொள்.கண்ணீருடன் உன் கவலைகளை அவரிடம்கூறு.
-
மன ஏக்கத்துடன் குருமஹராஜ்! எனக்கு உனது நிழலில் தஞ்சம்தாரும்.என் மனத்திற்கு அமைதியை தாரும் என்று அவரிடம் பிரார்த்தனை செய்.இவ்வாறு தொடர்ந்து பிரார்த்தனை செய்யும்போது உன் மனத்தில் தானாக அமைதி ஏற்படும்
-
பயம் எதற்கு அப்பா? உங்கள் அனைவரின் பின்னாலும் குருதேவர் இருக்கிறார்.இதனை என்றென்றைக்குமாக மனத்தில் பதித்துக்கொள்.நானும் இருக்கிறேன்.
-
மனிதனின் அறிவு எவ்வளவு அற்பமானது.எதுவோ வேண்டும்,ஆனால் எதையோ கேட்பான்.கடைசியில் பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் முடியும்.கடவுளைச் சரணடைந்து வாழ்வது நல்லது.எப்போது எது வேண்டுமோ அப்போது அதை அவர் தருவார்.ஆனால் பக்தியை கேட்க வேண்டும்.ஆசையின்மையை கேட்க வேண்டும்
-
இல்லறத்தார்களுக்கு புறத்துறவு வேண்டாம்.அவர்களுக்கு வேண்டியது அகத்துறவு,அதுவும் இயல்பாக ஏற்பட வேண்டும்.ஆனால் சிலருக்கு புறத்துறவு தேவை.ஏன் பயப்படுகிறீர்கள்? குருதேவரை சரணடைந்து வாழுங்கள்.
-
சத் சங்கத்தை நாடு,நல்லவனாக முயற்சி செய். படிப்படியாக எல்லாம் சரியாகும். குருதேவரிடம் பிரார்த்தனை செய்.நானும் இருக்கிறேன்.இந்தப் பிறவியிலேயே உனக்கு முக்தி கிடைக்கும்.பயம் எதற்கு?
-
மக்களின் துன்பங்களை எல்லாம் கண்டு நான் படும் வேதனை சொல்லித் தீராது.ஆனால் நான் என்ன செய்வேன்,என் மகளே! யாரும் முக்தியை விரும்புவதில்லை
-
கடவுள் பக்தர்களிடம் இருக்கிறார்.உண்மையான பக்தர்கள் நடந்த இடத்திற்குப் போனால் போதும்,சாதாரண மக்களின் மனத்தில் உள்ள மாசுகளெலல்ாம் அகன்றுவிடும்
-
நீ குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கிறாய்.முறைப்படியான பூஜையை உன்னால் செய்ய முடியவில்லையா? கவலைப்படாதே.குருதேரிடம் மன ஏக்கத்துடன் பிரார்த்தனை செய்.உனக்கு வேண்டிதை அவரே செய்வார்
-
மனிதன்தான் தெய்வமாகிறான்.வேலை செய்தால் எல்லாம் நடக்கும்.குருதேவர் கூறியதைப்போல விலக்க வேண்டிதை விலக்கி ஏற்கவேண்டியதை ஏற்று.இஷ்ட தெய்வத்திடம் ஒருமுகமான ஈடுபாட்டுடன் மனத்தை நிலைநிறுத்தி பிரார்த்தனை செய்தால் எல்லாம் நடக்கும்
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் கருத்துக்களை தினமும் பெற வாட்சப் குழு 9003767303
-

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-8

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-8
-
எப்போதும் குருதேவரின் அமுதமொழிகளை நினைவில் வை.மனம் தானாக அமைதியடைவதைக் காண்பாய்
-
என்னைத்தவிர வேறோர் அம்மா இருக்கிறாளா என்ன? எல்லாப் பெண்களிலும் நானே இருக்கிறேன்.எல்லா அன்னையரிலும் நானே இருக்கிறேன்.யார் எங்கிருந்து வந்தாலும் சரி,அனைவரும் என் பிள்ளைகளே.இது அறுதி சத்தியம்.இதனைப் புரிந்துகொள்.
-
மகளே,எல்லாவற்றையும் புரிந்துகொள்வதற்கான காலம் இன்னும் வரவில்லை.அதனால்தானே என் பிள்ளைகள் அறிவற்றவர்கள்போல் பேசுகிறார்கள்.உரிய வேளை வந்தால் எல்லாம் புரியும்
-
இதோ பாரம்மா! எல்லாவற்றையும் அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ள முடியுமா என்ன? குடும்ப வாழ்க்கையில்தான் எத்தனை கஷ்டங்கள்.இந்த கஷ்டங்களைக் கண்டுதானே பகவான் மீண்டும்மீண்டும் இறங்கி வருகிறார்.
-
குழந்தைகளிடம் பகவானின் இருக்கை உள்ளது.அவர்களிடம் அவரது வெளிப்பாடு அதிகம்.ஏனெனில் குழந்தைகள் கள்ளம்கபடம் இல்லாதவர்கள்,தூயவர்கள்.அதனால்தானே குருதேவர் குழந்தையின் உள்ளத்துடன் அழைத்தால் தேவி ஓடி வருவாள் என்று கூறினார்
-
அனைத்தையும் மறந்து “அம்மா அம்மா” என்று அழைத்தால் அவள் ஓடி வருவாள் என்பதைத் தமது வாழ்க்கையில் வாழ்ந்துகாட்டி உலகிற்கு நிரூபித்தார் குருதேவர்
-
கவலை எதற்கு அம்மா? குடும்பச் சுமைகளையும் குருதேவர்தானே தந்துள்ளார்! குடும்பத்திலுள்ள வேலைகளைச் செய்வது உங்கள் கடமை.கடமைகள் முடிந்தால்தானே இறைவனிடம் வர முடியும்
-
ஆசைப்படுவதால் மட்டும் எல்லாம் நடந்துவிடாது.ஆசைகளை நிறைவேற்றுவது மனிதனின் கையில் இல்லை.இறைவனின் திருவுள்ளத்தால்தான் எல்லாம் நடக்கிறது
-
குடும்ப வாழ்க்கையில் இருந்தால் குருதேவரின் அன்பு,பாசம்,அருள் கிடைக்காதா? இப்படி ஓர் எண்ணம் உன் மனத்தில் எவ்வாறு எழுந்தது?குருதேவர் இல்லறத்தார்களுக்காகவே அதிகம் கவலைப்பட்டார்
-
இல்லறத்தார்களின் துயரம் அளவற்றது.எத்தனை மோகம்,எத்தனை பொறுப்பு,எத்தனை கடமைகளுக்கு இடையில் வாழவேண்டியிருக்கிறது.ஒரு கையால் பகவானைப் பிடித்துக்கொள், மறு கையால் குடும்பக் கடமைகளைச் செய் என்று குருதேவர் கூறுவதை அமுதமொழியில் படிக்கவில்லையா?
-
அவர் அந்தர்யாமி,அனைவரின் இதயத்திலும் அவர் எப்போதும் இருக்கிறார்.நீ உள்ளத்தில் பிரார்த்தனை செய்வாயானால் அவர் அதைப் புரிந்துகொள்ளவே செய்வார்.அது மட்டுமல்ல,குடும்பமும் அவருடையதே அல்லவா?அவரது திருவுள்ளம் இல்லாமல் ஏதாவது நடக்குமா?
-
யார் அவரை நேசிக்கிறார்களோ அவர்களை அவர் காக்கிறார்.நீ அவரை நேசித்தாலும் நேசிக்காவிட்டாலும் அவர் உன்னை நேசிக்கிறார்.நீ அவரை கொஞ்சம் நினைத்தாலும்போதும்,கொஞ்சம் தியானித்தாலும் போதும்.ஆனால் செய்வதை உயிரும் உள்ளமும் இணைந்து செய்யங்கள்
-
நாள் முடியும் வேளையில் இரண்டு சொட்டு கண்ணீருடன் நாமஜெபம் செய்யுங்கள்.இந்த இரண்டு சொட்டு கண்ணீர் அல்லாமல் உங்களிடம் வேறு என்னதான் உள்ளது.சொல் பார்க்கலாம்.வேறு உள்ள அனைத்தும் இறைவனுடையது
-
பயம் எதற்கு அம்மா? குருதேவர் இந்த முறை வந்தது உங்களுக்காகத்தான்.நீங்கள் பகவானைப் பெறுவதற்கு இந்த சுலபமான பாதையைக் காட்டி சென்றுள்ளார் அவர்
-
பகவானை நேசிப்பதற்கு குழந்தைகளுக்கும் கற்றுக்கொடு.பகவான் என்னுடையவர் என்ற எண்ணத்துடன் அவரை நேசிப்பதற்கு குழந்தைகள் கற்றுக்கொள்ளட்டும்
-
முற்பிறவி வினைகளின் பயனையும் கொண்டுதானே பூமியில் ஒவ்வொருவனும் பிறக்கிறான்.அதனால்தான் சிலர் சிறுவயதிலிலருந்தே இறைவனை நேசிப்பதைக் காண்கிறோம்.சிலர் வளர்ந்த பிறகு வழி தவறிப்போகலாம்.எல்லாம் சொந்த வினைப்பயன்.
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் கருத்துக்களை தினமும் பெற வாட்சப் குழு 9003767303

Saturday 1 September 2018

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-7


அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-7
-
கவலை எதற்கு அம்மா? குடும்பச் சுமையையும் குருதேவர்தானே தந்துள்ளார்! குடும்பத்திலுள்ள வேலைகளைச்செய்வது உங்கள் கடமை. கடமைகள் முடிந்தால்தானே இறைவனிடம் வரமுடியும்.
-
ஆசைப்படுவதால் மட்டும் எல்லாம் நடந்துவிடாது அம்மா! ஆசைகள் நிறைவேறுவது மனிதனின் கையில் இல்லை. இறைவனின் திருவுள்ளத்தால்தான் எல்லாம் நடக்கிறது.
-
குடும்ப வாழ்க்கையில் இருந்தால் குருதேவரின் அன்பு,பாசம்.அருள் கிடைக்காதா? இப்படி ஓர் எண்ணம் உன் மனத்தில் எவ்வாறு எழுந்தது? துறவியரைவிட அவர் இல்லறத்தார்களுக்காவே அதிகம் கவலைப்பட்டார்.இல்லறத்தார்களின் துயரம் அளவற்றது. அதனால்தான் குருதேவர் காளியிடம் “அம்மா அவர்களின் மனத்தில் பக்தியை நிரப்பு.அவர்கள் அமைதிபெறட்டும்” என்று பிரார்த்தனை செய்வார்
-
ஒரு கையால் பகவானைப் பிடித்துக்கொள் மறு கையால் கடமைகளைச் செய் என்று குருதேவர் கூறுவதை நீ அமுதமொழிகளில் படித்ததில்லையா?
-
துறவிகள் பகவானுக்காக அனைத்தையும் துறந்து சம்சாரத்திலிருந்து வெளியே வந்துவிட்டார்கள்.அவர்களுக்கு குடும்பத்தில் பற்று இல்லை.இல்லறத்தார்களின் விசயம் அப்படியா? எத்தனை மாயை,எத்தனை மோகம்,எத்தனை பொறுப்பு,எத்தனை கடமைகளுக்கு இடையில் அவர்கள் வாழவேண்டியிருக்கிறது
-
இறைவன் அந்தர்யாமி.அனைவரின் இதயத்திலும் அவர் எப்போதும் இருக்கிறார். நீ உள்ளத்தில் பிரார்த்தனை செய்வாயானால் அவர் அதைப் புரிந்துகொள்ளவே செய்வார்.
-
குடும்பத்தில் வேலை என்று சொன்னாய்.அந்த வேலைகளை நீயா செய்கிறாய்? அவர் அல்லவா செய்விக்கிறார்.குடும்பமும் அவருடையதே அல்லவா?
-
இறைவனைக் காணவேண்டும் என்ற ஏக்கம் உன் உள்ளத்தில் எழுந்துள்ளதே அது அவரது திருவுள்ளத்தால்தான் நிகழ்ந்தது.யார் அவரை நேசிக்கிறார்களோ அவர்களை அவர் காக்கிறார்.
-
நீங்கள் அவரை கொஞ்சம் நினைத்தாலும் போதும், கொஞ்சம் தியானித்தாலும் போதும்.ஆனால் செய்வதை உள்ளமும் உயிரும் இணைந்து செய்யுங்கள்.மன ஏக்கத்துடன் அவரை அழையுங்கள்.
-
அவரை நினையுங்கள்.அவரை தியானியுங்கள்.நாள் முடியும் வேளையில் இரண்டு சொட்டு கண்ணீருடன் நாமஜபம் செய்யுங்கள்.இந்த இரண்டுசொட்டு கண்ணீரைத்தவிர உங்களிடம் வேறு என்ன உஎள்ளது?
-
பயம் எதற்கு அம்மா? குருதேவர் இந்த முறை வந்தது உங்களுக்காகத்தான். நீங்கள் பகவானைப் பெறுவதற்கு இந்தச் சுலபமான பாதையைக் காட்டிச் சென்றுள்ளார் அவர்
-
நடப்பதெல்லாம் குருதேவரின் திருவுள்ளத்தால்தான் நடக்கிறது என்பதை ஏனம்மா மறந்துபோகிறாய்? இதோ என்னிடம் வருகிறாய்.இதுவும் அவரது திருவுள்ளம்தானே
-
பகவானை நேசிப்பதற்கு குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுங்கள்.பகவான் என்னுடையவர் என்ற எண்ணத்துடன் அவர்கள் அவரை நேசிக்க கற்றுக்கொள்ளட்டும்.
-
முற்பிறவி வினைகளின் பயனையும்கொண்டுதானே பூமியில் ஒவ்வொருவனும் பிறக்கிறான்.அதனால்தான் சிலர் சிறுவயதிலிருந்தே இறைவனை நேசிப்பதைக் காண்கிறோம்.
-
அவரது அருள் இருக்குமானால்.தாம் எழுதியதை அவரே அழித்துவிடுவார்.அவர் எழுதியது,அவரே அழிப்பார்.அதனால்தானே அவர் கபால மோசனர் என்று அழைக்கப்படுகிறார்.எல்லாம் அவருடைய கையில். எனவே அவரிடம் உன்னை சமர்ப்பித்துவிடு
-
’குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணரின் வாட்ஸ் அப் குழு- 9003767303

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-6


அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-6
-
ஏன் திருமணம் செய்துகொள்ளக்கூடாது? திருமணம் செய்துகொண்டால் ஆன்மீக வாழ்க்கை வாழ முடியாதா என்ன! எல்லாம் மனத்தைப் பொறுத்ததே அல்லவா? குருதேவர் என்னைத் திருமணம் செய்துகொண்டு வாழவில்லையா?
-
திருமணம் செய்துகொள்ளாமல் மடத்தில் வாழ நினைக்கிறான். ஒருவேளை சிரமப்படாமல் வாழலாம் என நினைக்கிறானோ என்னவோ! சிரமங்களையும் கஷ்டங்களையும் அனுபவித்தும் இறைவனை விடாமல் பற்றியிருப்பவர்கள் கட்டாயமாக அவரைப் பெறுவார்கள்
-
பாரம்மா! மிகவும் உயர்ந்த ஆன்மீக நிலையில் உள்ளவர்கள் மட்டுமே துறவிகளாகி எல்லா தளைகளிலிருந்தும் விடுபட முடியும். சிலர் உலக இன்பங்களை அனுபவிப்பதற்கென்றே பிறக்கிறார்கள்.இன்பங்களையெல்லாம் அனுபவித்துத் தீர்த்துவிடுவதுதான் நல்லதென்று நான் சொல்கிறேன்
-
திருமணம் செய்துகொள்.எல்லாவற்றையும் அனுபவித்து தீர்த்துக்கொள்.இல்லாவிட்டால் எங்கிருந்து என்ன ஆசை வந்து முளைக்கும் என்று சொல்ல முடியாது.ஆனால் ஒன்றை புரிந்துகொள் குருதேவர் எப்போது ஒருவனை (துறவியை) பிடித்துக்கொள்கிறாரோ அப்போது அவனுக்கு வீழ்ச்சி என்பதே கிடையாது.
-
எம்பெருமானே! இவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.இவர்கள் உங்களை உயிரினும் மேலாக நேசிக்கிறார்கள்.எவ்வளவோ சிரமப்பட்டு உங்களை நாடி வந்திருக்கிறார்கள். என்று அன்னை பிரார்த்தித்தார்
-
யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நீ எதை சரியென்று நினைக்கிறாயோ அதை கடவுளை நினைத்தபடி செய்.மக்களை வெறும் புழுக்களாக நினை என்பார் குருதேவர்.அதாவது அவர்களின் அலட்சிய வார்த்தைகளை பொருட்படுத்தாதே
-
எப்போதும் குருதேவரின் அமுதமொழிகளை நினைவில் கொள்.மனம் தானாக அமைதியடைவதைக் காண்பாய்
-
என்னைத்தவிர வேறோர் அம்மா இருக்கிறாளா என்ன? எல்லாப் பெண்களிலும் நனே இருக்கிறேன்.எல்லா அன்னையரிலும் இருப்பது நானே.யார் எங்கிருந்தாலும் சரி.அனைவரும் என் பிள்ளைகளே.இது அறுதி சத்தியம்.
-
அம்மா என்று அழைத்துக்கொண்டு என்னிடம் வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் என் பிள்ளைகளே
-
மகளே, எல்லாவற்றையும் புரிந்துகொள்வதற்கான காலம் இன்னும் உனக்கு வரவில்லை.அதனால்தான் என் பிள்ளைகள் அறிவற்றவர்கள்போல் பேசுகிறார்கள்.உரிய காலத்தில் எல்லாவற்றையும் புரிந்துகொள்வாய்
-
குடும்ப வாழ்வில்தான் எவ்வளவு கஷ்டம்.இந்த கஷ்டங்களைக் கண்டுதானே பகவான் மீண்டும்மீண்டும் இறங்கி வருகிறார்.ஆனால் அவதாரபுருஷர் வாழும்போது சிலரால்தான் அவரை அறிந்துகொள்ள முடியும். அவர் போன பிறகே படிப்படியாக புரிந்துகொள்கிறார்கள்.
-
குழந்தைகள் கள்ளம்கபடம் இல்லாதவர்கள்.அதனால்தான் குழந்தை உள்ளத்துடன் அழைத்தால் தேவி ஓடி வருவாள் என்று குருதேவர் கூறினார்
-
ஆனா குருதேவர் ஒரு குழந்தை உள்ளத்துடன் இருந்தார்.“அம்மா அம்மா” என்று தேவியை அழைத்தாள் ஓடி வருவாள் என்பதை தமது வாழ்க்கையில் வாழ்ந்துகாட்டி உலகிற்கு நிரூபித்தார்.
-
’குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணரின் வாட்ஸ் அப் குழு- 9003767303