Posts

Showing posts from September, 2018

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-10

Image
அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-10 - மகனே கவலைப்படாதே.உலகின் உறவுகள் நிலையற்றவை.இன்று அவையே எல்லாம்போல் தோன்றும்.நாளை மறைந்துவிடும். உனது உண்மையான உறவு இறைவனுடன்,குருதேவருடன். - இறைவனின் திருநாமம் புலன்களின் வலிமையைவிட ஆற்றல்மிக்கத.முறையாக ஜபதியானம் செய்துவந்தால் எல்லாம் சரியாகிவிடும்.உன்னை வழிநடத்துபவர் குருதேவர்.அவரை எப்போதும் நினை.தவறுகளை எண்ணி கவலைப்பட்டுக்கொண்டிருக்கதே - உனது பயிற்சி.பேச்சு,செயல் அனைத்திலும் நேர்மையாக இரு.நீ எவ்வளவு பேறுபெற்றவன் என்பதை அப்போது உணர்வாய் - நேர்மை,உண்மை,அன்பு ஆகியவற்றையே கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.வெறும் வாய்ஜாலங்கள் அவரைத் தொடுவதில்லை - உண்மையான ஆர்வத்துடன் முயற்சி செய்தால்,மற்ற எல்லா எண்ணங்களையும் விலக்கி,உன் இதய ஆழங்களிலிருந்து அவரிடம் பிரார்த்தனை செய்தால் அவர் கேட்பார்.அவரது அருளால் அந்த பிரார்த்தனைகள் நிறைவேறும் - ஆபத்து காலத்தில்  உயிர்போய்விடுமோ என்ற நிலை வரும்போது உங்களிடம் எப்படிப்பட்ட மனநிலை தோன்றவேண்டும் தெரியுமா?பரிபூரணமாக பொறுப்பை இறைவனிடம் ஒபப்டைத்துவிட்டு,சிறு குழந்தையைப்போல் அவரிடம் முற்றிலும் சரணடைந்...

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-9

Image
அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-9 - வினைப்பயனை அனுபவித்தேயாக வேண்டும்.ஆனால் கால் துண்டாகப் போகவேண்டும் என்று ஒருவனுக்கு விதி இருப்பதாக வைத்துக்கொள்வோம்,பகவானின் நாமத்தை ஜெபிப்பதால் காலில் ஒரு முள் தைப்பதோடு அவன் தப்பித்துவிட நேரலாம் - நீ செய்வதை செய்துகொண்டிரு.வேறென்ன செய்ய முடியும்?ஆனால் குருதேவர் உன்னுடன் இருக்கிறார்,நானும் இருக்கிறேன் என்பதை நினைவில் வைத்துக்கொள் - மகளே! உன்னிடம் நான் என்ன சொல்வேன்? எனக்கோ எதுவும் தெரியாது. நீ குருதேவரின் படம் ஒன்றை அருகில் வைத்துக்கொள்.அவர் உண்மை.அவர் உன் அருகில் இருக்கிறார் என்பதை நினைவில்கொள்.கண்ணீருடன் உன் கவலைகளை அவரிடம்கூறு. - மன ஏக்கத்துடன் குருமஹராஜ்! எனக்கு உனது நிழலில் தஞ்சம்தாரும்.என் மனத்திற்கு அமைதியை தாரும் என்று அவரிடம் பிரார்த்தனை செய்.இவ்வாறு தொடர்ந்து பிரார்த்தனை செய்யும்போது உன் மனத்தில் தானாக அமைதி ஏற்படும் - பயம் எதற்கு அப்பா? உங்கள் அனைவரின் பின்னாலும் குருதேவர் இருக்கிறார்.இதனை என்றென்றைக்குமாக மனத்தில் பதித்துக்கொள்.நானும் இருக்கிறேன். - மனிதனின் அறிவு எவ்வளவு அற்பமானது.எதுவோ வேண்டும்,ஆனால் எதையோ கேட்பா...

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-8

Image
அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-8 - எப்போதும் குருதேவரின் அமுதமொழிகளை நினைவில் வை.மனம் தானாக அமைதியடைவதைக் காண்பாய் - என்னைத்தவிர வேறோர் அம்மா இருக்கிறாளா என்ன? எல்லாப் பெண்களிலும் நானே இருக்கிறேன்.எல்லா அன்னையரிலும் நானே இருக்கிறேன்.யார் எங்கிருந்து வந்தாலும் சரி,அனைவரும் என் பிள்ளைகளே.இது அறுதி சத்தியம்.இதனைப் புரிந்துகொள். - மகளே,எல்லாவற்றையும் புரிந்துகொள்வதற்கான காலம் இன்னும் வரவில்லை.அதனால்தானே என் பிள்ளைகள் அறிவற்றவர்கள்போல் பேசுகிறார்கள்.உரிய வேளை வந்தால் எல்லாம் புரியும் - இதோ பாரம்மா! எல்லாவற்றையும் அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ள முடியுமா என்ன? குடும்ப வாழ்க்கையில்தான் எத்தனை கஷ்டங்கள்.இந்த கஷ்டங்களைக் கண்டுதானே பகவான் மீண்டும்மீண்டும் இறங்கி வருகிறார். - குழந்தைகளிடம் பகவானின் இருக்கை உள்ளது.அவர்களிடம் அவரது வெளிப்பாடு அதிகம்.ஏனெனில் குழந்தைகள் கள்ளம்கபடம் இல்லாதவர்கள்,தூயவர்கள்.அதனால்தானே குருதேவர் குழந்தையின் உள்ளத்துடன் அழைத்தால் தேவி ஓடி வருவாள் என்று கூறினார் - அனைத்தையும் மறந்து “அம்மா அம்மா” என்று அழைத்தால் அவள் ஓடி வருவாள் என்பதைத் தமது வாழ்க்கையில...

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-7

Image
அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-7 - கவலை எதற்கு அம்மா? குடும்பச் சுமையையும் குருதேவர்தானே தந்துள்ளார்! குடும்பத்திலுள்ள வேலைகளைச்செய்வது உங்கள் கடமை. கடமைகள் முடிந்தால்தானே இறைவனிடம் வரமுடியும். - ஆசைப்படுவதால் மட்டும் எல்லாம் நடந்துவிடாது அம்மா! ஆசைகள் நிறைவேறுவது மனிதனின் கையில் இல்லை. இறைவனின் திருவுள்ளத்தால்தான் எல்லாம் நடக்கிறது. - குடும்ப வாழ்க்கையில் இருந்தால் குருதேவரின் அன்பு,பாசம்.அருள் கிடைக்காதா? இப்படி ஓர் எண்ணம் உன் மனத்தில் எவ்வாறு எழுந்தது? துறவியரைவிட அவர் இல்லறத்தார்களுக்காவே அதிகம் கவலைப்பட்டார்.இல்லறத்தார்களின் துயரம் அளவற்றது. அதனால்தான் குருதேவர் காளியிடம் “அம்மா அவர்களின் மனத்தில் பக்தியை நிரப்பு.அவர்கள் அமைதிபெறட்டும்” என்று பிரார்த்தனை செய்வார் - ஒரு கையால் பகவானைப் பிடித்துக்கொள் மறு கையால் கடமைகளைச் செய் என்று குருதேவர் கூறுவதை நீ அமுதமொழிகளில் படித்ததில்லையா? - துறவிகள் பகவானுக்காக அனைத்தையும் துறந்து சம்சாரத்திலிருந்து வெளியே வந்துவிட்டார்கள்.அவர்களுக்கு குடும்பத்தில் பற்று இல்லை.இல்லறத்தார்களின் விசயம் அப்படியா? எத்தனை மாயை,எத்தனை மோகம...

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-6

Image
அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-6 - ஏன் திருமணம் செய்துகொள்ளக்கூடாது? திருமணம் செய்துகொண்டால் ஆன்மீக வாழ்க்கை வாழ முடியாதா என்ன! எல்லாம் மனத்தைப் பொறுத்ததே அல்லவா? குருதேவர் என்னைத் திருமணம் செய்துகொண்டு வாழவில்லையா? - திருமணம் செய்துகொள்ளாமல் மடத்தில் வாழ நினைக்கிறான். ஒருவேளை சிரமப்படாமல் வாழலாம் என நினைக்கிறானோ என்னவோ! சிரமங்களையும் கஷ்டங்களையும் அனுபவித்தும் இறைவனை விடாமல் பற்றியிருப்பவர்கள் கட்டாயமாக அவரைப் பெறுவார்கள் - பாரம்மா! மிகவும் உயர்ந்த ஆன்மீக நிலையில் உள்ளவர்கள் மட்டுமே துறவிகளாகி எல்லா தளைகளிலிருந்தும் விடுபட முடியும். சிலர் உலக இன்பங்களை அனுபவிப்பதற்கென்றே பிறக்கிறார்கள்.இன்பங்களையெல்லாம் அனுபவித்துத் தீர்த்துவிடுவதுதான் நல்லதென்று நான் சொல்கிறேன் - திருமணம் செய்துகொள்.எல்லாவற்றையும் அனுபவித்து தீர்த்துக்கொள்.இல்லாவிட்டால் எங்கிருந்து என்ன ஆசை வந்து முளைக்கும் என்று சொல்ல முடியாது.ஆனால் ஒன்றை புரிந்துகொள் குருதேவர் எப்போது ஒருவனை (துறவியை) பிடித்துக்கொள்கிறாரோ அப்போது அவனுக்கு வீழ்ச்சி என்பதே கிடையாது. - எம்பெருமானே! இவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.இ...