ஸ்ரீமத்பகவத்கீதை-அத்தியாயம்-13
ஸ்ரீமத்பகவத்கீதை-அத்தியாயம்-13 - ஸ்ரீபகவான் சொன்னது - 13.1 குந்தியின் மைந்தா, இந்த உடல் சேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. யார் இந்த உடலை அறிகிறானோ அவன் சேத்திரக்ஞன் என்று சொல்லப்படுகிறான் - 13.2 அர்ஜுனா எல்லா சேத்திரங்களிலும் (உடல்களிலும்) என்னை சேத்திரக்ஞன்(எல்லா உடலையும் அறிபவன்) என்று அறிந்துகொள். சேத்திரம், சேத்திரக்ஞன் பற்றிய அறிவே(உடல் மற்றும் உடலை அறிபவன் பற்றிய அறிவே) ஞானம் என்பது என்னுடைய கொள்கை - 13.3 அந்த சேத்திரம் யாது, எத்தன்மைகளை உடையது என்றும், என்னனென்ன விரிவுகளை உடையதென்றும், எதிலிருந்து எது உண்டானதென்றும் அந்த சேத்திரக்ஞன் யார் என்றும், என்ன மகிமையுடையவன் என்றும் அதை சுருக்கமாக சொல்கிறேன் கேள் - 13.4 இவ்வுண்மை ரிஷிகளால் விதவிதமான சந்தங்களால் பாங்காக பலவகைகளில் பாடப்பெற்றிருக்கிறது. நிச்சய புத்தியை தந்து பிரம்மத்தை குறிக்கின்ற பதங்களாலும் பாடப்பட்டுள்ளது. - 13.5,6 மஹாபூதங்கள், அகங்காரம்,புத்தி, அவ்யக்தம், இந்திரியங்கள் பத்து மற்றும் ஒன்று, இந்திரிய விஷயங்கள் ஐந்தும் விருப்பு,வெறுப்பு,சுகம்,துக்கம், உடலை இணைத்திருப்பது,அறிவு,மனவுறுதி இவைகள் வேறுபாடுகளோடு கூ...