Posts

Showing posts from July, 2018

பீபீ நாச்சியார்

Image
பீபீ நாச்சியார் - ராமானுஜர் திருநாராயணபுரத்தில் பகவான் மஹாவிஷ்ணுவின் பூஜைகளை முடித்துவிட்டு ஒருநாள் அயர்ந்து உறங்கினார். அப்போது மஹாவிஷ்ணு, அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ராமானுஜரின் கனவில் தோன்றினார். ராமானுஜா! உன் தொண்டில் நான் மகிழ்ந்தேன். ஆனால், எளிய பக்தர்களும் என்னைக் காண, டில்லி பாதுஷாவிடம் உள்ள என் உற்சவ விக்கிரகமான செல்வப்பிள்ளையைக் கொண்டு வா என்று கூறினார். ராமானுஜர் இரண்டு மாதங்கள் பயணம் செய்து டில்லி அரண்மனையை அடைந்தார். அவரது திருமேனி ஒளியையும் அறிவையும் கண்டு மகிழ்ந்த பாதுஷா, அவர் வந்த காரணத்தை வினவினார். அரசே! நான் செல்வப்பிள்ளையை எடுத்துச் செல்ல வந்துள்ளேன் என்று ராமானுஜர் கூற, - மன்னர், அப்படியே ஆகட்டும்! என்றார். எவ்வளவு தேடியும் செல்வப்பிள்ளையின் விக்கிரகம் கிடைக்கவில்லை. ராமானுஜர் கண்களில் நீர் மல்கக் கைகளைக் கூப்பியபடி வணங்கினார். ராமப்ரியரே! என் செல்வப்பிள்ளையே! எங்கிருக்கிறீர்? வாருங்கள்! என்று மனமுருகி வேண்டினார். அரசகுமாரியின் பெயர் பீபீ லகிமார். அவள் செல்வப் பிள்ளையை தனது மஞ்சத்தில் வைத்து அன்புடன் பூஜித்து வந்தாள். ராமானுஜர் அழைத்தபோது அவள் தனது அறையில்...

அவதாரபுருஷர்கள் இரண்டு நிலைகளில் இந்த உலகத்தை பார்க்கிறார்கள்

Image
இந்துமத தத்துவங்கள் - அவதாரம் - அவதாரபுருஷர்கள் இரண்டு நிலைகளில் இந்த உலகத்தை பார்க்கிறார்கள் துவைதநிலையில் அதாவது இந்த உலகம் உண்மை என்ற நிலையில் இருந்து பார்க்கும் போது அவன் சம்சாரத்தளையில் கட்டுப்பட்டவன்.அத்வைத நிலையில் தவாது நான் ஆன்மா என்ற நிலையில் பார்க்கும் போது இந்த உலகம் ஒரு தோற்றம். குழந்தைப்பருவத்திலிருந்தே அவதாரபுருர்கள் உயர்ந்த உணர்வு தளங்களில் திளைப்பது பற்றியும்,பல்வேறு உயர்ந்த காட்ச்சிகளை பார்ப்பது பற்றியும் அவர்களது வாழ்க்கையை படிக்கும்போது காண்கிறோம். அவதாரபுருஷர்கள் பரம்பொருளை உணர்ந்து அத்வைத நிலையில் சிறிதுகாலம் இருந்துவிட்டு.அதில் திருப்தியடைந்து பின்னர் கீழ்நிலைக்கு இறங்கிரும்போது சாதாரணமக்களின் பார்வைக்கு சாதாரணமனிதனாக தென்படுகிறார்கள்.ஆனால் அவர்கள் உலகப்பொருட்களின்,ஆரம்பம்,நடு,முடிவு அனைத்தையும் அறிகிறவர்களாக இருக்கிறார்கள். - பிரம்மத்தை அல்லது கடவுளை எல்லா உயிரிலும் காண்பதே ஆன்மீக சாதனையின் முடிவு.சாதனையில் இறுதிக்கட்டத்தில் தான் இது மனிதனுக்கு வாய்க்கிறது.இந்துக்களின் அடிப்படை நுலான வேதங்கள் இதையே வலியுறுத்துகின்றன.இவ்வுலகில் நாம் காணும்,கல்,மண்,கொடி,செடி,...

சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள்-பாகம்-6

சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள்-பாகம்-6 - துரதிர்ஷ்டவசமாக, சன்னியாசிகளுக்குகான நியதிகளால் எல்லோரையும் கட்டுப்படுத்தும் பழக்கம் பிற்காலத்தில் ஏற்பட்டது. இது மிக பெரிய தவறாகும். இந்தத் தவறைத் தவிர்த்திருந்தால் இப்போது நீங்கள் இந்தியாவில் காண்கின்ற இவ்வளவு வறுமையும் துன்பமும் இருந்திருக்காது.  சாதாரண ஏழையின் வாழ்க்கைக்கு கூட அவனுக்கு சிறிதும் பயனில்லாத ஆன்மீக மற்றும் ஒழுக்க விதிகளால் கட்டி நெருக்கப்பட்டுள்ளது.  உங்கள் கைகளை விலக்கிக் கொள்ளுங்கள் ! அவன் வாழ்க்கையை கொஞ்சம் அனுபவிக்கட்டும்று. அதன்பிறகு அவன் தன்னை உயர்த்திக் கொள்வான். தானாகவே அவனிடம் துறவு தோன்றும். - இதுவரை இல்லாத அளவிற்குப் பெரும் சிறப்புடன் இந்தியா உருவாகிக் கொண்டிருக்கறது என்பதில் சந்தேகமில்லை. பழங்கால ரிஷிகள்அனைவரைவிடவும் மகத்தான ரிஷிகள் தோன்றப் போகின்றனர். மற்ற உலகங்களில் வாழ்கின்ற உங்கள் முன்னோர்கள் தங்கள் வழித்தோன்றல்களாகிய உங்களின் புகழையும் கீர்த்தியையும் கண்டு திருப்தி மட்டும் அடையவில்லை, பெருமையும் அடைவார்கள் என்பதை நான் காண்கிறேன். ---- என்சகேதரர்களே, நாம் எல்லோரும் கடுமையாக உழைப்போம். தூங்குவ...

சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள்-பாகம்-5

சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள்-பாகம்-5 - எழுந்திருங்கள் விழித்துக் கொள்ளுங்கள் பிறரையும் விழிக்க வையுங்கள் இறப்பதற்கு முன் மனித வாழ்வின் நிறைவைப் பெறுங்கள். எழுந்திருங்கள், விழித்திருங்கள், லட்சியத்தை அடையும்வரை நில்லாதீர்கள் - சொல்பவற்றிற்கெல்லாம் முட்டாள்போல் தலையை ஆட்டாதே. நான் சொன்னாலும் நம்பாதே. முதலில் புரிந்துகொண்டு பின்னர் ஏற்றுக்கொள். - இந்தியாவின் புனித மண்ணில்தான் சீதை சாவித்திரியின் நாட்டில்தான், இந்த நாட்டுப் பெண்களில் தான் அத்தகைய ஒழுக்கம் சேவை மனப்பான்மை அன்பு கருணை அகமலர்ச்சி, பக்தி இவற்றைக் காண முடியும். உலகில் வேறு எங்குமே இப்படி நான் பார்க்கவில்லை --- சமுதாயத்திலுள்ள ஆண் பெண் அனைவருக்கும் உண்மைக் கல்வியை அளிப்பதே நமது கடமை அந்தக் கல்வி மூலமாக நல்லது எது கெட்டது எது என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள், தாங்களாகவே கெட்டதை விலக்கிவிடுவார்கள். அதன் பிறகு சமுதாயத்தில் வலிந்து எதையும் நிறுவவோ அழிக்கவோ வேண்டியதில்லை. - 🌿 மனிதனுக்கு வெறும் நம்பிக்கை போதாது, அறிவு பூர்வமான நம்பிக்கை வேண்டும். இந்தப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், வழிவழியாகத் தாங்கள் ப...

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்

Image
மகனே, இந்த உலகின் இன்பம் எத்தகையது என்பதை பார்க்கவில்லையா? இல்லற வாழ்வின் துன்பங்களால் என் நாடிநரம்புகளே தகிக்கின்றன.இறைவன் மட்டுமே உண்மை மற்ற எதுவும் உண்மையல்ல.வாழ்க்கையின் நோக்கம் இறைவனை அடைவதே.எப்போதும் அவரது நினைவில் ஆழ்ந்திருப்பதே - அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்

ஸ்ரீராமகிருஷ்ணர்- அன்னை சாரதாதேவி உறவில்-மூன்று பரிமாணங்கள்

Image
ஸ்ரீராமகிருஷ்ணர்- அன்னை சாரதாதேவி உறவில்-மூன்று பரிமாணங்கள்-துவைதம்-விசிஷ்டாத்வைதம்-அத்வைதம் - ஸ்ரீராமகிருஷ்ணர் துவைதம்,அத்வைதம்,விசிஷ்டாத்வைதம் என்ற மூன்று நிலைகளில் வாழ்ந்தார்.மகான்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தத்துவங்களை உருவாக்குகிறார்களா அல்லது தத்துவங்களின் அடிப்படையில் மகான்களின் வாழ்க்கை அமைகிறதா என்று தெரியவில்லை. - 1.முதலில் அத்வைத கண்ணோட்டம்-- - ஸ்ரீராமகிருஷ்ணர் தன்னை துறவி என்று பல நேரங்களில் குறிப்பிட்டுள்ளார்.அவரது வாழ்க்கையில் பல சம்பங்கள் இதை தெளிவுபடுத்துகின்றன.அவரது தாயாரின் இறுதி சடங்கு சமயத்தில் மகன் செய்ய வேண்டிய கடைசி சடங்குகளை செய்யவில்லை.தான் துறவி என்றும் தனக்கு எந்த கடமைகளும் இல்லை என்றும் கூறி அதை செய்யவில்லை. - அடுத்ததாக அவரது பரம்பரை சொத்தை பிரிக்கும்போது அவரது பங்கை பெறுவதற்காக கையெழுத்திடும்படி கேட்டுக்கொண்டார்கள்.தனக்கு எந்த சொத்தும் தேவையில்லை.எனக்கு உலகத்திலிருந்து எதுவும் தேவையில்லை.என்னால் கையெழுத்திடமுடியாது.நீங்களே அதை வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். - அன்னை சாரதாதேவிஆரம்ப காலத்தில் கணவருடன் வாழவேண்டும் என்பதற்காக ஜெயரா...

அவதாரப்புருஷர் வரும்போது எப்படி அடையாளம் கண்டுகொள்வது?

Image
அவதாரப்புருஷர் வரும்போது எப்படி அடையாளம் கண்டுகொள்வது? - வேதாந்தத்தை பொறுத்தவரை என்றென்றும் நிலையான ஒரே இறைவனைத்தான் அது ஏற்றுக்கொள்கிறது.அவரே தன்னை உயிர்களாகவும் உலகமாகவும் வெளிப்படுத்துகிறார்.அவரை ஈஸ்வரன் என்கிறது. - உலக நன்மைக்காக,தேவைகளை நிறைவேற்றுவதற்காக,அந்த காலத்திற்கு ஏற்ற விசேஷ ஆற்றலுடன் ஈஸ்வரன் தோன்றுகிறார்.அவர் தான் செய்ய வேண்டி வேலையை செய்து முடிப்பதற்கான முழுஅதிகாரமும்,ஆற்றலும் பெற்றவராக இருப்பார். - ஈஸ்வரன் மனிதனாக பிறந்தால் அவர் அவதாரபுருஷர்.மனிதனாக பிறந்த ஒருவன் ஈஸ்வரனுடன் ஒன்று கலந்தால் அவர் ஈஸ்வரகோடி.உலகின் தேவைகளைப்பொறுத்து இவர்களது அவதாரம் நிகழும்.சில பணிகளை ஈஸ்வரகோடிகளால் செய்து முடிக்க முடியும்.சிலரின் பணி ஒரு நாட்டுடன் முடிந்துவிடும்,சிலரின் பணி உலகம் முழுவதும் நன்மை செய்வதாக அமையும். - உயிர்கள் அறியாமை மோகத்தில் ஆழ்ந்திருப்பதைக்கண்டு.சொந்த முயற்சியால் தன்னை விடுவித்துக்கொள்ள முடியாததைக்கண்டு இறைவன் அவர்களை உயிவிப்பதற்காக கருணையுடன் வருகிறார்.அவதாரபுருஷரே மனித குலத்தின் உண்மையான குரு.அவர் ஏற்கனவே பிரம்மஞானம் பெற்றவராக இருபப...

சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள்-3

Image
சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள்-3 - ஏழையிடமும் பலவீனரிடமும் நோயுற்றோரிடமும் சிவ பெருமானைக் காண்பவனே உண்மையில் சிவபெருமானை வழிபடுகிறான். விக்கரகத்தில் மட்டுமே சிவபெருமானைக் காண்பவனின் வழிபாடு ஆரம்ப நிலையில் உள்ளது.தூய்மையற்ற உள்ளத்துடன் கோயிலுக்குச் செல்லகின்ற ஒருவன் ஏற்கனவே இருக்கின்ற தன் பாவங்களுடன் மேலும் ஒன்றைக் கூட்டுகிறான், - ஒரு மனிதனை நிமிர்ந்தெழுந்து செயல்புரிய வைப்பது எது? பலம். பலமே நன்மை, பலவீனம்தான் பாவம். ---- அச்சமின்மை என்பதே இப்போது போதிக்கப்பட வேண்டிய ஒரே மதம். உலக வாழ்விலும் சரி மத வாழ்விலும் சரி அச்சம்தான் எல்லா அழிவுகளுக்கும் பாவங்களுக்கும் மறுக்க முடியாத காரணமாக இருக்கிறது. அச்சம்தான் துன்பத்தைக் கொண்டு வருகிறது. அச்சம் தான் சாவைக் கொண்டு வருகிறது. அச்சம்தான் தீமைகளைப் பெருக்குகிறது. ---- அச்சம் எதனால் உண்டாகிறது? நம் சொந்த இயல்பை அறியாததால்தான். நாம் ஒவ்வொருவரும் அரசர்களுக்கெல்லாம் பேரரசரின் வாரிசுகள். நாம் கடவுளின் அம்சமே, அல்ல அல்ல வேதாந்தத்தின் படி நாம் கடவுளே. சிறிய மனிதர்களாக நம்மை நினைத்து, அதனால் சொந்த இயல்பை மறந்திருந்தாலும் நாம் கடவுளே. --- ...

சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள்-2

Image
சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள்-2 - வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம் ஒரு போராட்டம். இதை மக்கள் எதிர்கொள்வதற்கும், அதில் வெற்றி பெறுவதற்கும் உரிய தகுதியைத் தருவதாகக் கல்வி இருக்க வேண்டும். - நீ ஐந்தே ஐந்து உயர்ந்த கருத்துகளைக் கிரகித்துக்கொண்டு, அவற்றை நீ உன்னுடைய வாழ்க்கையிலும் நடத்தையிலும் ஊடுருவி நிற்கச் செய்தால் ஒரு பெரிய புத்தகசாலை முழுவதையும் மனப்பாடம் செய்திருப்பவனைவிட நீயே அதிகம் கல்வி கற்றவன் ஆவாய். - என்னைப் பொறுத்த வரையில் கல்வியின் சாரம் மனஒருமைப்பாடே தவிர, தகவல்களைச் சேகரிப்பதல்ல. நான் மீண்டும் படிக்க நேர்ந்தால், ஒருபோதும் தகவல்களைச் கேரிக்கமாட்டேன். முதலில் மன ஒருமைப்பாட்டையும் பற்றின்மையையும் வளர்த்துக்கொண்டு, பின்னர் அந்தப் பரிபூரணமான கருவியால் நான் விரும்பும்போது தகவல்களைச் சேகரித்துக்கொள்வேன். குழந்தையை வளர்க்கும்போது இந்த இரு ஆற்றல்களையும் அவர்களிடம் வளர்க்க வேண்டும். - ஆன்மிக ஞானத்தைப் போதித்தால், அதன்பின்னர் உலகஅறிவும் நீங்கள் விரும்புகின்ற மற்ற எல்லா அறிவும் உங்களைத் தொடர்ந்து வரும். ஆனால் மதத்தை விலக்கிவிட்டு வேறு எந்த அறிவைப் பெற நீங்கள் முயன்றாலும் இ...

சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள்-1

Image
சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள்-1 - ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு அதை ஒட்டியே வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். அதைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி கனவு காணுங்கள். உடலின் ஒவ்வொரு அணுவிலும் அந்த கருத்தே நிறைந்திருக்கட்டும். வெற்றிக்கு இது தான் வழி. - ஏழைகளிடம், சிவனைக் காண்பவனே உண்மையில் சிவனை வழிபடுகிறான். மற்றவர்கள் வழிபாட்டின் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறார்கள்.கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடி கொண்டிருக்கிறார் என்ற உண்மையை அனைவரும் உணர வேண்டும்.ஒரு லட்சியத்தை எடுத்துக் கொண்டு அதைப் பற்றியே கனவு காணுங்கள். அதைச் சுற்றியே உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியையும் எடுத்து வையுங்கள். - நீ பற்றற்றிரு; உடல் வேலை செய்யட்டும்; மூளையின் பகுதிகள் வேலை செய்யட்டும்; ஆனால் ஓர் அலைகூட மனத்தை வெல்ல இடம் கொடுக்காதே.ஓர் அன்னியன் போலவும் வழிப்போக்கன் போலவும் வேலை செய், ஆனால் உன்னைத் தளைகளுக்கு உள்ளாக்காதே. அது அஞ்சத்தக்கது. - மேலை நாட்டு அறிவியல் நுட்பத்தோடு வேதாந்த கருத்துக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் முழுமை பெற முடியும். - உன்னை நீயே பலவீனன் என்று நின...

நீண்ட ஆயுள் கிடைத்தாலும் அதனால் நிரந்தரமான மகிழ்ச்சியை அடைய முடியாது

Image
நீண்ட ஆயுள் கிடைத்தாலும் அதனால் நிரந்தரமான மகிழ்ச்சியை அடைய முடியாது - ஒரு மன்னன் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டுமென்று முடிவுசெய்து அதை பெறுவதற்காக கடுமையான தவம் இருந்தான்.பல ஆண்டுகள் தவத்திற்கு பிறகு இறைவன் காட்சி கொடுத்து நீ எத்தனை ஆண்டுகள்உயிரோடு வாழவேண்டுமென்று விரும்புகிறாயோ அத்தனை ஆண்டுகள் வாழ்ந்துகொள் என்று வரம் கொடுத்தார். - கேட்ட வரம் கிடைத்ததால் மன்னன் மகிழ்ச்சியடைந்தான்.இனிமேல் மரணத்தை பற்றி சிந்திக்க வேண்டாம்.இந்த உலகம் உள்ளவரை மகிழ்ச்சியாக வாழலாம் என்று நினைத்துக்கொண்டான்.மன்னனுக்கு மரணம் இல்லை என்று கேள்விப்பட்டு அவரது மனைவி,சொந்தங்கள், மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியடைந்தார்கள்.மன்னனைப் பார்க்க மக்கள் தினமும் வருவதுண்டு. மன்னரும் அன்பாக நலம் விசாரித்து தேவையான உதவிகளை கொடுத்து அனுப்புவார். - நாட்கள் ஆக ஆக அவரது உறவினர்கள் வயோதிகம் காரணமாக மரணமடைந்தார்கள்,நண்பர்கள் என்று கருதியவர்கள் மரணமடைந்தார்கள்.அவரை பார்க்க வரும் மக்களில் நெருக்கமானவர்களும் மரணமடைந்தார்கள்.தனக்கு ஆறுதலாக இருந்த ஒவ்வொருவரும் மரணமடைவதைக்கண்ட மன்னரின் மனம் வேதனை அடைந்தது.இவர்கள் எங்கேசென்றார்கள்? இனிமே...

நூறு தமிழ் இளைஞர்களாவது உலகிலிருந்து விலகி நின்று,நாடுநாடாகச் சென்று சத்தியப்போரை நடத்துவதற்கு ஆயத்தமாகும்போதுதான்

Image
சுவாமி விவேகானந்தர் லண்டனிலிருந்து 1895-ல் தமிழ் இளைஞர்களுக்கு எழுதிய கடிதம் - நான் விலகியதும் இந்த பணி(வெளிநாடுகளில் வேதாந்தத்தை பிரச்சாரம் செய்தல்) பேரளவிற்கு பாதிக்கப்படுவது நிச்சயம். --------------------- பின்னர் ஏதாவது நிகழும்.அதை மீண்டும் சரிப்படுத்த வலிமையான ஒரு மனிதன் தோன்றுவான். -------------------- எது நல்லது என்பது இறைவனுக்கே தெரியும்.வலிமையான உண்மையான சிலர் கிடைத்தால் அமெரிக்காவின் பாதியை பத்து ஆண்டுகளில் வென்றுவிட முடியும். ஆனால் அத்தகையோர் எங்கே? நீங்கள் எல்லோரும் மடையர்கள்(தமிழர்களை பார்த்து கூறுகிறார்) சுயநலம் பிடித்த கோழைகள்.உதட்டளவு தேச பக்தர்கள்.நாங்கள் மதவாதிகள் என்று கூறிக்கொள்கிறீர்கள்.தமிழர்களிடம் மற்றவர்களைவிட ஊக்கம் அதிகம் உள்ளது.ஆனால் அந்த முட்டாள்கள் ஒவ்வொருவனும் திருமணம் ஆனவன். திருமணம்! திருமணம்! ஏதோ அந்த ஒரு உறுப்புடன் பிறந்தவன்போல் அலைகிறான்...இல்லறத்தானாக இருக்க விரும்புவது நல்லதுதான்.ஆனால் இப்போது தமிழர்களிடையே நாம் விரும்புவது திருமணம் அல்ல.திருமணமின்மையே தேவை.. - என் மகனே,நான் வேண்டுவது இரும்பைப் போன்ற தசையும் எக்கை...