அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-29
அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-29 - தவறு செய்த ஒருவருக்குத் தண்டனை கொடுக்குமாறு அன்னையிடம் கூறியபோது அன்னை , நான் அவனது தாய் . நான் அவனுக்கு எப்படி தண்டனை கொடுக்க முடியும்? என்று கேட்டார்ஒரு பக்தரிடம் போக்கை ப்பற்றி யோகின்மா அன்னையிடம் கூறி அம்மா அந்த பக்தரை சற்று கண்டித்து வையுங்கள் . இல்லாவிட்டால் அவா் இன்னும் மோசமாகப் போவார்” என்றார். அதற்கு அன்னை கூறினார். யோகின் நான் கண்டிப்பேன் என்று தோன்றவில்லை. நான் சொன்னாலும் அதன் படி அவனால் வாழ இயலாது. நான் அவனது குரு . என் பேச்சைத் தட்டி நடக்க நோ்ந்தால் அது அவனுக்குத் தீமை செய்யும். அன்னையின் சீடரானஇளைஞா் ஒருவரின் நடத்தையில் தவறு நோ்ந்தது. வயதான பக்தர் ஒருவா் அன்னையிடம் இதைக்கூறி இனி அவரை அங்கே வர விடக் கூடாது. என்று கேட்டுக் கொண்டார். அதற்கு அன்னை கூறினார். என்னிடம் வராவிட்டால் வேறு யாரிடம் போவான்.? நான் என்ன நல்லவா்களுக்கு மட்டும் தானா அன்னை?தீயவா்களுக்கு நான் அன்னை இல்லையா என்ன? பிரபல நடிகைகளான தின்கடியும் தாரா சுந்தரியும...