முண்டக உபநிடதம் சொற்பொழிவிலிருந்து முக்கிய கருத்துக்கள்
சுவாமி விவேகானந்தரின் முண்டக உபநிடதம் சொற்பொழிவிலிருந்து முக்கிய கருத்துக்கள் ‡ அந்தப்பரம்பொருளைக் காணமுடியாது, உணர முடியாது,குறிப்பிட்டுக்கூற முடியாது. அது நிறமற்றது.கண்கள் அற்றது.காதுகள் அற்றது,உடல் அற்றது,எங்கும் நிறைந்தது. தனியானது,எல்லாவற்றையும் ஊடுருவியுள்ளது. ‡ பரம்பொருளிலிருந்தே இந்த பிரபஞ்சம் வெளிவந்துள்ளது.மகான்கள் அந்தப் பரம்பொருளைக் காண்கிறார்கள். அவரைக் காண்பதே மேலான ஞானம் ‡ பரம்பொருளில் ஆசை எழுகிறது.அதிலிருந்து படைப்புக் கடவுள் தோன்றினார். அதிலிருந்து உணர்வு,அதிலிருந்து ஜடப்பொருளும் எல்லா உலகங்களும் தோன்றின ‡ முக்தியை விரும்பாமல் சொர்க்கத்தை விரும்பி பல புண்ணியங்களை செய்தவன் இறக்கும்போது சூரியக் கிரணங்கள் வழியாக பல்வேறு அழகிய உலகங்கள் வழியாக சொர்க்கத்திற்கு செல்கிறான்.சிலகாலம் அங்கு வாழ்ந்தபின் மீண்டும் பூமியில் பிறக்கிறான் ‡ சொர்க்கத்தில் வசிப்பவர்கள் சிலகாலம் மட்டுமே அங்கு வாழ்கிறார்கள் புண்ணியபலன் தீர்ந்தபின் மீண்டும் மனிதர்களாக பிறக்கிறார்கள்,சிலர் இன்னும் கீழான பிறவியை அடைகிறார்கள் ‡ உலகைத் துறந்து, புலன்களை அடக்கக் கற்றுக் கொண்டவர்கள் காடுகளில் வச...