Thursday 5 November 2020

பாரதம் முழுவதையும் ஒரே அரசன் ஆட்சி செய்தானா

 இந்துமதம் வகுப்பு

பாரத தேசம்

 ..

பாரதம் முழுவதையும் ஒரே அரசன் ஆட்சி செய்தானா?

பாரதம் என்ற பெரும் நிலப்பரப்பிற்குள் பல சிறு தேசங்கள் இருந்தன.குறுநில மன்னர்கள் இருந்தார்கள்.மகாபாரத யுத்தத்தில் கலந்துகொண்ட அரசர்களும் அவர்களது தேசங்கள் பற்றியும் பாரதம் கூறுகிறது.

..

அப்படியானால் ஒரே நாடு.ஒரே அரசர் இல்லையா?

உண்டு. 

இந்த பாரத தேசத்தை முழுவதும் ஆளும் தகுதி உள்ளவன் சக்கரவர்த்தி.அஷ்வமேத யாகம் என்ற யாகம் நடத்தக்கூடிய அளவுக்கு யாருக்கு வலிமை உண்டோ அவர்தான் பாரதம் முழுவதற்கான சக்கரவர்த்தி. 

யுதிஷ்டிரர் உட்பட பல அரசர்கள் அஷ்வமேத யாகம் புரிந்து சக்கரவர்த்திகளாக ஆகியுள்ளார்கள்.

-

பாரதம் என்ற மிகப்பெரிய நாடு.அதற்குள் பல சிறிய நாடுகள். 

பாரதத்தை ஆள ஒரு சக்கரவர்த்தி. சிறிய தேசங்களை ஆள பல அரசர்கள்,குறுநில மன்னர்கள்

இது தான் பண்டைய இந்தியா

..

திருதராஷ்டினன் சஞ்சயனிடம் கேட்டான்

-

எது பரதனின் பெயரால் அழைக்கப்படுகிறதோ, அப்படிப்பட்ட இந்த கண்டத்தை - பாரதக்கண்டத்தைக் குறித்த உண்மையை (ஓ! சஞ்சயா) எனக்குச் சொல்வாயாக 

 நீ புத்திக்கூர்மையுள்ளவன் என்பதால், இதை எனக்குச் சொல்வாயாக."

சஞ்சயன் கூறத்தொடங்கினான்

-

நான் இப்போது உமக்கு, பரதனின் பெயரால் அறியப்படும் நிலப்பகுதியைக் {பாரதக்கண்டத்தைக்} குறித்துச் சொல்கிறேன்.

 நான் குறிப்பிடப்போகும் மாகாணங்களின் பெயர்களைக் குறித்துக் கேளும். 

குரு-பாஞ்சாலம், சால்வம், மாத்ரேயம், ஜாங்கலம், சூரசேனம், கலிங்கம், போதம், மாலம், மத்ஸ்யம், சௌவல்யம், குந்தலம், காசிகோசலம், சேதி, கரூசம், போஜம், சிந்து, புளிந்தகம், உத்தமம், தசார்ணம், மேகலம், உத்கலம், பாஞ்சாலம், கௌசிஜம், நைகபிருஷ்டம், துரந்தரம், சோதம், மத்ரபூஜிங்கம், காசி, அதிகாசி {அபரகாசி}, ஜடரம், குகுரம், 


ஓ! பாரதா {திருதராஷ்டிரரே}, குந்தி, அவந்தி, தசார்ணம், அதிகுந்தி {அபரகுந்தி}, கோமந்தம், மந்தகம், சண்டம், விதர்ப்பம், ரூபவாஹிகம், அஸ்வகம், பான்சுராஷ்ட்ரம், கோபராஷ்ட்ரம், கரீதியம், அதிராஜ்யம், குலாத்யம், மல்லராஷ்டிரம், கேரளம், வாரத்ராஸ்யம், ஆபவாஹம், சக்ரம், வக்ரதபம், சகம், விதேகம், மகதம், ஸ்வக்ஷம், மலயம், விஜயம், அங்கம், வங்கம், களிங்கம், யகிருல்லோமம், மல்லம், சுதேளம், பிரனராதம், மாஹிகம், சசிகம், பாஹ்லீகம், வாடதானம், ஆபீரம், காலஜோஷகம், அபராந்தம், பராந்தம், பாநாபம், சர்மமண்டலம், அடவீசிகரம், மகாபூதம், 

ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உபாவிருத்தம், அநுபாவிருத்தம், சுராஷ்ட்ரம், கேகயம், குதம், மாஹேயம், கக்ஷம் சமுத்ரநிஷ்குடம், ஆந்திரம், 


மேலும் ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மலையில் இருக்கும் பல மலை நாடுகள், மலைகளின் அடிவாரத்திலும் வெளிப்புறத்திலும் உள்ள பல நாடுகள், அங்கமலஜங்கள், மானவர்ஜகம், பிராவிருஷேயம், பார்க்கவம்,

 ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புண்ட்ரம், பர்க்கம், கிராதம், சுதேஷ்ணம், யாமுனம், சகம், நிஷாதம் {நிஷதம்}, ஆனர்த்தம், நைருதம், துர்க்காலம், பிரதிமத்ஸ்யம், குந்தலம், குசலம், தீரக்ரஹம், ஈஜிகம், கன்யககுணம், திலபாரம், சமீரம், மதுமாதம் {மதுமான்}, சுகந்தகம், காஸ்மீரம், சிந்துசௌவீரம், காந்தர்வம், தர்சகம், அபீசாரம், உதூலம், சைவலம், பாஹ்லிகம், தார்வி, வானவம்தர்வம், வாதகம், அமாரதம், உரகம், பஹுவாத்யம், கௌரவ்யம், சுதாமானம், சுமல்லிகம், வத்ரம், கரீஷகம், களிந்தம், உபத்யகம், பதயானம், குசபிந்து, கச்சம், கோபாலகக்ஷம், குருவர்ணகம், கிராதம் பர்ப்பரம், சித்தம், வைதேஹம், தாம்ரலிப்தகம், ஔண்ட்ரம், பௌண்ட்ரம், சைசிகடம், பார்வதீயம் ஆகியன இருக்கின்றன.


மேலும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தெற்கில் பிற நாடுகளும் இருக்கின்றன. அவை, திராவிடம், கேரளம், பிரச்யம், மூஷிகம், வனவாசிகம், கர்நாடகம், மஹிஷகம், விகல்பம், மூஷகம், ஜில்லிகம், குந்தலம், சௌன்ருதம், நளகானனம், கான்குட்டகம், சோழம் {சோழ நாடு}, மாலவயகம், சமங்கம், கனகம், குகுரம், அங்கார-மாரிஷம், திவஜினி, உத்ஸவம், ஸங்கேதம், திரிகர்த்தம், சால்வசேனம், வகம், கோகரகம், பாஷ்திரியம், லாமவேகவசம், விந்தியசுலிகம், புளிந்தம், வல்கலம், மாலவம், வல்லவம், அதிவல்லவம் {அபரவல்லவம்}, குளிந்தம், காலவம், குண்டௌகம், கரடம், மிருஷகம், தனபாலம், சனீயம், அளிதம், பாசிவாடம், தநயம், சுலன்யம், ரிஷிகம், விதர்ப்பம், காகம், தங்கணம், அதிதங்கணம் {அபரதங்கணம்} ஆகிய நாடுகள் இருக்கின்றன.

மேலும் இங்கே(பாரதகண்டத்தில்), சூத்திர-ஆபீரம், தரதம், காஸ்மீரம், பட்டி, காசீரம், ஆத்ரேயம், பரத்வாஜம், ஸ்தனபோஷிகம், புஷோகம், களிங்கம், பல்வேறு இனங்களைச் சேர்ந்த வேடர்கள் வசிக்கும் நாடு, தோமரம், ஹன்சமார்க்கம், கரமஞ்சகம் ஆகியவையும் இருக்கின்றன. இவையும், இன்னும் பிற நாடுகளும் கிழக்கிலும் வடக்கிலும் இருக்கின்றன

..

(மகாபாரதம்-பீஷ்ம பர்வம்)

..

காஷ்மீர் முதல் கண்டி (இலங்கை)வரையிலும்,காந்தாரம்(ஆப்கான்)முதல் பர்மா வரையிலும் பாரததேசம் பரவியிருந்தது.


முற்காலத்தில் பாரததேசம் முழுவதும் செழிப்பான காடுகளால் நிறைந்திருந்தது.


எண்ணற்ற சிற்றரசுகள் இருந்தன. தற்காலத்தைப்போல போக்குவரத்து வசதிகள் இல்லாததால்,ஒவ்வொரு பகுதியும் பிற பகுதிகளிலிருந்து சற்று தனித்தே இருந்தது.

..

காசி,ரிஷிகேஷ்,ராமேஸ்வரம் போன்ற பல புண்ணிய ஸ்தலங்கள் பாரத தேசம் முழுவதும் காணப்படுகிறது.

இந்த இடங்களுக்கு செல்லும் யாத்ரீகர்கள்,துறவிகள் போன்றோர் சுதந்திரமாக அனைத்து நாடுகளையும் கடந்துசெல்ல அனுமதிக்கப்படார்கள்.அத்துடன் அனைத்து நாடுகளிலும் அவர்கள் விருந்தினராக கருதி உபசரிக்கப்பட்டார்கள்.

..

பாரதகண்டம் முழுவதும்  ஒரேவிதமான  கலாச்சாரம் இருந்ததே இதற்கு காரணம்.

தற்காலத்தில் ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருப்பதுபோல முற்காலத்தில் பாரத கண்டம் முழுவதும் பிராமணமொழி அல்லது பிராமி மொழி இணைப்பு மொழியாக இருந்தது. பண்டிதர்கள் அனைவரும் தங்கள் தாய்மொழியுடன் பிராமிமொழியையும் கற்றிருந்தனர்



இந்து மதத்தைத் தோற்றுவித்தவா்

 இந்துமதம் வகுப்பு

2.இந்து மதத்தைத் தோற்றுவித்தவா்.


இந்தியாவில் தோன்றிய ஒவ்வொரு தீர்க்கதரிசியும் ஒவ்வொரு மதத்தை உருவாக்கியுள்ளார்கள்.

ஒவ்வொரு நூற்றாண்டிலும் பல மதங்கள் புதிதாக தோன்றுகின்றன.

பெரிய மதங்கள் பல பிரிவுகளாக பிரிவதுண்டு,

சைவம்,வைணவம் போன்ற மதங்கள் பல பிரிவுகளாக பிரிந்து வளர்ந்தது

அதேபோல காலப்போக்கில் பல மதங்கள் ஒன்றிணைந்து ஒரே மதமாக உருவாதும் உண்டு.

ஆதிசங்கர் வாழ்ந்த காலத்தில் வேதத்தை அடிப்படையாகக் கொண்ட 78 மதங்கள் இருந்தன.

ஆதி சங்கரர் அவைகளை ஒன்றிணைத்து ஆறு மதங்களுக்குள் கொண்டு வந்தார்.

பல மதங்கள் காலப்போக்கில் அழிந்துபோனதும் உண்டு

..

வேதத்தை சாராத மதங்களும் இந்தியாவில் இருந்தன.அவைகளில் முக்கியமானது புத்தமதம்,சமணமதம்

இந்தியாவில் எண்ணற்ற மதங்கள் தோன்றியுள்ளன.இனியும் பல மதங்கள் தோன்றும் என்பதைப் பார்க்கிறோம்.

..

எண்ணற்ற மதங்கள் புதிதாக தோன்றும்போது அவைகளுக்குள் சண்டைகள் ஏற்படுவதும் இயல்பானதுதான்.

வெளிநாடுகளில் இப்படி புதிய மதம் தோன்றும்போது,தங்களுக்குள் அடித்துக்கொண்டு இறந்துபோவார்கள்.

இந்தியாவிலும் ரிக் வேத காலத்திலேயே இந்த பிரச்சினைகள் உருவாக ஆரம்பித்துவிட்டது.

அந்த காலத்தில் இதற்கான தீர்வும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதுதான் “ஏகம் சத் விப்ரா பகூதா வதந்தி”

இறைவன் ஒருவன்தான்.மகான்கள் பல பெயர்களில் அழைக்கிறார்கள். 

ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு பாதையைக் காட்டுகிறது.

எல்லா நதிகளும் சமுத்திரத்தை சென்றடைந்து அதில் ஒன்றாகிவிடுகிறது.

எனவே மதத்தின் பெயரில் யாரும் சண்டையிடத்தேவையில்லை.

எல்லா பாதைகளும் அந்த ஒரே இறைவனையே சென்று சேர்கின்றன.

என்பதை ரிஷிகள் ஆதி காலத்திலேயே கண்டு,மக்களிடம் போதித்துள்ளார்கள்.

எனவே இந்தியாவில் அனைத்து மதத்தினரும் ஒன்றுமையாக வாழ முடிகிறது.

..

இந்தியாவில் தோன்றிய ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு பாதையை காட்டினாலும்,

சில அடிப்படைகள் அனைத்திலும் ஒன்றுபோலவே இருக்கின்றன.

இவைகள் எக்காலத்திலும் மாறுவதில்லை. 

உதாரணமாக மறுபிறப்புக்கொள்கை,கர்மகோட்பாடு,முக்தி,பிறருக்கு சேவை செய்வது,உயிர்களிடம் கருணை,நற்குணங்கள்,விருந்தினர்களை உபசரிப்பது,உயிர்களைக் கொல்லாமை போன்ற பலவற்றை கூறலாம்.

இந்த தர்மம் என்பது எப்போதுமே மாறுவதில்லை

ஒரு மனிதன் மதம் மாறலாம்.ஆனால் தர்மங்கள் மாறுவதில்லை. 

உதாரணமாக உயிர்களைக்கொல்வது பாவம் என்ற தர்மம் நிரந்தரமான உண்மை. 

எந்த மதத்தை ஒருவன் பின்பற்றினாலும் இது பொருந்தும்.

பொய் சொல்வது பாவம் என்ற தர்மம் எல்லா மதத்திற்கும் பொதுவானது.

எனவே எண்ணற்ற மதங்கள் இந்தியாவில் தோற்றினாலும், இந்த தர்மங்கள் என்றும் நிலையாக இருக்கின்றன.

எனவே இதற்கு சனாதன தர்மம் என்று பெயர்

இந்தியாவில் ஒருவன் ஒரு மதத்தைவிட்டு இன்னொரு மதத்திற்கு மாறினால்கூட பாவமாக கருதப்படுவதில்லை.

அவனுக்கு பிடித்த பாதையை தேர்ந்தெடுத்துள்ளான் என்று விட்டுவிடுகிறோம்.ஆனால் தர்மத்தை விட்டுவிட்டால் அது பாவமாகக் கருதப்படுகிறது.

..

இந்த சனாதன தர்மம் என்பதைத்தான் இந்துமதம் என்று அழைக்கிறோம்.

சைவம்,வைணவம்,சாக்தம்,கௌமாரம்,புத்தம்,சீக்கியம் என்று எத்தனை மதங்கள் இருந்தாலும்,இவைகள் அனைத்தும் சனாதன தர்மத்திற்கு உட்பட்டவைதான்.

சனாதன தர்மம் நிரந்தரமானது.தொன்றுதொட்டு வருவது.

இவைகளை எந்த மனிதனும் தோற்றுவிப்பதில்லை.

பொய் சொல்வது பாவம்,உயிர்களைக்கொல்வது பாவம் என்பதை ஒரு மனிதன் கண்டுபிடிக்கத்தேவையில்லை.

இவைகள் நிரந்தரமான உண்மைகள்.

எனவே இந்துமதம் என்பது மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்ட மதம் அல்ல.

அது காலம் காலமாக இருந்துவருகின்றன தர்மம்

..

இந்தியாவில் தோன்றிய,இனி தோற்றப்போகின்ற அனைத்து மதங்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு வார்த்தைதான் சனாதன தர்மம் அல்லது இந்துமதம்.

மதம் என்றால் என்ன? நம்பிக்கை

இந்தியாவின் நம்பிக்கை என்ன?

இறைவன் ஒருவன்தான்.பாதைகள் வேறு வேறு.

இதுதான் ஹிந்துமதம்.

ஹிந்து மதம் என்ற உடன் தனியான வழிபாடு,சடங்குள்,கடவுள் என்று எதுவும் இல்லை.

இறைவன் ஒருவன்தான்.பாதைகள் வேறு வேறு என்று யாரெல்லாம் நம்புகிறார்களோ அவர்கள் எல்லாம் ஹிந்துக்கள்.

அவர்கள் சிவனை வழிபடலாம்,விஷ்ணுவை வழிடலாம்,காளியை வழிபடலாம்,  மேலான ஒளியை வழிபடலாம் எப்படி இருந்தாலும் அவர்கள் அனைவரும் நம்பிக்கையால் ஹிந்துக்கள்.

-

எனது மதம்தான் உயர்ந்தது. எனது கடவுள்தான் உயர்ந்தவர். எனது பாதைதான் உயர்ந்தது.மற்றது எல்லாமே தாழ்ந்தது.மற்ற வழிபாடுகள் தாழ்ந்தது.பிற பாதைகள் தாழ்வானவை அல்லது தவறானவை என்று யாரெல்லாம் நினைக்கிறார்களோ அவர்கள் அறிவில்லாதவர்கள்.மூடநம்பிக்கை உடையவர்கள்.கொள்கை வெறி பிடித்தவர்கள்.அவர்களை நாம் அலட்சியப்படுத்திவிட வேண்டும்

-

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ஹிந்து என்பது யாரைக்குறிக்கும்? 

என்ற கேள்வி ஆட்சியல் இருந்தவர்களிடம் ஏற்பட்டது. 

அப்போது அவர்கள் அதற்கு ஒரு தெளிவாக விளக்கத்தை கொடுத்துள்ளார்கள்.

இந்தியாவில் வசிக்கும் மக்களில் முஸ்லீம்கள்,கிறிஸ்தவர்கள்,பார்சிகள்,யூதர்கள் அல்லாத அனைவரும் ஹிந்துக்கள்.

இதை நாம் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி யாரெல்லாம் ஹிந்துக்கள்?

முஸ்லீம்கள்,கிறிஸ்தவர்கள்,பார்சிகள்,யூதர்கள் தவிர வேறு எல்லோரும் ஹிந்துக்கள்

-

ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருந்தால் இந்தியாவை நம்மால் கைப்பற்ற முடியாது என்ற எண்ணத்தில் வெளிநாட்டு சக்திகள் செயல்பட்டு வருகின்றன.

அவர்களின் எண்ணங்களை இங்குள்ள அரசில்வாதிகள்மூலம் செயல்படுத்த நினைக்கிறார்கள்.


அதாவது சைவர்கள் ஹிந்துக்கள் அல்ல. வைணவர்கள் ஹிந்துக்கள் அல்ல. தென்னிந்தியாவில் வசிப்பவர்கள் ஹிந்துக்கள் அல்ல.சிறு தெய்வங்களை வணங்குபவர்கள் ஹிந்துக்கள் அல்ல.ஹிந்துதமதம் என்பது பிராமணமதம்,அது இந்தியாவின் மதம் அல்ல,அது தமிழ்நாட்டின் மதம் அல்ல இதுபோல பொய் பிரச்சாரத்தை இப்போது முன்னெடுத்துள்ளார்கள்.

இது ஒருபோதும் வெற்றி பெறக்கூடாது





இந்துமதம் என பெயர் வரக்காரணம்

இந்துமதம் வகுப்பு

1.இந்துமதம் என பெயர் வரக்காரணம்

..

வடமொழியில் ஹிந்து என்பதை தமிழில் இந்து என்று அழைக்கிறோம்

தமிழில் இந்து என்றால் நிலா என்று ஒரு அர்த்தம் உள்ளது.

பாரசீகர்கள் பாரததேசத்தை சிந்துநதியை மையப்படுத்தி அழைத்தார்கள். 

சிந்துஸ்தான் என்று அழைத்தார்கள் பின்பர் அது மருவி ஹிந்துஸ்தான் என்று ஆனது.

பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான்,உஸ்பெகிஸ்தான்,கஜகிஸ்தான் போன்ற பெயர்களில் வரும் ஸ்தான் என்பது ஸ்தலம்(இடம்) என்ற வடமொழியின் மருவு ஆகும்.ஆங்கிலத்தில் ஸ்டான்ட் என்று மருவியுள்ளது.

..

சிந்து நதியின் மறுகரையில் வாழ்ந்த மக்களை அழைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட வார்த்தை ஹிந்துஸ்தான்.

இந்த வார்த்தை பிற்காலத்தில் பாரதம் முழுவதும் வாழ்ந்த மக்களை குறிக்கும் வார்த்தையாக மாறிவிட்டது.

.

வெளிநாட்டு மக்களைப்பொறுத்தவரை பாரதத்தில் வாழ்ந்த மக்கள் ஹிந்துக்கள்.

ஹிந்துக்கள் பின்பற்றிய மதம் ஹிந்துமதம். 

.

பாரசீகர்கள்,அரேபியர்கள்,யூதர்களுக்கு ஒரு மதம்தான் இருந்தது. பிறமதங்கள் வளர்ச்சியடையாமல் நசுக்கப்பட்டுவிட்டன.

ஆனால் பாரததேசத்தில் பல மதங்கள் பலரால் பின்பற்றப்பட்டு வந்தது. 

அவைகள் பற்றி பாரசீகர்களுக்கு தெரியாது. பொதுவாக அனைவரையும் ஹிந்துக்கள் என்றும் அவர்கள் பின்பற்றும் மதத்தை ஹிந்துமதம் என்றும் அழைத்தார்கள்.

..

பாரசீகர்களின் பார்வையில் புத்தமதம்,சமண மதத்தை பின்பற்றியவர்களும் ஹிந்துக்கள்தான்.

ஆப்கானிஸ்தானில் அந்த காலத்தில் புத்த மத்தினரே அதிகம் வாழ்ந்தார்கள்.முஸ்லீம்களால் அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அங்கு ஒரு மலை இருக்கிறது.அந்த மலைக்கு ஹிந்துகுஷ் என்றே பெயர்.ஹிந்துக்கள் கொலை செய்யப்பட்ட மலை என்று பெயர்.

..

தற்போது பாரசீகர்கள் மிகசிறிய அளவில்தான் இருக்கிறார்கள்.மற்றவர்கள் முஸ்லீம்களாக மதம்மாறிவிட்டார்கள்.ஆனால் ஒரு காலத்தில் ஆசியாவின் பெரும்பகுதியை பாரசீகர்கள் ஆண்டுவந்தார்கள்.

பல பாரசீக அறிஞர்கள் அந்த காலத்தில் வாழ்ந்தார்கள்

..

பாரசீகர்கள்,முகமதியர்கள்,யூதர்களின் பார்வையில் பாரததேசத்தின் பெயர் ஹிந்துஸ்தான்.

பாரசீகர்கள்,முகமதியர்கள்,யூதர்களின் பார்வையில் ஹிந்துஸ்தானில் வாழ்ந்த மக்கள் ஹிந்துக்கள்

பாரசீகர்கள்,முகமதியர்கள்,யூதர்களின் பார்வையில் ஹிந்துஸ்தானின் மதம் ஹிந்துமதம்

..

முஸ்லீம்கள் ஹிந்துஸ்தானிற்குள் வந்தபோது அவர்கள் பார்வையில் எல்லோருமே அவர்களுக்கு எதிரிகளாகவும்,காபிர்களாகவும், கொலைசெய்யப்பட வேண்டிவர்களாகவும்,அவர்களது வழிபாட்டு தலங்கள் அழிக்கப்பட வேண்டிவையாகவுமே தெரிந்தது.அவர்களது மதம் அதைத்தான் போதிக்கிறது


எனவே முஸ்லீமாக மதம் மாறாதவர்கள் அனைவரும் கொலை செய்யப்படவேண்டும்,அவர்கள் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் இடிக்கப்பட வேண்டும் என்ற முழக்கத்துடன் ஹிந்துஸ்தானிற்குள் வந்தார்கள்.

அவர்களால் ஹிந்துஸ்தானில் உள்ள அனைவரும் பாதிக்கப்பட்டார்கள். புத்தமதம்,சமணமதம்,வேதமதத்தை பின்பற்றிவர்கள் என்று எல்லோரும் பாதிக்கப்பட்டார்கள்.

-

புத்த மதத்தினர் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள் சிலர்.திபெத்,பூடான்,இமாச்சல் போன்ற மலைவாழ் பகுதிகளுக்கு தப்பிச்சென்றார்கள்.

பிராமணர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள் சிலர் தென்இந்தியா பக்கம் வந்தார்கள்.

இது தவிர உயிருக்கு பயந்து மதம் மாறியவர்கள் ஏராளம்

.

பெண்கள் அடிமைகளாக பிடிக்கப்பட்டு வெளிநாட்டு சந்தைகளில் ஏலம் விடப்பட்டார்கள்.

மதம் மாற மறுத்த ஆண்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டார்கள்.

பொருட்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டது.

ஹிந்துக்களின் தலைகள் மலைகள் அளவுக்கு பல்வேறு இடங்களில் குவிக்கப்பட்டன.

..

ஐநூறு ஆண்டுகால முகமதியர்களின் கொடுமையால் வடஇந்தியாவில் பெரும்பாலான இடங்களில் இந்துக்களே இல்லை.

அதன் பின்னர் வடஇந்தியாவில் பல்வேறு மகான்கள் தோன்றினார்கள்.மதம்மாறியவர்களை மீண்டும் படிப்படியாக தாய் மதத்திற்கு கொண்டு வந்தார்கள்.அவர்களின் கடின முயற்சியால் ஓரளவு ஹிந்துக்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

..

ஹிந்துமதம் என்ற பெயரை நாம் விரும்பி ஏற்றுக்கொள்ளவில்லை.அன்னியர்கள் நம்மீது திணித்த வார்த்தை இது. எனவே இதை நீக்க வேண்டுமா?

.

சைவர்களுக்கு சைவன் என்ற பெயர் இருக்கிறது. வைணவர்களுக்கு வைணவன் என்று பெயர் உள்ளது. சீக்கியர்களுக்கு சீக்கிய மதம் உள்ளது. இப்படி இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கிறது.அப்படி இருக்கும்போது ஹிந்துமதம் என்ற பெயரை ஏன் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்?

.

ஹிந்துமதம் என்ற ஒரு தனியான மதம் இல்லாதபோது அந்த பெயரை ஏன் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்?

.

ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர் செயல் உண்டு என்பது தான் விதி. 

காபிர்கள் என்ற முத்திரையோடு  கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளார்கள். 

அவர்களின் சாபம் இன்னும் நீங்கவில்லை. 

..

இந்த சம்பவத்தை நீங்கள் உங்கள் மனக்கண் முன்னால் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும்.

ஒரு கும்பல் கையில் வாளுடன், அல்லாகு அக்பர் என்ற முழக்கத்துடன் வந்து வீட்டில் உள்ள ஆண்களைக்கொன்று,பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கி,அவர்களையும்,குழந்தைகளையும் கையில் விலங்கு பூட்டி மிருகங்களை இழுத்து செல்வதுபோல சென்று வெளிநாட்டுசந்தைகளில் வியாபாரம் செய்யப்படுதை உங்கள் மனக்கண்முன் கொண்டுவரவேண்டும். 

அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? 

தன் கண்முன் கணவன் கொலை செய்யப்படுவதையும்,குழந்தைகள் தங்களிடமிருந்து பிரிக்கப்படுவதையும், வலுக்கட்டாயமாக பாலியல் உறவுக்கு உட்படுத்துவதையும் சந்திக்கும் பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும்.

இவைகளை மறக்க வேண்டுமா?

ஒன்றிரண்டுபேர் அல்ல சுமார் 500 ஆண்டுகளுக்கும்மேலாக  கோடிக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இந்த வரலாறுகளைப்பற்றி விரிவாக படித்து தெரிந்துகொள்ள வேண்டும்.

..

இறந்தவர்களின் சாபம் நீங்கும்வரை நாம் ஹிந்துக்களாகவே இருப்போம்.

அதன் பிறகு வேண்டுமானால் வேறு பெயரை வைத்துக்கொள்ளலாம்.

அதற்கு முன்பு யாராவது ஹிந்து என்ற பெயரை மாற்ற முயற்சிசெய்தால் உயிரிழந்த கோடிக்கணக்கான மக்களின் சாபம் அவர்களை தண்டிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அது மட்டுமல்ல இந்து என்ற பொதுப்பெயரிலிருந்து விலகி தனியாக செல்லும் மதங்கள் படிப்படியாக அழிவையே சந்திக்கும் என்பதில் சந்தேகம் இல்லை





 

ராமர் சம்பூகனை வதம் செய்தது சரியா?

 ❓கேள்வி-ராமாயணத்தில் ராமர் சம்பூகனை வதம் செய்தது சரியா? 

சம்பூகன் எந்த தவறும் செய்யவில்லை. 

சூத்திரன் தவம் செய்தான் என்பதற்காக ராமர் அவனைக்கொன்றது சரியா?

..

✍️பதில்-சூத்திரன் தவம் புரிந்தான் என்பதற்காக ராமர் அவனைக் கொல்லவில்லை. 

 சபரி என்ற சூத்திரபெண்  காட்டில் கடுமையான தவமியற்றி பலகாலம் வாழ்ந்தாள்.ராமர் அவளைச் சென்று பணிந்தார்.அவள்  கடித்து எச்சில்பட்ட பழங்களை ராமர் உண்டார். இங்கே ராமர் ஜாதியும் பார்க்கவில்லை,சூத்திரன் தவம் செய்யக்கூடாது என்றும் கூறவில்லை.

.

வால்மீகி வழிப்பறிக் கொள்ளை செய்து வந்தவர். அவரும் சூத்திர குலத்தை சேர்ந்தவர்தான். அவரை தவம் செய்யும்படி நாரதர் கூறினார். வால்மீகி பல காலம் தவம்புரிந்தார். பின்பு ராமருக்கு வேண்டிவரில் ஒருவரானார்

இங்கே சூத்திரன் தவம் புரியக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை. வால்மீகி சூத்திரகுலத்தில் பிறந்ததால் யாரும் அவரை விலக்கிவைக்கவும் இல்லை.

.

குகன் சூத்திரகுலத்தை சேர்ந்தவன்.ராமர் அவனை தனது சகோதரனாக ஏற்றுக்கொண்டார். சூத்திரன் என்பதற்காக அவனை ஒதுக்கிவைக்கவில்லை.

..

தற்செயலாகவோ அல்லது இயற்கை சீற்றம் காரணமாகவோகூட கணவனைவிட்டு மனைவி தனியாக இன்னொருவரின் வீட்டில் ஒருநாள் இரவை கழித்தாலும்கூட அவனை விலக்கி வைக்கவேண்டும் என்றவிதி அந்த காலத்தில் அயோத்தியில் நிலவிவந்தது.

சீதை பலநாட்கள் இராவணனின் அசோக வனத்தில் சிறைபிடிக்கப்பட்டிருந்தாள்.ராவணனைக்கொன்று சீதையை ராமர்மீட்டார். சீதை அனைவர் முன்னிலையிலும் தீக்குளித்து தான் ஒரு புனிதவதி என்பதை நிரூபித்தாள்.

அப்படியிருந்தும் அயோத்தியில் உள்ள ஒரு சூத்திரன் சீதையைக்குறித்து தவறாகப்பேசினான் என்பதற்காக அந்த நாட்டு சட்டப்படி சீதையை கானகத்திற்கு அனுப்பியவர் ராமர்.

இதில் சூத்திரனையும் தன்னுடைய பிரஜையாகவே அவர் பார்த்தார்.

..

அப்படியென்றால் எதற்காக சம்பூகளை கொன்றார்?

..

அதிக சக்தியைப்பெறுவதற்காக அசுரர்கள் தவம்புரிவார்கள். அவர்கள் தவம்புரிந்து குறுக்கு வழியில் சக்திகளைப்பெற்றபிறகு நாட்டில் உள்ள மக்களை துன்புறுத்துவார்கள். இப்படி குறுக்கு வழியில் சக்தியைப்பெறுவதற்காக தவம்புரிபவர்களை அரசர்கள் கொல்வது தர்மம். 

சம்பூகன் குறுக்கு வழியில் தவம்செய்து அதிகசக்தியைப்பெற நினைத்தான்.அதனால் நாட்டில் பல துர்சகுணங்கள் ஏற்படத்தொடங்கின.பிராமணரின் குழந்தை எந்த காரணமும் இல்லாமல் இறந்துபோனது.இவைகளை ஆராய்ந்தபிறகு சம்பூகன் அதிக சக்திவேண்டி தவம்புரிவதே இதற்குக்காரணம் என முடிவுக்கு வந்தார்கள்.

நாரதரே இதனை ராமரிடம் தெரிவித்தார். எனவே ராமர் அவனைக் கொன்றார்.

..

சாஸ்திரவிதிப்படி ஒருவர் தவம் செய்வதை யாரும் தடுப்பதில்லை.

ஒருவர் சூத்திரகுலத்தில் பிறந்திருந்தாலும், குருவிடம் சரணடைந்து குருவின் வழிகாட்டுதலின்படி தவம் செய்யலாம். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன.

வால்மீகி நாரதரை குருவாக ஏற்று தவம்புரிந்தார்.


..

சுவாமி வித்யானந்தர்