Posts

Showing posts from May, 2018

வள்ளலாரை பின்பற்றுபவர்கள்.இது தவறான வாதம்.இதை சற்று விளக்க விரும்புகிறேன்

Image
வள்ளலாரை பின்பற்றுபவர்கள்.கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ் ஜோதி !வள்ளலார் என்கிறார்கள்.இது தவறான வாதம்.இதை சற்று விளக்க விரும்புகிறேன் - வள்ளலார் தனது உடலை வெள்ளை துணியால் எப்போதும் மறைத்துக்கொண்டிருந்தார்.இதற்கு காரணம் என்ன? நமது உடல் அணுக்களால் ஆன ஒரு தொகுதி.நமது உடலில் உள்ள அணுக்கள் உலகத்தில் உள்ள மற்றவர்ககளின் உடலுக்கு செல்கிறது.மற்றவர்களின் உடலில் உள்ள அணுக்கள் நமது உடலுக்குள் வருகிறது..இதனால் சிலவேளைகளில் நமது உடலில் தேவையற்ற அணுக்கள் புகுந்துவிடுகின்றன.அது மனத்தையும் உடலையும் பாதிக்கிறது(இது விஞ்ஞானம்) - ஒவ்வொரு உடலும் தமஸ்,ரஜஸ்,சத்வம் என்ற மூன்று அடிப்படை அணுக்களால் உருவாக்கப்பட்டுள்ளது.இதில் சத்வம் என்பது ஒளி பொருந்தியது.தமஸ் என்பது இருள்பொருந்தியது என்கிறார் விவேகானந்தர்.உடலில் உள்ள தமஸ் மற்றும் ரஜஸ் அணுக்களை குறைத்து சத்வ அணுக்களை அதிகப்படுத்திவிட்டால் உடல் ஒளி உடலாக மாறிவிடும்.இவ்வாறு உடல் ஒளியாக மாறிவிட்டால் பிறர் கண்களுக்கு தெரியாது.அது தேவ உடலாகிவிடும்.அவ்வாறு தேவ உடலாகமாறிவிட்டால் இந்த பிரபஞ்சத்தின் காட்சியே அவர்களுக்கு மாறிவிடும் - வள்ளலார் பிற அணுக்கள் தன் உடலில் பு...

கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்றால் என்ன?

Image
கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்றால் என்ன? - கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்பது கீதையின் பிரபலமான உபதேசம்.இதை படித்துவிட்டு சிலர் என்னிடம் கேட்டது இதுதான்.வேலை செய்துவிட்டு சம்பளம் வாங்காமல் இருகக் வேண்டுமா?சும்மா வேலை செய்ய வேண்டுமா?  - கடமை என்பது என்ன? நீங்கள் யாரிடமிருந்தாவது எதையாவது பெற்றால் அதற்கு பிரதியாக திரும்பச்செய்வது கடமை.அதை சுயநலத்தோடு செய்தால் பந்தம்.சுயநலம் இல்லாமல் செய்தால் பற்றின்மை.முக்திக்கு வழி.ஒரு தந்தை மகன் உறவை வைத்து இதை விளக்குகிறேன் - நீங்கள் தந்தை என்ற நிலையை அடைய காரணமாக இருந்தது குழந்தைதான்.குழந்தைகள் இல்லாத வீட்டில் மகிழ்ச்சி இருப்பதில்லை.சமுதாயம் அவர்களை முழுமனிதர்களாக ஏற்றுக்கொள்வதில்லை.இந்த உலகத்தில் உள்ள இன்பங்களை இழந்துவிட்டதுபோல நிலை ஏற்படுகிறது.எதற்காக கஷ்ப்பட்டு சம்பாதிக்க வேண்டும் என்ற மனநிலை ஏற்படுகிறது.வாழ்க்கையே பெரும் சுமையாக தோன்றுகிறது ஒருவிதத்தில் உங்களை மகிழ்சியுடனும்,திருப்தியுடனும் வாழவைப்பதற்கு,குழந்தைகள் தேவை. - தனது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிய மகனை தந்தை வளர்க்கிறார்.பதிலுக்கு மகன் தந்தையை காப்பாற்ற வேண்டும்.அது...

சிவலிங்கம் பற்றி சுவாமி விவேகானந்தரின் கருத்து என்ன?

Image
சிவலிங்கம் பற்றி பல்வேறு ஊகங்களும் கருத்துக்களும் நிலவுகின்றன.இதுபற்றி சுவாமி விவேகானந்தரின் கருத்து என்ன? - அதர்வணவேத சம்ஹிதையில் யூகஸ்தம்பம் பற்றிய வர்ணனை காணப்படுகிறது.இது முதலும் முடிவுமற்ற ஒரு தூணைப்பற்றி விளக்குகிறது.பௌத்தர்கள் நினைவுச்சின்னமாக ஸ்தூபிகளை பிரதிஷ்டை செய்வது வழக்கம்.சிலர் பெரிய ஸ்தூபிகளை நாட்டமுடியாமல் சிறியதாக நாட்டினார்கள்.வட இந்தியா முழுவதும் இப்படிப்பட்ட சிறிய ஸ்தூபிகளைக் காணலாம்.இதுவே பிற்காலத்தில் லிங்கவழிபாடாக மாறியது -சுவாமி விவேகானந்தர் புத்தகம்11-466 - பழைய காலத்தில் சித்தர்கள் சமாதி அடைந்தால் அவர்களின் நினைவிடத்தில் ஸ்தூபிகள் நடுவது வழக்கம்.அதனை சுற்றி நினைவு மண்டபம் கட்டப்பட்டது. பிற்காலத்தில் அந்த ஸ்தூபிகள் வழிபாட்டிற்குரிய பொருளாக கருதப்பட்டு,அடிப்பாகத்தில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. - லிங்கம் என்ற சமஸ்கிருத சொல்லிற்கு உடல் என்ற அர்த்தமும் உண்டு.ஆண்குறி என்ற அர்த்தமும் உண்டு.இரண்டையம் சேர்த்து குழப்பிக்கொள்ளக்கூடாது.இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் மூன்றுவித உடல்களாக பிரிக்கிறார்கள் வேதகாலத்தவர்கள்.அவை பும்லிங்...

ஸ்ரீராமகிருஷ்ணர் அவதாரமா?

Image
ஸ்ரீராமகிருஷ்ணர் அவதாரமா? --------------- யார் ராமனாக வந்தாரோ,யார் கிருஷ்ணனாக வந்தாரோ அவரே இந்த முறை ராமகிருஷ்ணராக வந்திருக்கிறார் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறினார்.ஆனால் அதை அப்போது பலரும் நம்பவில்லை.அவருடன் கூடவே இருந்த சுவாமி விவேகானந்தர்கூட இதை கடைசிவரை நம்பவில்லை.ஸ்ரீராமகிருஷ்ணரின் கடைசி நாட்களில் அவரிடம் நீங்கள் அவதாரமா? என்று தன்னடைய சந்தேகத்தை வெளிப்படுத்தினார்.ஸ்ரீராமகிருஷ்ணர் அவரது சந்தேகத்தை தெளிவுபடுத்திய பின்னரே விவேகானந்தர் நம்பினார். விவேகானந்தரின் வாழ்க்கையில் பிற்காலத்தில் பல தவங்கள் புரிந்தபிறகுதான் ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு அவதாரம் என்பதை ஏற்றுக்கொண்டார். - ஸ்ரீராமர் ஒரு அவதாரபுருஷர் என்று அவரது காலத்தில் வெறும் 12 முனிவர்கள் மட்டுமே நம்பினார்கள்.மற்றவர்கள் அவர் ஒரு சாதாரண மனிதன் என்றே நினைத்தார்கள்.ஸ்ரீகிருஷ்ணர் ஒரு அவதாரம் என்பதை அர்ஜுனனும்,விதுரரும்,பீஷ்மரும் வேறு சிலரும்தான் நம்பினார்கள். மற்றவர்கள் அவரை சாதாரணமானவர் என்றே நினைத்தார்கள். ஸ்ரீராமகிருஷ்ர் ஒரு அவதாரம் என்பதை அவரது காலத்தில் சிலர்தான் நம்பினார்கள். - மற்ற மகான்களுக்கும் இந்த அவதாரபுருஷர்களுக்கும்...

இந்த உலகத்தின் எதிர்காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா?

Image
இந்த உலகத்தின் எதிர்காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா? - சிலர் எதிர்காலத்தை கணித்து சொல்வதை பார்க்கிறோம்.சிலர் 500 ஆண்டுகளுக்கு முன்பே பலவற்றை கணித்திருக்கிறார்கள்.அதன்படிதான் நடக்கவும் செய்கிறது.எதிர்காலத்தில் நடப்பதை அவர்கள் எப்படி அறிந்துகொண்டார்கள்? - இந்த உலகம் தோன்றி பல கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன.ஒடுக்கம் அல்லது கல்பம் முடிய இன்னும் பலகோடி ஆண்டுகள் இருப்பதாக கூறுகிறார்கள்.உதாரணமாக நாம் இதை 10 கோடி ஆண்டுகள் என்று எடுத்துக்கொள்வோம்.ஏற்கனவே பாதி முடிந்துவிட்டது.கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகள் எல்லாம் அப்படியே யாருக்கும் தெரியாமல் அழிந்துபோயிருக்குமா? - பழைய காலத்தில் நிகழ்ந்தவை அனைத்தும் முற்றிலும் யாருக்கும் தெரியாமல் அழிந்துபோயிருந்தால் எப்படி ஒருவரால் 500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை சொல்ல முடிகிறது. எப்படி ஒருவரால் 500 ஆண்டுகளுக்கு பின்பு நடக்க இருப்பதை சொல்ல முடிகிறது? - எப்படியென்றால் இவைகள் பிரபஞ்சமனம் அல்லது மஹத் என்ற நினைவுகளில் இருக்கும்.இந்த கல்பத்தின் 10 கோடி ஆண்டுகள் ழுழுவதும் அந்த நினைவுகளில் இருக்கும்.அவைகளில் பாதியை நாம் கடந்திருக்கலாம்....

கங்கையில் குளித்தால் புனிதம், முக்தி என்றெல்லாம் பேசப்படுகிதே! இதில் ஏதாவது உண்மை இருக்கிறதா?

Image
கங்கையில் குளித்தால் புனிதம், முக்தி என்றெல்லாம் பேசப்படுகிதே! இதில் ஏதாவது உண்மை இருக்கிறதா? - இதை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால், இந்துக்கள் குறிப்பிடும் தன்மாத்திரைகள் என்ற ஒரு கருத்தை பற்றி சற்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். - ஒரு பூவிலிருந்து நறுமணம் அதன் அருகில் நிற்கும் ஒருவனுக்கு வருகிறது. அது எப்படி வருகிறது? காற்றில் வருகிறது என்று எளிதாக சொல்வீர்கள். ஆனால் இன்னும் ஆழமாக விவரிக்க வேண்டும். பூவின் மீதுள்ள நுண்துகள்கள் காற்றில் கலந்து மனிதனின் மூக்கை அடைந்து, அவனது மூக்கில் உள்ள நுண்பகுதிக்குள் செல்கிறது. அதன் பின்னர் தான் மனிதன் அதை உணர்கிறான். - பாடல் எவ்வாறு மனிதனை அடைகிறது. இசைக்கருவியிலிருந்து எழும் அதிர்வு அலைகள் காற்றை அதிரவைக்கின்றன.அவைகள் தொடர்ந்து அதிர்ந்து அதிர்ந்து மனிதனின் காதில் படுகிறது. அங்கே காதின் நுண்உறுப்பு அதிர்கிறது, அந்த பாடலை உணர்கிறது. - சூரியனிலுள்ள ஒளிக்கதிர்கள் எவ்வாறு நமது கண்களை அடைகின்றன? அதிலிருந்து புறப்படும் வெப்பம் அருகில் உள்ள அணுக்களை ஒளிரச்செய்கிறது,அது அடுத்த அணுவை ஒளிரச்செய்கிறது.இப்படியே நுண்ஒளிகள் பல லட்சம் மைல்கள் பயணம் செய்து நமத...

இனிமேல் எதிர்காலத்தை கணித்து பிறரிடம் கூறக்கூடாது

இனிமேல் எதிர்காலத்தை கணித்து பிறரிடம் கூறக்கூடாது  அப்படி கூறினால் அவைகள் நிறைவேறாமல் போகலாம்.

ஸ்ரீராமகிருஷ்ணர் சில நேரம் காளியிடம் கோபித்துக்கொள்வார்

Image
ஸ்ரீராமகிருஷ்ணர் சில நேரம் காளியிடம் கோபித்துக்கொள்வார். உன்னால் என்னை என்ன செய்துவிட முடியும் என்று கேட்கும் அளவுக்கு அவரது கோபம் அதிகமாக இருக்கும். - இதை எப்படி புரிந்துகொள்வது? - ஸ்ரீராமகிருஷ்ணர் மூன்று நிலைகளில் வாழ்ந்தார். நான் காளியின் குழந்தை,அவளது கருவி,அவன் இயக்குவதுபோல் இயங்குகின்றேன் என்ற நிலை ஒன்று. இது துவைதநிலை. இந்த நிலை என்பது தாயை சார்ந்து வாழும் குழந்தையின் நிலைபோன்றது - சில நேரங்களில் அவரை பக்தர்கள் காளியாக நினைத்து வழிபடுவார்கள்.அவரது பேச்சு காளியின் பேச்சு என்றே கருதுவார்கள்.. மிக உயர்ந்த ஞானம் அதிலிருந்து வெளிப்படும்.அந்த நிலையில் மற்றவர்களுக்கு ஆன்மீக விழிப்பை உண்டாக்குவார்.நானும் காளியும் ஒன்றுதான் என்ற நிலை.யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய். இந்த நிலையை புரிந்துகொள்ள விசிஷ்டாத்வைத தத்துவத்தை படிக்க வேண்டும் - மூன்றாவது நிலையில், உடலில் எந்த அசைவும் இருக்காது.மூச்சுகூட நின்றிருக்கும்.சக்தி மொத்தமும் ஒடுங்கியிருக்கும்.அப்போது சமாதி நிலையில் இருப்பார்.அப்போது காளியையும் கடந்து மேலே சென்றிருப்பார்..இது அத்வைத நிலை. - காளியிடம் ஏன் கோபப்பட்டார்? ஸ்ரீர...

எந்த கோவிலுக்கும் சென்றதில்லை.

Image
இந்துமதத்தில் உள்ள எல்லா தெய்வங்களும் உண்மை என்று நம்புகிறேன்.பிற மதத்தில் உள்ள ஏசுவும்,அல்லாவும்கூட இருப்பதாக நம்புகிறேன்.ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக எந்த வழிபாடுகளும்,பூஜைகளும் செய்ததில்லை.எந்த கோவிலுக்கும் சென்றதில்லை.இனிவரும் காலங்களிலும் இந்த நிலைதான் நீடிக்கும்.கோவிலுக்கு சென்று வழிபடாததால் பல இந்துக்கள் என்மேல் கோபப்படலாம்.அவர்களை திருப்திசெய்ய விரும்பவில்லை. - யாரும் கோவிலுக்கு சென்று வழிபடுவதை நான் தடுக்கவில்லை.தவறு என்றும் கூறவில்லை.எனக்கு அதில் ஈடுபாடு இல்லை அவ்வளவுதா ன்.வாழும் தெய்வங்களான மனிதர்களிடம் அன்பு செய்வதையே விரும்புகிறேன்.எனது பிரச்சாரமும் அதுசார்ந்தே இருக்கும். - சுவாமி வித்யானந்தர்

மனித இனத்தில் மட்டும் பெண் ஏன் அழகாக படைக்கப்பட்டுள்ளது?

Image
விலங்குகளில் ஆண் இனம் அழகாக படைக்கப்பட்டுள்ளபோது, மனித இனத்தில் மட்டும் பெண் ஏன் அழகாக படைக்கப்பட்டுள்ளது? ஒரு காரணம் இருக்கிறது - மயிலை எடுத்துக்கொள்ளுங்கள்,சிங்கத்தை பாருங்கள்,குரங்கைகூட பாருங்கள் ஆண் இனம்தான் அழகாக படைக்கப்பட்டுள்ளது.பெண் இனத்தை கவரும்படி அது படைக்கப்பட்டிருக்கிறது.எந்த ஆண் இனம் அதிக வீரமாகவும்,அழகாகவும்,கர்ஜனையாகவும் இருக்கிறதோ அதைத் தேடி பெண் இனம் வருகிறது.இவ்வாறு படைப்பு என்பது விலங்குகள் சாம்ராஜ்யத்தில் அமைந்திருக்கிறது. - ஆனால் மனித பிறவியைப் பொறுத்த வரை பெண்களைத் தேடி ஆண்கள் செல்வதையே பார்க்கிறோம்.ஆண்களை கவரும்படி பெண்இனம் படைக்கப்பட்டுள்ளது. - மனித இனத்தை பொறுத்தவரை ஆண்கள் தன்னில்தானே இன்பம் காண முடியும்.தனக்குள் ஆழ்ந்து மூழ்குவதன் மூலம் ஆன்மாவை நெருங்க முடியும். அப்படி அனைவரும் முயற்சித்தால் மனித படைப்பே நடைபெறாமல் நின்றுவிடும் .அவனை உள்முகமாக செல்லவிடாமல் புறமுகமாக இருக்க செய்வதற்காக பெண்இனம் அழகாக படைக்கப்பட்டுள்ளது.அந்த அழகில் மூழ்கி,ஆண்கள் புற உலகத்தையே சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.அக உலக இன்பத்தை மறந்துவிடுகிறார்கள். - கணவனும் மனைவியும் ஒத்த மனம் உடை...

அய்யா வழி யை தனிமதமாக்க வேண்டும் என்று முஸ்லீம் தலைவர்கள் கூறுகிறார்கள்.

Image
அய்யா வழி யை தனிமதமாக்க வேண்டும் என்று முஸ்லீம் தலைவர்கள் கூறுகிறார்கள்.அது அய்யா வழியினருக்கு நன்மை செய்யவா அல்லது இந்துக்களை பலவீனப்படுத்தவா? - லிங்காயத்துக்களை தனி மதமாக்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள்.அது லிங்காயத்துக்களின் நன்மைக்காகவா அல்லது இந்துக்களை பலவீனப்படுத்துவதற்காகவா? - ஈஷா அமைப்பினர் தங்களை இந்துக்கள் என்று கூறிக்கொள்ள தயங்குகிறார்கள்.நாங்கள் மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்கிறார்கள்.எதிர்காலத்தில் இவர்கள் ஒரு கோடிபேர் இருப்பதாக வைத்துக்கொள்வோம் இவர்கள் ந ாங்கள் இந்துக்கள் அல்ல,தனி மதத்தினர் என்பார்கள்.இதனால் இந்துமதம் மேலும் பலவீனமடையும். - வள்ளலாரை பின்பற்றுபவர்கள்,நாங்கள் இந்துக்கள் அல்ல அனைத்து மதங்களையும் கடந்தவர்கள் என்கிறார்கள்.இவர்கள் எதிர்காலத்தில் தனிமதம் வேண்டும் என்று கேட்டாலும் கேட்பார்கள்.இது அவர்களுக்கு எந்த விதத்தில் நன்மை செய்யம்? - சிலர் உலக மக்களை கவர்வதற்காக நாங்கள் இந்துக்கள் அல்ல என்கிறார்கள்.இப்படியே தொடரந்து கூறினால் இந்தியாவில் உங்களுக்கு இருப்பிடம் இல்லாமல் போகலாம் - நீங்கள் இந்துக்கள் என்ற பொது அமைப்பிலிருந்து விலகிவிடாதீர்கள்.அது இந்...

சுவாமி வித்யானந்தரின் சிந்தனைகள்-3

Image
சுவாமி வித்யானந்தரின் சிந்தனைகள்-3 - பிறர் முக்தி பெற நீ உதவினால்,உனது முக்திக்கு இறைவன் உதவுவார் - 1.துவைதம்,2.விசிஷ்டாத்வைதம்,3.அத்வைதம் முன்று படிக்கட்டுகள்.முதல் படியை புரிந்துகொள்ளாதவனால்,மூன்றாவது படியில் ஏறமுடியாது - யாரை ஆட்சியில் அமர்த்தவேண்டும்.யாரை ஆட்சியிருந்து அகற்ற வேண்டும் என்று முடிவுசெய்வது மக்கள் அல்ல.அதற்கும் மேலே உள்ள சக்தி - உலகத்தின் சமநிலை குலைந்தால்,அதை இயற்கை சில அழிவுகளை உருவாக்கி மீண்டும் சமன்செய்துவிடும்.law of balance.3rd world war? - யோகிக்கு பிரபஞ்சத்தின் ரகசியம் எல்லாம் புரியும்.ஆனால் அதில் மாற்றம் செய்ய நினைத்தால், எதிர்விளைவுகளை ஏற்கவேண்டியிருக்கும் - விவேகானந்தரின் கருத்துக்களை முற்றிலும் புரிந்துகொள்ள யாரால் முடியும்?இன்னொரு விவேகானந்தரால் மட்டுமே முடியும்.முயற்சி செய்யுங்கள்.. - விவேகானந்தரின் ஞானயோக கருத்துக்களை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதென்றால்,ஆன்மீகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள் - நீ வாழவேண்டுமானால், பிறரை வாழ வை. ஏனென்றால் அந்த பிறராக இருப்பதும் நீதான் - ஒரு ஆணும் பெண்ணும் உண்மையிலேயே அன்பு செய்ய மு...

புதிய மதங்கள் எவ்வாறு தோன்றுகின்றன?

Image
புதிய மதங்கள் எவ்வாறு தோன்றுகின்றன? - ஒரு மனிதன் இறைவனைக்காண வேண்டி பல்வேறு தவங்களை செய்கிறார். அவன் சிவனையோ அல்லது,கிருஷ்ணரையோ வழிபடுபவனாக இருக்கலாம்.படிப்படியாக முன்னேறி கடைசியில் மிகஉயர்ந்த நிலையாகிய உருவமற்ற நிலையை அடைந்துவிடுகிறான்.அப்போது அவனுக்கு பிரபஞ்சத்தின் ரகசியம் முழுவதும் தெரிந்துவிடுகிறது.அதன்பிறகு மனிதர்களுக்கு வழிகாட்டும் குரு என்ற நிலையை அடைகிறான். - அவ்வாறு புதிதாக தோன்றிய குரு, ஏற்கனவே அவர் வழிபட்டுவந்த கடவுளுக்கு வேறுவிதமாக பொருள் கொடுத்து,வேறு விதமான தத்துவங்களை சொல்லி,புதிய பாதையை காட்டுகிறார். அந்த பாதையில் செல்பவர்களுக்கு முக்தி கிடைக்கும் என்கிறார். அந்த கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு சில சீடர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை மக்களிடம் அனுப்பி மக்களை தங்கள் நெறியில் சேர்க்கிறார் - இதற்கு முன்பு அவர் வழிபட்டு வந்து சிவனுக்கும்,கிருஷ்ணனுக்கும் அங்கே இரண்டாம் இடம்தான்.அந்த குருவுக்குதான் முதல் இடம்.இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் அவரை குருவாக ஏற்றுக்கொண்டவர்கள் மட்டுமே அவர் காட்டிய அந்த பாதையில் முன்னேற முடியும். - இவ்வாறு படிப்படியா...