Posts

Showing posts from March, 2018

சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்-பாகம்-11

Image
சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்-பாகம்-11 - வேதாந்த தத்துவத்தின்படி மனிதன் மூன்று பொருளால் ஆனவன்  1. உடல், 2.ஆவிஉடல்(சூட்சுமஉடல்) ,3.ஆன்மா - நாம் காணும் உடல் தூலசரீரம். மனம்,புத்தி,நான்-உணர்வால் ஆன லிங்க சரீரம் அதற்கு பின்னால் உள்ளது.அடுத்து ஆன்மா உள்ளது - பிரபஞ்சம் எந்த அமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கிறதோ அதே அமைப்பில்தான் அதன் ஒவ்வொரு பகுதியும் கட்டப்பட்டிருக்கும் - இந்த பொருள்களெல்லாம் எங்கிருந்து வந்தன?சூன்யத்திலிருந்து பிரபஞ்சம் வந்தது என்று கூறுவது தவறு. - இந்த பூமி குளிர்ந்துகொண்டே சென்று ஒரு காலத்தில் துண்டுதுண்டாக சிதறிவிடும்.மீண்டும் அந்த சிறதலிலிருந்து பூமி உருவாகும் - சூன்யத்திலிருந்து இந்த உலகம் படைக்கப்பட வில்லை. இறைவனிடமிருந்து வெளிப்பட்டது என்று சொல்வதுதான் சரி - உலகம் துவங்கிய காலத்தை நினைக்க தொடங்கினால்,அதற்கு முன் உள்ள காலத்தையும் நினைக்கவேண்டிவரும்.காலத்திற்கு துவக்கம் இல்லை - பிரபஞ்சத்தின் எல்லையை நினைக்க துவங்கினால் எல்லைக்கு அப்பால் உள்ளதையும் நினைக்க வேண்டிவரும்.அப்போது எல்லை பொருளற்றதாகி விடுகிறது - ஒரு பொருளை உருவாக்க சிறிது மூலப்பொருளும், உருவாக்க...

சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்-பாகம்-15

Image
சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்-பாகம்-15 - சொர்க்கத்தில் தேவ உடலில் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க,கோடிக்கணக்கான மக்களால் வழிபடப்படவேண்டும் என்று விரும்புவதும் மனமயக்கம்தான் - தனியாக நில்லுங்கள். கனவுகளிலிருந்தும் மனமயக்கத்திலிருந்தும் விடுபட்டு சுதந்திரராக இருங்கள் - இந்த மனவசியத்தை உருவாக்கிக்கொண்டிருக்கும் இறைவன் அவற்றால் மயங்குவதில்லை.சாதாரண ஆன்மாக்கள் அதில் மயங்கிவிடுகின்றன - இதுவரை யாரும் பிறக்கவும் இல்லை.யாரும் இறக்கவும் இல்லை. எல்லாம் மனவசியம். எல்லோரும் மனவசியத்தில் ஆழ்ந்துள்ளார்கள் - மகான்களையும் சாதாரண மக்களையும் எப்படி பிரித்து அறிவது? மகான்களால் தீமை செய்ய முடியாது.நன்மையை மட்டுமே செய்ய இயலும் - மனவசியம் உங்களைவிட்டு அகலுமானால்,அதன்பிறகு ஒரு மலையே உங்கள்மீது விழுந்தாலும் கவலைப்படமாட்டீர்கள்.ஏனெனில் அதுவும் ஒரு மனமயக்கம்தானே - உலகின் உண்மை ஒரு கணம் அனுபூதியில் உணரப்பட்டுவிட்டால், அதன்பிறகு நீ எவ்வளவுகாலம் வாழ்ந்தாலும் ஏமாறமாட்டாய் - நீங்கள் மனவசியத்திலிருந்து விடுபட்டால், நீங்கள் ஓர் உடம்பு,ஆண்,பெண் போன்ற எண்ணங்கள் எல்லாம் அதனுடன் சேர்ந்தே விலகிவிடு...

சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்-பாகம்-12

Image
சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்-பாகம்-12 - சிற்றின்பம்,பேரின்பம் என இரண்டு வழிகள் உள்ளன.இதில் பேரின்ப வழியை தேர்ந்தெடுப்பவன் ஞானியாகிறான் - ஆன்மாவை அடைவதற்கான தகுதி எது? பார்வையை உள்ளே திருப்பி ஆன்மாவை அடையவேண்டும் என்ற ஆவல்தான் அதற்கான தகுதி - இந்த ஆன்மாவை பார்க்க வேண்டும் உணரவேண்டும்.ஆனால் நமது கண்களால் அதை காண முடியாது.தூயவர்களால் மட்டுமே அதை காண முடியும் - தொடக்கத்தில் என்ன இருந்தது? இருளை இருள் மூடியிருந்தபோது,இவற்றையெல்லாம் படைத்தது யார்? என்ற கேள்வி தான் முதலில் எழுந்தது - இந்த வான்வெளி மண்டலம் முழுவதும் தேடினாலும் பிறப்பு,இறப்புக்கான விடை கிடைக்காது.அதை நமக்குள்ளே தேட வேண்டும் - நம் உடம்பினுள் உள்ள அற்புத இயந்திரத்தை ஆராய்ந்தபோது பிரபஞ்ச ரகசித்தை அதற்குள் கண்டார்கள் - பல கோடி உயிர்களை நாம் பார்க்கிறோமே அவை எல்லாம் என்ன? ஒரே இறைவனின் பல கோடி பிரதிபிம்பங்கள்தான் இவை - நாம் இறைவனிடமிருந்து வேறுபட்டவர்கள். இறைவன்அல்ல.என்ற நினைப்பு இருக்கும் வரை இந்த உலகம் துக்கம் நிறைந்ததாகவே இருக்கும் - என் தலையில் இடி விழுந்தால் அந்த இடியும் நான்தான். ஏனெனில் இருப்பது ...

சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்-பாகம்-13

Image
சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்-பாகம்-13 - உடலுக்கும் மனத்திற்கும் உள்ளே அழியாத உண்மைப்பொருள் உள்ளது.இந்த பொருளுக்கு பிறப்பும் இல்லை,இறப்பும் இல்லை - பழைய காலத்தில் கடவுளை மக்கள் வெளியே தேடி அதனால் பயனில்லை என்று கண்டு,பின்பு அவரை தனக்குள்ளேயே தேடி கண்டுகொண்டார்கள் - ஞான ஆராய்ச்சி நமக்கு இன்பம் தரட்டும்,நம்மை காக்கட்டும்,நமக்கு ஆற்றலை தரட்டும்,நாம் ஒருவரை ஒருவர் வெறுக்காமல் இருப்போம் - மனத்தின் கோணல்கள் எல்லாம் நிமிர்ந்தவுடன்,இதயத்தின் முடிச்சுக்களெல்லாம் அறுபட்டவுடன், மனிதன் இறப்பற்றவன் ஆகிறான் - மனத்தை அலைக்கழிக்கும் ஆசைகளெல்லாம் அடங்கியபின்,இறக்கும் இயல்புடைய மனிதன் இறப்பற்றவன் ஆகிறான்.பிரம்மத்தை அடைகிறான் - ஒன்றேயான அந்தபரம்பொருளை யார் தனக்குள் காண்கிறானோ அவனுக்கே பேரின்பம் உரியதாகும்.வேறு யாருக்கும் அல்ல - கணத்திற்கு கணம் மாறிக்கொண்டிருக்கும் இந்த உலகில் மாறுதலற்ற ஒன்றை யார் அறிகிறானோ அவனுக்கே பேரின்பம் கிடைக்கிறது - உணர்வற்ற இந்த உலகில் உணர்வுப்பொருளான பரம்பொருளை யார் அறிகிறானோ அவனுக்கே பேரின்பம் கிடைக்கிறது - ஒன்றேயான இந்த பரம்பொருள் எல்லாவற்றிற்கும் ...

சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்-பாகம்-14

Image
சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்-பாகம்-14 - பரம்பொருளுடன் ஒன்றுபடுவதே உபநிடதம் நமக்கு காட்டும் ஒரே கருத்து.இந்த உலகமும் அதன் நாடகமும் மாயை.இவை இறைவன் அல்ல - பரம்பொருளுடன் ஒன்றுபடுவதே உபநிடதம் நமக்கு காட்டும் ஒரே கருத்து.இந்த உலகமும் அதன் நாடகமும் மாயை.இவை இறைவன் அல்ல - நீங்கள் சுதந்திரமாக இருக்கும்போது மாயையில் மாட்டிக்கொள்ளாமலே விளையாடலாம்.இப்போது நீங்கள் மாட்டிக்கொண்டிருக்கிறீர்கள் - பக்தியை பின்பற்றி இறைவனின் பாதங்களின் அருகே நின்றுகொண்டாலும் மாயை உன்னை பாதிக்காது - நாம் இந்த உலகமென்னும் மனவசியத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுபடவேண்டுமானால் வெளி எல்லையை கடந்து ஞானம் என்ற பகுதியில் இருக்க வேண்டும் - பிரபஞ்சம் என்னும் இந்த இந்திரஜாலத்தை இறைவனே உண்டாக்கி விளையாடிக்கொண்டிருக்கிறார்.இந்த ஜாலங்களை உருவாக்கும் சக்தியே மாயை - எல்லாம் மனமயக்கம்.மனிதன்,மிருகங்கள் எல்லாமே மனவசியத்தில் ஆழ்ந்திருக்கின்றன.எல்லோரும் ஒரே நிலையில் இருப்பதால் ஒரே மாதிரி காண்கிறோம் - பிரபஞ்சம் முழுவதுமே மனவசியத்திற்கு உள்ளாகியிருப்பதாக வேதாந்த தத்துவம் கூறுகிறது. இதற்கு காரணம் யார்? நாமே - உன்ன...

பிரகிருதியும் புருஷனும்-vol1-prakriti and purusha-sankhya philosophy

Image