Saturday 17 March 2018

சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்-பாகம்-11


சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்-பாகம்-11
-
வேதாந்த தத்துவத்தின்படி மனிதன் மூன்று பொருளால் ஆனவன் 
1. உடல், 2.ஆவிஉடல்(சூட்சுமஉடல்) ,3.ஆன்மா
-
நாம் காணும் உடல் தூலசரீரம். மனம்,புத்தி,நான்-உணர்வால் ஆன லிங்க சரீரம் அதற்கு பின்னால் உள்ளது.அடுத்து ஆன்மா உள்ளது
-
பிரபஞ்சம் எந்த அமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கிறதோ அதே அமைப்பில்தான் அதன் ஒவ்வொரு பகுதியும் கட்டப்பட்டிருக்கும்
-
இந்த பொருள்களெல்லாம் எங்கிருந்து வந்தன?சூன்யத்திலிருந்து பிரபஞ்சம் வந்தது என்று கூறுவது தவறு.
-
இந்த பூமி குளிர்ந்துகொண்டே சென்று ஒரு காலத்தில் துண்டுதுண்டாக சிதறிவிடும்.மீண்டும் அந்த சிறதலிலிருந்து பூமி உருவாகும்
-
சூன்யத்திலிருந்து இந்த உலகம் படைக்கப்பட வில்லை. இறைவனிடமிருந்து வெளிப்பட்டது என்று சொல்வதுதான் சரி
-
உலகம் துவங்கிய காலத்தை நினைக்க தொடங்கினால்,அதற்கு முன் உள்ள காலத்தையும் நினைக்கவேண்டிவரும்.காலத்திற்கு துவக்கம் இல்லை
-
பிரபஞ்சத்தின் எல்லையை நினைக்க துவங்கினால் எல்லைக்கு அப்பால் உள்ளதையும் நினைக்க வேண்டிவரும்.அப்போது எல்லை பொருளற்றதாகி விடுகிறது
-
ஒரு பொருளை உருவாக்க சிறிது மூலப்பொருளும், உருவாக்குபவனின் சக்தியும்தேவை.சக்தி விலகிவிட்டால் அது அழிந்துவிடும்
-
ஆறு தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தாலும்,ஆற்று நீர் நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கிறது.இவ்வாறே உலகத்தில் உள்ள அனைத்தும்
-
ஒருவன் முக்தி பெற்றதும் தூலவுடலும், ஆவி உடலும் மூலப்பொருட்களாகப் பிரிந்துவிடுகிறது.ஆனால் ஆன்மா அழிவற்றதாக இருக்கும்
-
எப்படி ஆன்மா உடலுக்கும் மனத்திற்கும் ஆன்மாவாக இருக்கிறதோ, அப்படியே அனைத்து ஆன்மாக்களுக்கும் ஆன்மாவாக இருப்பவர் இறைவன்
-
பல ஆன்மாக்களையும் இயற்கையையும் கொண்ட இந்த பிரபஞ்சம் இறைவனுக்கு உடல்போல் அமைகிறது.இது விசிஷ்டாத்வைதம்
-
மனிதன் கடவுளைக் காணும்போது தன்னிலிருந்து வேறுபட்டவராக அவரை காண்கிறான்.இது துவைத நிலை சாதாரண மதம்
-
பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள இந்த ஆன்மாக்களெல்லாம் இறைவனிடமிருந்து வந்துள்ளன.ஒவ்வோர் ஆன்மாவும் இறைவனின் ஓர் அம்சம்
-
இயற்கை முழுவதையும் எடுத்துக்கொண்டால் அதற்கு தொடக்கம் முடிவு இல்லை.ஆனால் அதற்குள் பலகோடி மாறுதல்கள் நடக்கின்றன
-
ஆன்மா எந்த மூலக்கூறுகளாலும் உருவாக்கப்படவில்லை. எனவே அதற்கு அழிவு இல்லை.தொடக்கம் முடிவு இரண்டும் இல்லை
-
மூலக்கூறுகளால் உருவாக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் மீண்டும் மூலக்கூறுகளாக பிரிந்துவிடும்.இதற்கு பெயர்தான் அழிவு
-
ஒரு பொருள் தன் மூலக்கூறுகளாக பிரிவதையே அழிவு என்கிறோம்.டம்ளரை பொடியாக்கினால் அதன் மூலக்கூறுகளாகிவிடும் அழியாது
-
இறைவன் ஒரு காலத்தில் உலகை படைத்துவிட்டு ஓய்வில் உள்ளார் என்பது தவறு.அவரது படைப்பு எப்போதும் நடந்துகொண்டே இருக்கிறது
-
காலத்திற்கு தொடக்கம் இல்லை.அதேபோல் இடம்(விண்வெளி) என்பதற்கும் தொடக்கம் இல்லை.இரண்டிற்கும் முடிவும் இல்லை
-
முதன்முதலாக படைப்பு எப்படி எங்கே இருந்தது?இந்த கேள்வியே தவறு.முதல் என்ற ஒன்று இல்லவே இல்லை. தொடக்கம் முடிவு இல்லை
-
பிரபஞ்சத்தை வெளிப்படுத்தியவர் இறைவன்.அது அவரது மூச்சின் வழியே வெளிவருவதுபோல் உள்ளது.மறுபடியும் அவருள்ளேயே ஒடுங்குகிறது
-
உலகிலுள்ள எந்த பொருளுக்கும் அழிவு என்பது இல்லை.ஜடப்பொருளின் ஓர் அணுவைக்கூட நம்மால் அழிக்க முடியாது
-
உலகிலுள்ள சக்தியின் மொத்த அளவு எப்போதும் ஒன்றுதான்.சக்தியின் அளவை நம்மால் கூட்டவும் முடியாது,அழிக்கவும் முடியாது
-
சூன்யத்திலிருந்து எதையுமே படைக்க முடியாது.அது போல் இருக்கும் எதையுமே இல்லாமல் செய்யவும் முடியாது
-
இந்த பிரபஞ்சத்தின் ஒரு சிறு பகுதியில் என்ன இருக்குமோ அது பிரபஞ்சம் முழுவதும் இருக்கும் என்பதை காணலாம்
-
மனம்,புத்தி,நான்-உணர்வு இவைகளால் ஆக்கப்பட்ட சூட்சும சரீரம் பல யுகங்களானாலும் அழியாமல் இருக்கும்

Saturday 3 March 2018

சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்-பாகம்-15



சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்-பாகம்-15
-
சொர்க்கத்தில் தேவ உடலில் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க,கோடிக்கணக்கான மக்களால் வழிபடப்படவேண்டும் என்று விரும்புவதும் மனமயக்கம்தான்
-
தனியாக நில்லுங்கள். கனவுகளிலிருந்தும் மனமயக்கத்திலிருந்தும் விடுபட்டு சுதந்திரராக இருங்கள்
-
இந்த மனவசியத்தை உருவாக்கிக்கொண்டிருக்கும் இறைவன் அவற்றால் மயங்குவதில்லை.சாதாரண ஆன்மாக்கள் அதில் மயங்கிவிடுகின்றன
-
இதுவரை யாரும் பிறக்கவும் இல்லை.யாரும் இறக்கவும் இல்லை. எல்லாம் மனவசியம். எல்லோரும் மனவசியத்தில் ஆழ்ந்துள்ளார்கள்
-
மகான்களையும் சாதாரண மக்களையும் எப்படி பிரித்து அறிவது? மகான்களால் தீமை செய்ய முடியாது.நன்மையை மட்டுமே செய்ய இயலும்
-
மனவசியம் உங்களைவிட்டு அகலுமானால்,அதன்பிறகு ஒரு மலையே உங்கள்மீது விழுந்தாலும் கவலைப்படமாட்டீர்கள்.ஏனெனில் அதுவும் ஒரு மனமயக்கம்தானே
-
உலகின் உண்மை ஒரு கணம் அனுபூதியில் உணரப்பட்டுவிட்டால், அதன்பிறகு நீ எவ்வளவுகாலம் வாழ்ந்தாலும் ஏமாறமாட்டாய்
-
நீங்கள் மனவசியத்திலிருந்து விடுபட்டால், நீங்கள் ஓர் உடம்பு,ஆண்,பெண் போன்ற எண்ணங்கள் எல்லாம் அதனுடன் சேர்ந்தே விலகிவிடும்
-
நீங்கள் பரம்பொருளுடன் ஒன்று பட்டவர்கள் என்பது உங்களுக்குத்தெரியும். ஆனால் அதை அனுபூதியில் உணரவேண்டும்.அவ்வளவுதான்
-
எதிலிருந்து இந்த உலகம் வெளிப்பட்டுள்ளதோ,எதன்மீது இந்த நாடகம் நடைபெறுகிறதோ அதுவே பரம்பொருள்.உண்மையில் நாம் அவருடன் ஒன்றுபட்டவர்கள்
-
எல்லா ஆன்மாக்களுக்கும் ஆன்மா நானே.பசு,நாய்,மனிதன்,அரசன் எல்லோரிலும் இருப்பவன் நானே என்பதை மகான் உணர்கிறார்
-
உண்மையை தரிசித்தபின் உன்னிடமிருந்து இருள் அகன்றுவிடும். சந்தேகங்கள் அகன்றுவிடும்.செயல்களெல்லாம் உன்னைவிட்டு விலகிவிடும்
-
அனைத்திற்கும் அப்பால் பொன்னிறப் பேரொளி திகழ்கிறது.அவரே பிரம்மம்.அனைத்தையும் அறிபவரும் ஆன்மாவும் அவரே
-
யாருடைய இயல்பு பேரானந்தமோ,யார் மரணமிலாப் பெருநிலையாக ஒளிர்கிறாரோ அவரை முனிவர்கள் மேலான ஞானத்தின் மூலம் காண்கிறார்கள்
-
உடம்பின் ரத்தக் குழாய்கள் எல்லாம் இதயத்தில் கூடுகின்றன.அந்த இதயத்தில் ஓம் என்றும் மந்திரத்தை தியானம் செய்
-
நமது ஆன்மாவை பிரம்மத்துடன் ஒன்றுபடுமாறு செய்ய வேண்டும்.நீயே அவன் என்பதை உணர்வதன் மூலம் இதைச் செய்ய வேண்டும்
-
அந்த மேலான பரம்பொருள் எல்லோரின் உள்ளேயும் உறைகிறார்.அவரை அறிபவன் தளையிலிருந்து விடுபட்டு முக்தி அடைகிறான்
-
எங்கு சென்றால் மறுபடி பிறக்க வேண்டாமோ,எந்த இடத்தில் மாற்றங்கள் இல்லையோ, அந்த இடத்தை அறிய மேலோர்கள் விரும்புகிறார்கள்
-
உலகைத் துறந்து,புலன்களை அடக்கக் கற்றுக்கொண்டவர்கள் இறந்ததும் சூரியக் கிரணங்கள் வழியாக சென்று பரம்பொருள் வாழும் உலகை அடைகிறார்கள்
-
மாறாத இந்தப் பரம்பொருளிலிருந்தே பிரபஞ்சம் தோன்றியுள்ளது.முதலில் பரம்பொருளில் ஆசை எழுகிறது.பிறகு எல்லா உலகங்களும் தோன்றின
-
மகான்கள் அந்தப் பரம்பொருளைக் காண்கிறார்கள். அவரைக் காண்பதே மேலான ஞானம்
-
பரம்பொருளுக்கு கண்கள்,காதுகள்,கால்கள் இல்லை.அது எங்கும் நிறைந்தது.தனியானது. அதிலிருந்தே எல்லாம் வெளிவந்துள்ளது
-

சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்-பாகம்-12


சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்-பாகம்-12
-
சிற்றின்பம்,பேரின்பம் என இரண்டு வழிகள் உள்ளன.இதில் பேரின்ப வழியை தேர்ந்தெடுப்பவன் ஞானியாகிறான்
-
ஆன்மாவை அடைவதற்கான தகுதி எது? பார்வையை உள்ளே திருப்பி ஆன்மாவை அடையவேண்டும் என்ற ஆவல்தான் அதற்கான தகுதி
-
இந்த ஆன்மாவை பார்க்க வேண்டும் உணரவேண்டும்.ஆனால் நமது கண்களால் அதை காண முடியாது.தூயவர்களால் மட்டுமே அதை காண முடியும்
-
தொடக்கத்தில் என்ன இருந்தது? இருளை இருள் மூடியிருந்தபோது,இவற்றையெல்லாம் படைத்தது யார்? என்ற கேள்வி தான் முதலில் எழுந்தது
-
இந்த வான்வெளி மண்டலம் முழுவதும் தேடினாலும் பிறப்பு,இறப்புக்கான விடை கிடைக்காது.அதை நமக்குள்ளே தேட வேண்டும்
-
நம் உடம்பினுள் உள்ள அற்புத இயந்திரத்தை ஆராய்ந்தபோது பிரபஞ்ச ரகசித்தை அதற்குள் கண்டார்கள்
-
பல கோடி உயிர்களை நாம் பார்க்கிறோமே அவை எல்லாம் என்ன? ஒரே இறைவனின் பல கோடி பிரதிபிம்பங்கள்தான் இவை
-
நாம் இறைவனிடமிருந்து வேறுபட்டவர்கள். இறைவன்அல்ல.என்ற நினைப்பு இருக்கும் வரை இந்த உலகம் துக்கம் நிறைந்ததாகவே இருக்கும்
-
என் தலையில் இடி விழுந்தால் அந்த இடியும் நான்தான். ஏனெனில் இருப்பது நான் மட்டும்தானே.என்னை தவிர வேறு எதுவும் இல்லை
-
ஒருவன் மற்றொருவனுக்கு ஏன் தீமை செய்கிறான்? தனக்கு வரவேண்டிய இன்பத்தை மற்றொருவன் பறித்துவிடுவானோ என்ற அச்சம்தான் காரணம்
-
நானே அனைத்து உயிர்களுமாகியிருக்கிறேன் இதை அனுபவத்தில் உணர்ந்துவிட்டால்,எனக்கு மரணம் ஏது?எனக்கப்பால் வேறு எதுவும் இல்லையே
-
எல்லா கைளின் மூலம் நீ உழைக்கிறாய். எல்லா கண்களின் மூலம் நீ காண்கிறாய்.பலகோடி யிர்களின் மூலம் வாழ்வதும் நீதான்
-
காலின் கீழ் நெளியும் புழு முதல் மிக உயர்ந்த தேவன் வரை எல்லா உயிரினங்களின் உடல்கள் பலவானாலும் ஆன்மா ஒன்றுதான்
-
நான் ஏன் பிறரை நேசிக்க வேண்டும்? ஏனெனில் அவர்களும் நானும் ஒன்றல்லவா?இதனால்தான் அனைவரிடமும் அன்பாயிருக்க வேண்டும்
-
நான் எல்லையற்றவன் என்ற அனுபவம் உண்டான உடனேயே உண்மை அன்பு தோன்றும்,பயம் மறையும், துயரங்களெல்லாம் ஒழியும்
-
நான் பிரபஞ்சத்திலிருந்து வேறுபட்டவன். இறைவனிடமிருந்து வேறுபட்டவன் என்ற இந்தஎண்ணமே,இன்ப துன்பத்திற்கு முற்றிலும் காரணம்
-
எல்லா உயிர்களையும் நேசிக்கும் மாறாத அன்பும்,இரக்கமும்,ஆனந்தமும் மனிதனை எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்திவிடுகின்றன
-
பயம் ஒழிகின்ற அன்றுதான் முடிவற்ற இன்பமும் எல்லையற்ற அன்பும் நெஞ்சில் இடம்பெறும்
-
ஆன்மா என்ற நிலையில் உலகத்தில் ஒன்றே ஒன்றுதான் உள்ளது.அதுதான் பல்வேறு உடல்கள் மூலம் பல்வேறு ஆன்மாவாக பிரதிபலிக்கிறது
-
பிரபஞ்ச ஆன்மாவாக இருப்பது எதுவோ அதுவே நீ. நீ இறைவனின் அம்சம் அல்ல,முழுமை. இறைவனாகிய முழுமை நீயே
-
இந்த பிரபஞ்சம் முழுவதும் ஓர் உடம்பு.இதற்குபின் பிரபஞ்ச மனமும்,அதற்குபின் பிரபஞ்ச ஆன்மாவும் உள்ளன
-
தானே தானாக நிற்கும் இந்த ஆன்மா எங்கும் நிறைந்தது.ஏனெனில் இதற்கு உருவம் இல்லை.காலம், இடத்தால் கட்டுப்படுத்தப்படாதது
-

சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்-பாகம்-13


சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்-பாகம்-13
-
உடலுக்கும் மனத்திற்கும் உள்ளே அழியாத உண்மைப்பொருள் உள்ளது.இந்த பொருளுக்கு பிறப்பும் இல்லை,இறப்பும் இல்லை
-
பழைய காலத்தில் கடவுளை மக்கள் வெளியே தேடி அதனால் பயனில்லை என்று கண்டு,பின்பு அவரை தனக்குள்ளேயே தேடி கண்டுகொண்டார்கள்
-
ஞான ஆராய்ச்சி நமக்கு இன்பம் தரட்டும்,நம்மை காக்கட்டும்,நமக்கு ஆற்றலை தரட்டும்,நாம் ஒருவரை ஒருவர் வெறுக்காமல் இருப்போம்
-
மனத்தின் கோணல்கள் எல்லாம் நிமிர்ந்தவுடன்,இதயத்தின் முடிச்சுக்களெல்லாம் அறுபட்டவுடன், மனிதன் இறப்பற்றவன் ஆகிறான்
-
மனத்தை அலைக்கழிக்கும் ஆசைகளெல்லாம் அடங்கியபின்,இறக்கும் இயல்புடைய மனிதன் இறப்பற்றவன் ஆகிறான்.பிரம்மத்தை அடைகிறான்
-
ஒன்றேயான அந்தபரம்பொருளை யார் தனக்குள் காண்கிறானோ அவனுக்கே பேரின்பம் உரியதாகும்.வேறு யாருக்கும் அல்ல
-
கணத்திற்கு கணம் மாறிக்கொண்டிருக்கும் இந்த உலகில் மாறுதலற்ற ஒன்றை யார் அறிகிறானோ அவனுக்கே பேரின்பம் கிடைக்கிறது
-
உணர்வற்ற இந்த உலகில் உணர்வுப்பொருளான பரம்பொருளை யார் அறிகிறானோ அவனுக்கே பேரின்பம் கிடைக்கிறது
-
ஒன்றேயான இந்த பரம்பொருள் எல்லாவற்றிற்கும் ஆன்மாவாக இருந்தாலும்,வெளியே உள்ள தூய்மையின்மை அதை பாதிக்காது
-
வெளியே பார்க்கவேண்டும் என்ற கண்களின் ஆர்வத்தை குறைத்து,உள்ளே பார்ப்பது எப்படி என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்
-
அறிவுக்கு அப்பாற்பட்ட அழிவே இல்லாதவன் யாரோ,அவனை அறிவதால் மட்டுமே நாம் மரணத்திலிருந்து தப்ப முடியும்
-
நீ பயப்படாதே. விழித்தெழுந்து முயற்சியில் ஈடுபடு. லட்சியத்தை அடையும்வரை நில்லாதே
-
பாவச்செயல்களை செய்பவன்,மனம் அமைதிபெறாதவன், சஞ்சம் உடையவன், தியானம் செய்ய இயலாதவன் இவர்களால் ஆன்மாவை அடைய இயலாது
-
வேதங்களை ஓதுவதாலோ,கூர்ந்த அறிவாலோ ஆன்மாவை அடையமுடியாது.ஆன்மா யாரை தேடுகிறதோ அவனே அதை அடைவான்
-
சிறியதில் சிறியதாகவும்,பெரியதில் பெரியதாகவும் உள்ள இறைவன் எல்லா உயிர்களின் இதயக்குகையில் உறைகிறான்
-
நீ எதை அறிய விரும்புகிறாயோ அந்த ஆன்மா பிறப்பதும் இல்லை,இறப்பதும் இல்லை.அது உடல் அழிந்தாலும் அழிவதில்லை
-
யாரைக் காண மனிதன் பலவகை துறவுகளை மேற்கொள்கிறானோ அவரது பெயரை நான் சொல்கிறேன்.அதுதான் ஓம்.இதுவே அழிவில்லாத பிரம்மம்
-
ஆசிரியர் தெளிந்த ஞானம் இல்லாதவராக இருந்தால்,சீடன் நூறுமுறை உபதேசம் கேட்டாலும் ஆன்மாவை உணரமுடியாது
-
அறியாமையில் மூழ்கி,போகங்களில் உழல்பவனுக்கும் மிருகங்களுக்கும் வேற்றுமை இல்லை என்பதை நீ புரிந்துகொண்டிருக்கிறாய்
-

சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்-பாகம்-14


சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்-பாகம்-14
-
பரம்பொருளுடன் ஒன்றுபடுவதே உபநிடதம் நமக்கு காட்டும் ஒரே கருத்து.இந்த உலகமும் அதன் நாடகமும் மாயை.இவை இறைவன் அல்ல
-
பரம்பொருளுடன் ஒன்றுபடுவதே உபநிடதம் நமக்கு காட்டும் ஒரே கருத்து.இந்த உலகமும் அதன் நாடகமும் மாயை.இவை இறைவன் அல்ல
-
நீங்கள் சுதந்திரமாக இருக்கும்போது மாயையில் மாட்டிக்கொள்ளாமலே விளையாடலாம்.இப்போது நீங்கள் மாட்டிக்கொண்டிருக்கிறீர்கள்
-
பக்தியை பின்பற்றி இறைவனின் பாதங்களின் அருகே நின்றுகொண்டாலும் மாயை உன்னை பாதிக்காது
-
நாம் இந்த உலகமென்னும் மனவசியத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுபடவேண்டுமானால் வெளி எல்லையை கடந்து ஞானம் என்ற பகுதியில் இருக்க வேண்டும்
-
பிரபஞ்சம் என்னும் இந்த இந்திரஜாலத்தை இறைவனே உண்டாக்கி விளையாடிக்கொண்டிருக்கிறார்.இந்த ஜாலங்களை உருவாக்கும் சக்தியே மாயை
-
எல்லாம் மனமயக்கம்.மனிதன்,மிருகங்கள் எல்லாமே மனவசியத்தில் ஆழ்ந்திருக்கின்றன.எல்லோரும் ஒரே நிலையில் இருப்பதால் ஒரே மாதிரி காண்கிறோம்
-
பிரபஞ்சம் முழுவதுமே மனவசியத்திற்கு உள்ளாகியிருப்பதாக வேதாந்த தத்துவம் கூறுகிறது. இதற்கு காரணம் யார்? நாமே
-
உன்னை மனவசியப்படுத்தி,இங்குள்ள புத்தகங்களை இல்லை என்று நம்பசெய்துவிட்டால்,நீ ஒருவருடம் இங்கிருந்தாலும் அதை காணமுடியாது
-
நீங்களே உங்களை மனவசியத்தில் ஆழ்த்திக்கொண்டு, உங்களை ஆண்,பெண் என்றெல்லாம் நினைத்துக்கொள்கிறீர்கள்
-
சொர்க்கம் நரகம் மட்டுமல்ல இந்த வாழ்க்கையும்கூட மனமயக்கமே என்று வேதாந்தி கூறுகிறான்
-
இந்த உலகம் உண்மை என்றால், சொர்க்கம் நரகம் போன்றவையும் உண்மையே.அவைகள் மனவசியம் என்றால் இதுவும் மனவசியமே
-
சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்ற மனவசியத்தில் என்னை ஆழ்த்திக்கொண்டால் இறந்தபின் சொர்க்கத்திற்கு செல்வதாகக் காண்கிறேன்
-
சச்சிதானந்த வடிவினரான பரம்பொருளே உண்மை. அவரே குரு.இந்த கனவுகளிலிருந்து விடுபட விரும்புபவரும் அவரே
-
சொர்க்கம் என்பது ஒரு கனவு.நரகம் என்பது இன்னொரு கனவு.இவ்வுலக வாழ்க்கை என்று எதை அழைக்கிறோமோ அதுவும் ஒரு கனவுதான்
-
சொர்க்கம்,நரகம் போன்ற முட்டாள்தனங்களையெல்லாம் விட்டுவிடுவதுதான் அறிவுள்ள சிந்திக்த்தெரிந்த மனிதனுக்கு அழகு
-
சொர்க்கம் போக வேண்டும் என்று வாழ்க்கை முழுவதும் கனவு கண்டவர்கள்,இறந்த பின் கனவுகண்ட சொர்க்கத்திற்கு செல்கிறார்கள்
-
ஆன்மாவிற்கு பிறப்போ இறப்போ கிடையாது.அது எங்கும் நிறைந்தது.அது நீங்களே.நீங்கள் எங்கும் இருக்கிறீர்கள்
-

பிரகிருதியும் புருஷனும்-vol1-prakriti and purusha-sankhya philosophy