இந்தியாவை இழிவாக பேசிய மிஷனரிகளை சுவாமிஜி மிகவும் தாக்கிப்பேசினார்

ஒரு நாள் எனது வாழ்வும் பணியும் என்ற தலைப்பில் சுவாமிஜி பேசினார். இந்தியாவை இழிவாக பேசிய மிஷனரிகளை சுவாமிஜி மிகவும் தாக்கிப்பேசினார். அவர் வட்டார வழக்கத்தில் உள்ள வசை மொழிகளை இந்த சொற்பொழிவில் பயன்படுத்தினார். சொற்பொழிவு முடிந்த பின்பு ஹேன்ஸ்ப்ரோவிடம்” சொற்பொழிவு எப்படி இருந்தது என்று கேட்டார்? நன்றாக இருந்தது. ஆனால் கேட்பவர்களின் அதிருப்தியை சம்பாதித்துவிட்டீர்களோ என்று அஞ்சுகிறேன் என்றார் ஹோன்ஸ்ப்ரோ.
அவரது அச்சத்தை தனது உதாசீனச்சிரிப்பு ஒன்றாலே உதறிய சுவாமிஜி, மேடம், எனது பேச்சால் அதிருப்தியுற்று கேட்பவர்கள் மொத்தமாக எழுத்து வெளியே சென்ற நிகழ்ச்சிகள் கூட நியூயார்க்கில் நடைபெற்றதுண்டு. எனவே இது ஒன்றும் எனக்குப் புதிதல்ல என்றார்
--
விவேகானந்தர் விஜயம் ---சுவாமி வித்யானந்தர்
-
🌿 சுவாமி விவேகானந்தர் வாட்ஸ் அப் குழு 97 89 37 41 09

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?