வேதாந்த விளக்கம்- சுவாமி விவேகானந்தர்-பகுதி-14

வேதாந்த விளக்கம்- சுவாமி விவேகானந்தர்-பகுதி-14
-
ஆஹார சுத்தௌ ஸத்வசுத்தி சுத்தௌ த்ருவா ஸ்மிருதி.....(சாந்தோக்கிய உபநிடதம் 7.26.2)
-
”தூய உணவு தூய மனத்தையும்,தூய மனம் இடையீடற்ற இறைநிலையையும் தோற்றுவிக்கின்றன”
-
பக்தனாக விரும்புபவன் உணவில் சில கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்.ஒவ்வொரு தனி மனிதனையும் ஒருவித ஒளி சூழ்ந்துநிற்கிறது. அவன் எதைத்தொட்டாலும்,அவனது இயல்பிள் ஒரு கூறு,அதாவது அவனது குணம் அந்தப்பொருளில் பதிகிறது. ஆகவே உணவை சமைக்கும்போது யார் தொடுகிறார்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். தீயவர்களோ, ஒழுக்கமற்றவர்களோ அதைத் தொடக்கூடாது.
-
பக்தனாக விரும்புபவன் தீயவர்களுடன் அமர்ந்து உணவு உண்ணக்கூடாது. ஏனெனில் அவர்கள் தொட்ட உணவு மூலம் தீயபண்புகள் பக்தனுக்கு வந்துசேரும்.ஒருவர் சாப்பிட்டு கொடுக்கும் எச்சில் உணவை சாப்பிடக்கூடாது.உமிழ்நீர் மூலம் ஒருவரது குணம் இன்னொருவருக்கு எளிதாக பரவும்.ஒருவர் சாப்பிட்ட ஆப்பிள் போன்ற உணவின் மறுபகுதியை இன்னொருவர் சாப்பிடுவது அருவருக்கத்தக்க செயல்.இது ஒருவனது குணத்தை பாதிக்கிறது.
-
அடுத்ததாக உணவில் அழுக்கு,தூசி,போன்றவை இருக்கக்கூடாது
-
complete works of swami vivekananda (தமிழ்) புத்தகம் 1.பக்கம்242
--
---விவேகானந்தர் விஜயம்--- சுவாமி வித்யானந்தர் 97 89 37 41 09

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?