இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-31


இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-31
(சுவாமி விவேகானந்தர்)
-
கொள்கைவெறி
----
வெறியர்களில் பலவகையினர் இருக்கிறார்கள்.பிறருடைய பெட்டியையோ,பணத்தையோ திருடுவது ஒரு திருடிக்கு தவறாக தோன்றாது,ஆனால் அவளுக்கு சிகரெட் பிடிக்காது.ஆகவே சிகரெட் பிடிப்பவர்களை கடுமையாக வெறுக்கிறாள்.பிறரை ஏமாற்றுவதையே தொழிலாகக்கொண்ட ஒருவன் இருக்கிறான்,ஆனால் அவனுக்கு குடிகாரர்களை கண்டால் பிடிக்காது.சாராயம் குடிப்பவன் நல்லவனே அல்ல என்று அவன் பேசுவான்.தான் செய்கின்ற ஏமாற்று வேலைகளை பற்றி அவர்கள் எண்ணுவதில்லை
--
கொள்கை வெறியர்களுக்கு நூற்றுக்கு தொண்ணுறுபேருக்கு கல்லீரல் நோயோ அல்லது ஜீரணகோளாறு நோயோ,வேறு வகை நோயோ இருக்க வேண்டும்.எந்த வகை வெறியானாலும் சரி,வெறியின் அடிப்படையில் தோன்றுகின்ற சீர்திருத்தங்களை விலக்குவதே அறிவுடைமை.இதை நான் அனுபவத்தில் கண்ட உண்மை.
--
உலகம் மெதுவாக சென்று கொண்டிருக்கிறது. அவசரப்படாதீர்கள். நன்றாக தூங்குங்கள்,நரம்புகளை நல்ல நிலையில் வைத்துக்கொள்ளுங்கள்,தகுந்த உணவை உட்கொள்ளுங்கள்,உலகிடம் அனுதாபம் கொள்ளுங்கள்.வெறியர்கள் வெறுப்பையே வளர்க்கிறார்கள்.வெறியர்களின் கூட்டத்திலிருந்து வெளியேறிய பிறகே அன்பும் பரிவும் காட்டுவது எப்படி என்பதை அறிவீர்கள்.
--
மனிதனுக்கு நம்பிக்கை மட்டும்போதாது,அது அறிவுக்கு ஏற்றதாக இருக்கவேண்டும். எல்லாவற்றையும் ஒருவன் நம்பவேண்டும் என்று சொல்வது அவனை பைத்தியமாக்கிவிடும்.
---சுவாமி விவேகானந்தர்

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?