இந்தியா உலகை வெல்லும்

இந்தியா உலகை வெல்லும்
-
நல்வாழ்த்துக்கள் தான் இந்தியா உலகிற்கு விடுக்கும் முதல் செய்தி. தனக்கு செய்த தீமைகள் அனைத்திற்கும் அது நன்மையையே திருப்பிக் கொடுத்தது. இதன் மூலம் இந்த உன்னதமான கருத்தை உலகிற்கே வழங்கியது. தீமைக்குப் பதிலாக நன்மை செய்தல் என்ற கருத்து உருவாகியதே இந்தியாவில்தான்.இறுதியாக அமைதி,நன்மை,பொறுமை,மென்மை இவையே கடைசியில் வெல்லும் என்பது தான் இந்தியாவின் செய்தி. இந்தப் பூமியையே ஒரு காலத்தில் அரசாண்ட கிரேக்கர்கள் எங்கே? தனது படைவீரர்களால் உலகையே நடுங்கச்செய்த ரோமானியர்கள் எங்கே? எல்லோரும் மறைந்துவிட்டார்கள்.அட்லாண்டிக்முதல் பசிபிக் வரை ஐம்பது வருடங்களாக கொடிகட்டி பறந்த அரேபியர்கள் எங்கே? லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்த ஸ்பானிஷ்காரர்கள் எங்கே? ஆனால் இந்திய மக்களின் ஒழுக்கம் சிறப்பு வாய்ந்தது. கருணைமிக்க இனம் ஒருபோதும் அழிவதில்லை.எனவே இந்தியா வெற்றிபெறவே செய்யும்.
--
சுவாமி விவேகானந்தர்
-
complete works of swami vivekananda (தமிழ்) புத்தகம் 8.பக்கம் 90


Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?