என்ன செய்தார் சுவாமி விவேகானந்தர்-பகுதி-4

என்ன செய்தார் சுவாமி விவேகானந்தர்-பகுதி-4
--
இந்தியாவின் குடிசைவாழ் மக்கள் வெளிநாட்டிலிருந்து வந்த முஸ்லீம்களின் காலடியிலும்,கிறிஸ்தவர்களின் காலடியிலும் ,அது மட்டுமல்ல சொந்த நாட்டு மக்களே ஏற்படுத்திய சாதி கொடுமையினாலும் மிதிபட்டு,நாம் இவ்வாறு மிதிபட்டு சாவதற்கே பிறந்திருக்கிறோம் என்று வாழ்ந்து வந்த காலத்தில், அவர்களின் தனித்துவத்தை மீண்டும் அவர்களுக்கு கொடுக்க வேண்டும் .அவர்கள் சமஅந்தஸ்துடன் வாழவேண்டும் என்று சுவாமிஜி விரும்பினார்.
-
அதற்காக அவர் வகுத்த திட்டம்தான்,ஒவ்வொரு கிராமத்திலும் இலவசபள்ளிகளை ஏற்படுத்துவது. அந்த காலத்தில் குடிசைமக்கள் சிறுவர்கள் முதல்,ஆண்கள்,பெண்கள் என அனைவரும் முதுகொடிய வேலை செய்து கால்வயிறு உணவை பெற்றார்கள்.ஆகவே இவர்களுக்கு கல்விசாலைகளை ஏற்படுத்தினாலும்,இவர்களால் வந்து படிக்க முடியாது என்பதை புரிந்து கொண்டார்.ஆகவே இவர்கள் கல்வி சாலைக்கு வரவேண்டியதில்லை. கல்வி இவர்களை தேடி இவர்களின் குடிசைக்கு செல்ல வேண்டும் என்று விரும்பினார். அதையே அவர் தமது சீடர்களுக்கு கடிதங்கள் வாயிலாக எழுதினார்.
-
சுயநலமற்ற ஆண்களையும் பெண்களையும் நூற்றுக்கணக்கில் ஒன்று சேருங்கள் அவர்களை ஏழைகள் வாழும் குடிசைகளுக்கு அனுப்புங்கள்,அவர்கள் தங்கள் வேலையை முடித்துவிட்டு வந்த பிறகு அவர்களுக்கு கல்வி கற்பியுங்கள்.அதுவும் எப்படிப்பட்ட கல்வி? அரசியல்,வரலாறு,புவியியல்,மதம்,சுயதொழில் போன்றவை.
இவ்வாறு கல்வி கற்பதனால் அவர்களுக்கு தன்னம்பிக்கை வரும். நாம் யாருக்கும் தாழ்ந்தவர்கள் அல்ல என்ற சுயமரியாதை வரும்.
-
அதேபோல் பெண்களுக்கும் கல்வி கற்பிக்க வேண்டும். இந்தியாவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உள்ள அதிகப்படியான வேறுபாட்டை கண்டு வேதனைப்பட்டார். ஒவ்வொரு மனிதனும் இறைவன் இருக்கிறார்.அவர் ஆணிலும் பெண்ணிலும் சமமாகவே இருக்கிறார்.அப்படி இருக்கும் போது பெண்களை இவ்வாறு அடிமைப்படுத்தி வைப்பது நியாயமா? என்று கேட்டார்.பெண்களுக்கு தனியாக பள்ளிகளை ஆரம்பிக்க விரும்பினார்.எந்த நாட்டில் பெண்கள் ஆண்களுக்கு சமமாக நடத்தப்படவில்லையோ அந்த நாடு விரைவில் அழிந்துவிடும் என்று கூறினார்.
--
-விவேகானந்தர் விஜயம் ---சுவாமி வித்யானந்தர்
-
🌿 சுவாமி விவேகானந்தர் வாட்ஸ் அப் குழு 97 89 37 41 09

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?