சுவாமி விவேகானந்தரிடம் கேளுங்கள்-பகுதி-7

சுவாமி விவேகானந்தரிடம் கேளுங்கள்-பகுதி-7
-
கேள்வி..சாதாரண துறவி,உயர்ந்த துறவி என்று துறவிகளில் ஏதாவாது வேறுபாடு உள்ளதா?துறவி என்றால் காடுகளில் தானே வாழவேண்டும். மக்கள் நடமாடும் பகுதிகளில் அவர்களுக்கு என்ன வேலை?
--
சுவாமிஜி...சாதாரண துறவி உலகத்தைத் துறந்து வெளியே(காடு,குகை) சென்று கடவுளைப்பற்றி நினைக்கிறான்.உண்மைத்துறவி உலகத்திறேயே வாழ்கிறான்.ஆனால் உலகத்தால் கட்டுப்படாதவனாக இருக்கிறான்.உலகத்தை மறுத்து காடு சென்றதும் நிறைவுறாத ஆசைகளை எண்ணி எண்ணி இன்பமடைபவர்கள் உண்மைத்துறவிகள் அல்ல. வாழ்க்கைப்போரின் மத்தியில் வாழ். குகைகளில் வாழும்போதும்,அங்கே தூங்கும்போதும் யாரும் அமைதியாக இருக்க முடியும்.செயல்வெறி என்னும் சுழலில் நின்று,மையத்தை(யோகம் அல்லது உடல் உணர்வு அற்றநிலை) சென்று சேர்.மையத்தை அடைந்துவிட்டால்,உலகில் உன்னை எதுவும் அசைக்க முடியாது.
---
complete works of swami vivekananda (தமிழ்) புத்தகம் 1.பக்கம்232
--
----விவேகானந்தர் விஜயம் ---


Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?