இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-36


இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-36
(சுவாமி விவேகானந்தர்)
-
ஒரே மனதாகக் குற்றத்தை மனிதனின் மீதே சுமத்தினார்கள் அது அவர்களுக்குச் சுலபமாகவும் இருந்தது.
-
ஏன்? ஏனென்றால் நான் சற்றுமுன் சொன்னது போல், சூன்யத்திலிருந்து ஆன்மாக்கள் படைக்கப்பட்டதாக இந்துக்கள் நம்பவில்லை.
-
நம்முடைய எதிர் காலத்தை நாமே உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதை இந்த வாழ்க்கையில் பார்க்கிறோம். நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும், மறு நாளுக்கான ஏற்பாடுகளைச் செய்யவே முயன்று கொண்டிருக்கிறோம்.
-
இன்று, நாளைய விதியை நிர்ணயிக்கிறோம். நாளை, நாளைக்கு அடுத்த நாளின் விதியை நிர்ணயிப்போம். இவ்வாறே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
-
இந்த வாதத்தை இறந்த காலத்திற்குப் பொருத்திப் பார்ப்பது, நியாயமானதே.
-
நாம் நமது செயல்களாலேயே நம் எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்கிறோம் என்றால், அதே விதியை இறந்தகாலத்திற்கும் ஏன் பொருத்திப் பார்க்கக்கூடாது?
(இப்போது கடினமாக உழைத்தால் எதிர்காலத்தில் நன்றாக இருக்கலாம் என்பது போல, இப்போது நாம் மோசமாக இருப்பதற்கு காரணம் என்ன?, இதற்கு முன் கடினமாக உழைக்கவில்லை என்பது புரிகிறது. அது முற்பிறவியாக கூட இருக்கலாம்)
நாம் இப்போது காண்பதுபோல் எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும் என்பது உண்மையானால், இப்போது இருக்கும் நாம், நம்முடைய இறந்தகாலச் செயல்கள் முழுவதன் பலனே என்பதும் உண்மையாகத்தான் இருக்க வேண்டும்.
-
ஆகவே மனிதகுலத்தின் விதியை நிர்ணயிப்பதற்கு, மனிதனைத் தவிர வேறு யாருமே தேவையில்லை.
-
உலகிலுள்ள தீமைகள் எல்லாவற்றிற்கும் நாம்தான் காரணம். தீய செயல்களின் பலனாகத் துன்பங்கள் வருவது நமக்குத் தெரிகிறது. எனவே இப்போது உலகில் காணப்படும் துன்பங்களுக்கு, மனிதன் முன்பு செய்த தீய செயல்கள்தாம் காரணமாக இருக்க வேண்டும். இந்தக் கருத்தின்படி, மனிதனே எல்லா துன்பங்களுக்கும் காரணம்,
-
கடவுள்மீது பழி சுமத்தக் கூடாது.
-
. எதை நாம் விதைக்கிறோமோ அதையே அறுப்போம்.
-
--
தொடரும்...

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?

Gemini AI and I Scientific Research Papers-6