3.இந்து மதத்தைத் தோற்றுவித்தவா்

🕉️இந்துமதம்-வகுப்பு-3🕉️
நாள்--22-5-2020
3.இந்து மதத்தைத் தோற்றுவித்தவா்.
-
இந்தியாவில் தோன்றிய ஒவ்வொரு தீர்க்கதரிசியும் ஒவ்வொரு மதத்தை உருவாக்கியுள்ளார்கள்.
ஒவ்வொரு நூற்றாண்டிலும் பல மதங்கள் புதிதாக தோன்றுகின்றன.
பெரிய மதங்கள் பல பிரிவுகளாக பிரிவதுண்டு,
சைவம்,வைணவம் போன்ற மதங்கள் பல பிரிவுகளாக பிரிந்து வளர்ந்தது
அதேபோல காலப்போக்கில் பல மதங்கள் ஒன்றிணைந்து ஒரே மதமாக உருவாதும் உண்டு.
ஆதிசங்கர் வாழ்ந்த காலத்தில் வேதத்தை அடிப்படையாகக் கொண்ட 78 மதங்கள் இருந்தன.
ஆதி சங்கரர் அவைகளை ஒன்றிணைத்து ஆறு மதங்களுக்குள் கொண்டு வந்தார்.
பல மதங்கள் காலப்போக்கில் அழிந்துபோனதும் உண்டு
..
வேதத்தை சாராத மதங்களும் இந்தியாவில் இருந்தன.அவைகளில் முக்கியமானது புத்தமதம்,சமணமதம்
இந்தியாவில் எண்ணற்ற மதங்கள் தோன்றியுள்ளன.இனியும் பல மதங்கள் தோன்றும் என்பதைப் பார்க்கிறோம்.
..
எண்ணற்ற மதங்கள் புதிதாக தோன்றும்போது அவைகளுக்குள் சண்டைகள் ஏற்படுவதும் இயல்பானதுதான்.
வெளிநாடுகளில் இப்படி புதிய மதம் தோன்றும்போது,தங்களுக்குள் அடித்துக்கொண்டு இறந்துபோவார்கள்.
இந்தியாவிலும் ரிக் வேத காலத்திலேயே இந்த பிரச்சினைகள் உருவாக ஆரம்பித்துவிட்டது.
அந்த காலத்தில் இதற்கான தீர்வும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதுதான் “ஏகம் சத் விப்ரா பகூதா வதந்தி”
இறைவன் ஒருவன்தான்.மகான்கள் பல பெயர்களில் அழைக்கிறார்கள்.
ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு பாதையைக் காட்டுகிறது.
எல்லா நதிகளும் சமுத்திரத்தை சென்றடைந்து அதில் ஒன்றாகிவிடுகிறது.
எனவே மதத்தின் பெயரில் யாரும் சண்டையிடத்தேவையில்லை.
எல்லா பாதைகளும் அந்த ஒரே இறைவனையே சென்று சேர்கின்றன.
என்பதை ரிஷிகள் ஆதி காலத்திலேயே கண்டு,மக்களிடம் போதித்துள்ளார்கள்.
எனவே இந்தியாவில் அனைத்து மதத்தினரும் ஒன்றுமையாக வாழ முடிகிறது.
..
இந்தியாவில் தோன்றிய ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு பாதையை காட்டினாலும்,
சில அடிப்படைகள் அனைத்திலும் ஒன்றுபோலவே இருக்கின்றன.
இவைகள் எக்காலத்திலும் மாறுவதில்லை.
உதாரணமாக மறுபிறப்புக்கொள்கை,கர்மகோட்பாடு,முக்தி,பிறருக்கு சேவை செய்வது,உயிர்களிடம் கருணை,நற்குணங்கள்,விருந்தினர்களை உபசரிப்பது,உயிர்களைக் கொல்லாமை போன்ற பலவற்றை கூறலாம்.
இந்த தர்மம் என்பது எப்போதுமே மாறுவதில்லை
ஒரு மனிதன் மதம் மாறலாம்.ஆனால் தர்மங்கள் மாறுவதில்லை.
உதாரணமாக உயிர்களைக்கொல்வது பாவம் என்ற தர்மம் நிரந்தரமான உண்மை.
எந்த மதத்தை ஒருவன் பின்பற்றினாலும் இது பொருந்தும்.
பொய் சொல்வது பாவம் என்ற தர்மம் எல்லா மதத்திற்கும் பொதுவானது.
எனவே எண்ணற்ற மதங்கள் இந்தியாவில் தோற்றினாலும், இந்த தர்மங்கள் என்றும் நிலையாக இருக்கின்றன.
எனவே இதற்கு சனாதன தர்மம் என்று பெயர்
இந்தியாவில் ஒருவன் ஒரு மதத்தைவிட்டு இன்னொரு மதத்திற்கு மாறினால்கூட பாவமாக கருதப்படுவதில்லை.
அவனுக்கு பிடித்த பாதையை தேர்ந்தெடுத்துள்ளான் என்று விட்டுவிடுகிறோம்.ஆனால் தர்மத்தை விட்டுவிட்டால் அது பாவமாகக் கருதப்படுகிறது.
..
இந்த சனாதன தர்மம் என்பதைத்தான் இந்துமதம் என்று அழைக்கிறோம்.
சைவம்,வைணவம்,சாக்தம்,கௌமாரம்,புத்தம்,சீக்கியம் என்று எத்தனை மதங்கள் இருந்தாலும்,இவைகள் அனைத்தும் சனாதன தர்மத்திற்கு உட்பட்டவைதான்.
சனாதன தர்மம் நிரந்தரமானது.தொன்றுதொட்டு வருவது.
இவைகளை எந்த மனிதனும் தோற்றுவிப்பதில்லை.
பொய் சொல்வது பாவம்,உயிர்களைக்கொல்வது பாவம் என்பதை ஒரு மனிதன் கண்டுபிடிக்கத்தேவையில்லை.
இவைகள் நிரந்தரமான உண்மைகள்.
எனவே இந்துமதம் என்பது மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்ட மதம் அல்ல.
அது காலம் காலமாக இருந்துவருகின்றன தர்மம்
..
இந்தியாவில் தோன்றிய,இனி தோற்றப்போகின்ற அனைத்து மதங்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு வார்த்தைதான் சனாதன தர்மம் அல்லது இந்துமதம்.
மதம் என்றால் என்ன? நம்பிக்கை
இந்தியாவின் நம்பிக்கை என்ன?
இறைவன் ஒருவன்தான்.பாதைகள் வேறு வேறு.
இதுதான் ஹிந்துமதம்.
ஹிந்து மதம் என்ற உடன் தனியான வழிபாடு,சடங்குள்,கடவுள் என்று எதுவும் இல்லை.
இறைவன் ஒருவன்தான்.பாதைகள் வேறு வேறு என்று யாரெல்லாம் நம்புகிறார்களோ அவர்கள் எல்லாம் ஹிந்துக்கள்.
அவர்கள் சிவனை வழிபடலாம்,விஷ்ணுவை வழிடலாம்,காளியை வழிபடலாம், மேலான ஒளியை வழிபடலாம் எப்படி இருந்தாலும் அவர்கள் அனைவரும் நம்பிக்கையால் ஹிந்துக்கள்.
-
எனது மதம்தான் உயர்ந்தது. எனது கடவுள்தான் உயர்ந்தவர். எனது பாதைதான் உயர்ந்தது.மற்றது எல்லாமே தாழ்ந்தது.மற்ற வழிபாடுகள் தாழ்ந்தது.பிற பாதைகள் தாழ்வானவை அல்லது தவறானவை என்று யாரெல்லாம் நினைக்கிறார்களோ அவர்கள் அறிவில்லாதவர்கள்.மூடநம்பிக்கை உடையவர்கள்.கொள்கை வெறி பிடித்தவர்கள்.அவர்களை நாம் அலட்சியப்படுத்திவிட வேண்டும்
-
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ஹிந்து என்பது யாரைக்குறிக்கும்?
என்ற கேள்வி ஆட்சியல் இருந்தவர்களிடம் ஏற்பட்டது.
அப்போது அவர்கள் அதற்கு ஒரு தெளிவாக விளக்கத்தை கொடுத்துள்ளார்கள்.
இந்தியாவில் வசிக்கும் மக்களில் முஸ்லீம்கள்,கிறிஸ்தவர்கள்,பார்சிகள்,யூதர்கள் அல்லாத அனைவரும் ஹிந்துக்கள்.
இதை நாம் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி யாரெல்லாம் ஹிந்துக்கள்?
முஸ்லீம்கள்,கிறிஸ்தவர்கள்,பார்சிகள்,யூதர்கள் தவிர வேறு எல்லோரும் ஹிந்துக்கள்
-
ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருந்தால் இந்தியாவை நம்மால் கைப்பற்ற முடியாது என்ற எண்ணத்தில் வெளிநாட்டு சக்திகள் செயல்பட்டு வருகின்றன.
அவர்களின் எண்ணங்களை இங்குள்ள அரசில்வாதிகள்மூலம் செயல்படுத்த நினைக்கிறார்கள்.
அதாவது சைவர்கள் ஹிந்துக்கள் அல்ல. வைணவர்கள் ஹிந்துக்கள் அல்ல. தென்னிந்தியாவில் வசிப்பவர்கள் ஹிந்துக்கள் அல்ல.சிறு தெய்வங்களை வணங்குபவர்கள் ஹிந்துக்கள் அல்ல.ஹிந்துதமதம் என்பது பிராமணமதம்,அது இந்தியாவின் மதம் அல்ல,அது தமிழ்நாட்டின் மதம் அல்ல இதுபோல பொய் பிரச்சாரத்தை இப்போது முன்னெடுத்துள்ளார்கள்.
இது ஒருபோதும் வெற்றி பெறக்கூடாது

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?

Gemini AI and I Scientific Research Papers-6