அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு - அன்னை ஸ்ரீசாரதாதேவி கல்கத்தாவில் ஜெயராம்பாடி என்ற கிராமத்தில் 1853 டிசம்பர் 22 ஆம் நாள் ராமசந்திர முகர்ஜிக்கும் சியாமா சுந்தரி தேவிக்கும் முதற்குழந்தையாகப் பிறந்தார். நாட்டுப்புறத்தில் வளரும் மற்ற பெண் குழந்தைகளைப்போன்று இளைய குழந்தைகளை கவனித்துக்கொள்ளுதல்,மாடுகளைப்பேணுதல்,வயலில் வேலை செய்யும் தந்தைக்கும் மற்றவர்களுக்கும் உணவு கொண்டு செல்லுதல் போன்ற வீட்டு காரியங்களில் இவருடைய இளமை பருவம் கழிந்தது. இவர் பள்ளி சென்று படித்ததில்லை.ஆனால் பிற்காலத்தில் தம் சொந்த முயற்சியால் சிறிது படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார். - அந்த காலத்தில் இளமை திருமணங்களை சமுதாயம் ஆதரித்தது. சிலவேளைகளில் பெண் சிறியவளாகவும் ஆண், வயது முதிர்ந்தவராகவும் இருப்பதுண்டு. ஆண்கள் மறுமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்,பெண்களுக்கு அந்த உரிமை இல்லை. சாதராவுக்கு ஐந்து வயதாக இருக்கும்போது திருமணம் நடந்தது.அப்போது ஸ்ரீராமகிருஷ்ணருக்கு வயது 23. பெண் பெரியவளாக வளர்ந்த பிறகுதான் மாப்பிள்ளைவீட்டிற்கு செல்வது வழக்கம். சாரதாதேவி தமது 19வது வயதிற்கு பிறகே ராமகிருஷ்ணருடன் சேர்ந்து வாழ ...
சுவாமி விவேகானந்தருக்கு நோய் வந்தது எதனால்? அவர் சிறுவயதில் இறந்தது ஏன்? - ராஜயோகம் பயில்பவர்கள் தனிமையில்,அமைதியான வாழ்க்கையை நாடி சென்றுவிடுவார்கள்.ஆகவே அவர்களுக்கு நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு.உடல் நலன் பாதிக்கப்பட்டால் அதை சரி செய்யவும் அவர்களால் முடியும். - பக்தியோகத்தில் செல்லும் ஒருவருக்கு உடல் நலன் பாதிக்ப்பட்டால் அது இறைவன் தந்த பரிசு என்று நினைத்து அதை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்வார்கள்.அதை நீக்கவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்ய மாட்டார்கள் - ஞான யோகத்தில் செல்பவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்படால் அதைக்குறித்து கவலைப்பட மாட்டார்கள்.உடல் என்பது பொய்த்தோற்றம் என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது என்று நினைப்பார்கள். - கர்மயோகத்தில் செல்லும் ஒருவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டால். தன்னுடைய முன்வினை பயன்களால்தான் இவ்வாறு நடக்கிறது அவைகளை அனுபவிப்பதன் மூலம் பாவங்கள் போகும் என்று நினைப்பார்கள்.ஆகவே அதற்காக வருத்தப்பட மாட்டார்கள். - சுவாமி விவேகானந்தர் இந்தியாவில் பிச்சையேற்று வாழும் நாட்களில், சரியான உணவு கிடைக்கவில்லை. அந்த காலத்தில் பட்டினியால் பல லட்சம் ...
Comments
Post a Comment