வேதாந்த விளக்கம் –சுவாமி விவேகானந்தர்-பகுதி-9

வேதாந்த விளக்கம் –சுவாமி விவேகானந்தர்-பகுதி-9
-
கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன.....(கீதை2.47)
-
”செயல்புரியவே உனக்கு உரிமை உள்ளது.ஆனால் அதன் பலன்களைப்பெறுவதற்கு உரிமை இல்லை”
-
இயற்கையின் அஸ்திவாரத்தின் ஒரு பகுதியே செயல் அது எப்போதும் நடந்துகொண்டேதான் இருக்கும்.இந்தப்பிரபஞ்சம் எப்போதும் நடந்துகொண்டிருந்தாலும் நமது லட்சியம் சுதந்திரம்,நமது லட்சியம் சுயறலமின்மை.கர்மயோகத்தின் படி செயல்புரிவதன் மூலம் அந்த லட்சியத்தை அடையவேண்டும்.இந்த உலகை முற்றிலும் இன்பமயமாக்குவது போன்ற கருத்துக்கள் எல்லாம் கொள்கை வெறியர்களுக்கு தூண்டு சக்திகள் என்ற அளவில் நல்லவையாக இருக்கலாம்.ஆனால் கொள்கைவெறி நன்மையையும்,தீமையையும் கொண்டுவருகிறது.கர்மயோகி சாதாரண லட்சியங்களை கடந்தவனாக இருக்க வேண்டும். ”செயல்புரியவே உனக்கு உரிமை உள்ளது.ஆனால் அதன் பலன்களைப்பெறுவதற்கு உரிமை இல்லை”
நாம் நன்மை செய்வோம் ஏனென்றால் நன்மை செய்வது நல்லது. சொர்க்கத்திற்கு போவதற்காக நன்மை செய்தாலும் அது நம்மை பந்தத்தில் ஆழ்த்திவிடும்.நமது செயல்களில் சுயநலம் இருக்குமானால் அது சுதந்திரத்தை தருவதற்கு பதிலாக புதிதாக ஒரு பந்த்தில் பிணைக்கிறது.
எனவே கர்ம பலன்களை எல்லாம் விட்டுவிடுங்கள்.அதில் பற்றுகொள்ளாதீர்கள்.இது ஒன்றே வழி.
-
complete works of swami vivekananda(தமிழ்)புத்தகம்1.பக்கம்139)
-
விவேகானந்தர் விஜயம்-

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?