வாழ்வில் நடந்த சில சம்பவங்கள்--பகுதி-29
சுவாமி விவேகானந்தர் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள்--பகுதி-29
-
-
"முட்டாள்களை சந்திப்பது முதல் தடவையல்ல!"
--
ராஜபுதனத்தில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார் சுவாமிஜி. அந்தப் பெட்டியில் அவரைத் தவிர இரண்டு வெள்ளையர்கள் இருந்தனர். சுவாமிஜியி ஆங்கிலம் அறியாதவர் என்றெண்ணி அவரைக் கேவி செய்தும் ஏசியும் சிரித்தபடி வந்தனர். சுவாமிஜி அமைதியாக இருந்தார். தமக்கு ஆங்கிலம் தெரிந்தது போலவே காட்டிக் கொள்ளவில்லை.
--
ராஜபுதனத்தில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார் சுவாமிஜி. அந்தப் பெட்டியில் அவரைத் தவிர இரண்டு வெள்ளையர்கள் இருந்தனர். சுவாமிஜியி ஆங்கிலம் அறியாதவர் என்றெண்ணி அவரைக் கேவி செய்தும் ஏசியும் சிரித்தபடி வந்தனர். சுவாமிஜி அமைதியாக இருந்தார். தமக்கு ஆங்கிலம் தெரிந்தது போலவே காட்டிக் கொள்ளவில்லை.
ரயில் ஒரு நிலையத்தில் நின்றதும் அங்கிருந்த ஒருவரிடம், 'தண்ணீர் வேண்டும்' என்று ஆங்கிலத்தில் கேட்டார். சுவாமிஜி ஆங்கிலம் பேசுவதைக் கேட்ட அந்த வெள்ளையர்கள் இரு வரும் துணுக்குற்றனர். சுவாமிஜியிடம் வந்து, 'நாங்கள் இவ்வளவு உங்களைக் கேலி செய்தும் நீங்கள் எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசாமல் இருந்தீர்களே, 'அது ஏனா? ஏனெனில், நண்பர்களே, நான் முட்டாள்களைச் சந்திப்பது இது முதல் தடவை அல்ல' என்றார். ஆங்கிலேயர்களுக்கு ஆத்திரம் வந்தது. அவரை அடிப்பதற்குத் தயாராயினர். சுவாமிஜி அதற்கும் தயாராக எழுந்தார். அவரது உடம்பையும் வலுவான கைகளையும் கண்ட வெள்ளையர்கள் அவரிடம் பணிந்து போவதே மேல் என்று அமைதியாகி விட்டார்கள்.
--
-- விவேகானந்தர் விஜயம் --- அட்மின் சுவாமி வித்யானந்தர்
--
-- விவேகானந்தர் விஜயம் --- அட்மின் சுவாமி வித்யானந்தர்

Comments
Post a Comment