பொன்மொழிகள் .பகுதி-40

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-40
----- 
பகை பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால் , அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும். வேறு எந்தச் சக்தியாலும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. ஒரு முறை நீ அவற்றை இயங்கச் செய்து விட்டால் அதனால் வரும் விளைவையும் நீ ஏற்றே ஆகவேண்டும். இதை நீ நீனைவில் வைத்துக் கொண்டால் , தீய செயல்களைச் செய்வதிலிருந்து அது உன்னைத் தடுத்து நிறுத்தும்.
----
ஒவ்வொரு பணியும் மூன்று நிலைகளைக் கடந்தாக வேண்டும். ஏளனம், எதிர்ப்பு, பிறகு கடைசியில் ஏற்றுக்கொள்ளப்படுதல். தனது காலத்தை விட்டு முற்போக்காகச் சிந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் தவறாகவே புரிந்துகொள்ளப்படுவான். எனவே எதிர்ப்பும் அடக்கு முறையும் வரவேற்கத்தக்கவையே. ஆனால் நான் மட்டும் உறுதியாகவும், தூய்மையாகவும், கடவுளிடம் அளவு கடந்த நம்பிக்கை உடையவனாகவும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் இந்த இடைஞ்சல்கள் எல்லாம் மறைந்து போய்விடும்.
----
கடவுள்மீது நம்பிக்கை வைப்பதால் பலருக்கு பாதை எளிதாகிறது. ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். தத்துவஆராய்ச்சி செய்யாதவன். எந்த மதத்தையும் சாராதவன்,சர்ச்சுக்கோ கோவிலுக்கோ போகாதவன், இவர்கள் கூட மிக உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பதை புத்தரின் வாழ்க்கை காட்டுகிறது
---
மனிதனை காக்கும் சக்தி எல்லா மதங்களிலும் சமமாகவே உள்ளது என்பதை நாம் உணரவேண்டும். மதங்களிடையே வேறுபாடு உள்ளது என்று நீங்கள் கோவில்களிலோ அல்லது சர்ச்சுகளிலோ கேள்விப்படுவது வெறும் மூடநம்பிக்கை. எல்லோருக்கும் ஒரே கடவுள் தான் இருக்கிறார். ஆன்மாவை முக்தியடையச்செய்வது நீங்களோ நானோ அல்லது தனிக்கூட்டமோ அல்ல,சர்வவல்லமை பொருந்திய ஒரே கடவுள்தான் எல்லாவற்றிற்கும் பொறுப்பு.
---
யாருடைய நம்பிக்கையையும் குலைக்க முயற்சிசெய்யாதீர்கள். முடிந்தால் அதைவிட சிறந்த ஒன்றை அவனுக்கு கொடுங்கள். முடிந்தால் அவன் எங்கு நிற்கிறானோ அங்கிருந்து அவனை முன்னுக்கு தள்ளுங்கள்.அதைச்செய்யாமல் அவனிடம் இருப்பதையும் கெடுக்காதீர்கள்.
---
கோட்பாடுகளைப்பற்றி கவலைப்படாதீர்கள்.கொள்கைகள்,பிரிவுகள்,கோவில்கள்,சர்ச்சுகள் முதலியவற்றை பற்றி கவனிக்க வேண்டாம். ஒவ்வொரு மனிதனுள்ளும் இருக்கும் சாரமான ஆன்மீகத்துடன் ஒப்பிடும்போது அவை ஒன்றும் இல்லை. இந்த ஆன்மீகம் அதிகரிக்கும் அளவுக்கு நன்மை செய்யும் சக்தியும் அவனிடம் பெருகும்.முதலில் இதை சம்பாதித்துக்கொள்ளுங்கள்.இதை சேமியுங்கள்.யாரையும் குறை கூறாதீர்கள்.ஏனெனில் எல்லா சம்பிரதாயங்களிலும் கொள்கைகளிலும் சிறிதளவு நல்லது இருக்கவே செய்கிறது.வாழ்வின் நோக்கம் இறைவனை நேருக்கு நேராக காண்பது. இதை அடைந்தவர்களே மற்றவர்களுக்கு ஆன்மீகத்தை போதிக்க முடியும்.இத்தகையோர் மிகுதியாக உருவாம்தோறும் அந்த நாடு மேன்மையும்.
---

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?