அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-2


அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-2
-
சீடர். அம்மா! பெரியவை சிறியவை என்று இந்த எண்ணற்ற உயிரினங்கள் எல்லாம் ஒரே நேரத்திலா படைக்கப்பட்டன?
-
அன்னை சாரதாதேவி..ஓவியன் தூரிகையினால் கண்,முகம்,மூக்கு என்று ஒவ்வொன்றாக வரைந்து படத்தை பூர்த்தி செய்வது போல் கடவுளும் ஒவ்வொன்றாகவா அன்னைத்தையும் படைத்தார்? இல்லை. பகவானிடம் விசேச சக்தி உள்ளது. அவர் ”உம்” என்னும்போது எல்லாம் படைக்கப்படுகின்றன. அவர் “உஹும்” என்னும்போது அவை மறைந்துவிடுகின்றன. இருப்பதெல்லாம் ஒரே வேளையில் தோன்றின. ஒன்றன்பின் ஒன்றாக தோன்றவில்லை
ஒரு கல்பத்தின் முடிவிற்கு பிறகு தூக்கத்திலிருந்து விழித்தெழுவதுபோல அனைவரும் தோன்றுகின்றனர்.
-
சீடர்..ஜெபம் மூலம் இறைவனை பெற முடியுமா?
-
அன்னை...ஜெபம் போன்ற ஆன்மீக சாதனைகளின் மூலம் கர்மத்தளைகள் அறுபடுகின்றன.ஆனால் பிரேமபக்தி இல்லாமல் கடவுளைப்பெற முடியாது. ஜபதவங்கள் என்பது என்ன தெரியுமா? இவற்றின்மூலம் புலன்களின் வேகம் தடுக்கப்படுகிறது. இறைவனிடம் கொள்ளும் நெருக்கமான அன்பினால்தான் அவரை பெற முடியும்
பணம் இருப்பவன் பகவானுக்கும் பக்தர்களுக்கும் சேவைசெய்து அவரை வழிபடவேண்டும். அது இல்லாதவன் நாமஜபத்தால் வழிபடவேண்டும்
திருமணம் செய்துகொள்ளாதே. இல்லறத்தில் ஈடுபடாதே. திருமணம் செய்யாவிட்டால் வேறென்ன? எங்கே வாழ்ந்தாலும் சுதந்திரமாகவே இருப்பாய். திருமணம்தான் எல்லா துன்பங்களுக்கும் மூலகாரணம்
-
தொடரும்...
-

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?

Gemini AI and I Scientific Research Papers-6