இந்தியாவில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை நீக்க சுவாமிஜி எடுத்த முயற்சி

இந்தியாவில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை நீக்க சுவாமிஜி எடுத்த முயற்சி
------
அனுப்புனர்
சுவாமி விவேகானந்தர்
இந்தியா.
---
பெறுநர்
மிஸ் நோபிள்(சகோதரி நிவேதிதா)
இங்கிலாந்து.
--
3.4.1897
--
அன்பார்ந்த மிஸ் நோபிள்,
-
இந்தியாவின் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒரு முக்கியமான பணியை நீ செய்ய வேண்டியுள்ளது. இங்கிலாந்திலுள்ள ஒருவரை உனக்கு அறிமுகம் செய்துவைக்கிறேன்..மலபாரிலுள்ள தாழ்ந்த சாதியை சேர்ந்தவர் அவர்.்டியாசின் சார்பில் அங்கே வாழ்கிறார் தாழ்ந்த ஜாதி என்ற ஒரே காரணத்திற்காக இந்த அப்பாவி மக்கள் எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதை நீ இவரிடமிருந்து அறிந்துகொள்ளலாம்.
மாநிலங்களில் பிரச்சனைகளில் தலையிடுவதில்லை என்ற போக்கை காரணம் காட்டி இந்திய அரசாங்கம்(கிழக்கிந்திய பிரிட்டிஷ் அரசாங்கம்)இவர்களுக்கு எந்த உதவியும் செய்ய மறுத்துவிட்டது. எனவே இவர்களுக்கு உள்ள ஒரே நம்பிக்கை லண்டனில் உள்ள ஆங்கிலேய பாராளுமன்றமே.இந்த பிரச்சினையை இங்கிலாந்தில் உள்ள ஆங்கிலேய சமுதாயத்தின் முன்னால் கொண்டுவருவதற்கு உன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்.
---
என்றும் உண்மையுள்ள
விவேகானந்தா

Comments

Post a Comment

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?