சுவாமி விவேகானந்தர் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள்--பகுதி-11

சுவாமி விவேகானந்தர் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள்--பகுதி-11
----
விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரநாத் தத்தர். செல்லமாக ‘நரேன்’ என்று அழைப்பார்கள். அவரது தாயான புவனேசுவரி தேவி ஊர் உத்தமப் பெண்மணியாகத் திகழ்ந்தார். அவர் நரேனுக்குக் கொடுத்த கல்வி ஈடிணையற்றது. ‘வாழ்க்கையில் நான் அடைந்த அனைத்திற்கும் நான் என் தாய்க்குக் கடமைப்பட்டுள்ளேன்’ என்று பின்னாளில் விவேகானந்தர் கூறுவதுண்டு.
ஒருமுறை வகுப்பில் புவியியல் பாடம் நடந்து கொண்டிருந்தது. ஆசிரியர் வரைபடம் ஒன்றைத் தொங்க விட்டு ஒரு குறிப்பிட்ட நகரத்தைக் காட்டுமாறு நரேனிடம் கூறினார். நரேன் காட்டினான். ஆசிரியர் அதைத் தவறு என்றார். அதனை மறுத்து ‘சரி’ என்றான் நரேன். தான் சொல்வதை மறுக்கிறான் என்பதற்காக அவனது கைகளை நீட்டச் சொல்லி பிரம்பால் அடித்தார் ஆசிரியர். அடிகள் அனைத்தையும் வாங்கிக்கொண்டானே தவிர, தனது பதில் தவறு என்பதை புத்தகத்தைப் பார்த்தபோது தனது பதில்தான் தவறு என்பதைக் கண்டார் ஆசிரியர். உடனே நரேனிடம் மன்னிப்புக் கேட்டதுடன், அதன்பிறகு அவனிடம் மிகுந்த மரியாதையுடனும் பழகினார். இதை வந்து தாயிடம் சொன்னான் நரேன். புவனேசுவரி அவனை அணைத்துக்கொண்டு, ‘என் கண்ணே! உன் பக்கம் நியாயம் இருக்குமானால் நீ எதற்கும் கவலைப்பட வேண்டாம். நியாயத்தின் வழிகள் சிலவேளைகளில் சிரமமானதாக, துன்பம் தருவதாக இருக்கலாம். ஆனால் நியாயம் என்று நீ கருதுவதைச் செய்வதற்கு ஒருபோதும் தயங்காதே. உண்மையின் பாதையிலிருந்து ஒருபோதும் விலகாதே‘ என்று கூறினார்.
---
#சுவாமி #விவேகானந்தர் (#வாட்ஸ் அப் குழு 9003767303 )

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?