யார் உயர்ந்தவர்?சிவனா?திருமாலா?

யார் உயர்ந்தவர்?சிவனா?திருமாலா?
----
இந்தியாவில் ஒருசமயம் பல மதப்பிரவுகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி வழக்காடதொடங்கினார்கள்.சிவபெருமான் தான் ஒரே கடவுள் என்றார் ஒருவர்.அதற்கான ஆதாரங்களை பல நூல்களிலிருந்து காட்டினார்,அதே போல் திருமால்தான் ஒரே தெய்வம் என்றார் இன்னொருவர்.அதற்கார ஆதாரங்களை அவர் சமர்ப்பித்தார்.அப்போது இந்த வழியாக ஒரு முனிவர் வந்துகொண்டிருந்தார். சிவனே மேலான தெய்வம் என்று கூறியவனிடம்,நீ சிவனை கண்டிருக்கிறாயா? என்று கேட்டார். இல்லை என்றான் அவன். அதேபோல் திருமாலே உயர்ந்தவர் என்று கூறியவனிடமும்,திருமாலை கண்டிருக்கிறாயா? என்று கேட்டார்.அவனும் இல்லை என்றான்.
முதலில் நீங்கள் குறிப்பிடும் இறைவனை காணுங்கள் அதன்பிறகு வந்து வாதம் செய்யுங்கள் என்றார்.நூல்களை படித்தவர்கள் மட்டுமே வாதபிரதிவாதங்களில் நேரத்தை செலவிடுகிறார்கள்.இந்த உலகில் மேலும் மேலும் குழப்பத்தை உண்டாக்குகிறார்கள்.இறைவனை கண்டவன் அமைதியாகிவிடுகிறான்.
---சுவாமி விவேகானந்தர்(பக்திநெறி பற்றி)
----
சுவாமி விவேகானந்தர் வாட்ஸ்அப் குழு 90037 67303 அட்மின் சுவாமி வித்யானந்தர்

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?

Gemini AI and I Scientific Research Papers-6