உலகம் தழுவிய சமயம்

உலகம் தழுவிய சமயம்
----
உலகம் தழுவிய சமயம் என்ற ஒன்று உருவாக வேண்டுமானால் அது இடத்திலும் காலத்தாலும் எல்லைப்படுத்த படாததாக இருக்க வேண்டும். அந்த சமயம் யாரைப் பற்றிப் பிரச்சாரம் செய்கிறதோ அந்தக் கடவுளைப் போன்று எல்லையற்றதாக இருக்க வேண்டும்.
----
🌿 சூரியன் தன் ஒளிக்கிரணங்களை எல்லோர் மீதும் சமமாகப் வீசுவதுபோல் அது கிருஷ்ண பக்தர்கள், கிறிஸ்து பக்தர்கள், ஞானிகள், பாவிகள், எல்லோரையும் சமமாகப் பார்க்க வேண்டும் ,அது பிராமண சமயமாகவோ பௌத்த சமயமாகவே கிறிஸ்தவ சமயமாகவோ முகமதிய சமயமாகவோ இருக்காமல் இவற்றின் ஒட்டுமொத்தமாக இருப்பதுடன், இன்னும் வளர்ச்சியடைய எல்லையற்ற இடம் உள்ளதாக இருக்க வேண்டும்.
----
🌿 அந்த சமயத்தில் பிற சமயத்தினரைத் துன்புறுத்தலும் சகிப்புத்தன்மையற்று நடந்துகொள்ளுதலும் இருக்காது.
அது ஆண் பெண் எல்லாரிடமும் தெய்வத்தன்மை ஏற்றுக்கொள்ளும். மனித இனம் தன் உண்மையான தெய்வீகத் தன்மையை உணர்வதற்கு உதவி செய்வதே அதன் நோக்கமாக இருக்கும் . அதன் முழு ஆற்றலும் அதற்கே பயன்படும்.
---
🌿 அத்தகைய சமயத்தை அளியுங்கள், எல்லாநாடுகளும் உங்களைப் பின்பற்றும் .
---
🌿 சுவாமி விவேகானந்தர்
---
🌿 (சுவாமி விவேகானந்தர் வாட்ஸ் அப் குழு 9003767303 )

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?