அய்யா வழி யை தனிமதமாக்க வேண்டும் என்று முஸ்லீம் தலைவர்கள் கூறுகிறார்கள்.


அய்யா வழி யை தனிமதமாக்க வேண்டும் என்று முஸ்லீம் தலைவர்கள் கூறுகிறார்கள்.அது அய்யா வழியினருக்கு நன்மை செய்யவா அல்லது இந்துக்களை பலவீனப்படுத்தவா?
-
லிங்காயத்துக்களை தனி மதமாக்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள்.அது லிங்காயத்துக்களின் நன்மைக்காகவா அல்லது இந்துக்களை பலவீனப்படுத்துவதற்காகவா?
-
ஈஷா அமைப்பினர் தங்களை இந்துக்கள் என்று கூறிக்கொள்ள தயங்குகிறார்கள்.நாங்கள் மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்கிறார்கள்.எதிர்காலத்தில் இவர்கள் ஒரு கோடிபேர் இருப்பதாக வைத்துக்கொள்வோம் இவர்கள் நாங்கள் இந்துக்கள் அல்ல,தனி மதத்தினர் என்பார்கள்.இதனால் இந்துமதம் மேலும் பலவீனமடையும்.
-
வள்ளலாரை பின்பற்றுபவர்கள்,நாங்கள் இந்துக்கள் அல்ல அனைத்து மதங்களையும் கடந்தவர்கள் என்கிறார்கள்.இவர்கள் எதிர்காலத்தில் தனிமதம் வேண்டும் என்று கேட்டாலும் கேட்பார்கள்.இது அவர்களுக்கு எந்த விதத்தில் நன்மை செய்யம்?
-
சிலர் உலக மக்களை கவர்வதற்காக நாங்கள் இந்துக்கள் அல்ல என்கிறார்கள்.இப்படியே தொடரந்து கூறினால் இந்தியாவில் உங்களுக்கு இருப்பிடம் இல்லாமல் போகலாம்
-
நீங்கள் இந்துக்கள் என்ற பொது அமைப்பிலிருந்து விலகிவிடாதீர்கள்.அது இந்தியாவின் அழிவிற்கே வழிவகுக்கும் என்கிறார் விவேகானந்தர்.எதிர்காலத்தில் இந்தியாவில் ஒரே ஒரு மதம்தான் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது அவரது கூற்று ..அது இந்துமதம்தான்.அதன் பொதுவான தத்துவத்தின் கீழ் அனைத்து பிரிவினரும் ஒன்றுகூட வேண்டும் .அதில் உங்களுக்கு தயக்கம் இருந்தால் படிப்படியாக இந்தியாவில் அழிவை சந்திப்பீர்கள்.ஏற்கனவே சமண மற்றும் புத்தமதங்கள் இந்தியாவில் அழிவை சந்தித்துக்கொண்டிருக்கின்றன.
-
எதில்கால இந்தியாவிற்கு நிறைவேற்றப்பட வேண்டியவைகள் குறித்து சுவாமி விவேகானந்தர் கூறும்போது, அனைவருக்கும் பொதுவான ஒரே சட்டம் இருக்க வேண்டும். அனைவருக்கும் பொதுவான ஒரே மதம் இருக்கவேண்டும் என்கிறார்.அந்த மதத்திற்குள் ஆயிரம் பிரிவுகள் இருக்கலாம்,பரவாயில்லை.ஆனால் அவைகள் இந்து என்ற ஒரே பொதுமையத்தில் ஒன்று சேரவேண்டும்
-
நாம் நமக்குள் பிரிவினைகளை உருவாக்கிக்கொண்டு திரிந்தால் எதிரிக்குதான் லாபமே தவிர,நமக்கு அதனால் ஒரு லாபமும் இல்லை.அரசியல் ரீதியாக மட்டுமல்ல பல வழிகளில் உடனடியாக அழிவை சந்திப்பதுதான் அதன் விளைவாக இருக்கும்
-
கட்டுரை...சுவாமி வித்யானந்தர்.(21-5-2018)
-

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?

Gemini AI and I Scientific Research Papers-6