இறைவனுக்கு இரு மனைவிகள் இது என்ன கோட்பாடு?


கேள்வி....இறைவனுக்கு இரு மனைவிகள் இது என்ன கோட்பாடு?
-
சுவாமி வித்யானந்தர்....
-
பழைய காலங்களில் சமுதாயத்தில் அடிக்கடி போர் நிகழ்வது உண்டு. இந்த போர்களில் பல ஆண்கள் கொல்லப்பட்டுவிடுவார்கள். 1000 பெண்கள் இருக்கும் இடத்தில் 500 ஆண்களே இருப்பார்கள். இதை சரி செய்ய ஆண்கள் இரு பெண்களை திருமணம்புரிய அனுமதித்தார்கள்.
தற்போது போர்கள் இல்லை.ஆண்களும் பெண்களும் கிட்டத்தட்ட சமஅளவில் இருப்பதால் ஒருவன் ஒருத்தியை திருமணம் செய்து கொள்கிறான்.
நேபாளம் போன்ற சில நாடுகளில் 100ஆண்டுகளுக்கு முன் 1000 ஆண்களுக்கு 500 பெண்கள் என்ற அளவில் பெண்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.இதை சரி செய்ய ஒரு பெண் இரண்டு ஆண்களை திருமணம் செய்து வாழ அனுமதிக்கப்பட்டார்கள்.இவ்வாறு செய்யாவிட்டால் பெண்கள் கிடைக்காத ஆண்கள், பெண்களை கடத்திகொண்டு செல்வது அதிகரிக்கும்.
சமுதாயம் சிக்கலின்றி வாழ்வதற்கு ஏற்ப சமுதாய சட்டங்கள் அமைக்கப்படுகின்றன.
-
மக்கள் எப்படியோ அதேபோல் அவர்கள் வழிபடும் கடவுளும். சிலர் இரண்டு மனைவிகளோடு வாழும் கடவுளை வழிபட விரும்புகிறான். சிலர் ஒரு மனைவியோடு வாழும் இறைவனை வழிபடுகிறான். ஒருவன் தவக்கோலத்தில் இருக்கும் இறைவனை வழிபட விரும்புகிறான். சிலர் இறைவனை குழந்தையாகவும், சிலர் தந்தையாகவும்,சிலர் தாயாகவும்,சிலர் இறைவனை உருவம் இல்லாதவராக வழிபடுகிறார்கள்.
-

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?