புரோகிதன் பிராம்மணன் அல்ல

புரோகிதன் பிராம்மணன் அல்ல
-----
நான்கு ஜாதிகள் என்பது மனிதனின் வளர்சியில் நிகழும் நான்கு படிகளை பற்றி குறிப்பிடுகிறது. முதலில் வேலைக்காரனாக(சூத்திரன்) ஒரு மனிதன் தன் பயணத்தை தொடங்குகிறான்.பின்பு சுயதொழில் மூலம் (வைசியன்) முன்னேறுகிறான்.நன்றாக பணம் சம்பாதித்த பிறகு மக்களுக்கு உதவுவதற்காக அரசியலில் ஈடுபடுகிறான்(சத்திரியன்). மக்களை சிறப்பாக வழிநடத்தியபிறகு அனைத்தையும் விட்டுவிட்டு பிரம்மத்தை குறித்து தியானம் செய்கிறான்(பிராம்மணன்). இந்த நான்கு ஜாதிகளை பற்றிதான் வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
இவைகள் ஒவ்வொன்றையும் கடந்து மனிதன் கடைசியில் பிராம்மணனாக வேண்டும். இல்லாவிட்டால் மறுபடி பிறக்க வேண்டும்.இதனால்தான் வேதங்கள் பிராம்மணன் உயர்ந்தவன் என்று கூறுகிறது.பிறப்பான் வருபவன் பிராமணன் அல்ல அவன் புரோகிதன்.அது மற்ற தொழில்களைபோல ஒரு தொழில்.புரோகிதன் ஒருவேளை சூத்திரனாக இருக்கலாம் அல்லது வைசியனாக இருக்கலாம்.பிராம்மணனாக இருக்க முடியாது.பிறப்பால் வரும் ஜாதி வேதத்திற்கு எதிரானது என்பதை வேதங்களே கூறுகின்றன.ஆகவே வேதத்தை பின்பற்றி வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம்
-
சுவாமி வித்யானந்தர் (16.4.2018)

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?