ஹிந்துக்கள் என்பது யார்?

ஹிந்துக்கள் என்பது யார்?
-
முற்காலத்திலிருந்தே இந்தியாவிற்கு பாரதம் என்ற பெயர் நிலவி வந்தது. சுமார் 1000ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்கு படையெடுத்து வந்த வெளிநாட்டினர்,சிந்துநதிக்கு மறுபுறம் வாழ்ந்த அனைவரையும் ஹிந்துக்கள் என்று அழைத்தார்கள்.பாரதத்தின் கலாச்சாரம்,மதம் எதையும் அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.பெரும்பாலான படையெடுப்பாளர்கள் பண்பாடற்றவர்களாக,குறுகிய நோக்கம்கொண்ட,மதவெறியர்களாக இருந்தார்கள். பாரதத்தின் செல்வத்தை கொள்ளையடிக்கவும்,இங்குள்ளவர்களை கொன்று குவிக்கவுமே வந்தார்கள்.அவர்கள் இங்குள்ளவர்களுக்கு வைத்த பெயர்தான் ஹிந்துக்கள்..அவர்களின் கண்ணோட்டதின்படி பாரதத்தில் தோன்றிய மதங்கள் அனைத்தும் ஹிந்துமதம்.அதை பின்பற்றும் அனைவரும் ஹிந்துக்கள்.அப்போது இங்கு புத்தமதம்,சமணமதம்,சைவம்,வைணவம்,சாக்தம்,வைதீகம் போன்ற பல மதங்களும்,அவைகளுக்குள் கணக்கில்லாத மதப்பிரிவுகளும் இருந்தன. இவர்கள் அனைவருக்கும் அவர்கள் வைத்த பொதுபெயர் ஹிந்துக்கள்.
-
பல நூற்றாண்டுகள் அடிமையாக வாழ்ந்த ஹிந்துக்களுக்கு பல்வேறு கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன. ஹிந்துக்கள் என்ற பொது பெயரில் அனைவரையும் ஒன்றுபடுத்தி கொடுமைப்படுத்திய சிறப்பு வெளிநாட்டினரையே சாரும். அவர்கள் இந்தியாவிற்குள் வராமல் இருந்திருந்தால் பல்வேறு மதப்பிரிவுகளாக பிரிந்து நமக்குள் சண்டையிட்டுக்கொண்டிருந்திப்போம். தற்போது இருப்பதுபோல் ஒன்றுமையாக இருந்திருக்க மாட்டோம்
-
இந்துமதம் வாட்ஸ் அப் குழு 9789 374 109

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?