இந்துமதத்தில் உள்ள விஞ்ஞானத்தை தெரிந்துகொள்வோம்-1


இந்துமதத்தில் உள்ள விஞ்ஞானத்தை தெரிந்துகொள்வோம்-பாகம்-1
-
பகவத்கீதையில் இந்த பிரபஞ்சம் சத்வம்,ரஜஸ்.தமஸ் என்ற முக்குணங்களால் ஆக்கப்பட்டிருக்கிறது என்று கூறுகிறது.(கீதை7.13)(14.5)(2.45) இதைப்பற்றி ஆராய்வோம்.
-
ரஜஸ் என்பது விலக்கும் சக்தி. தமஸ் என்பது கவரும் சக்தி. சத்வம் என்பது இரண்டையும் சமன்படுத்தும் சக்தி.இதை முதலில் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்.
-
ஒவ்வொரு பொருளிலும் இந்த மூன்று சக்திகளும் எப்படி இயங்குகிறது என்பதை பார்ப்போம். முதலில் ஒரு அணுவை எடுத்துக்கொள்வோம். அணுவில் நியூட்ரான்,எலக்ட்ரான்,புரோட்டான் என்ற மூன்று இருக்கிறது. எலக்ட்ரான் என்பது சுற்றிக்கொண்டே இருக்கும்.எலக்ராானின் வேகம் காரணமாக அது மையத்திலிருந்து விலகிசெல்ல முயன்றுகொண்டே இருக்கும்.புரோட்டான் என்பது மையத்தில் இருப்பது எலக்ட்ரானை தன்னை நோக்கி கவர்ந்து இழுத்துக்கொண்டே இருக்கும். எலக்ரானின் சுற்றும்வேகம் குறைந்துவிட்டால் அது புரோட்டனுடன் ஒன்றாகிவிடும். அவ்வாறு நிகழாமல் தடுப்பது நியூட்ரான் என்ற இன்னொன்று. எலக்ரானும் புரோட்டானும் ஒன்று சேராமலும்,இரண்டும் தனினத்தனியே விலகிவிடாமலும் பாதுகாப்பது நியூட்ரானின் வேலை.இந்த நியூட்ரான் மையத்தில் இருக்கிறது.
-
எலக்ட்ரான் என்பது ரஜஸ். புரோட்டான் என்பது தமஸ்.நியூட்ரான் என்பது சத்வம்
-
இனி பிரம்மாண்டமான சூரிய குடும்பத்தை எடுத்துக்கொள்வோம். சூரியனை மற்ற கிரகங்கள் சுற்றி வருகின்றன.இதில் சூரியன் மற்ற கிரகங்களை தன்னை நோக்கி கவர்ந்துகொண்டே இருக்கிறது.இதற்கு ஈர்ப்புவிசை என்று பெயர்.மற்ற கிரகங்கள் வேகமாக சுற்றிக்கொண்டே இருப்பதால் அந்த விசைகாரணமாக சூரியனைவிட்டு விலகி செல்ல முயன்றுகொண்டே இருக்கிறது.இதற்கு விலக்குவிசை என்று பெயர்.மற்ற கிரகங்கள் தங்கள் வேகத்தை குறைத்துகொண்டால் சூரியனின் ஈர்ப்புவிசை காரணமாக சூரியனில் சென்று ஒட்டிக்கொள்ளும். மற்ற கிரகங்களின் வேகம் அதிகமானால் விலக்குவிசை காரணமாக சூரிய குடும்பத்தைவிட்டு விலகி சென்றுவிடும்.இவ்வாறு நடக்காமல் இவைகளை சமன்படுத்திவைக்க சூரிய குடும்பத்தில் சமன்படுத்தும் சக்தி ஒன்று செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.இந்த சக்தி சூரிய குடும்பத்தின் மையத்தில் இருக்கிறது.
-
ஈர்ப்புவிசை-தமஸ். விலக்குவிசை-ரஜஸ்.சமன்விசை-சத்வம்
-
இனி ஒரு மனிதனின் செயல்பாடுகளை எடுத்துக்கொள்வோம். மனிதன் காலையிலிருந்து இரவு வரை தொடர்ந்து பல வேலைகளை செய்துகொண்டே இருக்கிறான்.இவ்வாறு அவனை வேலைசெய்ய வைக்கும் சக்திக்கு ரஜஸ் என்று பெயர்.சிலநேரங்களில் எந்த வேலையும் செய்யாமல் சோம்பேரியாக இருக்கிறான். இரவில் இந்த உலகத்தை மறந்து தூங்குகிறான்,இதற்கு தமஸ் என்று பெயர். சில நேரங்களில் அமைதியாக உட்கார்ந்து இயற்கையை ரசிக்கிறான்,பிறரிடம் அன்பை பொழிகிறான்.சத்வ குணம் இதற்கு காரணமாக இருக்கிறது. அப்போது அவன் உடல்சார்ந்த வேலை செய்யவும் இல்லை,சேம்பேரியாக அமர்ந்திருக்கவும் இல்லை.ஆழ்ந்த ஆனந்தத்தில்,அமைதியில்ஈஅறிவில் இருக்கிறான்.
-
இவ்வாறு இந்த பிரபஞ்சத்தில் எங்குமே இந்த மூன்று குணங்களும் பல்வேறு பெயர்களில் பல்வேறு விதங்களில் இயங்கிக்கொண்டே இருக்கிறது.இந்த பிரபஞ்சம் இயங்குவதற்கு இந்த மூன்றும் தேவை என்பதை நமது முன்னோர்கள் நன்கு தெரிந்துவைத்திருந்தார்கள்.
-
கட்டுரை...சுவாமி வித்யானந்தர் (28-1-2018)

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?