யாரெல்லாம் ஹிந்துக்கள்?


யாரெல்லாம் ஹிந்துக்கள்?
-
சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீகிருஷ்ணர் வாழ்ந்த அன்றைய பாரதத்தில் மக்கள் சிறுசிறு குழுக்களாக வாழ்ந்துவந்தார்கள்.பல அரசர்கள் ஆட்சிபுரிந்து வந்தாலும்,அனைவரிடமும் ஒரே விதமான கலாச்சாரம்தான் நிலவி வந்தது.பாண்டிய மன்னனும் யுதிஷ்டிரரும் ஒரே அணியில் இருந்தார்கள்.  சிவன் பெரியவனா?விஷ்ணு பெரியவனா? போன்ற கருத்துக்கள் அப்போது எழவில்லை.சைவமதமும் வைணவமதமும் அப்போது தோன்றவில்லை. ஸ்ரீ கிருஷ்ணரின் காலத்தில் இரண்டு பிரிவுகள்தான் இருந்தன ஒன்று வேதத்தின் கர்மகாண்டத்தை பின்பற்றுபவர்கள் இன்னொன்று வேதத்தின் ஞான காண்டத்தை பின்பற்றியவர்கள். சாங்கியம் மற்றும் யோகம் என்று அதை அழைத்தார்கள். சாங்கியர்கள் துறவு வாழ்க்கைக்கு  முக்கியத்துவம் கொடுத்தார்கள். யோகியர் இல்லற வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.ஸ்ரீ கிருஷ்ணர் இவை இரண்டையும் சமரசப்படுத்தி இல்லறவாழ்க்கையை முறையாக மேற்கொள்ளமல் துறவு வாழ்க்கைக்கு சென்றால் தோல்வி அடைய நேரலாம் என்றும்.  இல்லறத்தில் இருப்பவன் அடையும் அதே பலனையே துறவறத்தில் இருப்பவனும் அடைகிறான் என்று போதித்தார்.
-
அவரது காலத்திற்கு பிறகு வேதத்தின் கர்ம காண்டத்தை பின்பற்றியவர்கள் பல்வேறு யாகங்கள்,பலிகள், போன்ற பல செயல்களில் ஈடுபட்டதால் மக்கள் துன்பத்தை அனுபவித்தார்கள்.அதை  சாங்கியர்கள் எதிர்த்தார்கள்.சாங்கியமதத்திலிருந்து  புத்தமதம்,சமணமதம் என்ற இருமதங்கள் உருவாகின.வேதத்தின் கர்மகாண்ட மதத்தை எதிர்ப்பதே இதன் முக்கிய பணியாக இருந்தது.வேதத்தின் ஞான காண்டத்தில் சில இடங்களில் யாகங்கள் பற்றி கூறுவதால்,  வேதத்தை மொத்தமாக புறக்கணித்தார்கள்.
-
வட இந்தியாவில் புத்தமதம் மற்றும் சமணமதம் வேகமாக வளர்ச்சியடைந்த காலத்தில்,தென் இந்தியாவில் வைணவம் மற்றும் சைவம் வளர்ச்சியடைய ஆரம்பித்தது.இவர்கள் வேதத்தின் ஞானகாண்ட பகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.அதனுடன் பக்தி கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
-
இந்த காலகட்டத்தில் பாரதத்தில் இந்துமதம் என்ற பெயரில் எதுவும் இல்லை. அந்த காலத்தில் பெரிய மதங்களாக கருதப்பட்டவை புத்தம்,சமணம்,சைவம்,வைணவம் மற்றும் கிழக்கு இந்தியாவில் சாக்தம்.இவை தவிர இன்னும் சிறுசிறு மதங்கள் அதிகம் இருந்தன.பல மதங்கள் சில காலம் இருந்து பிறகு அழிந்துபோனது.சில பெரிய மதங்கள் சிறிய மதங்களை தங்களுக்குள் சேர்த்துக்கொண்டது. கௌமாரம்(முருகர்),காணபத்யம்(கணபதி) போன்ற மதங்கள் சைவமதத்தில்(சிவனின் குழந்தைகள் என) இணைந்துகொண்டன.
-
இவ்வாறு பாரதத்தில் பல்வேறு மதங்கள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வந்த காலத்தில் சிந்து நதிக்கு மறுகரையில் வாழ்ந்த பாரசீகர்கள்,யூதர்கள்,அரேபியர்கள் போன்றவர்கள் நமது நாட்டு மக்கள் அனைவரையும் ஒரே பெயரில்  ஹிந்து என்று அழைத்தார்கள்.
-
சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு புத்தமதம் வட இந்தியாவில் வீழ்ச்சியை சந்தித்தது. தென்இந்தியாவை சேர்ந்த சங்கரர் மற்றும் ராமானுஜரின் முயற்சியால் புத்தமதத்தினர், சைவம் மற்றும் வைணவ மதத்திற்கு மாறினார்கள்.சமண மதம் எப்போதுமே பெரிய வளர்ச்சியை அடையவில்லை. சில காலம் வளர்ந்தபிறகு படிப்படியாக அது சிறுபான்மை மதமாகிவிட்டது.
-
முஸ்லீம் மதத்தின் தோற்றத்திற்கு பிறகு. படிப்படியாக வெளிநாட்டு அரசர்கள் இந்தியாவிற்குள் படையெடுத்துவந்தார்கள்.அவர்கள் ஹிந்துக்கள் என்ற பெயரில் இங்குள்ள அனைவரையும் அழைத்தார்கள்.அனைவரும் காபிர்கள்,அதாவது அல்லாவின் எதிரிகளாக கருதப்படார்கள்.பல அரசர்கள் காபிர்களை கொன்று குவிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.அதைபற்றிய வரலாற்று சம்பவங்களை தனியாக படித்து தெரிந்துகொள்ளுங்கள். அவ்வாறு உயிரோடு விடப்பட்ட காபிர்கள்தான், பழைய கால வடஇந்தியாவை சேர்ந்த ஹிந்துக்கள்.
-
இலங்கையை சேர்ந்தவர்கள் பொதுவாக சைவமதத்தை பின்பற்றியதாலும்,முஸ்லீம்களின் ஆட்சிக்கு கீழ் வராததாலும் அவர்கள் தங்களை ஹிந்துக்கள் என்று அழைத்துக்கொள்வதில்லை அதற்கான தேவையும் ஏற்படவில்லை.அவர்கள் காபிர்களாக உருவாகவில்லை.இன்று இலங்கையில் உள்ள தமிழர்கள் நாங்கள் வேறுமதம்,நாங்கள் ஹிந்துக்கள் அல்ல என்று கூறலாம்.ஹிந்துக்கள் அடைந்த துயரங்களை அவர்கள் அடையாததால் இவ்வாறு பேசுகிறார்கள்.
-
தலித் என்ற பெயரை உருவாக்கி எப்படி ஒரு சமுதாயத்தை உயர்சாதியினர் கொடுமைப்படுத்தினார்களோ,அதேபோல் ஹிந்துக்கள் என்ற பெயரை உருவாக்கி ஒரு மதத்தினர் இங்குள்ளவர்களை கொடுமைப்படுத்தினார்கள்.ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர் செயல் உண்டு என்பது தான் விதி. காபிர்கள் என்ற முத்திரையோடு உயிரிழந்த கோடிக்கணக்கான பாரத மக்களின் சாபம் இன்னும் நீங்கவில்லை. அது நீங்கும்வரை நாம் ஹிந்துக்களாகவே இருப்போம்.அதன் பிறகு வேண்டுமானால் வேறு பெயரை நாம் வைத்துக்கொள்ளலாம்.அதற்கு முன்பு யாராவது ஹிந்துக்கள் என்ற பெயரை மாற்ற முயற்சிசெய்தால் அது தோல்வியையே சந்திக்கும்,இந்தியாவின் வளர்ச்சியை முற்றிலுமாக பாதிக்கும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
-
கட்டுரை... சுவாமி வித்யானந்தர் (18-01-2018)

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?