சுவாமி விவேகானந்தர்--மதத்தை பரப்புவது என்றால் ஒவ்வொருவர் மீதும், வொவ்வொன்றின்மீதும் குறைசொல்வதே என்று நினைத்துக்கொள்ளாதே.உடல்,மனம்,ஆன்மீகம் ஆகிய ஒவ்வொரு நிலையிலும் மனிதர்களுக்கு உடன்பாட்டுக் கருத்துக்களை தரவேண்டும்.யாரையும் வெறுக்கக்கூடாது. நீங்கள் ஒருவரை ஒருவர் வெறுத்ததால்தான் இவ்வளவு இழிநிலையை அடைநதிருக்கிறீர்கள்.இப்போது உடன்பாட்டுக் கருத்துக்களை மட்டுமே பரப்பி மனிதர்களை உயர்த்த வேண்டும்.முதலில் இந்த வகையில் இந்துக்களை எழுச்சி பெறச்செய்ய வேண்டும். பிறகு உலகம் முழுவதையுமே விழிப்புற செய்ய வேண்டும். அதற்காகத்தான் ஸ்ரீராமகிருஷ்ணர் அவதாரம் செய்தார். யாருடைய கருத்தையும் அவர் அழித்ததில்லை.மிகமிகக் கீழ்நிலையில் உள்ள மக்களுக்கு கூட அவர் நம்பிக்கையும் உற்சாகமும் தந்து உயர்த்தி இருக்கிறார். நாம் அவரது வழியை பின்பற்றி அவர்களை மேலே தூக்கி உற்சாகப்படுத்தவேண்டும்.புரிகிறதா?
----
சுவாமி விவேகானந்தர்--- உங்கள் வரலாறு,இலக்கியம்,புராணங்கள் என்று எல்லா சாஸ்திரங்களுமே மக்களைப் பயமுறுத்த மட்டுமே செய்கின்றன. ”நரகத்திற்குத்தான் போவாய்.உனக்கு கதியே இல்லை” என்றே அவை மனிதர்களிடம் சொல்கின்றன.அதனால் தான் இந்தியாவில் இந்தவிதமான மந்தநிலை நாடி நரம்புகளில் புகுந்துவிட்டது. எனவே வேதவேதாந்தத்தின் உயர்ந்த கருத்துக்களை எளிய மொழியில் எல்லோருக்கும் எடுத்துச்சொல்லவேண்டும். ஒழுக்கம்,நன்னடத்தை,கல்வி முதலியவற்றை அளித்து அனைவரையும் பிராமணர்களின் நிலைக்கு உயர்த்தவேண்டும். இதை உன்னால் செய்ய முடியுமா?
----
சுவாமி விவேகானந்தர்.--.உங்களை நான் நேசிக்கிறேன்.ஆனால் பிறரது நன்மைக்காக வேலைசெய்துசெய்து நீங்கள் இறந்துபோவதையே விரும்புகிறேன்.
--
சீடன்.. நாங்கள் செத்துபோனால் எங்களை நம்பி வாழ்பவர்களின் கதி என்ன ஆவது?
---
சுவாமி விவேகானந்தர்--..நீ உன் வாழ்க்கையைப் பிறருக்காகத் தியாகம் செய்யத்தயாரானால், உன்னை சார்ந்தவர்களுக்குக் கடவுள் நிச்சயமாக வழிசெய்வார். உன் வாசற்படியில் இறைவனே பிச்சைக்காரன் வடிவில் வந்து நிற்கிறான் அவனுக்கு முதலில் சேவை செய்.வாழ்க்கை தான் எத்தனை நாள்! நீ இந்த உலகிற்கு வந்துள்ளாய்.ஓர் அடையாளத்தை விட்டுச்செல்.இல்லையென்றால் உனக்கும் இந்த மரங்களுக்கும்,கற்களுக்கும் என்ன வித்தியாசம்?அவையும் தோன்றுகின்றன,வாழ்கின்றன,சாகின்றன.அதுபோல பிறந்து சாகவா விரும்புகிறாய்?
-
சுவாமி விவேகானந்தர்--ஸ்ரீராமகிருஷ்ணரை நான் மடத்தில் பிரதிஷ்டை செய்த அன்று,அவரது கருத்துக்கள் இந்த இடத்திலிருந்து எழுந்து அண்டசராசரங்கள் முழுவதும் பரவி நிற்பதைபோல் என் மனத்தில் தோன்றக்கண்டேன். நான் என்னால் முடிந்த அளவு செய்கிறேன்,செய்வேன், நீங்களும் அவரது பரந்த கருத்துக்களை மக்களுக்கு விளக்கிசொல்ல வேண்டும். அத்வைத வேதாந்தத்தின் உண்மையை நடைமுறை வாழ்க்கையில் நிரூபித்து காட்டவேண்டும். சங்கரர் இந்த அத்வைதத்தைக் காடுகளிலும் மலைகளிலும் விட்டுப்போனார்.அவற்றை அங்கிருந்து கொண்டுவந்து,உலக வாழ்க்கையில்,மக்கள் தொழில்புரிந்து வாழும் சமுதாயத்தில் பரப்பவே நான் வந்துள்ளேன்.அத்வைதத்தின் கர்ஜனை வீடுகள்தோறும் கேட்க வேண்டும். நான் இதை சாதிக்க நீங்கள் உதவுங்கள். வேலை செய்யுங்கள்.....
-
சீடர்..சுவாமிஜி,உங்கள் கருத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.(ஸ்ரீராமகிருஷ்ணருக்காக விழாவை நீங்கள் கொண்டாடுகிறீர்கள்)ஸ்ரீராமகிருஷ்ணரை மையமாக வைத்து அவர் பெயரால் ஒரு மதப்பிரிவை உண்டாக்குகிறீர்களோ என்று எனக்கு சிலவேளைகளில் தோன்றுகிறது.ஸ்ரீராமகிருஷ்ணர் எந்த பிரிவையும் சேர்ந்தவர் அல்ல,அவர் சைவம்,வைணவம்,சாக்தம்,முகமதியமதம்,கிறிஸ்தவம் ஆகிய அனைத்திற்கும் மரியாதை அளிப்பது அவரது வழக்கம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்
--.
சுவாமி விவேகானந்தர்--- எங்களுக்கும் எல்லா மதங்களிடமும் அப்படிப்பட்ட மரியாதை இல்லையென்பதா உன் எண்ணம். நீ என் சொற்பொழிகளை நிச்சயமாக படித்திருக்க வேண்டும்.அதில் எங்காவது நான் ஸ்ரீராமகிருஷ்ணரை மையாமாகவைத்து எதையாவது உருவாக்கியிருக்கிறேனா? கலப்பற்ற உபநிடத மதத்தையே நான் உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்திருக்கிறேன.
கணக்கில் அங்காத மதப்பிரிவுகள் அனைத்துமே ஒவ்வொரு பாதை தான். ஏற்கனவே பிரிவுகளால் நிறைந்திருக்கும் இந்த உலகத்தில் மற்றுமொரு மதப்பிரிவை உண்டாக்குவதற்காக நான் பிறக்கவில்லை.
--
HINDU MATHAM WHATSAPP GROUP 9789 374 109
No comments:
Post a Comment