மற்றவர்களுக்கு ஆன்மீகத்தை போதிப்பதால் அவர்களுக்கு ஏதாவது நன்மை கிடைக்கிறதா
மற்றவர்களுக்கு ஆன்மீகத்தை போதிப்பதால் அவர்களுக்கு ஏதாவது நன்மை கிடைக்கிறதா,யாராவது பயன்பெற்றதாக கூறியுள்ளார்களா என்று என்னை ஒருவர் கேட்டார்.
-
மற்றவர்களுக்கு பயன்கிடைக்கிறதோ இல்லையோ எனக்கு தெரியாது.ஆனால் ஆன்மீக கருத்துக்களை தொடர்ந்து படிப்பதாலும்,போஸ்ட் செய்வதாலும்,மற்றவர்களுக்கு கூறுவதாலும் எனக்கு மிகுந்த பயன் கிடைக்கிறது. இதன் மூலம் தொடர்ந்து இறை சிந்தனைகளிலேயே மூழ்கி இருக்க முடிகிறது.இறை ஆனந்தத்தை அனுபவிக்க முடிகிறது.எப்போதும் இறைவனை நினைப்பவன்,இறை சிந்தனையை தரும் வேலைகளை செய்பவன்,இறைவனைப்பற்றியே பேசுபவன் முடிவில் இறைவனை அடைவான் என்று மகான்கள் கூறியுள்ளார்கள்.
-

Comments
Post a Comment